Showing posts with label சொந்தக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை. Show all posts

Thursday, February 07, 2008

திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெரு1961


மதுரைப் புதுமண்டபம், பாட்டியுடன் போய் வளையல்கள், ரிப்பன், தலநுனியில் வைக்கும் குஞ்சலம் என்று!!
திண்டுக்கல் மலைக்கோட்டை
எங்களுக்கு ஒரு பீச் மாதிரி.
சிறிய மலைப்படிகள். வேகமாக ஏறினால் அரைமணியில் கோட்டைக்குப் போகலாம்.
இதமான காற்று.கையில் பட்டாணி, அந்தக் கையில் ஏதாவது கதைப் புத்தகம். நடுவில் தம்பி நக்ஷத்ரேயன் படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். வா போலாம்னு இழுத்துக் கொண்டு கிழே வந்து விடுவான்.

கோட்டை மாரியம்மன் கோவில், இந்த இடங்கள் எல்லாம் மறக்க முடியுமா.!!
எங்கள் பள்ளியின் படம் கிடைக்கவில்லை:((
காதல் என்று ஒரு படத்தில் ஒரு பெண்கள் உயர் நிலைப்பள்ளி காண்பிப்பார்கள். எங்கள் பள்ளியும் ,அச்சு அசல் அப்படியே இருக்கும்;))
தாத்தா மறைவுக்குப் பிறகு பாட்டி எங்களுடன் வசிக்க வந்ததால் அப்பா வேறு வீடு பார்க்க ஆரம்பித்தார்.அதனால் வீடு மாற்ற வேண்டிய அவசியம் வந்தது.
அப்போ இருந்த வீட்டிலிருந்து ரோடுக்கு வரும் வழி கொஞ்சம் சிக்கல்.
அதுவுமில்லாமல் பக்கத்து வீட்டுக் கோழிகள்,முயல்கள்
எல்லாம் அடிக்கடி வரும்.
பாட்டிக்கு அவ்வளவாகப் பிடிக்காது:)
வாசல் காலை நீட்டி உட்காந்து இருப்பார்.
வேலியைத் தாண்டி வரும்முயல்குட்டி அவ்வளவு அழகா இருக்கும்...அது வந்து பாட்டியைக் குசலம் விசாரிக்கும்!!
பாட்டிக்குச் சுத்தபத்தமா இருக்கணும்.
கூடவே தன் சர்க்கரை நோயைப்பற்றிக் கவனமாக இருப்பார்.ஏதாவது சுகவீனம் வந்துவிடக்கூடாதுனு உஷாராக இருப்பார்.

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...