எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அம்பாள் வெற்றி அடைந்து அசுரர்களை
அழித்து விழாவும் கொண்டாடி விட்டோம்.
மங்கையர் கூடி மகிழும் நவராத்திரி நாட்கள், அதுவும் மூன்று
வருடங்களாக அடை பட்டுக் கிடந்தவர்கள்
இப்பொழுது மீண்டு வந்து நேரே பார்த்து பேசிக் கொள்வது
பெரிய நிகழ்வாக நடந்தது.
இத்தனை நாட்களாக நடந்த கோவிட் யுத்தத்தை
அதன் மன அழுத்தத்தை விடுவித்து
இந்த ஊர் அம்மாக்களும் பெண்களும், கணவர்களும்
வந்தார்கள்.
தோழியின் அம்மா என்று கொலு முதல் படியில் என்னை
வைத்து அவர்கள் அன்பு காட்டியது மறக்க முடியவில்லை.
பல கொலுக்களின் படங்களைப் பதிய வேண்டும்.
அட்டகாச கொலுப் பொம்மைகள்.
அதை ஆக்கிப் படைத்த அழகு.
மனமார்ந்த உபசரிப்பு. தாம்பூலம் அளித்த அருமை.
எல்லாவற்றையும் முடிந்த வரையில் பகிர்ந்து


