Blog Archive

Wednesday, July 31, 2019

பொறுமை என்னும் நகை.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் .

பொறுமை என்னும் நகை.
+++++++++++++++++++++++++++
ஏம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே
இருந்தே. உனக்கு அப்பா செய்யறதெல்லாம் தப்பா
தெரியவில்லையா.
என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.

.

எத்தனையோ முன்னுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம்
ஒரு மனுஷனின் அசட்டுத்தனத்தால எல்லாருக்கும் ஏளனமாகப்
போச்சே.



இந்தப் பாடல் வந்த காலமும்  இந்த சம்பவங்கள் நடக்கும் காலமும் ஒன்று.
அதாவது 1955.

கும்பகோணம் டவுனை ஒட்டிய கிராமம் அது.
அதில் வசதியான குடும்பம் தான் அது.
வீடும் செழுமையும் வெளியே தெரியும்படி
வீட்டின் அமைப்பு இருக்கும்.

17 வயது பெண்ணும் 13 வயது மகனும் 
உப்பிலிக்கும் மைதிலிக்கும்.
அந்தக்காலத்திலியே  சட்டம் படித்து, கும்பகோணம் கோர்ட்டுக்குப் போய் வருபவர்
உப்பிலி.
அவரது பெற்றோர் வேறு ஒரு கிராமத்தில்
நிலபுலன்களைக்கவனித்து வந்தனர்.

குழந்தைகளின் படிப்புக்காகக் கும்பகோணத்துப் பக்கம் வந்தார்கள்.

நிலங்களில் பாடுபட்டு வழக்கப் பட்டவருக்கு
வக்கீல் தொழில் பிடிபடவில்லை.
தன்னை நம்பி வந்த விவசாயிகளிடம் அருமையாக 
நடந்து கொண்டு ,அவர்களுக்காக வாதாடி , 
வெற்றி தேடிக் கொடுத்தாலும்
அவர்களிடம் பணம் வசூல் செய்ய மனமாகவில்லை.

சேர்த்து வைத்திருக்கும் சொத்து போதும்.
அரிசி வந்துவிடுகிறது.
காய்கறிகளுக்கும் குறைவில்லை.
மைதிலியின் தகப்பனாரும் அவர் பங்குக்கு
பெண்வீட்டில் எண்ணெய் முதலான தேவையான
பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.

17 வயது மகள் வாரிஜாவின் அதிகப்படியான 
துடுக்குப் பேச்சுக்குக் காரணம்
அவளது தோழியின் தந்தையின் தந்தைக்கு
அதே கும்பகோணம் கச்சேரியில் கிடைத்த சப் ஜட்ஜ்
பதவிதான். கண்மண் தெரியாத செல்லம்  அந்தப் பெண்ணைப் பேச வைத்தது.  மைதிலி எப்படி கையாளுகிறாள்  என்பதை.......... 
மீண்டும் பார்க்கலாம்.



Monday, July 29, 2019

வட்டம் போடும் வாழ்க்கை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்

வட்டம் போடும் வாழ்க்கை.



 இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, இந்தியாவை விட்டு வந்து.
வாழ்க்கை ஆரம்பிக்கும் போது
எல்லாச் சிறார்களைப் போலத்தான் நாங்களும் வளர்ந்தோம்.
படித்தோம்.
அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாகவே வாழ்ந்தோம்.
பொருளாதாரம் சம் நிலையில் தான் இருந்தது.
ஓஹோ என்று இல்லாவிட்டாலும் கடனில்லாத வாழ்க்கை.

தந்தை வழி,சகோதரகள் வழியும் அதே,.

பிள்ளைகள்,பெண் படிக்கும் வரை சிக்கனமே வாழ்க்கை.

பிறகு அவரவர் வேலைக்குச் சேர்ந்து வெளினாட்டுக்குப் பறந்தனர்.
எங்கள் சுமை பெண்ணின் திருமணத்துக்குப்
பிறகு குறைந்தது.
வெகு பல வருடங்களுக்குப் பிறகு தனி வாழ்க்கை
தொடங்கியது. இதுவும்  புதிதாகத்தான் இருந்தது.
பிறகு பேரன்கள் பேத்திகள் வரவு.
பல கோவில்கள் சென்று வர இருந்தோம்.
அமெரிக்காவுக்கும் அடிக்கடி பயணம்.

இந்தப் பழைய கதை அத்தனையும், இன்றைய வால்மார்ட்
கடைக்குப் பொருட்கள் வாங்க பெண்ணுடன் சென்றபோது
நினைவு வந்தது.
 இவரில்லாமல் முதல் தடவை இதே கடையில் ஒரு சிகரெட்
பெட்டியைப் பார்த்துக் கண் கலங்கியதும் ஞாபகம். இப்பொழுது
அதே இடத்தை அமைதியாகக் கடந்தேன்.

அவ்வளவுதான். பழைய நினைவுகளைச் சுமக்கும் போது
பாரம் நம்மை வளைத்து விடும். தூக்கி எறிந்துவிடவேண்டும்
என்று பாரதி பாஸ்கர் சொன்னது,எதிர்மறை சிந்தனைகளை.

மறக்க முடியாத இனிய நினைவுகள்
இப்போது என் வலைப்பதிவில் தடங்கள் பதிக்கின்றன.

முடிந்த வரை எழுதலாமே. நட்புகள் இத்தனை பேர் இருக்கும்போது என்ன குறை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




Saturday, July 27, 2019

மருதமலை முருகன் மகிமை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

மருதமலை முருகன் மகிமை  1971

கோவையில் நாங்கள் இருந்தது நான்கு வருடங்கள்.
சின்னவன் பிறந்தது காரைக்குடியில் என்றாலும்
வளர்ந்தது அங்குதான்.
பெரியவனும் ,மகளும்  முதன் முதல் கல்விக்கூடம்
செல்ல ஆரம்பித்தது அங்கே தான்.

சிங்கத்துக்கு  உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும் அங்குதான்.
அதீதக் களைப்பும்,
தொழிலாளர் பிரச்சினைகளால் மன உளைச்சலும்
உஷ்ணத்தைக் கிளப்பி விட கால்களில்
வேனல் கட்டிகள் கிளம்ப  என்னவென்று தெரியாமல் அவதிப் பட்டோம்.
வாரத்தில் சில நாட்கள் வேலைக்குச் செல்ல
முடியவில்லை.
நாங்கள் இருந்த வீடில் வெளியே வந்தால் மருதமலையும், அதன் உச்சியில் இருக்கும் விளக்கும் தெரியும்.
தினம் வாயில் Gate பூட்டும்போது முருகா நீயே துணை என்று
வணங்கி வருவேன்.

வல் தாங்கமுடியாமல் அவர் சிரமப் படும்போது ஒரு நாள் கம்பெனி வைத்தியர்,
colonoscopy வேண்டும்.வயிற்றில் ஏதாவது புண் இருந்தால்
இது போல் தோலில் காட்டும் என்று சொன்னார்.
நல்ல அனுபவமிக்க டாக்டர்.

இந்த ஸ்கோபி விஷ்யம் எனக்கு மிகப் பயம்.
திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில்

அந்த நிமிடத்தில் நிறைய வயதானது போல
உணர்ந்தேன்,.
கடவுளே  அந்த பயாப்சியில் தவறேதும் இருக்கக்
கூடாதே.. மருதமலை முருகா, எனக்குத் தெரிந்தது பால் அபிஷேகம் மட்டுமே.
அவர் உடல் உஷ்ணத்தைக் குறைத்து விடு. எங்கள் சின்னக் குடும்பத்தக் காத்து வா
காக்க வா என்று இரவில் அந்த மலை விளக்கிடம் வேண்டிக் கொண்டேன்.

மறு நாள் மருத்துவமனைக்குச் சென்றவர் மாலையில் தான் வந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து சொல்வார்கள்.
மனுஷனுக்கு இது போல வரக்கூடாது என்று மனம் நொந்தார்.

முருகன் கைவிடவில்லை.
பயாப்சி ரிசல்ட் வரும் முன்னமே புண்கள் உடைந்து
காய ஆரம்பித்தன.
இது என்னமா அதிசயம் என்றவர், முகத்தில் தெளிவு
பிறந்தது.
நான் அவரிடம் சொல்லவில்லை. இது எனக்கும் முருகனுக்குமான
ஒப்பந்தம் அல்லவா.
என் மனம் அந்த ரிசல்ட்டைப் பற்றிக் கவலைப்
படவில்லை. அமைதியாக உணர்ந்தேன். எதுக்காகப் பயந்தேனோ அது
இல்லை என்று வந்து விட்டது.

எல்லாம் மலைமேல் முருகன் செய்த நலம்.
அன்றிலிருந்து எதை மறந்தாலும் காலையும் மாலையும் மருதமலை
முருகன் தரிசனம் வீட்டிலிருந்தே.
 பாலபிஷேக  பிரார்த்தனை நிறைவேற்றியது ஐந்து வருடங்களுக்குப்
பிறகு. அவனை வணங்க வேண்டும் என்ற நினைப்பைக் கொடுத்ததும் அவன் அருளே.

வாழ்க முருகன் நாமம்..
மருதமலை ஆண்டவன் ,நான் வணங்கும் சமயபுரத்தாள், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார், திருப்பதி தெய்வம் இவர்களோடு
என் மனக் கோவிலில் சேர்ந்து கொண்டான்.





Thursday, July 25, 2019

ஹவுஸ் ஓனர்...படைப்பு பார்வை

வல்லிசிம்ஹன்
 எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

இன்று  இணையத்தில் நான் பார்த்த படம் ஹவுஸ் ஓனர்.
திரு, ராமகிரூஷ்ணனும், லட்சுமி ராமகிருஷ்ணனும் தயாரித்திருக்கும் படம்.

காதலில் ஒருமித்த தம்பதியரில் கணவருக்கு  Alzhimer  வந்துவிடுகிறது.
இப்படி ஒரு எளிமையான படத்தை ஒரு அழுத்தமான கருவை வைத்து எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.



அதற்கு மனம் நிறை வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

படத்தின் பெயர்  ஹவுஸ் ஓனர்.
CHENNAI: He survived the times spent in sensitive areas and in firing lines while serving the Indian Army. However, 72-year-old retired Lt.Col. G.Venkatesan had a tragic death along with his wife drowning inside his house after nine hours of struggle. Neighbours who heard them cry for help watched helplessly until their voice ceased to be heard. Venkatesan and his wife Geetha drowned inside their ground floor residence, “Geethalaya” in Defence officers colony in Ekkatuthangal, unable to get out of it.//2015இல் சென்னையைத் தாக்கிய வெள்ளம் யாராலும்  முடியாது. அப்போது படித்த செய்தி
படைப்பு பார்வை


இதுதான் கதையின் கரு. இதில் ஒரே ஒரு மாறுதல்,

கணவருக்கு அல் சைமர்  வந்ததிலிருந்து அவரைத் தாய்க்கு மேல்

கவனித்துக் கொள்ளும் நடிகை ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு.
காதல் மனைவியுடன்  அழகாக்க கொஞ்சும்  கிஷோர்.





கர்னலுக்குத் தன மனைவியை, தான் பரிபூரணமாக நேசித்த காதலியை அடையாளம் தெரியவில்லை.

ஆனால் அவள் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்,


மழையின் போது அழகாக வெளியே சென்று வருகிறார்.

கடைசி  நிமிடம் வரை வீட்டை விட்டு வெளியேற  மறுக்கிறார்.


//இது என் வீடு .நான் இதை விட்டு நகர மாட்டேன்//  அதற்காகத்தான் இந்தப் பெயர் படத்துக்கு வைக்கப் பட்டிருக்கிறது //

அவருக்கு ,தன திருமணம், தன ராணுவ நடவடிக்கைகள்
எல்லாம் நினைவிருக்கிறது.
இப்பொழுது பெய்து கொண்டிருக்கும் பிரளயத்தை பி புரிந்து கொள்ளவில்லை.
மனைவி ராதாவாக வரும் நடிகை ஸ்ரீரஞ்சனி எத்தனை

புரிதலோடு கணவரைக் கையாளுகிறார்.
கவிதையாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.



மகளும் தங்கையும் கெஞ்சியும் கிளம்பத் தயங்கும் மனைவி .

அவரை அழைத்துச் செல்லும் இடத்தில் அவர் முரண்படுவாரே என்கிற பயம்.
இதெல்லாம் தான் சோகம்.

இனிமை சேர்க்கும் பாலக்காட்டுத் தமிழ். இனிமையான பாடல்கள்.


நல்ல வேளையாக அவர்கள் இறக்கும் காட்சி வரவில்லை.
ஆனால் கடைசி நிமிடம் வரை மனையின் போராட்டத்தை கர்னலால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மனம் படபடக்க வைக்கும் காட்சிகள் அவை.


நல்ல படம் நீங்களும் பார்க்கலாம்.


Image result for House owner tamil movie stars

Monday, July 22, 2019

1603,நோயுற்ற மனம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்
நோயுற்ற மனம்.
+++++++++++++++++++++++
அன்பின் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் முகனூலில் 
கொடுத்திருந்த  இந்த அம்மாவின் படமும்
கவிதையும் மனதை உலுக்கி விட்டன.
மறைந்த  அம்மா, மற்றும் சில முதியோர் நினைவுக்கு
வந்துவிட்டனர்.
அம்மாவாவது ஒரு வாரம் மட்டுமே சிரமப்பட்டார்.

நாலைந்து வருடங்கள் சிரமப்பட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
எப்படித்தான் இந்த மன அழற்சி வருமோ தெரியவில்லை.

செல்லம்மா பாட்டியும் அப்படித்தான் நோயில் விழுந்தார்.
குளியலறையில் விழுந்து பினமண்டையில் பட்ட அடி
அவரது வலிமையான மனத்தைத் தாக்கிவிட்டது.
மெல்ல மெல்ல முன்னேறியது முதலில் தெரியவில்லை.
நிகழ்வது மறந்து, கடந்த காலத்துப் பயங்கள்
அவரை ஆக்கிரமித்தன.

நல்ல நிகழ்ச்சிகள் அவருக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
கணவரை விளித்த வண்ணம் இருப்பார்.

அவர்தான் ஊன்றுகோல். அவரிடம் மகன் மக்கள் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை  என்று வருத்தப் படுவார்.
சிலசமயம் நல்ல தெளிவு கிடைக்கும்.
அந்த சமயங்களில் நானும் இருந்தால் நல்ல குறும்புடன்
சிரிக்க சிரிக்க பேசுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக மூளை நரம்புகள் செயலிழக்க
பேச்சும் குறைந்தது. உட்கார முடியவில்லை. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியும்
கவனித்துக் கொள்ள நர்ஸும் ஏற்பாடு செய்யப் பட்டது.
மகன் நன்றாகக் கவனித்துக் கொண்டார். மருமகளோ அதற்கு மேல்.
படுத்தே இருந்ததால் நிமோனியா வந்து மூன்று மாதங்களுக்கு
முன் மறைந்தார்.வாழ்க்கையின் கடைசி வருடங்கள் 
அவர் மனதில் பதியவில்லை.
எனக்குத் தெரிந்த இன்னோருவர் மிகப் பிரமாதமாக
வெளி நாட்டு  அலுவலகம் ,,

அரசாங்க வேலையில் இருந்த  எஞ்சினீயர்.
 சிங்கத்தின் நண்பர்களில்  ஒருவர்.
ரிடயராகிச் சென்னை வந்த   சில நாட்களில்
பார்கின்சன் வியாதி, கூடவே மறதி, ஆட்டம் கொண்ட
உடம்பு.
பார்க்க அத்தனை களையான முகம் ,அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக
இயங்கிய அந்த மனம்,
எல்லாம் கரையத் தொடங்கின. 
மனைவி மிக உன்னதமாகப் பார்த்துக் கொண்டார்.
சிங்கம் மறைந்த இரண்டாண்டுகளில் 
அவரும் இறைவனடி ஏகினார்.
83 வயது என்பதே ஒரு ஆறுதல். நல்ல மருத்துவர்களின் கவனிப்பு
எல்லாம் இருந்தது. குடும்பத்துக்காக உழைத்தவர்
குடும்பத்துடன் பேசாமல் சென்றார்.

இந்த வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது.
அது ஆயுளை நீட்டிக்கலாம்.
மனதை இயக்கும் மூளையை சரிப்படுத்துவதில்லை.
பார்க்கலாம் இதற்கும் சிகித்சை வரலாம்.
சிகிச்சை  வரும்.  அனைவரும்  பூர்ண  ஆரோக்கியத்துடன் 
இருக்கப் பிரார்த்தனைகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, July 21, 2019

சிங்கத்தின் கைவினைப் பொருட்கள்


 மரங்களெல்லாம்  மிருகங்களாக மாறிய காலம் .


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

இருவர் மனம் ஒரே வழி.5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்

இருவர் மனம் ஒரே வழி.
 தரையில் நெடுகப் படுத்தபடி,தம்பி ஸ்ரீனிவாசனின் இரண்டாவது பேரனுடன் கொஞ்சிப் பேசி 
சிரிக்க வைத்துக் கொண்டிருந்த கணவரைப் பார்த்து
ஜானுவுக்கு சிரிப்பு வந்தது. அந்த மூன்று மாதக் குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து கிளு கிளுவென்று சிரிப்பைக் கொட்டியது..

இதை எல்லாம் விட்டுவிட்டு கிளம்பி விடுவாரா இவர். ரிஷிகேசத்துல எந்தக் குழந்தையைக் கொஞ்சுவார். ஏன் இப்படி ஒரு ஏக்கம் இவருக்கு.
பாவமாக இருந்தது அவளுக்கு.
அகஸ்மாத்தாகப் பார்வையை உயர்த்திய ராகவன்,
கண்ணாலையே கேள்வி எழுப்பினார்.
முகத்தில் புன்னகை மலர்ந்தது.

இன்னும் உனக்கு சந்தேகமா. நம்மால் முடியாது என்று நினைக்கிறாயா.//

அதுதான் டாக்டர் உங்களுக்கு செர்டிஃபிகேட் கொடுத்துவிட்டாரே
அதைப் பற்றிக் கவலை இல்லை.
இந்த சுற்றுச் சூழல் அங்கே இருக்குமா. வெறும் யோகா, நடை, மற்ற
வயோதிகர்களூடன் பேச்சு, கங்கைக் குளியல்,புத்தகம்
மாலை நேரத் தொலைக் காட்சி இது போதுமா.

ஒன்றை விட்டுவிட்டாயே. நீயும் இருப்பியே.

//உண்மைதான். குழந்தைகள் இரண்டு நாட்களில் வருகிறார்கள்.//
ஆமாம், உன் பெண்கள் 51 வயதுக் குழந்தைகள்,
உன் பையன்கள் 47 வயது பாப்பாக்கள். உன் பார்வை இன்னும்

45 வருடங்களுக்கு முன் தான் இருக்கிறது.

மன வேகம் குதிரை வேகம்.

நாங்கள்  ஸ்விஸ் பேத்தியுடன்.

சரி.அப்படியே இருக்கட்டும். அவர்கள் நம் வீட்டை, வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள உங்கள் அனுபவத்துணை வேண்டாமா.


எனக்கு யார் வந்து புத்திமதி சொன்னார்கள். இருவரும் 
இந்தக் கம்பெனிப் பொறுப்புகளில் புகுந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
 இதோ பார், அவர்கள் வந்ததும் நீ  தெளிவில்லாமல் இருக்காதே.
உன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லு.
உனக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்
என்று அவள் அருகில் அமர்ந்து சொன்னார்.

இப்படிப் பேசிப் பேசியே என்னை நீங்கள் மடக்கிவிடுகிறீர்கள்.
என்று சிரித்தபடி அவருக்கு காப்பி 
கொண்டு வரப் போனாள் ஜானு.
மீண்டும் பாப்பா அருகே உட்கார்ந்து கொண்டார் ராகவன்.

அடுத்த இரண்டு நாட்களில் பரபரப்பாக் இருந்தது
ஸ்ரீனிவாசன் இல்லம்.
பெற்றோருக்குத் தள்ளாது,
அங்கே மருத்துவ வசதி போதாது.
சட்டென்று உடல் நலம் பார்த்துக்கொள்ள தில்லி வரவேண்டி இருக்கும்

இப்படி நீண்டது அவர்கள் வாதம்.
ராகவன் அசைந்து கொடுப்பதாக இல்லை.
அம்மாவை அசைத்துப் பார்த்தார்கள்.
அவள் அப்பா எங்கெயோ அங்கே நானும்.. என்று விட்டாள்.

ஆவணி பிறந்ததும் தான் ரிஷிகேசம் கிளம்புவதாகவும்,
யார் வேண்டுமானால் அங்கே வரலாம். எல்லோருக்கும் இடம் உண்டு
என்று அவர் சொன்னதும் ஜானகியின் மனம் சிலிர்த்தது.

பழைய திண்மையும், குரல் உறுதியையும் பார்த்தாள்.
இவருடன் செல்வதில் எனக்கென்ன தயக்கம்.
என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.
அன்றிலிருந்து இன்று வரை அந்த நேசத்துக்கு  ஒரு குறை இல்லாமல் தான் 
நடந்திருக்கிறார்.
யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.
இனி இருடிகேசன் வழி காட்டுவான். நம்பிக்கையுடன் அடுத்த அடியை அவருடன் வைப்பேன்
என்று மனதோடு உறுதி சொன்னாள்.

சட்டென்று லேசான மனத்துடன், ஏன்னா அங்கே இப்போது
குளிருமா என்று கேட்டவளை ஆதுரத்துடன் பார்த்தார் ராகவன்.

பிறகென்ன, புதுக்கோட்டை சென்று ,தேவையான உடைகள்,
மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுப் பொறுப்பை மருமகள்களிடம் 
ஒப்படைத்துக் கிளம்பியே விட்டார்கள்.
அடுத்த ஒரு வாரத்தில் சென்னை /தில்லி எக்ஸ்ப்ரசில்
இருவரும் ஏறியாச்சு. ஒரே ஒரு மாற்றம்,ஸ்ரீனிவாசனும் அவர்களுடன் வந்தான்.
அத்திம்பேர் ,அக்காவை ஒழுங்காக செட்டில் செய்துவிட்டு
வந்துவிடுவதாக அவன் திட்டம்.
சென்ட்ரலுக்கும், கூடி இருந்த தங்கள் மக்களுக்கும் 
மகிழ்ச்சியுடன் கை ஆட்டி விடை கொடுத்தபடி
இருவரின் புதுப்பயணம் ஆரம்பித்தது.
வானப்ரஸ்த ஆஸ்ரமம்  ரிஷிகேஷ்.

சுபம்.














Saturday, July 20, 2019

ஒப்பந்தம் கையெழுத்தானது ....

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

ஒப்பந்தம்  கையெழுத்தானது ....
+++++++++++++++++++++++++++
திருமணமான  ஐந்து வருடங்களுக்குள்   நான்கு  குழந்தைகள்

பிறந்தாகிவிட்டது ஜானு விற்கு. முதல் இரண்டும் இரட்டை
பிறவிகள் .
 பிறகு பிறந்தவர்கள்  மாதவனும் கோவிந்தனும்.
கணவரின் துணையில் குழந்தைகளை வளர்ப்பதில்
சிரமமே இல்லை. ராகவனின் அம்மா, ஒரு குழந்தையையாவது சென்னையில் தன்னிடம் வைத்துக் கொள்வதாகச் சொல்லியும்
இருவருக்கும் மனம் வரவில்லை.
அப்பொழுது ராகவன் தனியார் தொழிற்சாலை ஒன்றில்
 400 ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தார்.
ஆண்டுக்கொரு முறை போனஸ், பதவி உயர்வு
என்று மெச்சப்பட்ட காலத்தில்
அவரது தாத்தாவின்  உயில் பிரகாரம் 15 ஏக்கர் நிலம்,
தஞ்சை பாபனாசம் அருகே கிடைத்தது.

தந்தை சொல்படி அந்த நிலத்தைக் குத்தகை பார்த்தவருக்கே விற்றதில்
கிடைத்த பணத்தில் சிறிய பட்டறையாகத் தன் தொழிற்சாலையை
ஆரம்பித்தார்.

கடின உழைப்பும் ,நிறைய வாடிக்கைக்காரர்கள் சம்பந்தமும்
சேர்ந்து திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,சேலம் என்று விரிந்து
வளர்ந்தது.
இருபது வருடங்களில் பெண்கள் திருமணம் நடந்தது.

அடுத்த நான்கு வருடங்களில் புதல்வர்கள் திருமணம் முடிய
வாழ்க்கையின் அடுத்த ஒப்பந்தம் ஆரம்பித்தது.
மாப்பிள்ளைகள் ,மருமகள்கள் இவர்களுடன் குடும்பம் நடத்துவது
ராகவனுக்கு அவ்வளவு சுல்பமாக இல்லை.

கடமையைச் செய்துவிட்டு அளவாகப் பேசும் வழக்கம் அவருக்கு.
சத்தம் பிடிக்காது. பேரன்கள்,பேத்திகள் மட்டும் ஏகப் பிரியம்.
தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு பல இடங்கள் சென்று வருவார்.
வீடு முழுவதும் விளையாட்டுப் பொருட்கள் இறைந்து கிடக்கும்.

நான் வேண்டாம், நான் பெத்தது வேணுமா என்று
ஒரு மருமகள் சொல்வதைக் கேட்டு ஜானு வாய்விட்டுச் சிரித்திருக்கிறாள்.
அவரைப் புரிந்து கொண்டவள் அவள் ஒருத்திதான்.

 ராகவனின் எழுபதாம் வயது பூர்த்திக்கு  வந்திருந்த குடும்பத்தினர் அனைவரும்
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது,,

கோவிந்தனின்  மகன் வெளியே நின்றுகொண்டிருந்த
ஸ்கூட்டர் ஒன்றில் ஏறி விளையாடும்போது ஸ்கூட்டர் சரிய
குழந்தைக்கு அடிபடாமல் இருக்க,
ஜானு வண்டியைப் பிடித்தபடி விழுந்து விட்டாள். அவள்
காலில் அடிபட்டதும்,
ராகவன் துடித்துப் போனார்.
அவர் போட்ட சத்தத்தில்  குடும்பமே நடுங்கியது.

ஜானு எவ்வளவோ சொல்லியும் கேளாமல்
அவளை அப்படியே  தூக்கித் தன் வண்டியில் வைத்துக் கொண்டு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று
மாவுக்கட்டு போட்ட பின்னரே ஓய்ந்தார். பெண்களும் மருமகள்களும்
நன்கு ஒத்துழைத்து பீமரத சாந்தியும் நன்றாக நடந்தேறியது.

அப்பொழுது நினைவுக்கு வந்தது தங்கள் காசி,ரிஷிகேஷ் பயணம்.
ராகவனுக்குத் தான் பார்த்து ரசித்த கங்கைக்கரை,ஜானகிக்கு மிகப் பிடித்த
கோவில்கள்,ரிஷிகேஷ் ஆஸ்ரமம், தான் 10 லட்சரூபாய் மதிப்பீட்டில்
வாங்கி வைத்த வசதிகள் நிறைந்த குடில் எல்லாம் அக்கரைப் பச்சையாக
மனதில் வலம் வந்தன.
நிறைவேறாமல் செய்தது திடீரென்று வந்த வயிற்று வலியும் தொடர்ந்த சிகித்சைகளும்.



குடும்பத்திலிருந்து விலகி மனைவியுடன் வானப்ரஸ்த வாழ்க்கைக்கு
வழிதேடுகிறார் ராக்வன். ஜானுமா விடுபடுவாளா. பார்க்கலாம்.







Friday, July 19, 2019

ஒப்பந்தம் ...3

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
ஒப்பந்தம் ...3
++++++++++++++++++
  2008 மே மாதம்  ஒரு புதன் கிழமை 
ஜானு, ராகவன் இருவராலும் மறக்க முடியாத நாளானது.
ஏதோ ஒரு திருமணத்துக்குச் சென்று வந்த இரவே
வலி மிகுந்த இரவாக ஆனது.
உட்கார முடியாமல், நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.
அடுத்த நாள் காலை, டாக்டர் ராமச்சந்திரனிடம் காண்பித்த போது,
வயிற்றில் ஏதோ தடை இருக்கிறது என்று ஆரம்பித்த
நோய், எக்ஸ்ரே,ஸ்கான் என்றும் ,கடைசியில் அறுவை சிகித்சை என்று
சென்னையில் வந்து நின்றது.

நடுங்கிவிட்டாள் ஜானகி. ஆஜானுபாகுவாக ஆரோக்கியத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவருக்கு வாயால் சொல்லவே பயப்படும் நோய் வந்துவிட்டதோ என்று.

நல்லவேளை வெறும் வயிற்றுப் புண்தான். என்று பயாப்சி
வழியாகத் தெரிய வந்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

அறுவை சிகித்சை முடிந்தும், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை  // கொஞ்ச நஞ்சம் இருந்த 
சந்தேகம் தீரவேண்டும்//  என்பதற்காக சென்னை வந்து போனார்கள்.சிகித்சை முடிந்து புதுக்கோட்டை திரும்பும் வரை
தன் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் தங்கித்தான் ஜானகி
கணவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.
இடைக்காலத்தில் பெற்றோரும் மறைந்தது,
தம்பிகளிடம் ஒட்டுதல் அதிகரித்தது.
பெரியவன் ஸ்ரீனிவாசன்  தான் அவர்களைக் காரில் அழைத்துச் சென்று  கொண்டுவிட்டுக் கூட்டி வந்து உதவினான்.

 சாப்பாடு கட்டுப்பாட்டுக்கு வந்ததால் ராகவன் இளைக்க,
அதைப் பார்த்து ஜானகி வருந்த ,இரண்டு வருடங்கள் 
இப்படியே கடந்தது.

அதற்குள்  மூன்றாவது மகன் வந்து போவதும்,மகள்கள்  வந்து தங்குவதும் வீட்டில் கொஞ்சம்
 மனத்தாங்கல் ஏற்படக் காரணம் ஆனது.
மிகக் கோப்பியமான குடும்பத்தில் சலனம் உண்டானது.

ராகவனுடைய மேற்பார்வையில் இயங்கி வந்த
 வாகனுங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி சாலை
முழுவதையும் கவனிக்க வேண்டிய நிலை கடைசி மகன்
கோவிந்தனுக்கு வந்தது.
+++++++++++++++++++++


ஜானுவின்.. சிந்தனை தேங்கி நிற்கும் முகத்தைக் 
கண்டு ராகவன் மனம் வாடியது.
என்னம்மா  உனக்கு குடும்பத்தை விட்டு வருவதில்
சம்மதம் இல்லையா. என்ன யோசிக்கிறாய். இதோ எழும்பூர்
வந்து விட்டது.
யோசித்தே முடிவெடுக்கலாம் என்ற கணவரின் முகத்தைப்
பார்த்து , எனக்கு ஆக்ஷேபணை ஒன்றும் இல்லை.
ரொம்பத் தொலைவில் போகிறோமே...என்ற யோசனைதான்
என்றாள்.

ஜானுமா,இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.
குழந்தைகளிடம் சொல்வோம். அவர்கள் சம்மதத்துடனே
தீர்மானம் செய்வோம் என்றதும்  அவள் முகம் சாந்தமானது.

என்ன இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிறகுதான் நானா
என்று சற்றே யோசித்த ராகவன்,பாவம் ஜானு,,
அவள் போக்குப்படி நான் செய்கிறேன். என்று நினைத்தபடி
ஜன்னல் அருகே வந்து நின்ற மச்சினனைப் பார்த்துக் கையசைத்தார்.

சென்ட்ரலுக்குச் செல்ல இன்னும் நேரம் வரவில்லை நண்பர்களே..
ஜானுவைச் சிந்திக்க விடலாம்.   தொடரும்.

Thursday, July 18, 2019

ஒப்பந்தம் 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

ஒப்பந்தம் 2

 ராகவனின் நினைவுகள் பசுமை மாறாமல் பதிந்திருந்தது,முதன் முதலாக
ஜானுவைப் பார்த்ததும் ,
தான் முந்தின வருடம் பார்த்த சீனத் திரைப்படம் சூசி வாங்க்கின்
நினைவு வந்தது. சின்னவடிவம். உணர்ச்சியும் குதூகலமும் நிறைந்த
கண்கள்.
அன்றிலிருந்து ஜானகி சூசியாக இடம் பெற்றாள்.
முதல் தடவை பேசும்போது இதைச் சொன்னதும்
அவர் எதிர்பாராத கோபம் அவள் முகத்தில்.
நான் என்ன சப்பை மூக்கும் சின்னக் கண்ணுமாக இருக்கிறேனா
என்று கேட்டவளை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
நான் காம்ப்ளிமெண்ட் செய்தேன்மா என்று சொன்ன வினாடியே
சுதாரித்துக் கொண்டார்,.
நம்மை விடச் சின்ன வயது. அடங்கிய, கொஞ்சம் exposure போதாத
இந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

என்று தீர்மானித்துக் கொண்டு அவளைத் திசை திருப்பி
பேச்சைத் தொடர்ந்தார்.அவள் இசை நாட்டம், படிக்கும் வழக்கம்,
திரைப் படங்கள் எல்லாம் ஒத்துப் போயும் ,தன்னை விடச்
சிறிது மாறுபட்டும் இருப்பதைக் கண்டு அவள் வழியே
புதுக்கோட்டை வாழ்வைத் தொடங்கினார்.

மூன்று மகன் களும், ஒரு மகளும் பிறந்தும் அவர்கள் இடையே
அந்தக் காதல் குறையவே இல்லை.இப்போதும் அவர் ஏதாவது செய்தி
சொன்னால் ஜானுவின் கண்கள் விரிந்து,அதிசயமான
விவரம் கேட்பது போலத் தோற்றம் கொடுக்கும்.

நினைவுகள் தடைப்பட ஜானுவை நோக்கினார்.
தன் கனவுகள் நிறைவேறத் துணை இருந்தவளைத் தான் எக்காரணம் கொண்டும்
பிரிய முடியாது,கடவுள் துணையோடு நினைத்ததை
நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட
தானும் எதிர் இருக்கைக்கு மாறி உறங்கத் துவங்கினார்.
உடல் அலுப்பு ,அவர்களை நன்றாக உறங்க வைத்தது.
 விழுப்புரம் தாண்டி செங்கல்பட்டு வந்ததும்
வெளிச்சம் கண்ணில் பட ஜானகி விழித்துக் கொண்டார்.

இங்கே காப்பி நன்றாக இருக்குமே, வாங்கினால் தேவலை
என்ற நினைப்போடு, முகம் கழுவிய பிறகு
வந்து கணவரைப் பார்த்தார்.
நல்ல உறக்கம். எழுப்ப வேண்டாம். தானே காப்பி வாங்கலாம் என்று
தங்கள் இடத்திலிருந்து,ரயிலின் கதவைத் திறந்து வழக்கமான
காப்பி ஸ்டாலைத் தேடினார்.
இதெல்லாம் பழகிக் கொள்ள வைத்திருந்தது இந்த நான்கு
வருட அலைச்சல்.அதற்குள் அந்தப் பெட்டியில் இருந்த பரிசோதகரே வந்து
அம்மா காப்பி நான் வாங்கித் தருகிறேன்.
சற்று நேரத்தில் புறப்பட்டுவிடும்.
நீங்கள் உங்கள் இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றபடி சென்றார்.

//ஜானு, உள்ள வாம்மா.நான் போயிருப்பேனே// என்று குரல் கொடுத்த கணவரிடம்
பல் துவக்க பசையையும், ப்ரஷையும் எடுத்துக் கொடுத்தார்.

இன்னும் கொஞ்சம் நீங்கள் தூங்கி இருக்கலாமே/என்று
சொல்லி, தங்கள் பைகளை எடுத்து வைக்கத் துவங்கினார்.

ஆமாம் இந்த ரயில் முன்புபோல் இல்லை. திரும்பிப் பார்ப்பதற்குள் தாம்பரம் ,பின் எழும்பூர்
என்றபடி நிதானமாக எழுந்தார் ராகவன்.

காப்பியும் வந்தது. இருவரும் குடித்துக் கொண்டிருக்கும் போதே
ரயில் நகரத் தொடங்கியது.
தம்பி ஸ்ரீனிவாசனுக்குச் சொல்லிட்டயாம்மா. என்று வினவிய
கணவனை ஆறுதலாகப் பார்த்த ஜானு, நமக்கு முன்னாலயே
அவன் டாக்டரிடம் கடைசி பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டான். நாளைக்கு
 செவ்வாய்க்கிழமை நல்ல நாள். போய்விட்டு வந்து விடலாம் என்றார்.
அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை அவன் என்று பெருமூச்செரிந்தார்
ராகவன்.
நம் காலத்து வளர்ப்பு அப்படி.நம் குழந்தைகளும் முறை மாறி
என்றுமே நடந்ததில்லையே..நீங்கள் தான் புதிதாக ரிஷிகேசம் என்று
ஆரம்பிக்கிறீர்கள்.
இது புதிதில்லை ஜானு. நம் முன்னோர்கள் செய்ததுதான்.
சரியான நேரத்தில் வானப்ரஸ்தம் செல்லணும்.

பிள்ளைகள் வளர இடம் கொடுக்க வேண்டும்.
நான் காசிப் பயணத்தின் போதே கேட்டேனே நினைவிருக்கிறதா
என்றவரிடம், மெதுவாக ஜானும சொன்னார்,ஆமாம்
கடமைகள் முடிந்தால் இங்கே வந்துவிடலாம் என்றேன்//

இருவரின் முகத்திலும் பழைய நினைவுகள்.
இப்பதான் நீங்க குடையும் கையுமாக உங்கள் அத்தையுடன்,
கல்யாண சத்திரத்திலிருந்து காசியாத்திரை போனதும்,
அப்பா, உங்களை, மந்திரம் சொல்லி
கல்யாணப் பந்தலுக்கு அழைத்து வந்ததும்
கண்முன் தோன்றுகிறது.
ஆமாம் நீயும் குனிந்த தலை நிமிராமல்
அடக்க ஒடுக்கமாக வந்து நின்றாயே. அப்பா என்ன மல்லிகை வாசனை.

என்று நான் நினைத்ததும்...என்றவரை, சரியான யாதோன் கி பாராத்
நீங்க என்று கேலி செய்தார் ஜானு........அடுத்த பாகம் சென்ட்ரலில் நிறைவுறும்.

Tuesday, July 16, 2019

ஒப்பந்தம் .....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

ஒப்பந்தம்
++++++++++++

75 வயது ராகவனும் 70 வயது ஜானகியும் 
இது போல ரயிலேறுவதும் இறங்குவதுமே வாழ்க்கையாகி விடுமா
என்று கேட்கும் மனைவி ஜானுவைப் பார்த்தார் ராகவன்,.

//உடம்பில் தெம்பு இருக்கும் வரை .பிறகு இருக்கவே இருக்கிறது
நம் இடம்.//
எங்கே புதுக்கோட்டையா.

இல்லம்மா ரிஷிகேசம். மறந்துவிட்டாயா. நாம் பதினைந்து வருடங்கள் முன்பு போனபோது

நான் வாங்கின இடம்.இப்போது நல்ல பராமரிப்பில் இன்னும்
அழகாகி இருக்கிறது. நல்ல மருத்துவ வசதிகள், சுத்தம் பாதுகாக்க பண்புடைய 
உதவியாளர்கள்.
 நம்மை ஒத்த பெரியவர்களுக்கு ஏற்ற சாப்பாடு படைக்கும் 
சமையல் மையம்.
ஹரி நாராயணர்களின் கோவில்.
தினசரி கங்கை ஆரத்தி. சுவாமி சிவானந்த ஆசிரமம்.
படிக்க நிறைய நூல்கள்
பக்தி மார்க்கம் உரை நிகழ்த்த வரும் ஞானிகள்.
என்று அடுக்கிக் கொண்டே போகும் கணவனை 
நோக்கி புன்னகைத்தாள் ஜானு.
 ஹ்ம்ம். கற்பனை நன்றாகத்தான் இருக்கு.
நம் மகன்கள் மகள் இதற்கு சம்மதிக்க வேண்டுமே.

நிறைய எதிர்ப்புகள் உங்களை நோக்கி வீசுவார்கள்
சமாளிப்பீர்களா என்ற மனைவியைக் கண் சிமிட்டி உத்சாகப் படுத்தினார். ராகவன்.

எல்லோரும் நல்வழியில் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
உன் பெண்ணின் மகளுக்கே திருமண வயது வந்துவிட்டது.

நடுவில் எனக்கு வந்த உடல் நலிவினால்
சென்னை புதுக்கோட்டை என்று அலைய வேண்டி வந்தது.
இப்பொழுது கடவுள் கிருபையில்
 உடல் நலம் தேறி வருகிறது.
பயப்படத் தேவை இல்லை என்று உத்திரவாதம் கொடுத்து விட்டார்கள்.
உனக்குத்தான் சிரமம் இந்த நாலு வருடங்களாக.
எத்தனை அலைச்சல்.ரமணா க்ளினிக், அறுவை சிகித்சை,
பின் வந்த சிகித்சைகள்.
அப்பப்பா. ஆதாரம் நீயே என்று ஒரு அஷ்டோத்திரமே பாட வேண்டும்.
அப்படிக் கவனித்துக் கொண்டாய்.

பதில் பேசாமல் கணவன் அருகே சாய்ந்து கொண்டு கண்ணுறங்க
ஆரம்பித்தாள் ஜானு.
ராகவன் ,நினைவுகள் தங்கள் கடைசிப் புதல்வனின் திருமண
நிகழ்வுகளும், புதுக்கோட்டை திரும்பியதும் 
நிழலாடின. அதற்குப் பிறகுதான் எத்தனை மாற்றம் வாழ்க்கையில்....தொடரும்

Sunday, July 14, 2019

வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்
நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ தெரியாது.
எங்கள் குடும்பத்தில் எங்களைத்  தவிர
அனைவருமே போய் வந்து படங்கள் அனுப்பி விட்டார்கள்.

சுலப தரிசனம் செய்தவர்கள் சிலர்.
5 மணி நேரம் வெய்யிலில் அவஸ்தை 
 பட்டு  முயன்று  சில நொடிகளே  முகம் கண்டவர்கள்
சிலர்.
 தெரிந்தவர்கள் வழியாக  தனி வழி சென்று அருகில்
கண்குளிரக் கண்டவர் சிலர்.

சென்றும் , நின்றும், தளர்ந்து அந்த தெய்வ முகத்தைக் காணாமல் வந்தவர்களும்
உண்டு.
அவர்களின் வேதனை சொல்ல முடியாது .

இதோ இங்கிருந்து கிளம்பி அவனைச் சேவிக்கக் கிளம்புபவர்களும் இருக்கிறார்கள்.

மனம் சிதையாமல் அவர்கள் ஸ்ரீ வரதனைக் கண்டு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பேசும் தெய்வம் என்றொரு பெயர் உண்டு அவனுக்கு.
ஆலவட்டம் கைங்கரியம்  செய்த  திருக்கச்சி நம்பிகளிடம் அவர் பேசிய வரலாறு நமக்குத் தெரிந்ததே.
அதே போல ஆச்சார்யர்  ஸ்ரீராமானுஜருடனும்
அவர்  சொல்லாடியாதும் உண்டு.
 ஸ்ரீ பெருந்தேவித்தாயாருக்கும்,
அத்திகிரி வரதராஜனுக்கும்  தன பாமாலைகளையும் ஸ்தோத்திரங்களை மழையெனப் பொழிந்த கவிச்சிங்கம் என்று பெயர் கொண்ட  வேதாந்த தேசி கரும் காஞ்சியைச் சேர்ந்தவரே,

இத்தனை  பெருமைகளைக் கொண்ட காஞ்சியில்
அனந்தசரஸ் திருக்குளத்தில் சயனம் கொண்ட
தாரூ  என்ற அத்தி மரத்தால் ஆன  ஆதி  வரதர்,
எதோ ஒரு காரணத்துக்காக  அங்கே ஏளப்பண்ணப்பட்டிருக்கிறார்.

அதைப் பற்றி கணக்கில்லாத வீடியோக்கள்,
இண்டர்வியுக்கள்,  கம்பர் சொன்ன அத்தனை வைணவ சம்பிரதாயங்களின்  அபிப்பிராயங்கள்.

நாங்கள் படாத பாடு பட்டோம். யோசித்து செல்லுங்கள் என்கிற அட்வைஸ்.

வரதராஜனின் அழகு உலகப் பிரசித்தி.
அந்த அழகோடு கரிய திருமேனியும், தாமரை போல மலர்ந்த கண்களுமாக சயனித்திருக்கிறார்.
பார்க்கப் பார்க்காத தெவிட்டாத தேவராஜன்.

இன்னும் நின்ற நெடுங்கோலத்தில் எத்தனை கண்களை நிரப்பப் போகிறானோ

மக்கள் குழப்பம் இல்லாமல் திவ்ய தரிசனம்
பெற
வேண்டும்.



Thursday, July 11, 2019

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

வல்லிசிம்ஹன்
ஆடிக்காற்றின்  அலைகள்  பொங்கி வந்த கடலைப் பார்க்கையில்
பொறுமையாகக்  காத்திருக்கும்  கரை எத்தனை
பாடங்களைக் கொடுக்கிறது. அது இழக்கும் மணலையும்  பெறும் சிப்பிகளையும்  இணையாக மதிப்பிடுகிறது.
கடலோர நண்டுகள், மனிதர்களின்
தடங்கள் , அவர்கள் எறியும் குப்பைகள்
எரிக்கும்  குப்பைகள் எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்று யுகா யுகாந்தரமாக அமைதி  காக்கிறது.

இல்லறமும்  இதுதான்.
மக்களின் மகிழ்ச்சி வரவு.
அவர்களின் ஆரோக்கியம் வரவு.
அவர்கள் வாழ்வில் சஞ்சலம் இல்லாமல் இருக்க இறைவனை என்றும்
பிரார்த்தனை செய்வது  தாயின் தந்தையின் கடமை.

கூடிய வரை  தந்தை தாய் மனங்கள் நோகாமல் நடக்கவே
குழந்தைகள்  கற்று வாழ வேண்டும்.
என்  71 வயதில்  நான் பேசலாம்.
என் பெற்றோர் வழி நான் செல்கிறேன்.
என் வழி எங்கள் மக்களும் நடப்பார்கள்
என்று நம்புகிறேன்.

வயதாவதால் எனக்கு  சலுகைகள்  கூட வேண்டும் என்று நினைக்கவில்லை.

சுதந்திரம்  இன்னும்  அதிகமாகக்  கிடைக்க வேண்டும் .
கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
போராடுவதை மறக்காமல் இருக்கவே
சவால்கள் நம்முன் வைக்கப் படுகின்றன.


எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 

Tuesday, July 09, 2019

இளங்காற்று வீசுதே ....

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
காஞ்சி அத்திவரதர்
மழை வரம் அருளட்டும்.

Add caption
இளங்காற்று வீசுதே

முதல் காற்றை அனுபவித்தது  ஸ்ரீவில்லிபுத்தூர்
வாசல் திண்ணையில்  போகிறவர்கள்
வருகிறவர்களைப்பார்த்துக் கொண்டு கையில் சிலேட்டு,வாயில் கற்கண்டு
 வைத்துக்கொண்டு  மாலைக்காற்றை  ருசித்தது. வாசல் தெளித்தவுடன் வரும் ஈர வாசனை.
அம்மா போடும் கோலம், வடபத்ரசாயி,ஆண்டாள் உலாவரும் காட்சிகள்.மல்லிகை வாசனை.
இரண்டாம் காற்று
 திருமங்கல  வீட்டின் நீண்ட திண்ணைகளில் பெரியப்பா, சித்தப்பா பெண்களுடன் ஏழுகல் , மேற்கொள்ளப்போகும்
பயணத்தைப்  பற்றி  சுவாரஸ்யமான  கற்பனைகள்.
 இதனுடன் சேர்ந்து வரும் காலை க் காற்று

அதை உணருவதற்காகவே கிணற்றுக் குளியல்.

மூன்றாம் காற்று
திண்டுக்கல் கொல்லை த் தாழ்வாரம். கிணற்றடி
மாலை க் காற்று , கையில் ஆனந்தவிகடன்,சேவற்கொடியோன், குமுதம்  சின்னம்மா ,
கலைமகள் மாயாவியின் கதைகள் ,
என்று கனவுகளுடன் காற்றையும் சுவாசித்து
நுரையீரலை நிரப்பிக் கொண்ட பருவம்.

நான்காவது   பசுமலை வயல்வெளிகளில்
நடந்து முள் குத்தினாலும்  நடந்து கடந்து செல்லும்  எதோ
ஒரு ஊரை நோக்கி நகரும்  ரயில்

பாசஞ்சரை  நின்று அனுபவித்து,
அம்மாவின் குரலுக்குப் பணிந்து  வீடு திரும்பும் வரை வாங்கிய
தென்றல் சுகம்.

அதன் பிறகு  புதுக்கோட்டை,சேலம், கோவை,திருச்சி என்று நிற்க நேரமில்லாமல்
ஓடிய காலம்.
இளைய மகனின் ஊரில்  இயற்கையின் கருணையை அனுபவிக்க முடிந்தது.

இத்தனை  காற்றுகளையும் என் நினைவில் வீச வைத்தது
இன்றைய  காலை  காற்றை  அனுபவித்த நேரம்.

வாயில்  புல்தரையில்  ஒரு நாற்காலி யில்
அலைபேசியில்ல்லாமல் , ஐபாட் இல்லாமல், புத்தகம் இல்லாமல்
குருவிகளும்,மைனாக்களுமே துணையாக
சிலுசிலு காற்று  .வாழ்க்கையின் எத்தனையோ ஆசிகளுக்கு நன்றி.
Add caption





Sunday, July 07, 2019

அங்கும் இங்கும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும் .
அங்கும் இங்கும்





மமதா  ஹிந்திப்  படத்தின்  ஆரம்பப் பாடல். அஷோக்குமாரின்  கெளரவம் , கதாநாயகி சுசித்ரா சென்னின் இழைத்த நடிப்பு மிக  அருமையாக இருக்கும்.



காவியத்தலைவியின்  நாயக நாயகிகள்.

 மம்தா முதலில் வந்தது. வண்ணப்படம். அஷோக் குமார ,சுசித்ரா சென் ஜோடி
அருமையாக இருந்தாலும் என் உணர்வுகளைத் தொடவில்லை.
அஷோக் குமாரின் சோகத்தைப் புரிந்து கொண்ட அளவு,
கதா நாயகியின் முகbhaவங்கள் என்னை அடையவில்லை.
இதே ஜோடி வயதான கோலத்தில் இன்னும் அருமையாக
நடித்திருந்தார்கள்.

தேவ்யானியின் மகளாக சுசித்ரா சென்னின் நடிப்புக் கொஞ்சம்
துடிப்புடன் இருந்தது.தர்மேந்திராவின்  பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
பாடல்கள் வெற்றி பெற்றன.

இதே பின்னால் காவியத்தலைவியாக வந்த போது
கறுப்பு வெள்ளையாக வெளி வந்தது.

கொஞ்சம் மிகையான மேக்கப்புடன் இருந்த முதிய சௌக்காரை
இளைய சௌக்கார் வென்று விட்டார் தோற்றத்தில்.
ஜெமினியும் சௌக்காரும் வரும் காட்சிகள் மிக அன்னியோன்யமாகப்
படமாகி இருந்தன.

இது போலப் புரிதல், பாலச்சந்தரால் தான் மேடைக்குக் கொண்டு வரமுடியும்.
அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் அம்மாவுக்காக வாதாடும்
 பெண்ணாக ஜானகி உணர்ச்சிகளைக்
கொட்டி நடித்திருப்பார்.
அம்மா அமைதியாக முகபாவங்களைக் கட்டுப் பாட்டுடன்
வெளிப்படுத்துவார். தாயின் கர்வத்தை அந்தக் காட்சிகளில் பார்க்க முடியும்.
வித்தியாசமான கதையை கவனமாக இரு டைரக்டர்களுமே
கையாண்டிருக்கிறார்கள்.
எனக்குத் தமிழ் தான் மிகவும் பிடித்தது.

Tuesday, July 02, 2019

கடந்த சில நாட்கள்... இங்கே

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

கடந்த சில நாட்கள் ......... இங்கே
++++++++++++++++++++++++++++++++

//Alcohol use disorder. Alcohol use disorder is a medical condition that doctors can diagnose when a patient's drinking causes distress or harm. In the United States, nearly 15 million people have alcohol use disorder.
Beyond these physical and mental health risks, frequent heavy drinking also is linked with personal problems, including losing a driver's license and having relationship troubles.//

இந்த நிலைதான் பக்கத்துவீட்டு அம்மாவுக்கு.
ஏற்கனவே வெயில் மண்டையைப் பிளக்கிறது.
பக்கத்து வீட்டு அம்மா  தன்  ,32 வயது மகனுடன். இருக்கிறார்.
அவரது கணவர் இங்கில்லை.
வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார்.
தந்தையின் கம்பெனியில்  மகனுக்கு வேலை.
நேற்று மதியம் மகள் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த  போது   இந்தப்  பக்கத்து வீட்டுப்  பெண் மரியா 
வந்து ,
//கொஞ்சம் உதவி செய்ய முடியுமா . என் வீட்டில் உள்ளே யாரோ 
புகுந்துவிட்டார்கள். எனக்கு உள்ளே செல்லப் பயமாக இருக்கிறது 
நீ கொஞ்சம் வந்து பார்க்கிறாயா.//என்றாள் 
தனக்கு  உதவி செய்து கொண்டிருந்த  சவுல் என்றவரை அவளுடன் போய்ப் பார்க்கச் சொல்லி விட்டு தன்  வேலையைத் தொடர்ந்த மகளிடம்,
 சாவுல் // அங்கே யாருமே இல்லம்மா,
இந்த அம்மா சுய நினைவில் இல்லை //என்றான்.
மகளுக்கோ அவளப்  பார்த்து பரிதாபம். என்ன ஆச்சு மரியா.
என்று கேட்க, எல்லோரும் சேர்ந்து என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்.
நான் சொன்னால் பைத்தியம் என்று சொல்வார்கள் .நீ வா நான் காட்டுகிறேன்,
எங்க அம்மாஇருக்கிறாள்,ஆனால் அவள்  தலையையே காணோம் என்று சொல்லவும் பெண்ணுக்கு கிலி  பிடித்துவிட்டது//
நீ உள்ளே போ. சரியாக உடை உடுத்தவில்லை நீ.
உன் மகனை அழைக்கிறேன்//  என்றதும் 
அவள் போக மறுத்து  வாசலில் நின்று உடலெங்கும் வியர்வை வழிய அடைத்த வாசல் கதவு முன் நின் று யாரையோ   கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அந்த நிலையிலும் மகன் நம்பரை  ஒழுங்காகச் சொல்லவே என் மகள் அவனை அழைத்தாள் . 
நான் உங்க அம்மாவின் அடுத்தவீட்டு  சோ அண்ட் சோ.
நீ வர முடியுமா. உன்ன அம்மாவின் நிலை விபரீதமாக இருக்கிறது//
என்றதும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் என்று பதில் சொன்னான்  அந்தப் பையன்.
நாங்களும் அது வரை 
அந்த வீட்டின் மேல் கவனம்  வைத்திருந்தோம்.
அவனும் வந்தான் ,
அவனுக்கும் தனி சாவி இருந்ததால்  எளிதாக உள்ளே போக முடிந்ததது 
செடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மகள்

அவனிடம் விசாரிக்க, என் பத்து வயதில் இருந்து இதே நிலைதான். வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு  அந்தப் போதையில் வருவாள்.
நல்ல வேலை. நல்ல சம்பளம், நல்ல கணவர் 
எல்லாவற்றையும் இழந்தாள் .
நானும் தனியாகச் சென்று விட்டேன்,
இப்போது, போதை மருந்தையும் //ரம்//என்கிற 
ஆல்கஹாலுடன் குடிப்பதால்  இது போல  நடந்து கொள்கிறாள்.
20 தடவை சிகித்சை கொடுத்தாச்சு.//என்று விரக்தியுடன் சொன்னான்.
மஹா பரிதாபமாக இருந்தது.
பிரென்ச் தேசத்திலிருந்து வந்தவர்களாம் 
நேற்று இந்தப் பதட்டங்களைக் கண்டு என்னை  பிடித்த ரத்த 
அழுத்தத் தலைவலி  இரவு 12 மணிக்கு தான் விட்டது.
அந்த மகனின் முகத்தை நினைத்தாலே மனம் கலங்குகிறது.
இன்று காலை அவன் இங்கிருக்கும் நாயையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அதை நாய்கள் பாதுகாப்பு நிலையத்தில் விடுவானாக இருக்கும்.
நாம் ஒரு அளவைத் தாண்டி கேட்கவும் முடியாது.
யாராயிருந்தாலும் கதவைத் திறக்காதே என்று ஆர்டர் போட்டு விட்டு மகள் வெளியே சென்றாள் .
இறைவன் தான் காக்க வேண்டும்.