Blog Archive

Sunday, August 31, 2014

1oo அடிகள் பயணம் ஆங்கிலப் படம்

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இளம் கதாநாயகி.                                                                       ஹெலன் மிர்ரென் நடித்திருக்கிறார்.கூடவே  ஓம் புரியின் சிறப்பு என்று நம்பிப் பார்க்கப் போன படம்.  ஒரு இந்திப் படத்தை  ஆங்கில டப்பிங்கில் பார்த்த உணர்வு. எங்கயோ ஏமாந்த தவிப்பு. எதிபார்த்த அளவுக்கு அமையவில்லை  இந்தப் படம்.    மஹா பெரிய ஸ்டார்வால்யூ. ஓப்ரா  வின்ஃப்ரி, ஸ்டீவன்  ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம்   என்கிற   அதீத விளம்பரங்கள்.ட்ர்ய்லரைப் பார்த்த பெண்ணும்  பக்கத்தில் இருக்கும்  படத்தியேட்டர் காம்ப்ளெக்ஸுக்கு வண்டியை ஓட்டி வந்துவிட்டாள். துணைக்கு அவள் மகனும் என் மகனும். :)




அய்யோடான்னு  ஆகிவிட்டது. ஆரம்ப காட்சிகளில் ஜூஹி சாவ்லா,மகன் ,தந்தை சாப்பாட்டுக் கடை,அதில் மதக் கலவரத்தீ   ,தாய் மரணம்.குடும்பம்  லண்டனை நோக்கிப் பயணம் என்று விருவிருப்பாக  நகர்ந்த கதை   அப்புறம் இன்ச் இன்ச்சாக   நகர ஆரம்பித்தது.   கமர்ஷியல் படமா,ஆர்ட் படமா ம்ஹூஉம்  ஒன்றும் புரியவில்லை. காட்சி அமைப்புகள் ,இயற்கை யிலியே அமைந்து ஐரோப்பிய  நிலத்துக்கே உரிய  பசுமை.                               இந்தியப் பையனும் ,ஃப்ரென்ச்  பெண்ணும் காதலித்து,மோதிப் பின் உள்ளம் கலந்து என்று போகிற கதையில் ஓம்புரியின் பிடிவாதமும்,ஹெலன் மிர்ரனின் ஈகோவும்  முட்டிக் கொள்ளும் காட்சிகள் அருமை.


ஏற்கனவே இருக்கும்  பிரெஞ்ச்  உணவகத்துக்கு  முன்னால் இந்தியக் கடை நடத்தி வெற்றியும் பெறுகிறார்  ஓம் புரி. இளைய தலைமுறை மகன் ஹெலன் மிர்ரனுடன் சேர்ந்து பல  உணவு முறைகளைக் கற்று ,பாரீசுக்குப் பயிற்சி  எடுத்துக் கொள்ள  தேர்ந்தெடுக்கப் படுகிறான்.அப்பா மனசில்லாமல் அனுப்பினாலும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.                                                                                                அங்கே போய்க் கற்றுத் தேர்ந்தாலும்  ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய   கறி மசாலாவின் மணத்தில்  அம்மாவின்  நினைவு வந்து  கண்ண்ரில்  நனைகிறான். அடுத்த காட்சி அப்பாவைப் பார்க்க ரயிலேறிவிடுகிறான்.                                                                                                                                                            அங்கெ தன் ஃப்ரெஞ்ச் காதலியோடு  தன் திட்டத்தைச் சொல்லி  ப்ரெஞ்ச் இந்திய கூட்டமைப்பாக                   ஒரு புது உண்வகம் உருவாகிறது. பெரியவர்கள் மனதிலும்     ஒரு புதிய உற்சாகம்.  இருவரும் மனதால்    ஒருமித்த சிந்தனை உள்ளவர்களாக  இணையும் காட்சி  இருக்கிறது. ஆங்கிலப் படம் அல்லவா.....அதனால் சர்ச் கல்யாணம்,இந்தியக் கல்யாணம் ஒன்றும் நடக்கவில்லை.  இரண்டு   ஜோடிகளும்   சேர்ந்து  சுதந்திரதின   கொண்டாட்டத்தை  வாணவேடிக்கையோடு காண்பதாக  திரைப்படம்  பூர்த்தி.                                                                  எனக்கு இன்னும் குழப்பம் .நான் பார்த்தது. இந்தியப் படமா,ஆங்கிலப் படமா.

Friday, August 29, 2014

நவசக்தி கணபதியே எங்கள் லஸ் பிள்ளையாரே

சோளக்கருது,விளாம்பழம்,வாழைப்பழம்,கொய்யா,கரும்பு தர வைத்த கணேசா  நல்ல புத்தி கொடு.
தீப மங்கள ஜோதி நமோ நமஹ
என்றும் துணை  இவர்கள்
நம் வீட்டு விநாயகர்
கணபதியே வருவாய் அருள்வாய்
Add caption
சந்தன அபிஷேகம் ஸ்வாமிக்கு

ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா கணேசனைத் தரிசிக்கும் காட்சி

 எங்கள்  லஸ் விநாயகன்.
பாபம் தீர்ப்பான்.சோகம் தீர்ப்பான். நோயகற்றுவான்
ஆனந்த மழை பொழிவான்.
போற்றி கணநாயக போற்றி.

விக்னவிநாயக பாத நமஸ்காரம்.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி  வாழ்த்துகள்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, August 27, 2014

ஓசியில் வந்த செய்தி

நமது இந்தியா,
ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின்
கட்டுப்பாட்டில் இருந்தபோது,
'இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு'
அரசாங்கக் கடிதங்களும்,
ஆவணங்களும் மற்ற கோப்புகளும்
தபால் மூலமாக கடல்வழியாக அனுப்பப்பட்டுவந்தன..
இதில்,
ஒவ்வொரு கடிதத்திலும் 'அஞ்சல் தலைகளை'
கடிதங்களின் எடைக்கேற்ப
மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது..
இங்கே இருக்கும்
'ஆங்கிலேய அரசிடமிருந்து'
இங்கிலாந்தில் இருக்கும்
'தலைமை அரசாங்கத்திற்கு'
அனுப்பப்படும் கடிதங்களுக்கு,
எதற்காக வீண்செலவு என்று யோசித்த
ஆங்கில அரசு,
புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது..
அதாவது,
அரசாங்கம் சம்பந்தப்பட்ட
கடிதப் போக்குவரத்துகளில்
தபால்தலைகளை ஒட்டி
வீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக,
அக்கடிதங்களில்
O.C.S [ On Company Service]
என்று அச்சிடுவது
என முடிவுசெய்து,
அதன்படியே
செயல்படுத்தப்பட்டது..
அதாவது,
O.C.S. என்றால்,
பணம் செலவு செய்யாமல்
கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாளில்
நம்மக்களுக்குத் தெரிந்தது..
இதனைத் தொடர்ந்து
O.C.S. என்ற வார்த்தை
மக்களிடையே பிரபலமடைந்தது..
அதன்பிறகு
O.C.S. என்ற இந்த வார்த்தை,
எல்லா கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது..
பின்னாளில் O.C.S. என்ற
வார்த்தை மருவி
O.C. என்று சுருங்கியது..
அதன்பிறகு,
எவரேனும் 'இலவசமாக பணமேதும் கொடுக்காமல்'
பொருட்களை வாங்கினால்,
அவரை O.C. என்று அழைக்கும் பழக்கம்
மக்களிடையே
ஏற்பட்டது..
On Company Service என்ற இந்த முறைதான்,
இன்றும்
நமது இந்திய அரசுத்துறைகளில்
On I.G.S. Only..
[On Indian Government Service Only] என்ற பெயரில்
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ரோகிணி ரங்கநாதனின்   செய்தி.

Monday, August 25, 2014

குகனும் ஸ்ரீராம பட்டாபிஷேகமும்

படகோட்டியும் பட்டாபிஷேகமும் ..!
கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!
படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.
‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னடாவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.
குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே... அவருக்கா என்னை மறக்கும்?’’நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’
‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகு
மதிகளை வாங்கிச் செல்’என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’
அனுப்பியவர்  திருமதி ரோகிணி ரங்கநாதன்
rs ag

Thursday, August 21, 2014

இன்னுமொரு கொசு வர்த்தி



நாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப் படும்.
எப்போதும் எதையாவது தேடாவிட்டால் எனக்கு அன்றையப் பொழுது சரியாகப் போகவில்லை என்று அர்த்தம்:)

எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்,.
அதுவும் போன மாதம் தேடின பொருளாக இருக்கும். அப்படி ஒரு அவஸ்தைப் பட்டோமே இங்க இருக்கே என்னும் முணுமுணுப்போடு அதை மீண்டும் பத்திரமான(மறுபடியும் தேடும் விதமாக) இடத்தில் வைத்துவிடுவேன்:)

போன வாரத்தில் தேடிய விஷயம் என் மருத்துவர் எழுதிக் கொடுத்த என்னைப் பற்றியும் என் உடல் நலம் பற்றியுமான
குறிப்புகள் கொண்ட புத்தகம்.

அதை நான்கு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். இணையம் வர நேரமில்லை, தொலைபேசியில் யார் பேசினாலும் அவர்களிடம் புலம்பல்கள்,
இரண்டு நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் கூப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.:))
கோவில் பைகள், துணிக்கடைப் பைகள், அங்காடிப் பைகள் ....எல்லாம் வித விதமான பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அப்படி ஒரு பையில் வைத்ததுதான் பழைய கடிதங்கள்.

ஒரே ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த தோழிகளின் கடிதங்கள் வர்ணம் மாறி, எண்ணம் மாறாமல் 17 வயதுப் பெண்கள் அப்போது கடந்து கொண்டிருந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு
கிடைத்தது.

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டோம் என்பதை உணர்த்திய கடிதம் ஒன்றை வாசித்தேன்.
இதோ அந்த 1965 அக்டோபர் மாதம் எழுதப் பட்ட கடிதம்.
நாற்பத்து நாலு வருடங்களுக்குப் பிறகு கூட என்னை வசீகரித்த வரிகள்.
எழுதியவர் மல்லிகா என்கிற மாலு,.
*******************************************************************************

அன்பு ரேவா,
எனக்குத்தான் இத்தனை நாட்களாகக் கடிதம் எழுத நேரம் இல்லை. உனக்குமா.

இல்லையாகில் நான் , கடிதம் எழுதினால் ,பதில் கடிதம் போட்டால் போதும் என்கிற எண்ணமா.அவ்வளவுதான் நம் நட்பா.
கடந்த ஒரு மாதத்தில் கடந்த ஒரு வருடத்தை எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
(just for reply sake if you want to write to me ., pl give up that idea.)
பொழுது போவதற்காகக் கடிதம் எழுதுபவள் நானில்லை.
எனக்கென்று ஏற்பட்ட வாழ்க்கையில் உண்டான கஷ்ட நஷ்டங்களை அறிவாய்.
உன் கடிதம் வந்து பத்து நாட்கள் ஆகின்றன. நீ பசுமலைக்குப் போய்விட்டாய் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எவ்வளவு விஷயங்கள் நடந்தது உனக்குத் தெரியுமா.
தம்பி கண்ணனுக்கு பொன்னுக்கு வீங்கி,
தங்கை ஜானி(ஜானகி)க்கு ஹார்ட் வீக்காம். தினம் என்ஜெக்ஷன் (ஊசி) போட்டுக் கொள்கிறாள் .
என் தலையோ வலிப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நன் படிப்பேனா, ஆஸ்பத்திரிக்குப் போவேனா
,சமைப்பேனா நீயே சொல். உனக்குக் கடிதம் எழுத எனக்கு ஏது நேரம்!!
இதற்கிடையில் எனக்கொரு மகன் பிறந்தான்.
முழிக்காதே.
என் அக்காவிற்குப் பிறந்தால் என் மகன் தானே!!
பட்டுவிற்குப் பிறந்த மகன் அழகுச் செல்வம். அவனையும் அவன் அம்மாவையும் அவள் புக்ககத்தில் விட்டு வந்தோம்.

நீ கல்லூரியில் இல்லாதது எனக்குத் தான் நஷ்டம். நம் குரூப் சிதறிவிட்டது. ராஜேஸ்வரி ஒரு பக்கம் ,நான் வேறு கிளையில் படிக்கிறேன். கிரிஜா இன்னோரு கிளை.

ஒரே கல்லூரியில் இருந்தும் , நாங்கள் எப்பவாவது பார்த்துக் கொள்வது ஆர்ட்ஸ் காலேஜ் பஸ் நிறுத்தத்தில்தான்.
ஹை!! பை!! சீ யூ என்று போய்விடுகிறது.

எது நம் நட்பைப் பிரித்தது என்று கூடத் தெரியவில்லை.
போகட்டும் நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்.

நிறையப் படி. கல்லூரிக்குப் போகவில்லையே என்று வருத்தப் படாதே.

இப்போது பி.யூ.சி யில் சேர்ந்திருக்கும் பெண்கள் நம்மைப் போல இல்லை.
ஒரே வண்ணமய நாகரீகப் பட்டாம்பூச்சிகள் போல இருக்கிறார்கள்.
எனக்கு வயதாகி விட்டதோ:))

உன் விவரங்களை எழுது. அம்மா அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.
தம்பி மதுரையில் பி.யு.சி சேர்ந்துவிட்டானா.
சின்னத்தம்பி என்ன படிக்கிறான்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உன் அன்புத்தோழி, மாலு.
11/10/65
சென்னை.
பி.கு.
எப்படி என் தமிழ்க் கடிதம். அசத்திவிட்டேனா????
உனக்காகத் தமிழில் எழுதினேன்.(இங்கே கொஞ்சம் சிரித்துக் கொள்) .
*****************************************************************************
என் குறிப்பு.
இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, August 19, 2014

கண்ணனைப் பற்றி ஒரு கதை.

வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எல்லாம் உனக்கு கண்ணா.                



கண்ணன் பிறந்து  மூன்று நாட்கள் கழித்து அவனைப் பற்றின  பாட்டி ஒருத்தியின் கதை கிடைத்தது. அனுப்பினது என் குட்டித் தங்கை.       கண்ணனையே தியானம் செய்து அவனுக்கே  எல்லாம் என்று சொல்லும் வழக்கம்  கொண்ட  வயதான மாது வாழ்ந்துவந்தாள்.  குருவாயூரப்பன்  அவள்   நினைத்துவந்த வந்த தெய்வம். எதை எடுத்தாலும் கிருணார்ப்பணம் என்று சொல்லி அனுபவிப்பது அவள் வழக்கமாம்.   ஒரு நாள்  பழைய காலத்து வீட்டு வாயில்படிகள் கொண்ட ஒரு வீட்டுக்குள் நுழையும்போது நிலைவாசல் அவள் தலையில்  தட்டிவிட்டு வலித்ததாம். வலியின் கொடுமையிலும் கிருஷ்ணார்ப்பணம்   சொல்லிக் கொண்டாள் பாட்டி.    இப்படியே  இருந்தவள் வாழ்விலும்  தனம்  வந்து சேர்ந்தது தங்கங்களாக. அவளுடைய பகதர்கள் செல்வந்தர்கள்.அவளுக்குச் சமர்ப்பித்த செல்வமாகப் பெற்றுக் கொண்ட பாட்டி  அதைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு என்று சொல்ல மனம் வரவில்லையோ இல்லை மறந்தாளோ தெரியாது.                                                                                                             ஒருநாள்  பவதி பிக்ஷாந்தேஹி என்று கேட்டவண்ணம்   ஒரு அந்தணர்   வாயிலில் வந்து நின்றார். அவர் எத்தனை முறை கூவியும் பாட்டி வெளியில் வந்து பிக்ஷை கொடுக்கவில்லை.  கோபம் கொண்ட அந்தணன்   கிருஷ்ணன்,    படி இடிச்சா  எனக்கு. பதக்கம் கிடைத்தால் உனக்கா  என்று உரக்கச்   சொன்னாராம்.  பகீர் என்றது பாட்டிக்கு.  ஓடிவந்து கண்ணனில் பாதங்களில் விழுந்தாள். அவனுக்கு உபசாரம் செய்து தன்னிடமிருந்த அத்தனையும்  அவன் காலடியில் சமர்ப்பித்து       எல்லாம் உனக்கே கண்ணா. உன் அருள் ஒன்று போதும் எனக்கு என்றாளாம்.  கண்ணன் அவளையும் பொருளையும் ஏற்றுக் கொண்டானாம்.   இணைய வழியில் தங்கை அனுப்பிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Saturday, August 16, 2014

போய் வருகிறேன் .பை பை சிகாகோ.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பலவித பயணங்களில்   இதுவும் ஒன்று. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த அமெரிக்காவின்  கதி என்னாவது.                 மிக அருமையான உறவுகளும் தோழமைகளும் கிடைத்த இடம்.  வென் ஆர் யூ  கமிங் பாக்   தான்  எல்லார் வார்த்தையும்.  கடவுள் தான் சொல்லணும்னு சொல்லி இருக்கிறேன்.                        கடவுள் அனைவரையும் காப்பாற்றிப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.  அது ஒன்றுதான் என் பிரார்த்தனை.   மீண்டும் சந்திக்கலாம்..

Thursday, August 14, 2014

Wall drug^s story.ஓரு கடையின் கதை. South Dakota tour 4

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wall                                                                        வால் என்னும் இடத்தில் ஆரம்பிக்க ப்  பட்ட                                          இந்தக்  கடையை ஆரம்பிக்கக் காரணம்  வியாபாரம் செழிக்க வேண்டும் என்ற பொதுவான எண்ணம் தான். அதிலென்ன அதிசயம். ஒன்றும் இல்லை. இந்தக் கடையை ஆரம்பித்தவர்  ஹஸ்டட்  தேர்ந்தெடுத்த இடம் தான். ஒரு அத்துவானக் காடு.                                                                             கண்ணுக்கெட்டிய தூரம் வரை புல்வெளியும் எப்பவாவது கண்ணில் படும் மரங்களும் தான். சௌத் டகோடா  என்பது  சஹாராவைவிடப் பெரிதாக இருக்குமோ என்று நான் நினைத்தேன். அவ்வளவு விஸ்தீரணம்.                                                                                     கனோவா   என்னும் இடத்தில்  குடும்பத்துடன் இருந்த    டெட் ஹல்ஸ்டடும்  கேதியும்  மருந்துக்கடை  வைப்பதற்கான  படிப்பை  முடித்திருந்தனர். டெட்டின்  அப்பா இறந்த போது  3000 டாலர்கள் வைத்துவிட்டுப் போயிருந்தார். அதை வைத்துக் கொண்டு  வேறு இடம் சென்று பிழைக்க நினைத்தனர்.    அதற்கு   அவர்கள்   தேர்ந்திடத்த இடம் பாட்லாண்ட்ஸ்  முடியும் இடத்திலிருந்த வால்   என்னும்  கிராமம். அங்கே ஒரு கோவில்,ஒருஸ்கூல்,பத்து குடும்பங்கள்  இருந்தன.  வீட்டில்   இருந்த மற்றவர்கள் முதலில்  வெகுவாக யோசித்தனர். இந்தச் சிறு குடும்பம் இவ்வளவு  பெரிய      சோதனையைத் தாங்குமா என்று.                         கடைசியில்   கடவுள்   கிருபையை நாடியாபடி வால்  கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கே   மருந்துக் கடையும் ஆரம்பித்து நடந்துவந்தது. கொஞ்சமே மருந்துகள் விற்றன. இருவருக்கும்                                                  வேறு ஏதாவது செய்தால் தான் பிழைக்க   முடியும்.இல்லாவிட்டால் இந்த அத்துவானத்தில் இருப்பதே சிரமம் என்று   உணர்ந்தனர். ஒரு வருடத்தில்                                           ஒரு பையனும் அடுத்த வருடம் இன்னோரு பெண்ணும் பிறந்த நிலையில்                                       கடையில்  ஈக்களை ஓட்டியபடி  கணவனும் மனைவியும் உட்கார்ந்திருந்தனர்,                                                                                                                                        தொலைதூரத்தில்  வீடுமுறையை  ஒட்டி  வெளியூர் செல்லும் குடும்பங்கள் தங்கள் வண்டிகளில் விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருவரும் இந்தக் கடையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.                                                                கேதி    தான்    கொஞ்ச  நேரம்  போய்ப் படுத்துக் கொள்வதாக மறைவில்  சென்று ஓய்வு எடுத்துக் கொண்டால்.  வெய்யில்  தகித்துக் கொண்டிருந்தது.  சட்டென்று கேதி திரும்பி வரும் சத்தம்   கேட்டு  டெட்  பார்த்தார்.  என்னம்மா    தூக்கம் வரவில்லையா என்றார்.  இல்லை  அங்கே  செல்லும்  வாகனங்கள் என்னைத் தூங்க விடவில்லை  என்றாள்  கேதி.  சத்தமாகச் செல்கின்றன. உன் ஓய்வு  பாதிக்கப் பட்டது குறித்து வருந்துகிறேன்.                                                                 நாம் இங்கிருந்து கிளம்பலாமா.ஊருக்கே போய்விடலாம். இங்கே மிகவும் தனிமையாக உணர்கிறேன்  என்று யோசித்தவாறு  வார்த்தைகளை உதிர்த்தார் டெட்.                                                     உடனே மறுத்தாள் கேட்டி. நான் அதைச் சொல்லவில்லை. இந்த வெய்யில் காலத்தில் சாலையில் செல்பவர்களை இங்கே வரவழைக்க எனக்கு  ஒரு வழி தெரிந்தது. இதைப் பாருங்கள் என்று ஒரு காகிதத்தில் தான் எழுதி  இருந்த வாசகங்களைக் காண்பித்தாள்.                                                                                                                                                                                                              ""   Get a soda . . . Get a root beer . . . turn next corner . . . Just as near . . . To Highway 16 & 14. . . Free Ice Water. . . Wall Drug."                                                                                                                 இது    போன்ற  வாசகங்களை எழுதிக்  கொண்டு போய் ஹைவேயில் வைத்தால்  தண்ணிர்த் தாகம் எடுப்பவர்கள் வருவார்கள்  என்ற அற்புதமான யோசனையைச் சொன்னாள்.  ஒரு பள்ளிக்கூடப் பையனை அழைத்துக் கொண்டு  டெட்டும்  ஹைவே யில் கண்படும் இட்ங்களில்   ஃப்ரீ ஐஸ் வாட்டர்   போர்ட்களை வைத்தார்.                                                                                                                                                                                                                                   ஒருவர் இருவராக மக்கள் தண்ணீர் குடிக்கவந்தார்கள். சிலபேர்  பக்கேட்டுக்களில் வாங்கிப் போனார்கள். மருந்துகளும் விற்பனையாகின.   புதிய விளம்பரங்களும் கிடைத்தன.    தண்ணீர் குடிக்க வந்தவரகள்   ஐஸ்க்ரீம் வாங்கினார்கள். தம்பதியர் இருவரும் சலிப்பில்லாமல் வேலை செய்தனர். மனமெங்கும் மகிழ்ச்சி. மனிதர்களின் தோழமைக்காக ஏங்கியவர்களுக்கு இந்த டூரிஸ்டுகளின் வருகை  தெய்வப்ரசாதமாக் அமைந்தது. டெட்  காலத்திலிய்யே மகன் பில்  வியாபாரத்தைக் கவனிக்கத் துவங்கினான்.ஒரு வீதி நிறைய  மக்களுக்குத் தேவையான பொருட்கள் உணவகம்,சலூன்,உடைகள்     கௌபாய்ஸ்க்குத் தேவையான உபகரணங்கள்,     விடுதிகள் என்று விரிவடைந்தது.   எங்கள்   அனுபவம் இந்த ஊரில் மறக்க முடியாத 5 செண்ட்ஸ் காஃபியாக அமைந்தது. இன்னும் ஐஸ் வாட்டர்  ஃப்ரீதான்.   உண்மையான உழைப்பு வெற்றி பெற்ற ஊர்    வால்  WALL. ஒரு நாளைக்கு 25   ஆயிரம் மக்களுக்கு மேல்                                  வருவதாகக் குறிப்பிட்டார்கள்.                                                                                                      உண்மையான நற்சிந்தனை வெற்றி பெற்ற இடம்.                                                                                                                                                                                               

Friday, August 08, 2014

ஸ்ட்ராஸ்பர்க் பிரான்ஸ் பயணம்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

நடைபாதைக் கடைகள்.

வெய்யிலைக் கண்டால் பரமசந்தோஷம் துணிகளுக்குக் கூட.!!!
சென்னைவெய்யிலுக்கு அனுப்பலாமா இந்தத் தொப்பிகளை?
 ப்ளாகர்   பிரச்சினையில் எழுதிய இரண்டு பதிவுகளும் காணாமல் போயின. இப்போது படங்களை மீட்டுப் பதிந்திருக்கிறேன்.பிரான்சில் உள்ள நகரம் ஸ்ட்ராஸ்பர்க்.

பனிரண்டாம் நூற்றாண்டு கலைப் பொக்கிஷங்கள் பலவற்றைப
பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்
ஸ்ட்ராஸ்பர்க் நகரம்

, பாசலிலிருந்து நூற்றறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

முந்தைய பயணங்களில் எங்களிடம் செங்கன் விசா இல்லை.

இந்தத் தடவை அதை எடுத்த ஆக வேண்டிய கட்டாயம்.

எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவாக

அது நடை முறைக்கு வந்திருக்கிறது.

அதற்காகவே புதுப் பாஸ்போர்ட்டும் எடுக்கச் சொன்னார்கள். மார்ச் முதல் வாரம் கிளம்ப வேண்டியவர்கள்,

இன்னும் ஒரு மாதம் கழித்துத் தான் கிளம்ப முடிந்தது.

வந்ததிலிருந்து சின்னக் குழந்தையின் சளித்தொல்லை, பெரிய குழந்தையின்

பள்ளி வேலை என்று நாட்கள் கடந்தன.

மகனுக்கோ எங்களை ஒரு இடமாவது அழைத்துச் சென்று

வரவேண்டும் என்று ஆவல்.

ஸ்விட்சர்லாந்து மூன்று பக்கமும் மூன்று எல்லைகளைக் கொண்டது. மேலே வடக்கில் ஜெர்மனி.

கீழே இத்தாலி.

மேற்கே பிரான்ஸ் நாடு.

எல்லாம் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடும்.

இத்தாலிக்கு மூன்று மணி பிடிக்கும்.

ரயில்களின்வேகம்

தெரிந்ததுதான்.
நேரம் தவறாமை. சுத்தம். இவை ரயில் பயணத்தை மேலும் ரசிக்கச் செய்கின்றன.
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ச்விட்சர்லாந்துக்கும் ,பக்கத்திலயே

இருக்கும் பிரான்சுக்கும் எவ்வளவு வேறுபாடு!

நம்ம கேரளாவும்,தமிழ்நாடும் போலத்தான்.

அங்கே ஸ்ட்ராஸ்பர்க் என்ற ஊருக்குப் போனால் பேத்தி பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் முன்னால் வந்துவிடலாம்
என்று திட்டம்.
நேரம் கழித்துத்தான் வந்தோம். பேத்தி கண்டு கொள்ளவே இல்லை.:)

நீ ஊருக்குப் போயிட்டயோன்னு நினைத்தேன் என்றாள்:)
ஏதாவது வாங்கிண்டு வந்தியா?????
ம்ம். இந்தாம்மா. தலைக்குக் கிளிப்.
டிராயிங் செய்ய  பெயின்ட்."
என்று எடுத்ததும் குஷியாகிவிட்டது.
எனக்கு இன்னும் பாஸ்போர்ட் வரலை தாத்தா. ஐ கானாட் கம் வித் யூ. 
சோ ஐ வில் நாட் கெட் அங்க்ரி. "ஒகே?

என்று தாத்தா
 முதுகில் தட்டிக் கொடுத்தாள் பெரிய மனுஷி.:)



.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, August 07, 2014

நீர் அரித்து மடித்த நிலம் சௌத் டகோடா பயணம்.3

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
மாலை மயங்குகின்ற நேரம் நம்மையும் மயக்குகிறது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நதிகள் ஒரு பக்கம் வண்டலைச் சேமித்துக் கொட்ட, கடலும் காற்றும் படிந்த மணலை அரிக்கப்       ப்ழைத்துக் கிடைக்கிறது இந்த  Bad Lands,.  தேசியப் பூங்காவாக அறிவிக்கப் ;அட்ட ஆயிரக்கணக்கன் ஏக்கர்களில் இருக்கும் இந்த இடம்.  ஒரு அதிசயம். நாலைந்து  இடங்களில் இறங்கிப் படங்கள் எடுத்தோம்.  ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வண்ணம். அதில் அடிவரிசையில் இருக்கும் மஞ்சள்   வண்ணம் தான்  ஒரு முப்பது மில்லியன் வருடங்கள் முன் படிந்த குன்று. அதாவது வயதில் சிறியது.   எரிமலை இருந்த வெடித்த இடங்களில் சாம்பல் வண்ணக் குன்றுகள் நம் நெய்வேலிச் சுரங்கக் கரியாகத் தென்படுகின்றன.  அதற்குப் பிறகு ஷெயின்  நதி ஓடி இருக்கிறது,. வெள்ளங்கள் வரும் காலத்தில்   பழுப்பு நிற வண்டல்.  குறைந்த இடங்களில் வெண்மை பூக்கும்  மணல்.   ஒருபக்கம்  மலைகள்  மறுபக்கம்  சமவெளிகள். அபூர்வமாகக் காணப்படும் பச்சைத் தாவரங்கள்.புல் வெளிகள். மூன்று கால்    குதிரை கூட இருந்ததாம்.    அதற்குப் பிறகு  பலவித சிறிய   மிருகங்கள்.அவைகளின்  படிமங்கள்.  பெரிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மலைகளாக இருந்தவை இன்னும் 500,000  வருடங்கள் கழிந்து  கரைந்துவிடுமாம்.   மதிய   நேர   வெய்யிலில்   பலகைகள் போட்ட இடத்தில் மட்டுமே நடந்தோம்.  ராட்லர்ஸ் எனப்படும் கொடும் விஷப் பாம்புகள்    இருக்கும் என்று எச்சரிக்கை  போட்டு இருந்தது,. அதையும் கவனிக்காமல்   வந்தவர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.