Blog Archive

Friday, March 29, 2019

அன்னையின் வழி என்றும் நலம்.4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .






லலிதாவுக்கு அந்தப் பள்ளியின் சூழ்நிலையும்
தலைமைப் பொறுப்பில் அப்போது இருந்த சகோதரியையும் மிகவும் பிடித்து விட்டது.

எல்லோருக்கும் அன்னையாக இருந்த மதர் சுப்பிரியர் அவளை அன்புடன் ஆசீர்வதித்தார்.
மகளே , உன் வாழ்வு சீரடையும். கடவுளிடம் ஈடுபாடும் கற்கும் கல்வியில்  முயற்சியும் இருந்து வெற்றி பெறுவாய். உலகத்தின் உன்னதத் தொழில் கல்வி  கொடுப்பது.
மென்மேலும் அபிவிருத்தி கிடைக்கும் .வாழ்வு உயர்ச்சி அடையும். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் லேசாவதை உணர்ந்தாள் லலிதா.

வீட்டுக்குத் திரும்பும்போது சாந்தாவின் அலட்சியம் மனதை உறுத்தினாலும்  மாமா,மாமியின்  அன்பும் அண்ணாவின் ஆதரவும் எப்பொழுதும் உண்டு என்பது சிறிது ஆறுதல் அளித்தது.

அங்கே சாந்தா அன்னையைச் சொல்லால் பொரிந்து கொண்டிருந்தாள்.
கணவனை இழந்த ஒரு மாதத்தில்  கருத்தரித்திருக்கும்  என்னைப்  பார்க்க எப்படி இங்கு வருவாள்.
சென்னையில் இல்லாத கல்லூரியா.

அவள் முன் நானும் என் கணவரும் எப்படி  முன் போல்
சகஜமாக இருப்பது.

அவருக்கும் தங்கையைப் பார்த்து வருத்தம் வருமே. என் குழந்தை நன்றாக வளர வேண்டாமா.

இன்னும் என்னென்னவோ சொல்லி அன்னையைத் திகைக்க வைத்தாள் .

அழகம்மா  இத்தனை வேதனைப் படாதே. உன் உடல் நிலைக்குச் சரி வராது. பெண்ணுக்குப் பெண்ணே இவ்வளவு பேதம் பார்க்கலாமா. அவளுக்கும் இப்போதுதான் 32 வயதாகிறது. நீயும் அவளுடன் வளர்ந்தவள் தானே.
சென்னையில் இருக்க முடியாமல் இங்கே வந்திருக்கிறாள் .
விடுதியில் தங்கப் போகிறாள்

உன் நிம்மதிக்கு ஒரு கெடுதியும் வராது
சரவணன் நிலையை நினைத்துப் பார். தங்கைக்காக எவ்வளவு வருந்தினான்.
நல்ல பெண்டாட்டியாக இருக்க முயற்சி செய் குடும்பம் தழைக்கும்.
லலிதா   மேன்மையான பெண்.
யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாள். என்று சொல்லி முடித்தாள்.

உபதேசம் செய்யாதேமா. திருமணம் ஆனதும் தனியாகச் சென்றிருக்கணும்.
அப்பா சொல் பேச்சு கேட்டு இங்கே தங்கினேன்.

எனக்குப் பிடிக்கவில்லை என்று  தன்  அறைக்குள்
போய்விட்டாள் .

நல்லதையே நினைக்கும் அழகம்மையின் மனம் வருந்தியது.
வாயிலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு

      சரவணன். என்ன   அத்தை, லல்லி வந்து விட்டாளா. எப்படி இருக்கிறாள்.
என்று ஆவலோடு கேட்டவனை
உள்ள வாப்பா. லல்லி சுகமாக வந்தாள் . ஹோலிகிராஸுக்கு மாமாவும் அவளும் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் என்று அவனுக்கு காபி பலகாரம் எடுத்துவைக்க உள்ளே விரைந்தாள்.

அவள் வெளியே வந்த பொது சிந்தனை தோய்ந்த முகத்துடன் சரவணன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.

கேள்விக்குறியோடு அத்தையை நோக்கினவனுக்குக் குழப்பம் தான் அதிகரித்தது.

சைகையால் அவனை அமைதி படுத்திய அழகம்மை,
கணவரையும் ,லல்லியையும் உள்ளே வரவேற்றாள்.
அண்ணா எப்ப வந்த என்று அழைத்தபடி உள்ளே வந்தவள், அமைதியாக    அருகில் சென்று அணைத்துக் கொண்டாள்.
சரவணனின் கண்கள் நிரம்பியது.

சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றி போல, என்ன டீச்சரம்மா என்று சிரித்தான். ஒரே மாதத்தில் இளைத்த உருவமும்,இறுகிய முகமும் வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் இருந்தது.

மாமாவை நோக்கி அவர்கள் லல்லிக்கு அட்மிஷன் கொடுத்துவிட்டார்களா என்றான்.
பின்ன என்னன்னு நினைச்ச என் மருமகளை.
திங்களன்று பள்ளியில் சேரனும். ஞாயிறன்று விடுதியில் சேரனும்.
பணம் எல்லாம் ரெடியாகக் கொண்டு வந்திருக்கிறாள் உன் தங்கை.

எனக்கு ஒரு பைசா செலவில்லை என்று சிரித்தார் சோமு மாமா.
 நீங்கள் இருப்பதால் தான் மாமா வந்தேன்.
உங்கள் உதவி இல்லாமல் என் வாழ்வு  எப்படி இந்தப் பாக்கியத்தைப் பெறு ம் என்று மாமியையும் மாமாவையும் நிற்க வைத்து வணங்கினாள் .

அதற்குள் அறையிலிருந்து சாந்தாவின் குரல் கேட்டது. சரூ ..... எனக்கு மீண்டும் தலை சுற்றுகிறது.

இன்று  டாக்டரை ச் சந்திக்கலாமா என்று  கேட்டது.
ஓ போகலாம் மா. இங்கே வாயேன். எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்து பேசலாம்
என்று அழைத்தான்.

பதிலில்லை.
லல்லி,,,,, மாமா என்னுடைகளைச் சீர் செய்து கொள்கிறேன். இன்னும் சில தேவையான பொருள்களையும் வாங்கி கொள்கிறேன்.
முக்கியமாக  திருவானைக் காவல் போய் வர வேண்டும்.

அவள் அனுமதியோடு என் பயிற்சி ஆரம்பிக்கட்டும் என்றாள் .

நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் லல்லி.இப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்  லிஸ்ட் தயார் செய். மதியத்துக்கு மேல் போகலாம் என்றான்.

சரியண்ணா என்ற படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்  லல்லி.

அவள் எதிர்பார்த்தபடி சரவணனால் வரமுடியவில்லை.
தானே ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, கையில் தயாராய் இருந்த, பயிற்சிக்கான உபகரணங்கள் கொண்ட லிஸ்டும், இரு சேலைகள், தன்  குளியல் சாதனங்கள் என்று  வாங்கி கொண்டு
திருவானைக் காவலும் போய்விட்டு வீடு நோக்கி வந்த பொது மணி இரவு ஏழாகி  இருந்தது.
எதிர் நோக்கி ,முகத்தில் கவலையோடு அமர்ந்திருந்தனர் மாமாவும் மாமியும்.







.


Wednesday, March 27, 2019

அன்னை காட்டும் வழி...3

வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அன்று இரவு தூங்கப் போவதற்கு முன் லலிதா ஹோலிகிராஸ்  ஆசிரிய பயிற்சிப் பள்ளியில்  சேருவதாக  முடிவெடுக்கப் பட்டது. அடுத்த நாள் காலை மாமாவும் லலிதாவும், அங்கே சென்று பார்க்க ஏற்பாடுகளை மாமா செய்துவிட்டே  படுத்துக் கொண்டார்.





அடுத்த நாள்  விடிந்தது. இரவு படுக்கப்போகும் முன் தன்  கணவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள்  அக்கா சொன்ன அறிவுரை நினைவுக்கு வர
தேற்றிக் கொண்டாள் . அம்மா எப்பொழுதும் வணங்கும் திருவானைக்காவல் அகிலாண்டேச்வரித்தாயை
 மனமார  நினைத்து உறங்கி விட்டாள் .

காலையில்  மனம் சோர்வடையாமல் முகம் ,கழுவிக் குளித்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய நல்ல வங்காளக் காட்டன் புடவையை ,மடிப்புக் கலையாமல் கட்டிக்க கொண்டு, பூஜை மணி ஓசை வரும் திசையில் நடந்து தெய்வப் படங்கள் மாட்டி இருக்கும் அறைக்கு வந்தாள் .
அமைதியுடன் உட்கார்ந்திருந்த அழகம்மா அவளைக் கைப்பிடித்து உட்கார வைத்து நெற்றியில் திருநீறு அணிவித்தாள் .

சிறிது யோசனைக்குப் பிறகு  விளக்கில் நுனியில் ஒட்டி இருக்கும்  கரையிலிருந்து குழைத்து ஒரு கறுப்புப் பொட்டையும் நெற்றியிலிட்டாள் .

மீண்டும் எட்டிப்பார்க்க நினைத்த கண்ணீரை விழுங்கியபடி மாமியையும் மாமாவையும் வணங்கினாள்  லலிதா
எதுவுமே தப்பில்லை லல்லி, மனம் நேராக இருந்தால்  போதும். நீ போய் உன் காலை  பலகாரத்தை முடித்துக் கொள்  . நாம் கிளம்பவேண்டும்.

அறையை விட்டுத் தெளிந்த மனத்தோடு வந்த லலிதா, சாப்பிடும் அறைக்குச் சென்று ,சமையல் செய்யும் சீதை அம்மாவையும்  சந்தித்தாள் . வெகு நாட்களாகப் பணிபுரியும்
அந்த அம்மாவும் லலிதாவை அன்புடன் தழுவி கன்னத்தில் முத்தமிட்டார்.
பாப்பா நல்லா சாப்பிடு. அப்பத்தான் தெம்பு வரும் ,என்று சொல்லி நிமிர்ந்தவள் உள்ளே வந்து கொண்டிருந்த , சாந்தாவை அழைத்து, லல்லி பாப்பா வந்திருக்கு கண்ணு. நீயும் வா என்றாள் .


உள்ளே வந்த சாந்தாவைக் கண்டு மகிழ்ச்சிப் புன்முறுவல் பூத்தாள் லல்லி.

ஸீதாம்மா எனக்கு தலை சுற்றலாக இருக்கிறது நான் என் அறையில் இருக்கிறேன், நீங்கள் ஹார்லிக்ஸ் மட்டும் கொண்டு வாருங்கள் என்றபடி லல்லியிடம் வா லல்லி என்று ஒரு சொல்லோடு வெளியே போய்விட்டாள்.


பாவம் மசக்கை இன்னும் விடவில்லை நீ சாப்பிடம்மா என்று,மணக்க,மணக்க இட்டிலி, மிளகாய்ப் போடி,சட்டினி இவைகளை  மேஜையில் வைத்து லல்லியை அமரவைத்து சாப்பிடம்மா. இதோ வரேன் என்று வெளியே போனார்.

அந்நேரம் மாமா,மாமி வரவும்  தன திகைப்பை மறைத்துக் கொண்டு  சாப்பிடத்  துவங்கினாள்  லல்லி.

சாந்தாவைப் பாத்தியாம்மா என்ற மாமாவிடம் பார்த்தேன் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக், கை  கழுவ எழுந்தாள்.

நீ உன் கல்லூரி  சான்றிதழ்களைத் தயாராக வைத்திரு அம்மா.
அங்கிருக்கும் மதர் சுப்பிரியர் எனக்கு மிக வேண்டப்பட்டவர்.
அங்கு சேருவதில் பிரச்சினை இருக்காது.

வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிடலாம். தைரியமாக இரு. ஒரு வருடம் ஓடிவிடும்.
பிறகு எங்க லலித்தாக்குட்டி 6ஆம் வகுப்பு ஆசிரியை ஆகிவிடுவாள் . சரிதானே  அம்மா  என்றார் மாமா.

ஆமாம் மாமா, என் முழு முயற்சியும் இந்தப் படிப்பில் செலுத்துவேன் .இனி என் ஆதாரம்  கல்வி ஒன்றே என்றாள்
லலிதா.

சரியாக ஒன்பது மணி அளவில் ஹோலிகிராஸ்  பயிற்சிக்கூட வாசலில் நின்றார்கள் மாமாவும் மருமகளும்.







Tuesday, March 26, 2019

துணிவும் நம்பிக்கையும் தருவாள் பராசக்தி,,,,,,2

வல்லிசிம்ஹன்

லலிதா  விமானத்தில் ஏறியதும் கிளம்பிச் சென்ற  அக்கா வசந்தா   , திருச்சிக்கு தொலைபேசினாள் .
//மாமா, மிக மனம் உடைந்து லலிதா வருகிறாள். அவளைத் தேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தழுதழுக்கும் குரலில்  சொன்னவளையும்
ஆறுதல்  கூ றித் தேற்றினார் சோமு மாமா..
நான் பார்த்துக் கொள்கிறேன் மா. நீ  கவலையை விடு
என்றார்.
அருகில்  வந்த மனைவி அழகம்மையிடமும்  சொல்லி இருவரும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.

45 நிமிடங்களில் திருச்சி வந்து சேர்ந்த விமானத்தில் இருந்து இறங்கி மெதுவே நிலைய வாசலை அடைந்த
லலிதா அங்கு நின்ற சிறிய  கூட்டத்தில் மாமாவைக் கண்டு கொண்டாள் .

மீண்டும் ஒரு புது சோகம் அவளை ஆக்கிரமித்தது.
ஒரு புரியாத திகில் சூழ்ந்தது.

என்ன செய்யப் போகிறோம்...இனி இவர்கள் எல்லோரையும் சார்ந்தே வாழ்க்கை அமையுமா.

என் ராமன் ஏன்  மறைந்தார். என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

அதற்குள்  மாமி அருகில் வந்து அவளை அனைத்துக் கொண்டார்.
மாமா முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எல்லாம் சரி செய்யலாம் அம்மா. கலக்கத்துக்கு இடம் கொடுக்காதே.

தைரியம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். நீ படிக்கப் போகும் படிப்பு எத்தனை குழந்தைகளின்  வாழ்வை வளம் செய்யப் போகிறது பார்//என்று அவள்கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

அண்ணா வரலியா மாமா என்று கேட்டதும், அவன் மதுரைக்கு வியாபார சம்பந்தமாகப் போயிருக்கிறான் அம்மா, இரண்டு நாட்களில் வருவான். உன் அண்ணி இருக்கிறாள்.

நாம் போகலாம் வா என்று காத்திருந்த வண்டியில் அவளை இருக்க வைத்து வண்டி ஓட்ட ஆரம்பித்தார்.

திருச்சி  கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்திருந்த பழைய காலத்து வீடு. முன்னாள்  ஆங்கிலேயர் காலத்து முறையில் வராந்தாவும், கூடங்களும், மாடிப்படிகளும் ,பின்புறம் அமைந்த சமையல் அறையும் ,அதன் பிறகு முற்றம், தோட்டம் என்று  விசாலமாக இருந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் 2 லலிதா.
வெகு நாட்களாகப் பழகிய இடம் அவளுக்கு நிழல் தந்தது.

மகளைத் தேடிய அழகம்மை , பணிசெய்பவரிடம் விசாரித்த பொது சின்னம்மா ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகச் சொன்னார்.

உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் லல்லிமா, உங்க அண்ணிக்கு  இன்னும் ஐந்து மாதத்தில்  பாக்கியம் கிடைக்கப்  போகிறது. நீ அத்தையாகப் போகிறாய் என்றதும், மனம் பூரித்தது லலிதாவுக்கு.
வந்ததுமே நல்ல செய்தி சொல்கிறீர்கள் மாமி என்று அணைத்துக்கொண்டாள்  லலிதா.
நீ கீழே எங்கள் அறைக்குப் பக்கத்திலேயே இருந்து கொள்ளம்மா. வா சாப்பிடலாம். இரவாகிவிட்டது பார் என்று அருமையுடன் அழைத்துச் சென்றார் மாமா.







Sunday, March 24, 2019

துணிவும் நம்பிக்கையும் வேண்டும் பராசக்தி

வல்லிசிம்ஹன்,

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.1977.

கையில்  ஒரு சிறு பெட்டியுடன்  நின்று கொண்டிருந்தாள்
லலிதா. அவளை  வழி அனுப்ப வந்த அக்கா வசந்தா,
பயப்படாமல் போ.
உன் கல்வி உன்னை எப்போதும் கைவிடாது.

ராமனைப் பற்றிய நினைவுகளை மறக்கச் சொல்லவில்லை. அதை ஒரு துணையாக எடுத்துக்கொள்.
முன்னே போக வேண்டிய பாதைக்கு விளக்காக வைத்துக்கொள்.
திரும்பிப் பார்க்காமல் முன்னேறும் வழியைப் பார்.

கடவுள் முகத்தை முன் பக்கமாகப்
  பார்க்கத்தானே வைத்திருக்கிறார்.

அக்காவின்  வார்த்தைகளை  ஜீரணிக்க முயன்றாள்
லலிதா.
ஒரு மாதமே கடந்திருந்தது, கணவனின்  மறைவு நிகழ்ந்து.
நாற்பது வயது மனிதன் அப்படித் திடீ ரென்று மறைய முடியுமா.
நினைத்ததும் கண்ணில் துளிர்த்தது நீர்.

சமாளித்த வண்ணம்  திருச்சிக்குச் செல்லும் விமான
அறிவிப்பை  எதிர்பார்த்தாள் .




துள்ளித் திரிந்ததொரு  காலம் 
திருச்சியில்  ஆசிரியைகளுக்கான பயிற்சி  எடுத்துக் கொள்ளப் 

 போய்க் கொண்டிருந்தாள்.
மாமாவீட்டுக்கு   முதலில் சென்று அங்கிருந்து 
அவள் படிக்க வேண்டிய  பள்ளியின் விடுதியில் சேருவதாக ஏற்பாடு.

தாய் மாமன் சோமு ,  ,திருச்சி மெயின் கார்டு கேட்டில்  ஒரு பெரிய ஆயத்த உடைகள்  மற்றும் சூரத் சில்க் புடவைகள் விற்கும்   கடை ஒன்றை நடத்தி வந்தார்.
 இரண்டு  வருடங்களுக்கு  முன்  தன்  தமக்கை  முதுமையின் காரணமாக மறைந்ததும்  அவள்  பெற்ற  செல்வங்களை 
தனதாகவே நினைத்து அரவணைத்துக் கொண்ட வர் .
அவர் மனைவியும் இசைந்த வாறு  நடந்தது அவருக்கு இடையூறு  இல்லாமல் தன்  வழி நடக்க  முடிந்தது.

 லலிதாவிற்கு ஒரு சகோதரனும் , ஒரு சகோதரியும்.

அண்ணனுக்கு நல்ல வேலை  செய்து வைத்தவரும் மாமா தான்.

அவனும் மாமன் மகளை நேசித்து மணம் முடித்தான். 
அக்கா  வசந்தா   பெற்றோர் பார்த்து வைத்த  சண்முகத்தை 
திருமணம்  செய்தாள் .

லலிதாவின் திருமணம்  காதலித்துச்  செய்து கொண்டது.

ராமனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் நடந்தது.

குழந்தைகளும்  பிறக்கவில்லை.பத்து வருட  தாம்பத்யம் 

இனிதாகத்  தான் நடந்தது.
ராமனின்  அகால மரணம்  அவன் பெற்றோர்களுக்கு 
அதிர்ச்சி . ஜாதகம் பார்க்காமல் மணமுடித்தது.
தான்  இவ்வாறு நடக்கக் கரணம். லலிதாவுக்கு 
அதிர்ஷ்டம் போதாது என்று தீர்மானம்.

எதிர்காலத்தைப் பற்றி  முடிவெடுத்து  அழைத்தது  மாமா 
சோமு  தான். பட்டம் மட்டும் பெற்றிருந்த  32 வயது லலிதாவின் எதிர்காலம்  இனி பார்க்கலாம்.





Friday, March 22, 2019

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளியல்

வல்லிசிம்ஹன்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி,
சன் தொலைக்காட்சியில் நான் கண்ட இரு மனிதர்களை இங்கே பதிவிடுகிறேன்.
இருவரும் தண்ணீரைக் காப்பாற்ற எடுத்து வரும் முயற்சிகள் அற்புதம். தமிழ் நாட்டில் இருப்பவர்கள் ஏற்கனவே கண்டிருப்பீ ர்கள் .
இந்த   ஒளி பரப்பு என்னை மிகவும் பாதித்தது.
தண்ணீர் பலவித்தையிலும் ஏராளமாகச் செலவாகும் இந்த நாட்டில் வளங்களும் அதிகம்.
இவர்களுக்கும் தண்ணீர் பற்றி நம்மளவு கவலை இருக்குமோ எனக்குத் தெரியவில்லை.
 நன் நாட்டு இளைஞர்கள் எடுத்திருக்கும் இம்முயற்சிகள் வளர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் ஒழிய வேண்டும்.
இறைவனிடம்  பிரார்த்திக்கிறேன்.

Saturday, March 16, 2019

நியூ ஸீலாந்து பயங்கர தீவிர வாதத்தால் அமைதிஇழந்த நாள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
நியூ ஸீலாந்து   ,மார்ச் 15 பயங்கர தீவிர வாதத்தால் அமைதி  இழந்த நாள் ,.
நம் பதிவர் துளசி கோபால் அங்கு வசிப்பதால் இந்த பயங்கரம்  உடனே தெரிய வந்தது.

சக மனிதர்களை அழிக்கும் இந்த வெறியை என்னவென்று
சொல்வது.
எனக்குத் தெரிந்த வரையில் மிக்க அமைதி விரும்பும்
மக்களே அங்கே இருக்கிறார்கள்.

இயற்கையிலே  மெதுவாக,அன்புடன் பேசும் மக்கள்.
கோவையில் நாங்கள் இருக்கும் போது ஒரு தம்பதி அங்கே வசித்து வந்தனர்.

என்னுடைய அவசர  மொழிப்  பரிமாற்றத்தை அவர்களால்
புரிந்து கொள்ளவே  முடியாது. .
இருந்தும் ஆறு மாதங்களுக்கு  பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்தோம்.
அவர்களுக்குப் பிடித்த காரம் இல்லாத உணவுகளை ஏற்றுக் கொண்டார்கள்.
பதிலுக்கு  மகளுக்கு ஒரு  பச்சை நிற கவுன் ,
பெரியவனுக்கு நல்லதொரு கிரிக்கெட் மட்டை எல்லாம் பரிசாகக் கொடுத்துத் தங்கள் ஊருக்கு கிளம்பினார்கள்.
சின்னவன் அப்போது பிறக்கவில்லை.

இத்தனை சாந்தமான மனிதர்களை பார்த்ததே இல்லை என்று நானும் கணவரும் பேசிக் கொள்வோம்.

அவர்கள் ஊரில் இந்தக் கோரமான நிகழ்வு.
அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள்  என்பதில் ஆச்சரியமென்ன.
கொலை செய்த அந்த வெறியன், ஒரு பயத்தை விதித்துவிட்டான்.
ஆங்காங்கே போலீஸ் காவலோடு மதம் சார்ந்த
அமைப்புகளின்   வாயிலில் நிற்கின்றனர்.

பயம் என்பது என்னவென்றே அறியாத  மக்களிடையே
இது நடந்ததுதான் கொடுரம்.

உலக முழுவதும்  சூறாவளியாகச் சுற்றி வரும் இந்த அராஜகம்.
முடிய வேண்டும் என்று பிரார்த்தனைகளை செலுத்தியபடி அனைவரும் வளமுடன் வாழ இறைவன்  அருள வேண்டிக் கொள்ளலாம்.



Wednesday, March 13, 2019

பாதுகாப்பு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .

பெண்களின்  வாழ்வு முறைகளை பேணிக் காத்த பெற்றோரிடமிருந்து

முறையாக மணந்த கணவனின்  வீட்டில்  மகிழ்ந்திருந்த காலம் மாறிப்  பெண்கள் அவர்களுக்கென ஒரு சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தக் காலம்.

யாரும் விதி முறைகளை மீறாமல் பழகி வரும் வரை பாதகம் இல்லை.
இப்பொழுது நடந்திருக்கும் விபரீதம் பற்றிப் படிக்கவே பதட்டமாக இருக்கிறது.
நிலைமை இவ்வளவு சீரழிய யார் காரணம் என்று பேசி பெண்களைக்  குற்றம் சொல்வதில் லாபம் இல்லை.
எப்பொழுதும் பாதிக்கப் படுவது அவர்கள் தான்.

இவ்வளவு முதுமையிலும் நானே இங்கே வர பயப்பட்டுக் கிடந்தது  இந்தப் பத்து   நாட்களாகக்  கண்கூடாகப்
பாதிக்கப் பட்ட  விஷயம்.
இப்பொழுதும் அந்த ஆபத்து விலகி விட்டதா என்று பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும். அனைவருக்கும்
காரடை நோன்பு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, March 06, 2019

நினைவுகளின் நிழல்கள்

வல்லிசிம்ஹன்  நினைவுகளின் நிழல்கள்
with his best friend my brother Murali.
His last picture.
சில நினைவுப் படங்கள் . நெல்லைத்தமிழன், கீதா ரங்கன்.

Monday, March 04, 2019

சிங்கம் 70 , 2010

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

2010 ஆம் வருடம்  இவருக்கு 70 வயது பூர்த்திக்கு,
எல்லோரும் பீம ரத  சாந்தி செய்ய வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தினார்கள். பையன்கள்  இருவரும் ,துபாய் மருமகள் பேத்தி வந்தாச்சு.

இவர் அசைந்து கொடுத்தால் தானே.
வேண்டாம்மா
இதெல்லாம் அனாவசியம்.னு மறு த்துக் கொண்டே இருந்தார்.
 அவருடைய ஜிம்  தோழர்கள் ஆன்ட்டி , அங்கிளுக்கு  ஒரு பார்ட்டியாவது நீங்க கொடுக்கணும் என்று ஒரே வற்புறுத்தல் . அத்தனை பேருக்கும் வீட்டில் இடம் செய்ய முடியாது.
நம் வீட்டில்  இடம் போதாது . யோசித்துப் பார்த்ததில், நம் வீட்டுத் திருமணங்கள்  சில நடந்த வுட்லன்ட்ஸ் நினைவுக்கு வந்தது.
உறவுகள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் பிருந்தாவன்  ஹால் இடம் கொடுக்கும் என்று தீர்மானித்து  உடனே சென்று பதிவு செய்துவிட்டேன். ஒரு அறுபது பேருக்கு மத்திய உணவு மெனு தயாரானது.
அது மட்டும் போதாது என்று தோன்றவே, என் நல்ல தோழரான ஸ்ரீராம் டிராவல்ஸ்  ஷங்கரிடம், ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்பாடு செய்ய உதவி கேட்டேன்.

அவரும் அங்கு தொடர்பு கொண்டு,அவர்களிடம் நான் வருவத்தைச் சொன்னார்.
அப்படியே மூலவருக்கு  தோளிலிருந்து தரை வரை தொங்கும் நிலமாலையும்   சொல்லிவிட்டேன்.
திருக்கோவிலுக்குச் சென்று  பணம் கட்டிவிட்டு வந்ததும்தான் நிம்மதி.

நம் துளசியும் கோபாலும் அப்போது சென்னையில் இருந்தார்கள்.
அவர்களையும் சேர்த்துக் கொண்டேன், தம்பி,அவன் குடும்பம், நாத்தனார்கள்  அவர்கள் குடும்பம், நண்பர்கள் அவர்கள் குடும்பம் என்று அவருக்கு மனதுக்கு  இனியவர் சேர்ந்ததும் தான் ஐயா முகத்தில் சிரிப்பு  வந்தது.
மாலை போடக்கூடாது என்று கண்டிப்பாக ஆர்டர்.

எனக்கு எவ்வளவு இதெல்லாம் பிடிக்குமோ  அதற்கு ஜஸ்ட் எதிர்  இவர்.

நான் நிறைய புடவைகள் வாங்கி கொண்டேன். 😃?😃😃😃😃😃😃😃

நல்ல படியாக 70 ஜக் கண்டோம். இறைவனுக்கு நன்றி.

Sunday, March 03, 2019

ஒரு நல்ல ஆத்மாவுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என் மாமனார்,மாமியாருக்கு முயன்று பெண்கள் பிறந்த பொது,
மகன் இல்லையே என்ற  கவலை அதிகரித்தது.
தாத்தாவின் சொல்படி  சேது, ராமேஸ்வரம்
சென்று பிள்ளை வரம் கேட்டுவாங்கி    பிறந்த மகன்தான் என் கணவர்.
ஒரு மாசி மாதம்  உத்திராட நக்ஷத்திரமும் சேர்ந்த நாள்.
மார்ச் 5 ஆம் தேதி.

எங்களையும் அரவணைத்துக் கொண்ட அன்பு மாமியாரும் மாமனாரும்.

தேடிக் கண்டு பிடித்து என்னையும்  மருமகளாக ஏற்றுக் கொண்ட பண்பு.

பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கு காரணமாயிருந்த கூட்டுக குடும்பம்.
இன்னும் அன்பு செலுத்தும்  சகோதரிகளும் ,அவர்கள் குழந்தைகளும். இறைவனுக்கு நன்றி.

என் அருமை சிங்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.