8:07 AM 10/24/2011
ஒரு வாரமாக நட்சத்திரம்.
அநேகருக்கு இப்படி ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிந்திருக்கும்.
பழைய கதைகளும்,புதிய அனுபவங்களும் கொடுக்க எனக்கு மேடை
அமைத்துத் தந்த தமிழ்மண நிர்வாகத்துக்கு மிகவும்
நன்றி.
வெறுமனே நன்றி சொன்னால் போதாது.
இந்த வாரம் எனக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுத்தது என்று யாராலும்நினைத்துப் பார்க்க முடியாது.
வந்திருந்த மகனும் அவன் குடும்பமும் கிளம்பினார்கள்.
அது ஒரு வெற்றிடம் உண்டாக்கியது.மழலைகளின் சத்தம் இல்லாத வீடு...வீடு இல்லை.
என்னுடைய வைத்தியர் வார்த்தைகள் அவ்வளவு
பலம் கொடுப்பதாக இல்லை.
இவ்வளவு நினைவுகளிலிருந்தும் என்னை மீட்டுக் கொடுத்தது இந்த வாரம்.
வேறு எந்த நெகடிவ் சிந்தனைகளிலும் மனம் போகாமல் என் மனதை முழுமூச்சோடு
எழுத்திலும் ,நினைவுகளை மீட்டு எடுப்பதிலும்
செலவழிக்கவும்
நடு நடுவில் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதிலும் ஒரு தனிமனிதப் பயணமாக இருந்தது.
என் வான்வெளி நண்பர்கள் யாரும் கைவிடவில்லை.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்று கேட்கிறீர்களா.
அநேகருடையப் பதிவுகளுக்குப் போவதில்லை.
போய்ப் படித்தாலும் பதில் பின்னூட்டம் இடுவதில்லை.
இதையும் மீறி என்னிடம் இவர்கள் அன்பும் மதிப்பும் காட்டியதுதான் அருமை.
என்னைவிடச் சிறியவர்களுக்கு ஆசிகளும் என்னொத்த சகோ சகாக்களுக்கு வணக்கங்களும் நன்றியும்.
சொன்னவுடன் பதில் எழுதிய திரு பாரதிமணி சாருக்கு மிகவும் நன்றி.
அத்தனை ஆயிரம் பதிவர்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ஒளியும்,மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் நிறைந்து இருக்கணும்.
தமிழ்மணம் எப்பொழுதும் போல மணம் வீசி
அனைவரையும் ஆதரிக்கவேண்டும்.
வணக்கம்,
அன்புடன்,
வல்லிமா என்கிற ரேவதி நரசிம்ஹன்.
இன்று முதல் ஒளிவீசப் போகும் அடுத்த நட்சத்திரத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
