Showing posts with label பெப்ரவரி. Show all posts
Showing posts with label பெப்ரவரி. Show all posts

Tuesday, February 10, 2009

399,பிப்ரவரி படம்

அது தீபாவளித் திருநாள். குளிரோ எலும்பை ஊடுருவியது.

எனக்கோ பட்டாசும்,மத்தாப்பும் கொளுத்தாமல் குழந்தைகள் தீபாவளியை உணராமல்,அனுபவிக்காமல் வெறுமே தொலைக் காட்சியைப் பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இரவு மாப்பிள்ளையையும், சிங்கத்தையும் கிளப்பி, பேரனை கார்கள் நிறுத்தும் கராஜில்

நிற்கச் சொல்லி,

வாங்கி வைத்திருந்த மத்தாப்புக் கட்டை, அந்தக் குளிர்காற்றில் ஒரு டப்பாக்குள் நிறுத்தி வைத்து,

ஒளியேற்றச் சொல்லி வற்புறுத்தினேன்.

பேரனின் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது.

நிலச்சக்கரம் என்பது காற்றில் ஒளிவெள்ளமாய்ப் பறந்தது.

படம் எடுத்து விட்டேன்.

Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...