Posts

Showing posts from December, 2011

கண்ணே என் கணினியே!

Image
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  ஐந்து  நாட்களுக்கு முன் மதியம் 12 மணிக்கு என்  கணினி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டது. சட சடவென்று ஜன்னல்கள்  மூடின. சைரன் ஒலிக்காத குறையாக கறுப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துகள்  கணினியை நிறுத்து. குறுந்தட்டைப் போட்டு . எஃப் 8  நம்பரைத்தட்டு. இல்லாவிட்டால் உன் கணீனிதயாரிப்பாளர களைக் கூப்பிடு என்றெல்லாம்  கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன. அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே  பத்து நிமிடங்கள்  ஆயின எனக்கு:( அடுத்து என்ன செய்ய. தேடு. பழுது பார்ப்பவரை. மூளையின் கட்டளை. அப்புறம் நிதானித்தேன். ஒண்ணும் வேண்டாம். இன்று விடுமுறை. மற்ற வேலைகளைப் பார்க்கலாம். இந்த முடிவு எடுத்த இரண்டே நிமிடங்களில் கணினிதானே நமக்கு தொடர்பு சாசதனம். நான் பெற்ற செல்வங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் சாதனம்!! சரி சுற்று அந்த எண்ணை. சுற்றியாச்சு. அவர் உடனே உதவி செய்வதாக  உறுதி அளித்தார்.. ஆனால் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், ஊரெல்லாம் சுற்றும்...

மார்கழிப்பூக்கள் கண்ணனுக்கு

Image
ஸ்ரீராம் கேட்ட வேண்பொங்கல்  கூகிளார்  கொடுத்தது. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்  மல்லாண்ட  திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு . அந்தச் சேவடிகளுக்கு  மலர் தூவி உன் தோழியும் பத்தினியும் ஆன ஸ்ரீஆண்டாளின்  செம்பஞ்சுப் பாதங்களுக்கும் பல்லாண்டு பாடி மார்கழியின் ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் பாவைப் பாட்டுகளை ப் பாடி உய்யுமாறு அருள்வாய்.

பழைய கதை சில

Image
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் எழுபதுகளில்   காரைக்குடி   இனிமையான ஊராகவே இருந்தது. நாங்கள்   வசித்தது  தபால் அலுவலகக்  கட்டிடத்தில் . ' அப்பா   போஸ்ட் மாஸ்டராக  , ராமேஸ்வரத்திலிருந்து இந்த அழகப்பநகர்  மாற்றலில் வந்தபோது. , தபால் அலுவலகம் பெரியதாகத் தான் இருந்தது.. அதை ஒட்டிய இடம், போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்துக்கு ஒதுக்கப் பட்டது. ஒரு  புதர் மண்டிய தோட்டம். வீட்டிற்கும் தண்ணீர்க் கிணற்றுக்கும் நடக்க வேண்டிய தூரம்  அரைப் பர்லாங்காவது இருக்கும். நடுவில் ஊர்வன  வம்சம் நிறைய இருக்கும்.  செம்மண் பூமியாச்சே. ஆளுயர கரையான் புற்றுகளும்  இருக்கும். அப்பாவும் தம்பியும்  வீட்டைச்  சுத்தம் செய்துவிட்டு எங்களுக்குக் கடிதம் போட்டார்கள். அம்மா என்னுடைய இரண்டாவது பிரசவத்துக்காகச் சேலத்திற்கு  உதவியாக வந்திருந்தார். என் மகன் பெரியவனுக்கு   ஒண்ணரை வயது. சவலை. பாட்டியுடனே ஒட்டிக் கொள்வான்.அவனையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அம்மா சமையல் வேலை செய்து, எனக்கு முறை தவறாமல்  ...

பேசியது கிளியா.

Image
பச்சை ஒட்டகச் சிவிங்கி:) Add caption பயணத்தின் போது போஸ்  கொடுத்த ஒற்றைக் கிளி கிளி பேசுவது அழகு. அதன்  குரல்  கிறீச்சிட்டால் பக்கத்தில் ஏதோ பூனை வந்துவிட்டது   என்று அர்த்தம். மற்றபடி சாடுவாக கண்ணை  அப்படியும் இப்படியும் உருட்டியபடி கூடுக்குள் தத்தித் தத்தி அது நடக்கும் அழகே தனி. இந்தக் கிளியை  என் தோழி  வளர்த்து வந்தாள். "  அக்கா,  பிசெட்(பிஸ்கட்) " இதெல்லாம் மட்டும் சொல்லும். மூக்கின்  சிவப்பு  சொல்லி  முடியாது. அந்தப் பச்சையும் சிவப்பும் இன்னும் என் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் தான்  வாங்கும் அத்தனை உடைகளும் அதே வண்ணத்தில் அமைகின்றனவோ என்று ஒரு ச்சின்ன  சந்தேகம்  கூட  எனக்கு உண்டு.:) அந்தக் கிளிக்கு ஒரு நாள் தோழி ,  ஒரு பயங்கர சிகித்சை செய்தாள். யாரோ சொன்னார்கள் என்று அந்தக் குட்டிக்கிளியின்  சிறகுகளை   ஒரு அங்குலம்    அளவுக்குக்  கத்திரிக்கோலால்      நீக்கிவிட்டாள். அய்யோ  அதுக்கு வலிக்கப் போகிறதே  என்று...

கிளியே கிளியே மார்கழிக்கிளியே!

Image
ர ரங்கா  ரங்கா  மார்கழி வந்துவிட்டது காத்திருக்கும்  கிளி. இந்தக் கிளிக்குத்தான் எத்தனை ஏற்றம். பாவையர் தலைவியின் தோளேறி அவள் வாய் மொழியும் கண்ணன்  திரு நாமங்களையும், பாவையைப் பாடும் அரையர்  கூத்தினைப் பார்க்கவும், அவள்  சூடும்மாலைவாசம் அனுபவிக்கவும், ரங்கனுக்கும் அவளுக்கும் ரகசியத் தூது செல்லவும் கொடுத்துவைத்திருக்கிறதே. பச்சைக்கிளியே, தினம் தினம் பிறக்கும் புதுக்கிளியே நீ என்றென்றும் வாழ்க. உன்னைத் தோளில் ஏந்திய  நோன்புப்பாவை வாழி. அவள் கைத்தலம் பற்றிய மன்னன் கோவிந்தனும் வாழி. திருப்பாவை முப்பதையும் நாங்கள் பாட எங்களுக்கு நல் எண்ணமும்,நல் மொழியும்,தரிசனம் கிடைக்க நல்ல கண்களும், நல்மொழிகள் கேட்க   செவிகளும் வேண்டி நமஸ்கரிக்கிறோம். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஸ்ரீரங்கம் சொக்கப்பனை, கார்த்திகை நாள்.

Image
சொக்கப்பனை  ஏற்றியாகிவிட்டது.ஸ்ரீரங்கா  அங்குதான் வரமுடியவில்லை. உன்னை எப்போதும் நினைக்கும் மனமும் வணங்கும் சிரமும்  இதோ  ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும்  சொக்கப்பனை எங்கள் துன்பங்களை ஒழித்து  எங்கள் வாழ்வில் ஆத்ம ஒளி ஏற்றட்டும். திருமண் காப்பு வடிவில்     விளக்குகள் தோளுக்கினியானில்  மனதுக்கினியான் சொக்கப்பனையைப் பார்வையிட  ஏளுகிறான். சட சடவென்று  பரவப் போகும் அக்னி அதைப் பார்க்க வரும் இறைவன். அனைவருக்கும்  கார்த்திகைத் திருநாள்   வாழ்த்துகள். இதைக் காணக் கொடுத்து வைத்தது ஒரு அதிசயம். விஜய் தொலைக்காட்சியில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் காலை உரையில் இன்று பெருமாளையும்,சொக்கப்பனையையும் கண்டேன். உரை தந்தவருக்கும் ஒளிக்காட்சி கொடுத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அண்ணாமலை ஈசனடிகள் சரணம்

Image
பக்தர்கள் கோவில் கிளியுடன் அம்பாள் பரணிதீபம் சரியாக மாலை ஆறுமணிக்குக் கார்த்திகை தீபம் ஆகிறது. அம்மையும் அப்பனும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தீபம் அண்ணாமலைக்கு  அரோகரா எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இன்று  வீட்டிலிருதபடியே அண்ணாமலையார்  ஜோதியைக் காணும் பாக்கியம் கிடைத்தது. கூடவே  திருமதி சுதா சேஷையனுடைய  பக்தி உணர்ச்சி நிரம்பிய விளக்கங்களோடு திருவண்ணாமலை ஸ்தல மகிமையைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. கண்கொள்ளாக் காட்சியாக எனக்குக் கிடைத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். அனைவருக்கும்   கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள். தீப ஒளி எங்கும் நிறைந்து எல்லோர் வாழ்விலும்  ஆநந்தம் பெருகட்டும். ஓம் நமசிவாய.

பிட் போட்டி டிசம்பர் மாதத்துக்குப் படங்கள்

Image
நொத்ரெதாம்  கோபுரங்கள் பாரீஸ் வீட்டுக் கடிகாரப் பெண்டுலங்கள் செம்பருத்தி இறைவனுக்கு கொலுவுக்கு வாங்கிய  யானைகள் மஞ்சள் செம்பருத்திப் பூ. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்