Blog Archive

Friday, September 30, 2022

PS - 1 From tomorrow | Thank you Kalki | Lyca Productions | Madras Talki...

    பொன்னியின் செல்வன் கதை படிப்பதற்காக
தோழி வீட்டில் எங்கள் குமுதத்தைக் கொடுத்துவிட்டு
கல்கி வாங்கி வருவேன்.

பள்ளி, விளையாட்டு, கதை படிப்பது இதுவே எங்களுக்கு
பொதுவானது. அந்த அருமையான சுதந்திர நாட்களில் 
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்

என்று படித்துத் தள்ளினோம் விடுமுறை நாட்களை.

பொன்னியின் செல்வன் இன்றே இங்கே
வெளியாகிறது.

இதே போல சிவகமியின் சபதத்தையும் யாராவது எடுத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்!!

Thursday, September 29, 2022

பொன்னியின் செல்வன் வருகிறார்.........2


வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன் முதலில் 
கல்கியில் வந்த போது தமிழ் எழுத்து
அவ்வளவு பழகவில்லை. 
இரண்டாவது முறையாக வந்த போது 
வரிவிடாமல் படித்த நினைவு. படங்கள்
பொக்கிஷமாகக் காக்கப் பட்டு
வீடு தோறும் இருந்த காலம்.

தொலைத்த பல பழைய செல்வங்களில் இந்தப் புத்தகங்கள்
உண்டு.





பொன்னியின் செல்வன் அறிமுகம் ஆரம்பித்ததிலிருந்து
ஏகப்பட்ட  வீடியோக்கள் வந்துவிட்டன.

பொன்னி நதி பாக்கணுமே '' பாடல் நாளை அதாவது 29ஆம் தேதி
இங்கே உள்ள  தியேட்டர்களில் முழங்கப் போகிறது.

எனக்குத் தெரிந்து  இங்குள்ள இந்தியர்கள் 
அனைவருமே என் மாதிரி நாலைந்து பேர்களைத் தவிர

10 நாட்களுக்கு முன்பதிவாக டிக்கெட்டுகளைப் 
பதிந்து விட்டார்கள்.
வாட்ஸாப்புகளில் நீ வருகிறாயா நாம் எல்லாரும் போகலாமா
இதுதான் பேச்சு.

தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் ஒரு நூலகத்தில்
பொன்னியின் செல்வனின் எந்தப் பாகமும் கிடைக்கவில்லை.
இரண்டு மாதங்களாக இது செய்தி.

அமரர் கல்கி எங்கிருந்தோ ரசித்துக் கொண்டிருப்பார்.
தான் ஆராய்ச்சி செய்து விவரம் சேகரித்த 
ஒரு நெடுங்கதை இரண்டு பாகங்களாகத் திரையிடப் 
படுகிறது என்று அறிந்து புன்னகைப்பார் என்று நினைக்கிறேன்.

இது மணிரத்தினம் அவர்களின் படமாகத் திரைக்கதையாக
எழுத்தாளர்
ஜெய மோகன் , குமரவேல் அவர்களின் வசனங்களுடன்

40க்கும் மேற்பட்ட திரைப் பிரபலங்களுடன்
சுடர் விடப் போகிறது.

பொன்னியின் செல்வன் தொடரைப் படித்து

முடித்தவர்கள் எதிர்பார்க்கும் பல விஷயங்கள்
இதில் இருக்காது, குறிப்பாக நீண்ட வசனங்களும் காட்சி வர்ணனைகளையும்
பாடல் மூலமாகவும் 
திரைப் பின்னணிகளாகவே படைத்திருக்கிறார்கள் என்றே சொல்கிறார்கள்.

இராமாயணத்தின் ஏழு காண்டம் எப்படி 
மூன்று +அரைமணி நேரமாகச் சுருக்கப்
பட்டதோ, அதையே சம்பூர்ண ராமாயணமா ? அதை யார் உட்கார்ந்து 
பார்ப்பது என்று பின்னாட்களில் சொன்னார்களோ,(இத்தனைக்கும் பாடல்கள் அனைத்தும் 
அவ்வளவு சிறப்பாகப் படமாக்கப் பட்டிருக்கும்)
அதைவிட இந்தக் கதைப் பல வித தொழில் நுட்பத்தில் 
பாடல்களாகவும், யுத்தக் காட்சிகளாகவும் 
பிரம்மாண்டமாக வருகிறது என்றே பேச்சு.

காத்திருக்கலாம். அனைவரும் வாழ்க வளமுடன்.






Monday, September 26, 2022

பொன்னியின் செல்வன்.

திருமதி கவிதா ஜீவா அவர்கள் (இரண்டு வருடங்களுக்கு
முன் என்று நினைக்கிறேன்) வழங்கிய கதை பாட் காஸ்ட்.

வாரம் மூன்று நாட்கள் கேட்ட நினைவு. 
இப்பொழுது படமாக வரப் போகும் நிலையில்

இன்னும் பிரம்மாண்டமாக வர  இருக்கிறது.
இது வரையில் கற்பனையில் தான் 
நந்தினி, வந்தியத்தேவன், குந்தவை, வானதி 
என்று மணியம் அவர்களின் கைவண்ணத்திலும், பின்னாட்களில் வினு
அவர்களின் ஓவியங்களிலும் 
கண்ட பாத்திரங்கள்...
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்,செம்பியன் மாதேவி, ஆழ்வார்க்கடியான்,
மதுராந்தகர் இன்னும் பல நபர்கள்.
அந்தந்த அத்தியாயங்களின் தலைப்பு என்று சுவாரஸ்யமாகத் தொடர்ந்த காலம்.

பார்த்திபன் கனவு வந்த போது
ஜெமினியும் வைஜயந்தியும், திரு ரங்காராவும்
சில கற்பனைகளை நிறைவேற்றினார்கள்.

பின்னர் சிவகாமியின் சபதத்தில் 
சிவகாமியும் நரசிம்மனுமாக,
எம்.ஜி ஆர் சரோஜாதேவி நடித்த கலங்கரை விளக்கத்தில்
சிறிதே திருப்தியுடன் காணமுடிந்தது.
பார்த்திபன் கனவு படத்தில் ரங்கா ராவ் சிவகாமிக்காகக்
கண் கலங்குவது கூட நினைவில் இருக்கிறது.

இதோ 30 செப்டம்பர் கண்முன்னே காணப் போகிறோம்
வந்தியத்தேவனையும் மற்றவர்களையும்.
மணி ரத்னம் அவர்களின் படைப்பில்
சோடை போகாத காவியமாக இது இருக்கும்
என்றே நம்பத் தோன்றுகிறது.
இந்தப் படத்துக்கான நூற்றுக் கணக்கான
வீடியோக்கள். மனத்தில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

காத்திருப்போம்:)
வாழ்க வளமுடன்.




Saturday, September 24, 2022

காதில் விழும் நேரம்

  இதம் தரும் இனிய புரியாத கானம்

பசங்க படம் அருமையான பாடல்கள் நிறைந்தது.
இந்தப் பாடலில் வரும் இருவரும் 
இளமை, நேர்மை எல்லாம் சேர்ந்து 
துடிப்புடன் வரும் அழகு மனதை அப்போதே
கவர்ந்தது.
சூரியா லைலா 
  ஜோடியின் இயல்பான அழகான பாடல்.


   எல்லாப்பாடல்களையும்  எத்தனை தடவை கேட்டாலும் 
அலுக்க வில்லை. இவைதான், இதற்கும் மேலும் இன்னும் நிறைய
இசையும்
பேச்சுகளும் நாட்களைத் தள்ளிச் செல்கின்றன.

சில கவலைகளைக் களைய முடியாது.
இந்த வயதில் அவைகளை யோசிப்பதால் 
என் உடலும் பாதிப்படைகிறது. யாருக்கு லாபம்?
கவலைப் படுவதால் துன்பங்கள் மறையும் என்றால்
அதில் அர்த்தம் உண்டு. அது நடப்பதில்லை.
பாரங்களைக் கடவுளிடம் , ஷிர்டி பாபாவிடம் 
ஒப்படைக்கிறேன்.
பிரார்த்திக்கிறேன்.
விடுதலை வேண்டுகிறேன்.

அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
நல்ல அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு 
நன்றி சொல்லி,
தெய்வங்களை வீட்டுக்கு வரவழைத்து நிறைவு
அடைய பிரார்த்திப்போம்.
நவராத்திரி நல் வாழ்த்துகள்.



The real truth about the first impressions!

👌💢

Saturday, September 17, 2022

ஏழுமலைவாசா வெங்கடேசா🙏🙏🙏🙏🙏🙏🙏

வல்லிசிம்ஹன்

புரட்டாசி சனி விரதம்

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
கோவிந்தா கோவிந்தா


Thursday, September 15, 2022

கடந்து வருகிற காலம்.





வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இனிய நாட்களே தொடர 
இறைவன் அருள வேண்டும்.

அன்பின் நண்பர்களையும் அவர்களது அருகாமையை
மீண்டும் சந்திப்பது இனிமை.

பல பல  நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள
சந்தர்ப்பம் இருந்தும்,
மனமும் உடல் நலமும் ஒத்துழைக்காத நிலைமை.

மீறி வருவதற்கே எழுதுகிறேன்.
நம் ஸ்ரீராம் சொன்னது போல மீண்டு வர முதல்
படி இந்தப் பதிவு.

நட்புகள் அனைவரும் உடல் நலத்துடனும் 
மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.


 

  பல நிகழ்ச்சிகளை மெதுவாக அனுபவிக்க முடியாமல்
அவசரமாகக் கழிந்த சென்னை நாட்கள்.
30 நாட்களுக்குத் தமிழை சுவாசித்து,
உறவு நட்புகளோடு மனம் நிறையப் 
பேசி வந்தாலும் , இன்னும் பலரைக் காண முடியாமல் வந்து தடுத்தது
தொற்று பயம். 
வீட்டிலேயே பாதிப்பு வந்ததால்,
நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு  அது செல்ல
வேண்டாம் என்பதில் முதல் மூன்று வாரங்கள்
சென்று விட்டன.

அதுசரி நாம் செல்ல வேண்டாம். தொலைபேசியில் 
நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்றால் ஒரு நெருங்கிய
உறவு அதில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்!!

அந்த பேச்சு வழியே தொற்று வரும் என்று நினைத்தாரோ
என்னவோ. மனம் மிகக் கலங்கியது. இறைவன் 
பற்று அறுப்பது பற்றிப் 
பாடம் நடத்துகிறான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை தங்கும் விடுதியில் சௌகரியங்களுக்குக் குறைவில்லை. பேரன்கள்,
பேத்திகள் சகிதம் கோவில்கம் சென்று வந்தேன்.

ஏதோ ஒரு உணவு ஒத்துக் கொள்ளாமல்
வயிற்று வலி ஆரம்பிக்க,
மீண்டுவர ஒரு வாரம்.
அது இன்னும் என்னுடன் ஒட்டி இருக்கிறது.
பாசலில்    ( Switzerland)  பல்லுக்கு சிகித்சை:)

இதோ இங்கே வந்தாச்சு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடைசியாக விடுதியில் நடந்த ஒரு சின்ன டிராமாவைக் கொசுறாக
வைக்கிறேன்.
எங்கள் எட்டாவது  மாடி அறைக்கு அடுத்த அறையில் காலையிலிருந்தே 
சந்தோஷக் கொண்டாட்டம். 
மாலையில் சுருதி சேர ஆட்டமும் ஆரம்பித்தது. 

தொலைக்காட்சியில்  சோகப் பாடல்கள் ,காதல் தோல்வி 
என்று ட்ரம்ஸ் வெளுத்துவாங்க 
அந்த சத்தம் பால்கனி வழியே தடித்த சுவர்களையும் மீறி வந்து என் தூக்கத்தைக் கலைத்தது.
மகனோ ஒரு நாள் கடின உழைப்புக்குப் பின் தூங்குகிறான்.

படுக்கையிலிருந்து எழுந்து அந்த அறைக் கதவை மூடி ஹாலில் வந்து உட்கார்ந்தால்
தூக்கம் போயே போய்விட்டது.
'பொய் சொல்ல இந்த இதயத்துக்குத் தெரியவில்லை''
எப்று சோகம் வழியும் பாடலை  தொ கா ஒளிபரப்பக் கூடவெ
இரண்டு இளைஞர்கள் அலறுகிறார்கள்.

சரி இரண்டு மணியாகிறது தூங்குவார்கள்  என்று காத்திருந்தேன்.
ம்ஹூம்.
https://youtu.be/uhI8jbV-wGU


 ''என் காதல் சொல்லத் தேவையில்லை''
என்று தொடர்கிறது. 
நிலைமை கட்டு மீறுகிறது என்ற கோவம் தலைக்கேறியது.

உடனே கீழே  மானேஜருக்குத் தொலைபேசினேன். ஐந்து 
மணி நேரமாக இந்தத் தொல்லை. தயவு செய்து 
கட்டுப் படுத்தவும் ' என்று சொன்னேன்.
அவர்கள் தயங்கினார்கள்.

மேலிடத்துக்குச் சொல்வேன் என்றதும்
உடனே பலன்.
அங்கே செக்யூரிட்டியாக இரண்டு பௌன்சர்களைப்
பார்த்திருக்கிறேன்.
அந்த பூட்ஸ் சத்தம் கேட்டது.
அறையின் கதவைத் திறந்து அவர்கள் தானா
என்று உறுதி செய்து கொண்டு கதவை சாத்தினேன்.
அப்போது மணி 3.
4 மணிக்கு ஓய்ந்தது இசை.

நம் தூக்கமும் போனது.
காலையில் எழுந்த மகனிடம் (காப்பி சாப்பிட்ட பிறகு)
நடந்ததைச் சொன்னேன்.

அவனுக்கு நான் செய்தது கொஞ்சம்  மனத்தாங்கல் தான்.
ஏம்மா உனக்கு மட்டும் சத்தம் க்ட்டது.
இங்கெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். பணக்காரப்
பசங்க. நீ ஏன் தலையிடறே என்று வருத்தப் பட்டான்.
ரூம் கதவை வேற திறந்தியா என்று அதிசயப் 
பட்டான்.

அந்த அறைப் பசங்கள் வெளியேற்றப் பட்டார்கள் என்று அடுத்த செய்தி:)
மீண்டும் பார்க்கலாம்.