



மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தைக் கண்ணெதிரே காண்கிறான் வாலி.
வில்லைக் கையில் பிடித்து அதன் முனையைத் தரையில் ஊன்றி நிற்கும் ராமனைக் காணும்போது அவனுக்குத் திகைப்பாக இருக்கிறது.
ஒரு கார்மேகத்தில் தாமரை பூக்குமா. பூத்திருக்கிறது.
ஒன்றல்ல இரண்டல்ல. ராமன் உருவமெ தாமரைகளாகத் தெரிகிறது.
சுக்ரீவனும் ராமனும் நட்புப் பூண்டது தெரியும்.
தன்னை வெல்ல ராமன் வருவான் என்று
தெரியாது.
இதற்கு முன் நடந்த காட்சிகள்:
ராமனைத் தரிசிக்கும் அனுமான்.
தன் சரித்திரத்தைச் சொல்லி முடிக்க,
லக்ஷ்மணனும் தங்கள் கதையைச் சொல்கிறான்.
ராமன் அனுமனைக் கண்டு வியக்கும் விதம்
அதிசயம். அவன் பேசும் தோரணையைவைத்தே
இவன் நவவியாக்கிரத.... ஒன்பது விதமான இலக்கணங்களையும் வேதங்களையும் கற்றுத் தெளிந்தவன். வினயமே வடிவு கொண்டவன்.
ப்ரம்மச்சாரி.
எடுத்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன்.
பலம் படைத்தவன்.
முன் யோசனை மிக்கவன்.
என்றெல்லாம் தம்பியிடம் உரைக்கிறான்.
அனுமனுக்கு ரமனைப் பார்த்ததுமே 'என்பெ'ல்லாம்
உருகியதாம். தன் வாழ்க்கையின் முழுப்பயனை அடைந்ததாகச் சுக்ரீவனிட்ம சொல்கிறான்.
ரிஷிபத்தினி அளித்துப் பின் சீதை
தன் மேனியில் பூட்டி இருந்த ஆபரணங்களைக் கண்டு சோகிக்கும் ராமனைத் தேற்றும் சுக்ரீவன் ,இவனுடைய துன்பத்தை உணரும் ராமன் இருவருமே அக்னி சாட்சியாக ஒருவருக்கு ஒருவர்
உதவ ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.
ராமனின் பலத்தைச் சோதிக்க,சுக்ரீவனுக்கு யோசனை கொடுப்பதே அநுமன்தான்.
ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே அம்பில் வீழ்த்தும் ராமனைக் கண்டு மனஉறுதி பெறும் அவன், தன்னிடம்
இருக்கும் எல்லாம் ராமன் வசம் என்று சரணாகதி
செய்கிறான்.
ராமன் அவனை வாலியைப் போருக்கு அழைக்கச் சொல்லி அறிவுறுத்த
சுக்ரீவனும் கோட்டை வாயிலில் சென்று
அண்ணனை அழைக்கிறான்.
முதலில் நம்பாத வாலி, தாரை(அவன் மனைவி)யின் வார்த்தைகளையும் தட்டிவிட்டு
வெளியே வருகிறான்.அங்கெ
சுக்கிரீவனைக் கண்டதும் பொங்கி எழும் கோபத்தோடு பொருதுகிறான்.
இரு மலைகள்,இரு கடல்கள் இவை மோதுவதுபோல் இவர்களின் சண்டை-மல்யுத்தம் வளர்கிறது.
வாலியின் பலத்துக்கு முன்னல் சுக்கிரீவன் அசந்து போகிறான்.
ராமனின் பாணம் வந்து வாலியின் மேல் பாயும் என்றால் அதையும் காணோமே/.
மீண்டு ராமனிடமே ஓடி வருகிறான்.
நீ ஏன் வாலியைக் கொல்லவில்லை என்று ராமனைக் கோபத்தோடு வினவுகிறான்.
உனக்கும் அவனுக்கும் வேறுபாடே தெரியவில்லை.
என்று ஒரு பொன்னிற மாலையை அவன் தோளிகளில் போட்டு அனுப்புகிறான்.
இந்த தடவைப் போரில் வாலி சுக்ரீவனைத் தலைக்குமேல் தூக்கி,
கீழே வீசி எறியப் போகும் தருணத்தில் ராமன் தன் வில்லில் பூட்டிய அம்பைத் துறக்கிறான்.
கீழே விழும் வாலிக்கு அம்பு துளைத்த வலியைவிடத் தன்னை வீழ்த்தியவன் யார் என்று தெரிவதற்காக
அம்பைப் பார்க்கிறான்.
அதில் எழுதி இரூக்கும் 'ராமா' என்ற எழுத்துகளைப் பார்த்து நிமிர்ந்து ராமன் மரத்து மறைவிலிருந்து
வருவதைப் பார்த்துக் கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறான்.
ராமா தசரதன் மைந்தனா நீ?
நான் உனக்குப் பங்காளியோ தாயாதியோ இல்லையே.
உன் மனித ஜாதி கூட நான் இல்லை.
உனக்கும் என்ககும் தனிப்பகை கிடையாது.
உன் ராஜ்ஜியத்தின் பகுதியில் நான் இல்லை.
அத்துமீறி எந்தக் குற்றமும் ( நான்)செய்யவில்லை.
எதற்காக ந்னைக் கொன்றாய்?
ஒருவேளை உங்கள் மனு நீதியில் ''அரக்கன், உங்கள் குலப்
பெண்ணைக் கடத்தினால்,ஒரு குரக்கனைத் தண்டித்தால் பாபம் தீரும் '' என்று எழுதி வைத்திருக்கிறதோ என்ரெல்லாம் கேட்கிறான்.
ராம்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு
தன் நீதியை எடுத்து உரைக்கிறான்.
'வாலி நீ எனக்குப் பங்காளிதான்.
எங்கள் அரசுக்குக் கட்டுப்பட்ட நிலத்தில் தான் நீ
அரசு புரிகிறாய்.உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பரதனின் அரசாட்சி நடக்கும்போது
அதன் பிரதிநிதியாய் உன்னைத் தண்டிக்க எனக்குக் கடமை உண்டு.
நீ தவறு இழைத்து இருக்கிறாய்.
மாற்றான் மனைவியை உன் வீட்டில் வைத்தாய்.
சரணடைந்த தம்பியைத் துரத்தினாய்.
நீ வன மிருக ஜாதி என்று நீயே சொன்னாய்.
மிருகங்களுடன் நேர்மைப் போர் புரிய முடியாது.
சிங்கத்தையோ புலியையோ மறைந்து நின்று தாக்குவதுபோலத் தான் நானும் உன்னைக் கொன்றேன்;'
என்று அமைதியாகப் பேசும் ராமனின் சொல்லை அப்படியே உள்வாங்கி வாலி தன் சலனத்தை
விடுகிறான்.
நிறை புத்திசாலி,கோப வசப்பட்டதால் வாழ்வை இழக்கிறான்.
தன் மகன் அங்கதனைக் கைப்பிடித்து சுக்ரீவராமர்களிடம் ஒப்படைக்கிறான்.
அனுமனை எப்பொதும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறான்.
நீ அயோத்தி செல்லும்போது அங்கே யாரும் என் தம்பியை இழிவாகப் பேசாமல் பார்த்துக்கொள்.
அவன்,
'இந்தச் சின்ன பூமியைத்" தான் எடுத்துக் கொண்டு பெரியமோட்சத்தை உன்மூலம் கொடுத்துவிட்டான் ராமா''
என்ற வண்ணம் கண் மூடுகிறான்.
செய்தி அறிந்து ஓடிவந்த தாரை
வாலியின்மரணத்துக்கு துயரப் படுகிறாள்.
ராமனைத் துதித்து வானரர்களைக் காக்கும்படி வேண்டுகிறாள்.
வாலியின் சடங்குகள் முடிந்ததும் சுக்ரீவ பட்டாபிஷேகம்.
ராமனும் லட்சுமனனும் மால்யவான் குகைப் பிரதேசத்துக்குப் போகிறார்கள் மழைக்காலத்தைக் கழிக்க.
நாமும் பொறுத்து இருப்போம்.