Blog Archive

Wednesday, February 28, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும் 3

Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 சீனுவும் பையனும் வரும் சத்தம் கேட்டதும் விரைந்து வந்தார்கள், ஜயம்மாவும் நாத்தனாரும்.
கீது,  நீ கனமானதைத் தூக்காதே என்றபடி,
பொருட்களை  இறக்கினார்கள் சீனுவும், ஜயம்மாவும்.
கணக்கெடுத்துக் கொண்டே வந்த , ஜயம்மா, எலுமிச்சம்பழம் எங்கே
என்றார்.

ஆட்டோவில் எட்டிப் பார்த்தால் அங்கேயும் இல்லை.
ஆட்டோ ட்ரைவர் வேணு, அம்மா, சாமி தேவதி ,தியாகு கிட்ட பேரம் பேசும் போது மூட்டையோடு வச்சிட்டார் போல. இதோ நான் போய் எடுத்து வரேன் என்று பறந்தான்.
 அவனோட என்ன பேரம். நியாயமாத்தானே கொடுப்பான் என்று அலுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

500 வாங்கினேன் மா. நல்ல ரசமாக இருந்தது. அவன் ஏட்ஹோ சொல்ல நான் ஏதோ
சொல்ல வெய்யிலில் ,நின்னு கோபம் வந்துவிட்டது என்ற கணவனை உட்கார வைத்து
மோரில் உப்பு சேர்த்துக் கொடுத்தாள்.
கிடைத்த வரை போதும்னா. எல்லாரும் நம் சினேகிதர்கள்,பழக்க மானவர்கள்.
இன்னிக்கு குழம்பு வடம் ஊறப் போட்டு ஆரம்பிக்கறேன்.
ஒரு ஒரு கிலோவாத் தேத்திடலாம். நீங்க சித்த நேரம் படுத்துக் கோங்கோ
என்றபடி,
பொருட்களைப் பிறித்து பெரிய பெரிய டப்பாக்களில் கொட்டினாள்.

பத்து கிலோ பொன்னி புழுங்கலரிசி,
இலைவடாத்துக்கு தனியா பச்சரிசி,
உளுந்து 2 கிலோ,
பச்சை மிளகாய்  ஒரு கிலோ,
பெருங்காயம் ரெண்டு பெரிய டப்பா,

ஜவ்வரிசி 5 கிலோ.

போதுமா. போதலைன்னால் திருப்பி வாங்கிக்கலாம் போ என்று தனக்குள்ளயே
முணுமுணுத்தபடி ,
பிள்ளையாருக்கு மஞ்சள் துணியில் முடித்துவைத்து விட்டு
வேலையைத் தொடங்கினார்கள்.
மணி பனிரண்டாகி இருந்தது.
வாசலில் ஸ்ரீவித்யா பள்ளி முடிந்து குழந்தைகள் செல்ல ஆரம்பித்தார்கள்.
 ஆயாவோடு நடந்து செல்லும் குட்டி ஹரியைப் பார்த்ததும் ,அவன் பாட்டி கேட்டிருந்த
கைமுறுக்கும்,தட்டையும் நினைவுக்கு வந்தது.

ஒரு சௌகர்யம். இந்த வேலையை அவர்கள் வீட்டிலியே சென்று செய்துவிடலாம்.இங்கே அடுப்பு
போடவேண்டாம்.
வாசலுக்கு விரைந்து முனிம்மாக் கிழவியிடம், நாளைக்கு உங்க வீட்டு வரேன்னு பெரியம்மா கிட்ட சொல்லு.
தேவையான வெண்ணெய் எல்லாம் இருந்தால் மூன்று மணி நேரம் எனக்குப்
போதும் என்று இரைந்து சொல்லிவிட்டு உள்ளே வந்தாள்.

ஏன் இதை இழுத்துவிட்டுக்கறே. இருக்கிற வேலை போறாதா என்று
கடிந்து கொண்டார் சீனு.
எவ்வளவு நாள் பழக்கம் அண்ணா. சட்டுனு விடமுடியாது.
வருஷா வருஷம் சுமங்கலிப் பிரார்த்தனைக்குப் புடவை, உங்களுக்கு வேஷ்டி எல்லாம் கொடுத்து, தாராளமாக நடத்துகிறவர் அந்த மாமி.
நாமும் கௌரவமாக இருந்துக்கணும் என்ற படி  ஜவ்வரிசியைக் கழுவ ஆரம்பித்தாள்.
முத்துமுத்தா எவ்வளவு பெரிசா இருக்கு என்று சிலாகித்தபடி. எவர்சில்வர்
அடுக்கில் ஊற வைத்தாள்.
அடுத்தது, எல்லோருக்கும் சாப்பாடு.
கீது அழகாக பெரிய பாத்திரத்தில் பிசைந்து வைத்திருந்த வத்தல் குழம்பு சாதமும்,
சீனு வாங்கி வந்திருந்த கீரை வடையும் எல்லார் வயிற்றுலும் கம்மென்று இறங்கவும், வாசல்ல் மாமி என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
வெய்யில்ல வருவேளோடி பொண்ணுகள என்று வரவேற்றார் சீனு.
 ஜயா, இவர்கள் தான் செங்கமலமும், வேதாவும் என்றார்.
பளிச்சென்று இருந்த அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது
ஜயாம்மாவுக்கு.  தொடரும்.
Add caption

Saturday, February 24, 2018

திருமணம் விலங்கா, மாலையா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   அது மணப்பவர்களின் மனத்தைப் பொறுத்தது. 55 வருடங்களுக்கு முன்பிருந்த பெண்களும்,காளைகளும் இப்போதில்லை.
திருமணம் செய்து கொள்ளவே தயாரிக்கப் பட்ட பொம்மைகள் 50 களில்.
எங்களைப் போன்றவர்களுக்குக் கற்பனைகள்,
கதைகள், திரப் படங்கள்
திருமணம் இரு மனம் சேரும் பந்தம்.
இணைந்தே செல்ல வேண்டும். பெரியவர்களை அனுசரிக்க வேண்டும்.

முக்கியமாகக் கணவனை எதிர்த்து வார்த்தைகள் சொல்லக் கூடாது.
இந்த வரைமுறை தென் தமிழ் நாட்டில் தீர்மானிக்கப் பட்ட சட்டம்.
ஆண்களுக்கும் அதே கட்டுப்பாடு. உத்தியோகம், மனைவி,கடனில்லாத குடித்தனம்,
இரண்டோமூன்றோ குழந்தைகள்.

  வேலையைப் பொறுத்து ஊர்கள் மாற்றிச் செலவது. 75 சதவிகிதம் மனைவி தலை மேல் தான். ஊர்மாற்றும் போது, விளக்கு மாறு, கோலப் பொடி முதல் லாரியில் வைப்பது அவளாகத்தான்
இருக்கும்.

70 களில் காலம் கொஞ்சம் மாறியது. பெண்ணின் சுமை அதிகரித்தது.
ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும்போது, பெரியவர்களுக்கும், சின்ன வாண்டுவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
எல்லாக் குடும்பங்களிலும் இது உண்டு.
5 மணிக்குக் குளித்திட்டு ஆரம்பமாகும் வேலைகள்
ஆயாவுடன் செல்லும் மகன், பஸ்ஸில் செல்லும் மகள். தொலைதூர
பள்ளிக்குப் பள்ளிக்கான பஸ்ஸில் செல்லும் மகன்,
இவர்களைக் கவனித்து வீடு திரும்பி,  வங்கி வேலை, கோவில் நேரம், காய்கறி வாங்குதல், தொலைபேசியில் வீட்டு சாமாங்களுக்கு விண்ணப்பம்.
முடியும் போது மணி 12..
அரைமணி நேரம் முதுகு சாய்க்கலாம் என்றால் விஸ்ராந்தியாக்ப் பேச வரும்
பாட்டியின் சினேகிதிகள்.
இது என் கதை மட்டும் இல்லை. எங்கள் காலனி முழுவதுமே இப்படித்தான்,.
என் அருமைத்தோழி வைஜு, சாவித்திரி, ஜெயா, சசி,,லக்ஷ்மி
எல்லோர் வீட்டிலிம்  இதே வரலாறு.
பின் எப்போது மாறியது என்று அடுத்தாற்போல் பார்க்கலாம்

Thursday, February 22, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும் ...2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
uz   C.I.T.Colony   F.C.I Old   Mylapore   V.M.Street  

Loacl Bus Routes Travel from Kennedy 2nd Street, Kattukoil Garden, Mylapore

12         ( T.Nagar - V.House )   
12B         ( Vadapalani B.S - Fore Shore Estate )   
12BET         ( Fore Shore Estate - Koymabedu Market )   
12BNS         ( Vadapalani B.S - Fore Shore Estate )   
12G         ( Anna Square - Kalaignar Nagar )   
More.. 
பழைய சென்னை லஸ் கார்னர்.
மைலாப்பூரில்  கென்னடி திரு இரு பாகம் கொண்டது. ஒரு வழி ஆலிவர் ரோடு மாரு முனை லாஸ் சர்ச் ரோடு.
 ஆலிவர் ரோடு ஆரம்பத்தில் முன்னாள் ஆந்திர நடிகர் இருந்து மறைந்தார். அவர்  வீடு  இருந்த இடத்தில்  ஒரு பாலர் பள்ளி  முளைத்தது. அவர் கார்கள் நின்ற இடம்  ஒரு ஷெட் போல மாற்றி அமைக்கப் பட்டு வாடகைக்கு விடப்பட்டது. தண்ணீர் வசதி. தகரக் கூரை , போது  மான வெளிச்சம்

ஜெயாம்மாவும், சீனுவும்  இங்கேகுடிபெயர்ந்தது 1980 வாக்கில். அதுவரை மந்தை வெளியில் தான் இருந்தார்கள்.
அங்கே இந்த வியாபாரத்துக்குப் போட்டி அதிகரிக்கவே
இந்த இடத்தைப் பிடித்தார்கள். எங்களுக்கெல்லாம் வசதியாகப் போயிற்று.


முறுக்கு, தட்டை  மிக்ஸர்,   என்று அவரவர் கேட்கும் அளவு செய்து கொண்டு கொடுப்பார் சீனு.  வற்றல் வடாம் செய்வதை வழக்கமாகக் கொண்ட பல குடும்பங்கள் இவர்களை அணுகவே அதையும் செய்ய ஆரம்பித்தார் ஜெயாம்மா/

அதிலும் அவர் செய்யும் பச்சை இலை வாடா த்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட். நானும் சிங்கமும் தினசரி அங்கே போய்க் காத்திருந்து 200,300 என்று வாங்கி வருவோம்..
அந்த ஷெட்டில  தண்ணீர்  வசதி இருந்தது.  காய வைக்க ஒரு முற்றம் இருந்தது..
துணைக்கு உதவியாகச் சீனுவின்  அக்காவும் அவர் மகனும் வந்து சேர்ந்தனர்.
அக்காவின் கணவர் அகால  மரணம் அடைந்ததால்  புகலிடம் தேடி இங்கே வந்தார். தம்பதிகளைப் போலவே இனிமையான குணம் கொண்டவர்கள்.உழைப்பாளிகளும் கூட.

மூலையில் சுருட்டி வைக்கப் பட்ட பாய்களே படுக்கை அறை
குளிப்பதெல்லாம் தட்டி மறைவில்.
 தெரு முனையில் பால்காரக் குடும்பம் ஒன்று இருந்தது. அதைத்தாண்டி மணியில் சிகரெட்,தினசரி,என்று பிரபலமான டீக்கடை பெஞ்சு அங்கு வரும் விவேகானந்தா மாணவர்களும்ஜயாம்மாவின் குழந்தைகள்.


 ஓகே. நாம் மீண்டும் மாசி மாதத்துக்கு வருவோம்.

சென்னை கேசவ நாடார் கடைக்கு,  ஜெயாம்மாவின் ஒரு முழ நீள  லிஸ்ட்
தயாரானது

பொன்னி அரிசி, ஜவ்வரிசி, பெருங்காயம், சுக்கு,

உளுத்தம்பருப்பு,
காய்கறி  கடையில் வாங்க   எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய்,  நல்ல தயிர்.
இந்திரா ஸ்டோரில் வாங்கிய பெரிய அண்டா, அப்பக்கரண்டிகல்
இன்ன  பிற பொருட்களை ஆட்டோவில்
ஏறிக்  கொண்டு  கூட்டத்தில் நீந்தியபடி  வந்தது சேர்ந்தார்கள்ன்மலர்களும்,பழங்களும் அதில் அடக்கம்.
தெய்வ வழிபாடு செய்த பிறகே உழைப்பு ஆரம்பம்.
,

Monday, February 19, 2018

மீண்டும் செம்பருத்தி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அன்பு கீதா ரங்கன், செம்பருத்தியின் அழகை வர்ணித்ததும்
தொடர்ந்து , கீதா சாம்பசிவம் பூவின் மகிமையைச் சொன்னதும்
அம்மா,அப்பா நினைவு அதிகமானது.
அப்பாவுக்குப் பூச்செடிகள் மிகப்பிடிக்கும்.

எங்கு சென்றாலும் , ஒரு செம்பருத்தி, ஒரு நந்தியா வட்டை, ஒரு நித்தியமல்லிப் பந்தல்
மந்திரம் போட்டது போல நட்டுவிடுவார். கூடவே  அவரைப் பந்தல், புடலைப் பந்தலும் வந்துவிடும்.

சுற்றிப் போட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து அம்மா தலைவாரி விடும் அழகைப் பார்த்து ,என் தோழி பத்து
உச் கொட்டிப் பாராட்டுவாள்.

செம்பருத்தி பூத்ததும் பிள்ளையார் கோவிலுக்கு அம்மா அனுப்பிவிடுவார்.
செம்பருத்தித்தைலம் தயாரிக்க, அந்தப்பூக்கள் தரையிலுதிரும்வரை காத்திருப்பார்.
பத்துப் பதினைந்து , இருப்து என்று சேரும்.

வாடியிருக்கேம்மா என்பேன்.மாஜிக் பாக்கறியா என்று வெண்கலப்பாத்திரத்துச் சில தண்ணீரில் போடுவார்.
அவை சர்ரே விரிந்து கொள்ளும்.
அரை லிட்டர் தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் மேந்தியம் போட்டு ஊற வைப்பார்.
வாயகன்ற பாட்டில் ஒன்றில் காந்தாரிடின் எண்ணெயை விட்டு,செம்பருத்தியை அதில் போட்டது ஒரு சிவப்பு வண்ண உலகம் விரியும். அத்தடன் ஆறி ந  தேங்காய்   எண்ணெயும் சேர்ப்பார்.

எங்கள் கூ ந்தல் தைலம் தயார்.

Saturday, February 17, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மாசியும் பிறந்துவிட்டது. வெய்யிலும் ஆரம்பித்துவிட்டது.
இன்னும் பத்து நாட்கள் போனால்
காற்று அடிக்க ஆரம்பித்துவிடும்.
இலைகள் எல்லாம் வீட்டுக் கூரையில் தஞ்சம் புகும்.
அதற்கு முன்னால் வடாம், வத்தல் எல்லாம் போட்டு
முடிக்க வேண்டும்.
சாலைப் புழுதி படாமல் வீட்டின் நெடுஞ்சுவர்களை ஒட்டிக் கயிற்றுக் கட்டில்களிப்
 போட்டு,
வேஷ்டித் துண்டுகளை விரித்து நாலு வகை வடகங்களும்
பிழிந்து எடுக்க வேண்டும்.
ஜயாம்மா,கணவரின் மெலிந்த தேகத்தைப் பார்த்து
இவரை வேலை வாங்குவது சரியா என்று யோசித்தாள்.

இருபது வருட வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டும்.

தரையில் இதமான சில்லிப்பில் படுத்திருந்த சீனு ,மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.
என்னம்மா லிஸ்ட் போட வேண்டாமா.
எல்லா பொருட்கள் விலையும் ஏறிக் கிடக்கு.
ரெகுலராக வாங்குபவர்களிடம், விலை உயர்வைப் பற்றிச் சொல்ல வேணும்.

இந்த மாதம் முழுவதும் உழைத்தால் ,பிறகு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்.
 லஸ் காலனிக்குள்ளேயே  ஆறு வீட்டில் தேவையான லிஸ்ட்
கொடுத்து விட்டார்கள்.
டிசில்வா ரோடு, ஷாந்தி டவர்ஸ், ஆழ்வார்பேட்டை அபார்ட்மெண்ட்
 எல்லாம் போய்க் கேட்கணும்.
 வாரன் ரோடில் பத்மா மாமியின் பெண்கள் பச்சை வடாம் கேட்டிருக்கிறார்கள் .
உனக்கு உதவியாக இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நிறுத்தினார்.
அப்பாடி இத்தனை யோசித்து வைத்துவிட்டீர்கள்.
நாள் கண க்குப் பார்த்து, வகை பிரித்து செய்ய வேண்டியதுதான் பாக்கி.
யார் இந்தப் பெண்கள். என்று கேட்டல்.
அரிசிக்காரத்தெருவில் கோதண்டராமன் பெண்கள்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கையில் கொஞ்சம் பணம்
சேர்த்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள் கல்லூரிப் படிப்பு படிக்க ணுமாம்.
இரண்டு மாதங்களில்  இரண்டாயிரமாவது சேர்க்க நாம் உதவ வேண்டும் என்றார் சீனு.
நமக்கு குழந்தைகள் இல்லாத குறை இப்போது
அதிகமாகத் தெரிகிறது.

அதனால் என்னமா. ஊரில் இருக்கும் குழந்தைகள் நம் குழந்தைகள் தான்.
முடிந்தவரை வாழ்வை நிறைவாக நடத்திச் செல்வோம்.
கற்பகாம்பாளும்,கபாலியும் துணையிருப்பார்கள் .
இப்படியாகத்தான்  வடாம் உத்சவம் தொடங்கியது.
தொடரும்.

Monday, February 12, 2018

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் விழுவதும் பின் எழுவதும் வழக்கமான நடப்பு தானே.
அப்போ விழுந்த போது உனக்கு இன்னும் வலி அதிகமா இருந்தது மா. இதெல்லாம் ஜுஜூபி என்று மகள் தேற்றுகிறாள்.

நினைவுக்கு வர மறுக்கிறது அந்த வலி.
இப்போதைய பூதமே அச்சுறுத்துகிறது.
 வைத்தியர் விழுந்ததற்கான காரணத்தை விளக்கினார்.

நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர். நடு இரவில் நினைவிழுந்தாலும், உடனே விழித்துவிட்டீர்கள்.
நீங்களாகவே வெளியே வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஆதரவாக மகளும் மருமகனும் இருந்திருக்கிறார்கள்.
we shd be thankful for all this great mercies.!
என்று ஆறுதல் சொன்னார்.
உண்மைதான். என் ஏன் ஏன் ,பாடலுக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை.

 நேற்று , மகளின் தோழிகள் ,அவர்களின் கணவர்கள் வந்து, கலகலப்புக் காட்டி
என் மகளின் மகிமையை என்னிடமே சொல்லி
விட்டுப் போனார்கள்.
இங்க ஈன்ற போதில் பெரிது உவக்கும் குறள்
சரியாக இருக்கும்.
வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்,.
மாடியிலிருக்கும் எனக்கு அத்தனை பொருட்களும்
படியேறிக் கொண்டுவந்து கொடுக்கிறார்.
முதுகுக்கு மருந்து தடவி நீவி விட்டு
இரவில் பாத்ரூம் அழைத்துச் சென்று,
இன்னும் எத்தனையோ செய்கிறார்.

கடவுளே நல்ல  உள்ளம் கொண்ட இந்தக் குழந்தைகள் வளம் பெற வேண்டும்.
நான் பெறாத குழந்தைகளாக என் மேல் அன்பு சொரியும்,
எங்கள் ப்ளாக் குழுமம் வாட்ஸாப்பில் உற்சாகம் ஊட்டுகிறது.
 வித்த விதமாகா ஃபார்வர்ட் அனுப்பி என்னை சந்தோஷப்படுத்தும், மாமா,சித்தப்பா பெண்கள்.
வலை நண்பர்கள். முகனூல் தோழிகள்.
இறைவா இவர்கள் அனைவரும்  வளமுடன் இருக்க வேண்டும்.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.