Blog Archive

Thursday, July 27, 2017

சீதை, ராதை,கோதை, மீரா இன்னும்.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
முதல் இருவரும்   புராண நாயகிகள் முறையே ராமனுடனும் , கண்ணனுடனும்   கூடும்  அனுபவங்களை படித்திருக்கிறோம்.
நம் ஆண்டாளோ, நினைவிலேயே திருமணம் செய்து ,கனவிலேயே  காளை யைக் கண்டு,  அரங்கனை அடைந்தாள்.
மீராவும் அதே போல  உருகி உருகிக் கண்ணன் தாள் அடைந்தாள்.
என்ன ஒரு மன உறுதி.
எத்தனை எதிர்ப்புகளையும், கேலிகளையும், பழிப்புகளையும் சந்தித்தார்களோ.
இப்பொழுதோ, இந்த நாளில்  திரு ஆடிப்பூர மங்கைக்கு நிகர் வேறு யார்.
எந்த விதை இப்படி ஒரு ஆல  விருட்சமாக
அவர்கள் உள்  புதைந்தது.

என்ன ஒரு வலிமையான எண்ணம் இருந்தால், மானிடர்க்கென்று வாழ்க்கைப் படேன்  என்று சொன்ன வண்ணம் செய்தாள்  கோதை. ஆச்சர்யமான அதிசயமான பிறவி.
திருவிடந்தை கோவில் சென்ற பொது மனதில்  உலாவியவள் கோதை தான்.

பூமா தேவி திருமால் புகழ்  பாட வில்லிபுத்தூர் வந்தாள்  என்று முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹ சுவாமிகள் சொல்வார்..
அதைக் கண்கூடாக மட்டப்  பள்ளி   க்ஷேத் ரம்   சென்ற பொது பார்த்தோம்.  அந்த ஊர் மக்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் கோதையைத் தெரியும்.
தினம் அவளைத்  தோளில்  ஏற்றி க்  கொண்டு பாவைப் பாடல்களை பா டிக் கொண்டாடிய அழகே அழகு.
அவர்கள் பக்தி கோதையின் பக்திக்கு குறைந்ததில்லை.
கோதை  தன்  பாசுரங்களில் கறவைகள் பின் சென்று கானம் சென்று உண்ட மகிமையை அவர்கள்  நேரிலேயே  செய்து காண்பித்தார்கள்.
அம்மா கோதா , உன்னை எட்டு வயது வரை த் தரிசனம்  செய்யும்
பேறு
 கிடைத்தது. உன் மண்ணில் விளையாடும் புண்ணியம் கிடைத்தது. உன் தேரில் ஏறிக்  குதித்துப் புரண்டோம். உன் கண்ணன் மேய்த்த பசுக்களின் பாலின் சுவையில் வளர்ந்தோம்.

அனைத்திற்கும் பூர்வ ஜென்ம புண்ணியமே காரணம். நீக்கமற நிறைந்திருக்கும் பூங்கொத்தாய் எந்நாளும் எங்கள் இதயத்தில் இருந்து  வழி நடத்து.  ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகள் சரணம். பெரியாழ்வார், கருடாழ்வார் திருவடிகள் சரணம்.

Wednesday, July 26, 2017

ஆடிக் கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வலைப்பூவில் எழுத்துக்களை பதிவதால்
மனா பாரம் குறைக்கிறதென்று நினைத்தேன். பல நல்ல இதயங்களை நோகடிக்கிறேன் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்கிறேன்.
துன்பம் என்பது யாருக்கு இல்லை.
மரணத்தை விடக் கொடிய   வியாதிகளில் துன்புறுபவர்களை , எத்தனையோ நபர்களை சென்னையில் தங்கி இருக்கும் போது பார்த்தேன்.

முக்கியமாக முதியவர்கள்.
முன்னெல்லாம் இல்லாத அளவுக்கு ,வயது கூடிக் கொண்டே போகிறது.
எண்பதுகளில் 90 களில்  இருந்த அளவு கட்டுக்கோப்பான குடும்பங்கள் இல்லை.
எங்கள் தெருவிலேயே  என்னைவிட வயதான பெண்மணிகள்  ஓரளவு சமாளித்துக் கொள்ளுகிறார்கள்.
ஆண்கள் அந்த அளவிற்கு மனவலிமை கொண்டது   போலத்  தோன்றவில்லை.
என் கணவரின் சிறுவயதுத் தோழர், பிரமாதமாகக் கிரிக்கெட் விளையாடுபவர்,  அறுபது வருடங்கள்  தாம்பத்தியத்திற்குப் பிறகு மனைவியை இழந்த அதிர்ச்சியில்    மனம் பிறழ்ந்திருக்கிறார்.

வழக்கமாக  நடக்கும் விஷயம் இல்லை இது. எல்லாக் குடும்பத்தைப் போல இவரது மகன் மக்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில்.
தந்தைக்கு வேண்டும் அளவு வசதி செய்து விட்டு
தம் தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.  மனைவி யைப் பிரிந்த வருத்தத்திலு ம்  அக்கம் பக்க  விஷயங்களில் மிக அக்கறை காட்டி, அன்றாட வேலைகளைக் கவனித்து வந்தவர்க்குத் திடீர்  என்று மன அழுத்த நோய் வந்து விட்டது.

நான் முன்பெல்லாம் அவரும் மனைவியும் அழகாக  அனுமன் கோவிலுக்குப் போவதையும், மாலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடை  பயிற்சி  மேற்கொள்ளுவதையும் இவரிடம் சொல்லி காட்டுவேன்.
அட எவன் மா நடப்பான் அங்க. எல்லாம் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்று சிரிப்பார் சிங்கம்.

இந்த தடவை அவரைக் காணாததால் பால் கொண்டு வருபவரிடம் விசாரித்தேன்  அய்யா எல்லாத்தையும் மறந்து போயிடறாருமா. மகன் வந்து வைத்தியம் செய்தார். இப்ப தூக்க மாத்திரை கொடுக்கிறாங்க.
காலையில் எழுந்து  முகம் கழுவி பலகாரம் அருந்திவிட்டு, மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கப் போய்விடுகிறார்.
         இன்னும்  கொஞ்ச  நாட்களில்  நகருக்கு வெளியே இருக்கிற   முதியோர் இல்லத்துக்கு  அழைத்துப் போகிறார்கள். என்று வருத்தத்துடன் சொன்னார்.
          வயதானாலும் மிகச் சுறு சுறுப்பாக இயங்குபவர்களையும் பார்த்தேன்.  நடந்து சென்று வேலை முடித்தவர்கள் இப்பொழுது வண்டியில் சென்று அதே உத்ஸாகத்துடன்   வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
                                யாருக்கு  என்ன என்று யாரோ எழுதி வைத்த விதிப்படி நடக்கிறது.  மனமகிழ்ச்சி இருந்தால்  வாழ்வும் மகிழ்ச்சிதான்.  எல்லா வசதியும் இருந்தும்  துணை இழந்தவர்கள் முடங்குகிறார்கள்.  துணை மறைந்தாலும் ஆட்டோவிலாவது எரிக் கபாலி தரிசனம் செய்யும் வாசுமதி அம்மாவும் இருக்கிறார்கள் 😊

Tuesday, July 11, 2017

சென்னை நகரிடம் விடை பெறுகிறோம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
இந்த நான்கு  வருடங்களில்  நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
அப்போதெல்லாம்  அனுபவிக்காத  தண்ணீர் கஷ்டம் இந்தத் தடவை முறுக்கி
விட்டுவிட்டது இயல்பான வாழ்க்கையை.

 கிணறு தூர் வாரியும் மஞ்சள் வண்ணத்தில் தான் 
தண்ணீர். சென்னை  மெட்ரோ  உதவியில் சில நாட்கள் ஓடின.
இந்தத்த் தொந்தரவு பொறுக்க முடியாமல் குடும்பத்தில் சில பேற் பிறந்தகலம் சென்றனர். குழந்தைகள் மட்டும் என்னுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லாமே  உத்சாகம்தான்.
குழந்தைகள்  கபடில்லாத அன்பை மனம் கொண்ட அளவு அனுபவித்தேன்.
 பழைய படங்களைச் சேமித்தேன்.

நல்ல நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் எல்லாம் மனதைப் பக்குவப் படுத்தும் என்றே 
நினைக்கிறேன்.

ஒரு சில நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் அளவளாவ முடியவில்லை.
கொடுப்பினை இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.
இறைவன்  அனைவரையும் காக்கட்டும்.