Blog Archive

Sunday, October 30, 2011

பிசையோ வலியோ தெரபி:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கால் புராணம்
1998  ஒரு தரம். 2000 ஒரு  தரம். அப்புறம்  கணக்கு மறந்துவிட்டது.
அநேகமாக எக்ஸ் ரே எடுக்கப்பட்டது காலும் பாதமும் தான்.

ஏது இந்த அம்மா இன்னும் வரலையே நாலு மாசங்கள் போய் விட்டதே
என்று அப்போதைய
  தேவகியும் இப்போதைய மீனாட்சி  ஆசுபத்திரி  எமர்ஜென்சி
நர்ஸ் நினைச்சிருப்பாங்க,.

மண்ணோ, கல்லோ, தண்ணீரோ  எதுவாயிருந்தாலும்
ஆக்ஷேபனையே இல்லை. தடுக்குமா தடுக்காதா என்று என் கால்கள் தேடும்.
தடுக்கி விழுந்தால்  வலி வராமல் இருக்குமா. இல்லை வைத்தியருக்குக்
கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல்தான் சரியாகப் போகுமா.

முதல் தடவை விழுந்தபோதே  வைத்தியர் சொன்னது  , முதுகெலும்பு தேய்ந்து
உதிருவது போல இருக்கு.
கால்ஷியம் மாத்திரை எடு.  உடல் எடையைக் குறைத்துவிடு.
உடல் தானே  சமநிலைப் பட்டுவிடும் என்றார்.

அதற்காக அகஸ்தியர் மாதிரி இமயம் முதல் பொதிகை வரை நட க்க
என்னால்  முடியுமா.:)
அவ்வப் பொழுது விழுவதும் எழுவதும் கால்கட்டு போடுவதும்
வழக்கமாக ப்  போதும்,  ஆறு மாதங்கள் முன்னால்   காலில் பட்ட  அடி
வலி குறையவே இல்லை.

சரிசெய்தே ஆகவேண்டிய நிலையில்   எலும்பு  வைத்தியரிடம் போய்
வந்து ஒரு வாரம் ஓடிவீட்டது.
டாக்டரின் உதவியாளினி  என் காலில் ஒரு அங்குலம் கூட விடவில்லை.

இரண்டுகைகளினாலும்    அழுத்தி இத்தனை நாட்களாக எனக்குத் தெரியாமல் இருந்த தசைநார்கள், செல்லணுக்கள்  எல்லாவற்றையும் வன்மையாக ச்  சிறந்த  முறையில்    அறிமுகப்   படுத்தினார்.:(

உங்களை  ஒரே மாதத்தில்  சரிப் படுத்திவிடுகிறேன். தினம்
ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பயிற்சிகளைச்   சரிவர  வீட்டிலும் செய்தால்  தசைகள் பலம் பெறும் என்று    புத்திமதி சொல்லி அனுப்பினார்..

தமிழ்மண நட்சத்திரம் அப்படி இப்படின்னு நான்கு நாட்கள்     வாய்தா வாங்கி  வைத்துக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்திலேயே  அவரிடம் சிகித்சை எடுத்துக் கொண்டவர்களின் அனுபவங்கள்  என்னைப் பயமுறுத்தின.   உடல் பூராவும்
வலி க்கும்  ஆனால் பழகிவிடும்.பூரண    குணம் நிச்சயம்.!!!!

மதில்மேல்  பூனையாக வீட்டுக்குப் பக்கத்து   தெருவிலேயே  இருக்கும்
வைத்திய சாலைக்குப் போன முதல் நாள்   ' ராஷி'
(அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்)   பூப்போல்  கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல  எங்கெல்லாம் வலியிருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.

இவ்வளவுதானா. இதற்காப்  பயந்தோம்  என்றவாறு

 எல்லோரிடமும்
தொலைபேசி என் ஆநந்தத்தைப் பகிர்ந்து கொண்டு   நீங்க எல்லாரும் அங்கே
வைத்தியம் செய்து கொள்ள தாராளமாகப்   போகலாம்.
வலியே      இல்லை என்று சொல்லிப் பெருமை சொல்லிக்கொண்டே அடுத்தநாள்    வைத்தியத்திற்குப்   போனேன்..

கோதுமை மாவு    ,சப்பாத்திக்குப்  பிசைவோம் இல்லையா....
அதுபோல  என் கால்களில் உள்ள     தசைகள் அழுத்தப்பட்டுப் பிசையப் பட்டு,
வலி தாங்காமல் போன போது,
பனிக்கட்டி நிரம்பிய பையினால்   ஒத்தடம் கொடுத்தார் அந்தப் பெண்.

இப்போது    நான் முழங்கால் வலி என்றே சொல்வதில்லை.
உடல் முழுவதும் புதுரத்தம் ஓடுபவது போல புத்துணர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
டாக்டர்   அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இன்னும்  பத்து நாட்கள்  இந்தப் பயிற்சி மேற்கொண்டால் போதும்.
ராஷி என்னை ரொம்பவே மெச்சிக் கொள்கிறார்.
இங்க வரவங்க இரண்டு நாட்களுக்கு மேல  வரத்தயக்கம் காட்டுகிறார்கள்
ஆந்டி..
உங்களுக்குப்  பொறுமை  அதிகம்.
நீங்க   மூணு நாள் வந்துட்டீங்க.
இனிமே  வலி குறைந்துவிடும். முன்னைவிட வேகமா நடப்பீங்க  பாருங்க.
என்று அவள் சொன்ன அடுத்த நாள் ஏதோ  ஒரு தடங்கல் வந்துவிட்டது.
போக முடியவில்லை.


அடுத்தநாள்     பயிற்சியை நினைத்தால்   இரண்டு கைகளுக்கு   நடுவில் அகப்படும்    பரோட்டா மாவுதான் நினைவுக்கு  வருகிறது.
பரவாயில்லை இதையும்  தாண்டிவிடலாம்  மெள்ள,:)

பிறகு  அதே வைத்தியரின்  பயிற்சிக் கூடத்துக்குச் சென்று
ஒற்றைக் காலில் நிற்கப் பழகினேன்.
அடுத்த நாள்  கீழே உட்காரப் பயிற்சி நடந்தது.

ஒவ்வொரு நாள் பயிற்சிக்கும் 450 ரூபாய்தான்
பயிற்சிகளைத் தொடர்ந்து  ஆறு மாதங்கள் கற்றுக் கொள்ளுமாறு அங்கே இருக்கும்  ஆன்ட்ரு  வற்புறுத்தினார். பத்து நாட்களுக்குப் பிறகு போகவில்லை.

இப்பொழுது  ஒரு மாதிரி வேகம் குறைந்த நடையாதலால்  விழவில்லை.

மெரினா,வீட்டு வாசல்,துபாய்  ஏர்போர்ட், சுவிஸ்  நிலம் எல்லாவற்றையும்  என் கால்  ஸ்பரிசித்திருக்கிறது.

இனி விழாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான். நடை தளர்ந்துவிட்டதல்லவா.



















க்ராண்ட் கான்யன் பார்த்த கதை 2007 ஆம் வருட மீள் பதிவு

Add caption
Add caption

Add caption


Add caption
மகளுக்கு இரண்டாவதாகப் பையன் பிறந்த போது பலவித சிரமங்களுக்கு இடையே என்னையும் சிங்கத்தையும்  க்ராண்ட் கான்யான் அழைத்துப்போன மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நன்றி சொல்ல இந்தப் பதிவு. கடவுள் எவ்வளவோ நன்மைகள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த நினைவு மனதை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portalஉப்பு விக்கப் போனேன் ,மழை வந்ததுனு
பழைய பாட்டு ஒன்று வரும்.
இங்கேதான் வசந்தம் வந்ததச்சு.
நாமும் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.
இனிமேற்கொண்டு அவங்க அவங்க பார்த்துக் கிடட்டும்னு
மனசார எல்லாம் சொல்லி,
மகளெ இனி உன் சமத்து என்று டிரமாடிக்கா ஒரு
ஃபினாலே
வைக்கணும்னு பார்த்தேன்.
வந்தது கிரிக்கெட்.
இதைப் பார்க்காமல்
(இந்தியா போனால் கண் முழிக்கணும்)
இன்னும் ஒரு மாசம்தானே
என்று இந்த வீட்டுக்குரியவர் வாய்மொழியவும்,
எங்க தங்க சிங்கமும் தலையை ஆட்டிவிட்டது.
பெண்ணுக்கு மகா நிம்மதி.
அப்பாடி அடூத்த ஷாட்(தடுப்புசி)க்கு நீ இருப்ப,
கவல இல்லை''
உடனே நான் கதைவிட முடிய்யுமா.
''எங்களுக்கு அப்போ யாரு வந்தா.
எல்லாத்தையும் நாங்களே தான் பார்த்துக் கொண்டோம்
ஹ்ம்ம்ம்!!''
இப்படி இன்னும் ஒரு தரம் சொன்னால்
இன்னோரு லெக்சர் கிடைக்கும்.
என்ன இருந்தாலும் தாய் எட்டடி, குட்டி பதனாறு
எல்லாம் இருக்கு இல்லையா.
நாம வளர்த்தது தானே.
எனக்கே மறந்த பழமொழி எல்லாம் அள்ளி விடுவாங்க அப்பப்போ:-)
எதுக்கு வம்புனுட்டு நானும் சரின்னு சொல்ல,
சரியா ஏப்ரில் 28க்கு
க்ராண்ட் கான்யான் போவதாக முடிவாச்சு.
வலைத்தமிழ்ப் பதிவாளர்கள் சந்திப்பு,
கிரி கெட்ட போட்டியின் இறுதி மேட்ச்.
இப்படிப் பலவித முகூர்த்தங்கள் பொருந்திய தினத்தில்
காலை வான ஊர்தியைப் பிடிக்க
முயற்சித்து , அதைத் தவற விட்டு, அடுத்த வண்டியைப் பிடித்து
10 1/2 மணி வண்டியில் ஏறி,
104 டிகிரி வெயிலில் பளபளக்கும்
ஃபினிக்சுக்கு வந்து சேர்ந்தோம்.
மஹா பெரிய மணற்புயல்
அடிக்க ஆரம்பித்தது.
கொடும கொடுமைனு போனா.........இப்படியா  மணலடிக்கும்!!!!
இப்படி நான் அந்த அல்ட்ரா விமான நிலையத்தில் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா,
மன்னிக்கவும்
நான் அதெல்லாம் சொல்லலை.
நேரே ரெஸ்ட்ரூமுக்குப் போயிட்டேன்.
அங்கேதான் ஜன்னலும் இல்லை
கதவும் நல்லா தடிமனாக இருந்தது.
மகள் வந்து 'ஆல் கிளியர்'
சொன்னதும் தான் வந்தேன் வெளியே.;-)

அன்று இரவு  ஃபினிக்ஸ் நகர வீதிகளை வலம் வந்து
பீட்சா  சாப்பிட்டுவிட்டு,  வீடுதியில் வந்து  படுத்துவிட்டோம்.
******************************************

அரிசோனா மாநிலம் வரண்ட பாலைவனத்தின் எல்லையில் இருக்கிறது.

இது நான் முன்னால் படித்தது.

இப்போது பீனிக்ஸ் அப்படித் தெரியவில்லை.



புதிய வெகு நாகரீகமான நகரமாக மினுமினுப்புடன் இருக்கிறது.

ஒரு நாள் அங்குத் தங்கிவிட்டு வாடகைக்கு

எடுத்த காரில் செடோனா நோக்கிப் புறப்பட்டோம்.

வழிநெடுக இந்த நாட்டின் பிரம்மாண்டத்தை

அதிசயத்தபடி பயணம்.

உலகத்தின் அத்தனை மூலை முடுக்கிலிருந்து வந்தவர்கள் இந்த நாட்டை மேம்படுத்தி

இருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டு

இருக்கிறார்கள்.

அதில் விளைவது சப்பாத்திக் கள்ளீகள்தான்.

ஆனால் அவைகளின் வகைகளும், பூக்களும் ஆயிரக் கணக்கில்.

எனக்கு கத்தாழை,கள்ளிச் செடிகள் வீட்டுக்கு

ஆகிவராதவை என்ற நினைப்பு.

சென்னை வீட்டில்(சிங்கம்) நிறைய வளர்த்தாலும்

பக்கம் போயிப் பேசி எல்லாம் செய்ய மாட்டேன்.



இங்கே அரிசோனா , ப்ஃஈனிக்ஸில் ,ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றில் 300 வருடங்கள் வயதான காக்டஸ் வகைகளைப் பிரமாண்டமான அளவில் பார்க்கும்போது,

அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது.

ஒரு கள்ளிப் பூவில் குளிர்ப்பானம் கூட செய்து சாப்பிடுவார்களாம்.




எல்லாவிஷயத்தையும்

ஏர்போர்ட்டில் பார்த்த ஒரு பெண் (நியூயார்க்)

சொன்னாங்க,.

அவங்க ஹண்ட்க்ளைடரில்

போவதற்காக அங்கே இருந்து வந்து இருக்காங்களாம்.

யூ ஷுட் ட்ரை தட்

என்று புன்னகைத்துவிட்டுப் போச்சு அந்தப் பொண்ணு,.

ஒரு பக்கம் சிரிப்பு.

ஒரு பக்கம் ஆசை.

அப்படியே மனசார பறந்துவிட்டு மறுபடி பயணத்துக்கு

வண்டிக்குள் வந்துவிட்டேன்.

'எர்த் கால்லிங் அம்மா.

எர்த் கால்லிங் அம்மா''

இது என் பெண்.



ஏம்மா அப்பாப்போ எங்கெயோ போயிடரியே.

இதோ செடோனா வந்தாச்சு.

உன்னுடைய மிஸ்டீக் பவர்ஸ் எல்லாம் வொர்க் ஆவரதா பாரு''

என்று சிரித்த வண்ணம் இறங்கினார்கள்.

பவர்ஸ் இருக்கட்டும். முதல்ல ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா கேளுனு சொன்னபடி

காணாமப் போன கைகால்களைக் காண்டுபிடிச்சு இறங்கினேன்.

மரத்துப் போச்சு எல்லாம். தப்பா நினைக்காதீங்க.





கண்ணைப் பறிக்கும் அழகு.

சிவப்ப்பில் தோய்ந்த மண் குன்றுகள்.

அருமையான மணம் சூழ்ந்த வீதிகள்.

கலப்படமான மனிதர்களின் கூட்டம்.

பழைய கால வெஸ்டர்ன் படங்களின் போஸ்டர்கள்.



நேடிவ் அமெரிகன்ஸ் நிறையப் புழங்கும் இடம் என்பது கச்சிதமாகத் தெரிந்தது.

அங்கங்கே மயங்கிய நிலையில் சில

நபர்கள் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தார்கள்.

யாருக்கும் அவர்களால் தொந்தரவு இல்லை.

கடைகள்.

முத்து,மாணிக்கம்,பச்சை,அமேதிஸ்ட்,ஓபல்

இன்னும் விதம் விதமான ரத்தின வகைகள்.

சிலது போலி.

சிலது நிஜம்.

நம்ம ஊரிலேயெ பாண்டி பசாரில் பார்க்காததா:-)

இந்த ஊருக்குச் சொந்தக்காரங்க அதான் நேடிவ் இந்தியர்கள்

அன்போடு கலகலப்பாக இருக்கிறார்கள்.

என்னுடைய புத்தக அறிவை வைத்துக்கொண்டு

நீ செயினீ க்ருப்பா

நீ அபாச்சியா

நீங்க peacepipe பிடிக்கிற வழக்கமெல்லாம் விட்டாச்சா/

என்றேல்லாம் கேட்க ஆசை.

நல்லா இருக்காதேனு விட்டு விட்டேன்.

சிங்கம் எப்பவுமே ஆன் கார்ட்:-)

எதையாவது செய்து பேசி விடுவேனோ என்று.

அப்படியும் ஒரு சூவினீயர் கடையில் ஒரு நேடிவ்

இந்தியப் பெண்மணி என்னிடம் அவளுடைய வாழ்க்கை கதையயே சொல்லி விட்டாள்.



அவளுக்கும் என்னை மாதிரி பேரன் பேத்தி வேணுமாம்.

ஆனால் பெண்ணை வற்புறுத்த மாட்டாளாம்.

நாந்தான் படிக்கலை.

அவளாவது படிக்கட்டும் என்று விச்தாரமாக்ப் பேசிக் கொண்டிருந்தாள்.

உலகம் முச்சூடும் இதுதான்

பெண்கள் நிலை!!



அங்கிருக்கும் சிவப்பு மண்ணுக்கு பெண்சக்தி என்று பெயராம்.

இங்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் இழந்த

உடல் நலத்தைத் திருப்பி பெறலாம்

என்று நம்புகிறார்கள்.



மாற்று நலச் சிகித்சை இங்கே வெகுவாகப்

பயன்படுத்தப் படுகிறது.

மிக அமைதியான இடம்.

எனக்கென்னவோ திருப்பதிக்க்குப் போகும்போது அந்த மலைச் சிகரங்கள் காவல் தெய்வம் போலவும்,

அங்கே இருப்பவர்களுக்கு நிம்மதி கூடுவது போலவும் தோன்றும்.



அதே மாதிரி ஒரு நல்ல வைப்ரேஷன் இந்த இடத்திலும் இருக்கிறது.

அங்கே தங்க இடம் கிடைக்காத்தால் மீண்டும் மலைப் பாதையில் பயணித்து

   ஃப்ளாக்ஸ்டாஃப்    என்ற ஊருக்கு வந்தோம்.

அங்கிருந்து க்ராண்ட் கான்யான் 2 மணி நேர

பயணம்.

போகும் வழி எல்லாம் ஆத்தங்கரையும்,

பள்ளத்தாக்கும்,

மலைக்காடுகளும் தான் துணை.

நடுவில் '''குவிஸ்னோசி'''ல்

ஒரு மண்டகப்படி.

சூடான சாண்ட்விச்சை ரசித்தபடி மேலே பயணித்து வந்து சேர்ந்தோம்.

மணி இரவு எட்டு.

இயற்கை அதிசயத்தைப் பார்க்க.நேரம் சரியில்லை

இருட்டில் என்ன செய்ய/

இருக்கவே இருக்கு ஐமாக்ஸ்.

நாளைக்குப் பார்க்கலாமா?





Wednesday, October 26, 2011

இன்னுமொரு தீபாவளி நாள் கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இத்தனை மழை கொட்டுகிறதேமா. எப்படி வந்தாய்/ என்ற கேட்ட  வண்ணம்  கதவைத் திறந்தேன்.

ராணியும்  'இன்னாமா செய்யறது . நல்லநாள் வீடு கூட்டிப் பெருக்காமல் இருந்தால் நல்லா
இருக்குமா.''
எப்போது புதுசு  உடுத்திக் கொள்வாய். என்ற கேட்டவாறு ,அவளுக்குக்
கொடுக்கவேண்டிய பட்டாசு, மத்தாப்புக்களையும்,வெற்றிலை,பாக்கு மஞ்சள்
 எல்லாம் வைத்துக் கொஞ்சம்  பணமும் வைத்து,மிக்சர்,மற்ற இனிப்புகளையும்  வைத்து,
அவளிடம் உதவிக்குச் சென்றேன்.


அவள் கணவர்  அருணாச்சலமும் வந்திருந்தார். அம்மா  மாவிலக் கொத்து
கட்டிட்டேம்மா. மழைக்கு முன்னால   இதை அனுப்பிடுங்க, அமாவாசைக்கு
 நடுவீட்டுப் படையல்  செய்யணும் என்றவாறு  சென்றார்.

காப்பி எடுத்துக்கறியாமா  என்று  கேட்க ராணியைப் பார்க்கப்
போனால் பாத்திரங்களைக் கழுவின  கைகளால் அவ்வப்போது  கண்களைத்
துடைத்துக் கொண்டதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
அமைதியான குணம் கொண்ட பெண். எட்டு வயதிலிருந்து இந்த வீட்டோடு வளர்ந்தவள்.
14 வயதில் திருமணம். ஐந்து குழந்தைகள் அதில் ஒரு பையனை
மூளைக்காய்ச்சலுக்குப்   பறிகொடுத்தவள்.
மற்ற   பசங்கள் வளர்ந்து, பெண்ணுக்கும் கல்யாணம் செய்துகொடுத்து
இப்பொழுது  பத்துப் பேரன்பேத்திகள் இருக்கிறார்கள்.
முதல் பையனுக்கு வீடு வாங்கிக் கொடுத்து விட்டாள்.
இவள் இருக்கும் விடு,அம்மா முனியம்மா  வாங்கிய ஹவுசிங் போர்ட்
வீடு.

இரண்டு பிள்ளைகளும் குடும்பத்தோடு இவளுடந்தான் இருக்கிறார்கள்.
அவ்வப்போது கசமுசா  என்று  தகறாரு வரும் சமாளித்துக் கொள்வாள்.


அதான் பண்டிகைக்குப் பணமும் கொடுத்தோமே
என்னபிரச்சினை இவளுக்கு
என்று நினைத்தபடி அவளை விசாரித்தேன்.

பணம் தேவையா, ஏன் அழுகிறாய் என்று கேட்டேன்.
இதோ வரேன் மா.என்ற வண்ணம் உள்ளே  வந்தாள்.
பணம் ஒண்ணும் வேணாம். எல்லாம் கொழுத்துக் கிடக்குதுங்க.
யரைச் சொல்ற நீ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

எல்லாம் வாய்ச்சிருக்கிதுங்களே பிள்ளைங்க அவனுங்களைத்தான்
என்று மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

யாரைச் சொல்ற,?
காப்பியைக் கொடுத்தபடி  கேட்டேன்.
காப்பித் தம்ளரைக் கீழே வைத்துவிட்டு,
எல்லாம் எம் மூணு பசங்களைத்தான்மா சொல்றேன்.
நீங்க கொடுத்த  புடவை எல்லாம் கொடுத்தேன்மா.எடுத்து வச்சிக்கிட்டு,அல்லாம் வெளில கிளம்பினாங்க.
வீட்ல பண்டம் பலகாரம் செய்யணுமே, மூணு பொம்மனாட்டிகளுமாக் கிளம்பறீங்களே
  அப்படியென்ன வேலை இப்பனு கேட்டுப் புட்டேன்.
மூணு மருமவளுகளும், விருட்டுனு புருஷன்காரன் பிள்ளைங்களை அழைச்சிட்டுப் போயிட்டாங்க.
சாயந்திரமா  வந்தாங்க.ஆட்டோல போயி வந்திருக்காங்கமா.

சரி அப்படி  என்னதான் வாங்கி வாந்தாங்கனு பாக்கலாம்னா, பை பையா  உள்ளே எடுத்துட்டு
 அவுக ரூம்பில  பொட்டில வச்சுக்
கிட்டாங்க.
என்னடா மாமியார்க்காரி இருக்காளே, பாட்டிம்மா வேற இருக்காங்க. நடுவீட்ல
 வச்சு வாங்கி வந்ததைக் காமிப்போமுன்னு அந்தப்  பிள்ளைகளுக்குத் தோணலியே.
நான்  அய்யரு வீட்ல பாக்காத  துணியா.
கண்ணு போட்ருவனா. ''என்று அதற்கு மேல சொல்ல முடியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள்..
இனிமே  ஏதாவது செய்றேனானு பாருங்க. எத்தனை
வாங்கித் தந்திருப்பேன். ஒவ்வொரு கல்யாணத்துக்கும் 50ஆயிரம்  செலவழிச்சேனே.  பேறுகாலத்தில  ஆசுபத்திரிக்கு இல்ல அழைச்சுட்டுப் போனேன்.
மூணாவது பொட்டைப் பிள்ளை பொறந்தாட்டுக் கருத்தடையும் செய்து வச்சேனே.இன்னும் கந்துவட்டிக்காரனுக்குக்  கொடுத்துக் கிட்டதான்
இருக்கேன்.
இப்ப  இப்படிக் கூட்டுச் சேர்ந்துட்டு ஆட்டம் போடறாங்களேன்னு  புலம்பல்.
இது நேற்று......................................................................................................

இன்று காலைல புதுப் புடவையும் காதுகம்மலும் கண்ணாடிவளையலுமாகச் சின்னப் பேத்தியை
அழைத்துவந்த    ராணி முகம் பூவாப் பூத்திருந்தது.
என்ன விஷயம் ராணின்னு கேட்ட என்னிடம் சாக்கலேட்டை நீட்டினாள்.
அம்மா  பெரியவனோட பொண்ணு மேசராயிடுச்சிம்மா.
மஞ்சாத்தண்ணி ஊத்தணும் உன்னைத்தான்   செலவுப்பணம்  கேக்கப் போறேன். முனை வீ ட்டு அம்மாவும் கொடுப்பாங்க.

மதியம் வர மாட்டேன். பிள்ளைக்குப் புடவை எடுக்கணுமில்ல, என்று பரபரவென்று வேலைகளை முடித்துவிட்டு  ஓடிவிட்டாள்.:))))


Tuesday, October 25, 2011

நேயர்களே காணத் தவறாதீர்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
தீபாவளிக்கு மழை வந்துவிட்டது.
ஐலாண்ட்  திடலில் பட்டாசுக் கடைகளுக்கெல்லாம் தண்ணீர்
வந்துவிட்டதாம்.
 பாவம் எவ்வளவு நஷ்டமோ.
ஏண்டா டிவி நியூஸ் பார்க்கறோம்னு சிலசமயங்கள் தோன்றுகிறது.

இந்தக் குழந்தைகள் எத்தனை ஆசையோடு  நேபாளுக்குப் போயிருக்கும்.ஊருக்குப் போகிறதுக்கு முன்னால்
எடுத்தபடத்தில்,

கள்ளம் கபடில்லாத சந்தோஷ முகங்களைப் பார்த்ததும்,
இங்கெருந்து அங்க போய் இப்படி ஆகணுமானு வருத்தம் தோன்றுகிறது..

இறைவன் அந்தக் குடும்பத்துக்கு மலைபோலப் பொறுமையையும்
தைரியத்தையும்  கொடுக்கவேணும்.



*******************************************
இவைகளையும்  மீறி,
எல்லாரும் ஆனந்தமாக இருக்க ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகள்  காத்திருக்கின்றன.
சினிமா சினிமா சினிமா
.
பட்டிமன்றம்.
கொஞ்ச நேரம் கடவுள் தரிசனம்.

அடுப்படியில் வேக வேண்டாம் என்று எப்பொழுதும்

வெளியில் ஆர்டர்  கொடுப்பது போல,
தீபாவளி மெனுவுக்கும் ஆர்டர்கள் வந்திருக்கிறதாம். சரவணபவன் செய்தி:)

இவ்வளவு வம்பு சொன்னால்
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் வல்லிமான்னு நீங்க கேட்கலாம்.
கண்டிப்பா  கதம்ப சாதம் உண்டு. அப்பளம் வடகம் பொரித்து,
வடை,பாயாசம் தான். சிம்பிள் மெனு.
ரெண்டு பேருக்கு இது ஏகம்.:)



Monday, October 24, 2011

என் தமிழ்மண தரவரிசை....

நானும் எங்கள் குடும்பமும்  முன்னேறணும் என்று  முயன்று வெற்றியும் கண்ட என் மாமனாரும் மாமியாரும்
நட்சத்திரவாரம் ஆரம்பிக்கையில் 285முடிகையில் 115!!!! 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வணக்கம் விடைபெறுகிறேன் வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
8:07 AM 10/24/2011
ஒரு வாரமாக நட்சத்திரம்.
அநேகருக்கு இப்படி ஒரு அம்மா இருக்காங்கன்னு தெரிந்திருக்கும்.

பழைய கதைகளும்,புதிய   அனுபவங்களும் கொடுக்க எனக்கு மேடை
அமைத்துத் தந்த தமிழ்மண  நிர்வாகத்துக்கு மிகவும்

நன்றி.
வெறுமனே நன்றி சொன்னால் போதாது.
இந்த வாரம் எனக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுத்தது என்று யாராலும்நினைத்துப் பார்க்க முடியாது.
வந்திருந்த மகனும்  அவன் குடும்பமும் கிளம்பினார்கள்.
அது ஒரு வெற்றிடம் உண்டாக்கியது.மழலைகளின் சத்தம் இல்லாத வீடு...வீடு இல்லை.
என்னுடைய வைத்தியர்  வார்த்தைகள் அவ்வளவு
பலம் கொடுப்பதாக  இல்லை.

இவ்வளவு நினைவுகளிலிருந்தும் என்னை மீட்டுக் கொடுத்தது இந்த வாரம்.

வேறு எந்த  நெகடிவ் சிந்தனைகளிலும் மனம் போகாமல் என்  மனதை முழுமூச்சோடு
 எழுத்திலும் ,நினைவுகளை மீட்டு எடுப்பதிலும்
செலவழிக்கவும்
நடு நடுவில் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதிலும் ஒரு தனிமனிதப் பயணமாக இருந்தது.
என் வான்வெளி நண்பர்கள் யாரும் கைவிடவில்லை.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்று கேட்கிறீர்களா.

அநேகருடையப் பதிவுகளுக்குப் போவதில்லை.
போய்ப் படித்தாலும் பதில் பின்னூட்டம்   இடுவதில்லை.
இதையும் மீறி என்னிடம் இவர்கள் அன்பும் மதிப்பும் காட்டியதுதான் அருமை.

என்னைவிடச் சிறியவர்களுக்கு ஆசிகளும் என்னொத்த சகோ சகாக்களுக்கு வணக்கங்களும் நன்றியும்.


சொன்னவுடன் பதில் எழுதிய திரு பாரதிமணி சாருக்கு  மிகவும் நன்றி.

அத்தனை ஆயிரம் பதிவர்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ஒளியும்,மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும்  எப்பொழுதும் உங்கள் வாழ்வில் நிறைந்து இருக்கணும்.
தமிழ்மணம் எப்பொழுதும் போல மணம் வீசி
அனைவரையும் ஆதரிக்கவேண்டும்.
வணக்கம்,
அன்புடன்,
வல்லிமா என்கிற ரேவதி நரசிம்ஹன்.
இன்று முதல் ஒளிவீசப் போகும் அடுத்த நட்சத்திரத்துக்கு  மனம் நிறைந்த வாழ்த்துகள்.


Sunday, October 23, 2011

கதை சொல்லும் பாட்டி

தாயும் அவளைப் பெற்றவளும் நானும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்










புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பரை அறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு கால் உடைந்த பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவிண் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
மண்கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய்,ஓகே ஆயில் எனப்படும் பட்சணம் செய்யும் எண்ணெய்
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.
சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும் (ஒரு பாதி) டாக்டரை (அரை வைத்தியர்=கம்பவுண்டர்)வரவழைப்பார்

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.
நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


அமீரக வலைப்பதிவர்களைப் பார்த்தேன்..மீள் பதிவு


அவர்கள் வலையில் இவர்கள் விழுந்தார்கள்.
வலைபோட்டுத் தேடினேன்.
இதெல்லாம் நாம் சகஜமாக உபயோகிக்கும் வார்த்தைகள்
இல்லையா.
உண்மையாகவே பாசவலையில் விழுவது ,
அன்பு வலையால் சூழப்படுவது எப்படி இருக்கும்
என்பது நேற்று, துபாய் அமீரகத் தமிழ்ப் பதிவு நண்பர்களைச் சந்தித்ததும்
தான் தெரிந்தது.
எல்லோரும் என்னை விட வயதில் மிகச் சிறியவர்கள்.
அவர்களுடைய அலைவரிசையில் என்னால் பேச முடியுமா
என்று மிகவும் சந்தேகம்.
புகுந்த வீடு போகும்போது எவ்வளவு பயம் இருந்ததோ அத்தனை
nervous ஆக இருந்தது.
இவர்கள் அனைவரும் வலை உலகில் தனித் தனி இடம் பிடித்தவர்கள்.
கணினி தொழில் நுட்ப அறிவு உடையவர்கள்.
நாமோ பகிர்தல் என்ற ஒரே ஒருநோக்கத்துக்காக
தமிழ்மணத்தில் எழுதும் நபர்.
இத்தனை சந்தேகம் மனதில் இருந்தாலும், நண்பர்களைப் பார்க்கப் போகும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
அபி அப்பா வியாழக் கிழமை போன் செய்து,''அம்மா
எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.
அனைவரையும் கராமா கிடெசன் பார்க்கில் சந்திக்கலாம்''
மாலை ஐந்து மணிக்கு என்றதும் எங்க சிங்கத்திடம் சொல்லி
என்னை அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டேன்.
மகனும் அலுவலக விஷயமாக தெற்குக் கொரியா போவதால்
இரண்டு மணி நேரமாவது சந்திக்கலாம் என்ற முடிவுடன்
4.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.
சரியாகப் பத்து நிமிடத்தில் கராமா கிடேசன் பார்க் வந்துவிட்டது.
எலோருக்கும் முன்னாலேயெ வந்துவிட்டொமே, என்று அபி அப்பாவுக்குப் போன் செய்ததும், அவர் ஆபத்பாந்தவராக்த் தம்பி இருப்பார் மா, இதோ நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்றார்.
சிங்கத்துக்கு மகனோடு போகும் வேலை இருந்தாலும், என்னோடு பார்க்கை வலம் வர ஒத்துக் கொண்டார்.
தெமேனு போய்க் கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி நீங்களா தம்பி என்று விசாரிக்கவும்.
நை நை என்று அவர் போய்விட்டார்.
இந்தத் தம்பி உசரமா இருப்பார்னு தெரியும். முகம் சரியா நினைவுக்கு வரவில்லை.
இது என்னடா வம்புனு இன்னும் ஓர்ரிரு குடும்பங்கள் பக்கம் போயி 'are you Thambi''?
என்று கேட்டு விட்டு, நாங்க தம்பிதான் , ஆனால் நீங்க தேடறவர் இல்லைனு
சொன்னதையும் கேட்டுக் கொண்டு திரும்பும்போது
வந்துவிட்டார்கள் அபி அப்பாவும் லியோ சுரேஷும்.
அப்ப ஆரம்பிச்சது கலகலப்பு.
பிறந்த வீட்டுக்குப் போனாலே வாயிலில் இறக்கி விட்டுக் கையசைத்துப் போகும் மனுஷர்(சிங்கம்தான்) கொஞ்ச நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினார்.
அடுததடுத்து,
குசும்பன்,
தம்பி,
ஜெசீலா,கணவர்,குழந்தை,
மின்னுது மின்னல்,
அய்யனார்,
ஆசீஃப் மீரான்(அண்ணாச்சி)
புதுசா வரும் வலைப்பதிவர்,
அனானி,(பெயர் போடலாமானு தெரிய வில்லை)
அன்வர்

,
திரு.சுல்தான்,
முத்துக்குமரன்,
சென்ஷி,
கோபி.
இவ்வளவு நண்பர்களையும் பார்த்தாச்சு.
ஜெசீலா தன் வண்டியில் என்னையும், லியோ சுரேஷையும்
பக்கத்திலிருக்கும் ஒரு உணவு விடுத்க்கு அழைத்து வரவும் மற்றவர்களும் அங்கு வந்து
சேரவும் சரியாக இருந்தது.
அப்புறம் என்ன ஒருத்தரை ஒருத்தர் கலாய்ப்பதற்கே இவர்கள் வேலையாக இருந்தது.
ஆசீஃப் எல்லொருக்கும் ஜிலேபியும் டீயும் சொனனார்.
ரசித்து ருசித்து இவர்கள் கலாய்ப்பதைப்[ பார்த்தேன்.
முத்துக்குமரன்,சுல்தான்,ஜெசீலா ,தம்பி இவர்கள் எல்லோரும்
பெரும்பாலும்
அமைதி காத்தார்கள்.
அய்யனார்,சென்ஷி, கோபி,அபிஅப்பா எல்லொரும் மற்றவர்களைக் கலாய்க்க
அவ்வப்பொது மற்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஆசீஃப் மீரான் சென்னையில் நடந்த பதிவுலகைபட்டறையில் கலந்து கொண்டு
தான் பெற்ற அனுபவத்தை சொல்ல ஆரம்பித்ததும் சந்திப்புக்கு ஒரு நோக்கம் கிடைத்தது.
துபாயில் பதிவர்கள் பட்டறை நடத்துவதைப் பற்றி ஆலோசித்து முதல் கட்டமாக இடம் தேர்ந்தெடுத்தலும், அதற்குண்டான இணைய வசதிகள் செய்வது பற்றியும்
அதை. அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளும்
விவரமாக அழகாக ஆசீஃப் எடுத்துச் சொன்னார்.
லியோ சுரேஷும் அய்யனாரும் சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதித்தார்கள்.
இன்னும் விவரம் தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது. அதைப் பற்றி மீரான் அவர்களும் மற்றவர்களும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஜெசீலா 'பண்புடன்'' வலைத்தளத்திற்காக எல்லோருடைய பிறந்த நாள்
விவரம்,கூகிள் ஐடி எடுத்த போதுதான் ,சின்னப் பசங்கனு நான்
அனுமானித்தவர்கள் உண்மையிலேயே சிறிய வயசில் சாதிப்பவர்கள் என்று தெரிந்து
மிகப் பெருமையாக இருந்தது.
பெருமையாக இருக்கிறது.
வெகு நாட்கள் மௌனத்திற்குப் பிறகு , ஒரு புதிய பேசும் உலகத்துக்கு வந்தது அருமை.
அதுவும் அன்பால் என்னை உயர்த்திய இந்த அமீரக இளைஞர்களுக்கு
வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது.
ஆனாலும் சொல்கிறேன்...
நான் பெற்ற பிள்ளைகள் போலவே என்னை மதித்து அன்பாக
அறிமுகம் செய்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மன நிறைவோடு நன்றி சொல்கிறேன்.
உங்களோடு செலவு செய்த இரு மணித்துகள்கள் (மேலாகக் கூட இருக்கலாம்) அருமையான பொக்கிஷமாக எனக்குக் கிடைத்தது.
நன்றி.
எல்லோருடை வலை விலாசமும் கிடைத்தால் அனைவருக்கும் தனி மடல் அனுப்பலாம்.
இருந்தாலும் நீங்கள் அனைவரும் இந்தப் பதிவைப் படிப்பீர்கள் என்றே நம்புகிறேன்

எனக்கு வரவு என்ன என்று சொல்ல வேண்டாமா.
இந்தப் புது பிறந்தகத்தில் எனக்குக் கிடைத்த உறவுகளைத் தவிர,
பரிசுகளும் கைக்கு வந்தன.
இனிமையான ஜெசில்லா ஒரு அழகிய கண்ணாடிப் படிமம்(அதுதான் தமிழ்ப் பெயர் என்று நினைக்கிறேன்)....புர்ஜ் அல் அரப் என்ற கட்டிட மாடல் கொடுத்தார்.
உண்மையாக எனக்கு அது ஒரு பெரிய சந்தோஷம். ஏனெனில் இந்தக் கட்டிடத்திற்குள்
போகவே 150 திர்ஹம் கொடுக்கணுமாம்.
இத்தனை சுலபமாக அது என் கைக்கு வந்துவிட்டது.:))
நன்றி ஜெசீலா.
அடுத்தது திரு ஆசீஃப் மீரான் கொடுத்த புத்தகம.
பரமஹம்ச யோகானந்தரைப் பற்றிய சுய சரிதம்.
இன்னும் பிரித்துப் படிக்கவில்லை. இந்தப் புத்தகம் படிப்பது
பயனூள்ள பொழுதாக அமையும்.
அத்துடன் மீரானின் தந்தை திரு.அப்துல் ஜப்பாரைப் பற்றிய சிறிய புத்தகம் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்.

இவ்வளவு கௌரவத்திற்கு எப்படி நான் ஆளானேன் என்று தெரியவில்லை.
இருந்தாலும் ஏற்றுக் கொள்வதில் பெருமைதான்.
நன்றி நண்பர்களே.
இந்தச் சந்திப்புக்குக் காரணமாக இருந்த அபி அப்பாவிற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
தனியாகத் தான் இன்னோரு பதிவிடவேண்டும்.
சந்திப்பின் போதோ, இல்லை இந்தப் பதிவிலோ ஏதாவது பிழையிருப்பின் பொறுத்துக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல என் தமிழ் பேசும் தமிழ்..............
உங்களிடமிருந்துதான் மீண்டும் செந்தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
மீண்டும் பார்க்கலாம்.
பின் குறிப்ப்பு:
எல்லோருடனும் உட்கார்ந்து இன்னும் பேசி, உணவும் உட்கொள்ள ஆசை இருந்தும்,
ஏற்கனவே குடும்பத்தில் வேறு ஏற்பாடு செய்து விட்டதால் கிளம்ப வேண்டி
வந்து விட்டது:(
சந்திப்பு நடந்தது  2007   ஆம்    வருடம் .

சினிமாவில் காதலும் காதலர்களும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முன்பொரு தடவை'' டூ ஃபார் த ரோட் ''
என்ற படத்தை விமரிசித்துப் பதிவொன்று போட்டிருந்தேன்.
காதலர்களாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள், காலப் போக்கில் எப்படி மாறுகிறார்கள்
 என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதி இருந்தேன்.
ஆட்ரி  ஹெப்பர்ன்   எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
அந்த மான் போல விழிகள் இன்னும் என்னை  மயக்கிவைத்திருக்கின்றன.

அதில் வரும் ஒரு வசனம்.
கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்பது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசாமல் இருக்கும்  ஆணையும் பெண்ணையும்
 பற்றி என்ன நினைக்கிறாய் என்பதே.
அவள் சொல்வால் ''ஒ. தே  மஸ்ட்  பி மார்ரீட்"  என்று
 அந்த அளவுக்கு அவர்கள் காதல் கசந்து போயிருக்கும்.

இந்தப் பதிவில் நான் பேசுவது சில நிறைவேறாத நிஜம் காதலைப் பற்றி.
சங்கம் படம் இந்தியில்  வந்தது.
அப்பொழுது ராஜ்கபூர் வைஜயந்திமாலா  காதல் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அது நிஜமோ பொய்யோ தெரியாது.
அப்புறம் நடந்தது எல்லாம்  நமக்குத் தெரியும்.
  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்  அமெரிக்க வாழ்
திரு.பிரகாஷ் ஸ்வாமி நம் பத்மினியைப் பேட்டி எடுத்துப் போட்டு இருந்தார்.

அதில் பத்மினி தன்   பழைய காதலைப் பற்றி க் கண்ணீர் சிந்தாத குறையாகப் பேட்டி கொடுத்திருந்தார்.
  நடிகர் திருசிவாஜிகணேசனுக்கும்   தனக்கும் நடுவில் இருந்த ஈர்ப்பு  எப்படி நிறைவேறாமல் போனது என்று விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

இப்பொழுதும் தில்லானா மோஹனாம்பாள் படத்தில் வரும் ''நலந்தானா '' பாடலைப் பார்க்கும் போது அவர்களிடமிருந்த ''கெமிஸ்ட்ரி''  அற்புதமாக
வெளிப்படும். நம் மனமும் அவர்கள் காதலுக்காக   வலி  அடையும்.

 அதே போல    ரோமன் ஹாலிடே  படம்.
கிரிகரி பெக்  ,ஹெப்பர்ன் ஜோடி   படத்தில் தான் காதலர்கள். நிஜ வாழ்வில் இல்லை. ஆனால் என்ன ஒரு நடிப்பு. ரொமான்ஸ் என்றால்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அங்க அசைவிலும் தெரியும்படி நடித்திருப்பார்கள்.

அதே வரிசையில் ''கிங் அண்ட் ஐ'' என்கிற படம் யூல் ப்ரன்னரும் டெபோரா கெர்ரும் நடித்தது.

படித்த கௌரவமான ஆங்கில கவர்னஸாக டெபோரா சையாம் நாட்டுக்கு வருவார். அந்த ஊர் அரசனாக யூல் ப்ரென்னர்.
பல மனைவிகள் இருபது முப்பது குழந்தைகளுக்குத் தந்தை.

இந்தப் படமெல்லாம் ''க்ளாஸிக்''  வகையைச் சேர்ந்தவை.
தன் மூர்க்கமான நடிப்பினாலயே  டெபோராவிடம் தன்   காதலை வெளிப்படுத்திவிடுவார்.
சட்டம் மதம் இரண்டும் அவர்களைச் சேரவிடாமல் இரும்புத்திரையாக நிற்கும்.
அதைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்.
அரசனின் கடைசிப் படுக்கையில்   டெபோரா  மரியாதையே உருவாக
தலைகுனிந்து  முழந்தாள் இட்டு அவருக்கு மரியாதை
செலுத்தி நிமிரும்போது அரசனின்  கண்கள் தன் மேல் நிலைத்திருப்பதைப் பார்த்து  உணர்ச்சிவசப்படுவார்.
நிதானமாகத்   தன் மகனின் கைகளைப் பற்றியபடி வெளியேறி விடுவார்.
ஒரு விரசம் கிடையாது. ஒரு முகம் சுளிக்கும் வசனம் இருக்காது.
இவர்களும் மணம் புரிய நினைத்துப் பிரிந்தவர்கள்.

அந்த வழியில் நான் நினைவு   கொள்வது அபூர்வ ராகங்கள் படம்.
ஸ்ரீவித்யாவின் நயன மொழிக்கு உலகையே அள்ளித் தரலாம்.
வாழ்வில்  சோகத்தைத்  தவிர வேறு எதைக் கண்டாரோ.

மொகலேஆசம். மதுபாலா திலீப் குமார் நிஜ வாழ்க்கைக் காதலர்கள்.

உண்மையாகவும் பிரிந்தார்கள்.


   சில சமயம் தோன்றும்    உண்மையான காதல்   சேர்ந்தாலும் காதலர்கள் சேருவதில்லையோ.
இல்லை காதல் வெற்றியாகக் கல்யாணத்தில் முடிந்தாலும்
அலுத்துக் கொள்ளாமல்  வாழ்க்கை போகிறதா:)
எப்பவோ  எழுதின  பதிவு.
இப்பொழுது எவ்வளவோ   காலம் மாறிவிட்டது.










Saturday, October 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,தீபாவளி 2011


1992   ஆம் வருடம் எடுத்த  தீபாவளிப் படம். குடும்பத்தினர்  பட்டாசு கொளுத்திய கலகலப்பில்  போஸ் கொடுக்க  வேறு ஒருவர் க்ளிக்கியிருக்கிறார். 
ஆங்கிலத்தில்
கிறிஸ்துமஸ் பாஸ்ட் கிருஸ்துமஸ் பிரசன்ட் என்று ஒரு    பழமொழி வரும். முந்திய வருடங்கள் இந்த வருடம் என்று  அசை போடுவதாக அந்த   நிகழ்ச்சி அமையும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான  நினைவுகள். அனுபவங்கள்.பெற்றோர்களாக எங்களது தீபாவளிகள் வேறாக அமைந்தன.
நம் குழந்தைகள் குழந்தைகளாக   இருக்கும்பூது
  துணிமணிகள் எடுப்பது பெரிய விஷயமே இல்லை.
23   ரூபாய்க்கெல்லாம்   புது கவுன்
எடுத்த நாட்களும் உண்டு. பெரியவனுக்கு ராஜேஷ்  கன்னா  ஸ்டைலில்   வாங்கின உடை
 இருபத்தி ஐந்தேதான்.
பிறகு
 அவர்கள் வளர செலவும் அதிகரிக்க  அவர்களாக ஆசைப்பட்ட 
ஆடைகளைத் தேர்ந்தெடுக்க
பணம் கட்டும் வேலை மட்டும் நம்முடையதாக இருந்தது.:)
அப்போது எங்கே பார்த்தாலும்    சேல்  போய்க்கொண்டிருக்கும்.
குவித்து வைத்திருக்கும் ஆடைகளில்

நமக்குப் பிடித்ததை  விலை பேசி வாங்கின அனுபவ
மும் உண்டு.
பத்மாவதி திருமண மண்டபம் என்று அண்ணா  சாலையில் இருக்கும். அங்கு  ஒருதடவை பன்னிரண்டு ரூபாய்க்கு  புடவை  ,அதன் பெயர் நிழல் நிஜமாகிறது!
அதை வெற்றிகரமாக  வாங்கி வந்ததும் ,உடுத்தித் தண்ணீரில் போட்ட அடுத்த நிமிடம் அது  அப்படியே  சுருங்கிக் கைகள்   துடைக்கும் துணி   அளவுக்கு மாயமனதும், நிஜம் நிழலாகிவிட்டது:)
சிங்கம் ''அட   வீடு துடைக்க இவ்வளவு காஸ்ட்லியா வாங்கி இருக்கியே என்று கேலி செய்ததும் நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் எண்பதுகளில்.

பதின்ம  வயதைக் குழந்தைகள் எட்டியதும், ஜீன்ஸ்   வழக்கத்துக்கு வந்தது.
கார்டுராய், காட்டன் டெனிம் என்று   நீளப்  பாவாடைகளும்   ப்ரில் வைத்த சட்டைகளும் வந்தன.

பட்டாசு மத்தாப்பு வகையறா வாங்க  நம்ம ஊர்ப்
 பாரீசுக்குப் போன  அனுபவங்களும் உண்டு.

தவறாமல் மழையும் பெய்யும். மழையில் நனைந்த பட்டாசுகளைக் காய வைக்க வெய்யிலும் வரும்.

நாத்தனார்  பசங்களும், என் தம்பிகள் அவர்கள் குழந்தைகள் எல்லாம்
தீபாவளி அன்று   இங்கே வர
பிறகென்ன வெடிச்சத்தம் தூள் கிளப்பும்.
அடுத்த நாள் பக்கத்துவீட்டில்  பட்டாசுக் குப்பை ஜாஸ்தியா
நம்ம வீட்டிலா என்று ஆராய்ச்சி
நடக்கும்.
தௌசண்ட் வாலா, டென் தவுசண்ட் வாலா என்று கரியாக்குபவர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
நம் காது  கிர்ரென்று
இரண்டு மூன்று நாட்களுக்குக் கேட்டுக்
கொண்டிருக்கும.
 இதில்  ஒரு பக்கத்துவீட்டுப் பையன் இரவு பத்து மணிக்கு மேல் ஒரு ஒரு லக்ஷ்மி வெடியாகப் போடுவான். .
திடும் திடும் என்று வெடிப்பது கட்டிடமே ஆடுவது போல இருக்கும்.

அடுத்த தலைமுறை வந்தாச்சு. பேசி வைத்துக் கொண்டு இந்தக் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் வெடிப்பது அழகாகத் தான் இருக்கிறது..விலை ஏற்றம் எல்லாம் இவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

என் காமிராவுக்குத்தான் வேலை கொடுக்கப் போகிறேன். அவர்கள் பட்டாசு வெடிப்பதையும் ,அந்தச் சந்தோசம் முகத்தில் தெரிவதையும் எடுக்க


வேண்டும்


     
எங்கள் இருவருக்கும் புஸ்வாணமும் ஒரு சீனிச்ச்சரமும் போதும்.:)

அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
பட்டாசு செய்த சின்னக் கரங்களுக்கும் வணக்கம்.
 அந்தக் கைககள்  புத்தகங்கள் ஏந்தும் நாட்களும் வரட்டும்.











எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

சம்சாரம் ஒரு சமுத்திரம்(மீள் பதிவு)












மருமகளாக இருப்பது கஷ்டமா, மாமியாராக இருப்பது கஷ்டமா:)
அது புரிதல், அம்மா அப்பா வளர்த்தவிதம், அம்மாவின் மாமியார் எப்படி நடந்து கொண்டார்கள் அத்தைகள் சாம்ராஜ்யம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் பொறுத்தது.

நான் வேணும்னால் உலகத்தைலியே பெஸ்ட் அத்தை நான் தான்னு நினைத்துக் கொள்வேன்.
மருமானைக் கேட்டால் சொல்லுவானாயிருக்கும். அத்தை மகா டென்ஷன் பார்டி. பேசிக்
கொ
ண்டே இருப்பாள். என் கிட்டப் பேசிப் புதுப்பாடல்கள் தெரிந்துகொண்டு என்னிடமே விமரிசிப்பாள்:)
என்று சொல்லுவானாயிருக்கும்!!!!!!


ஸ்வர்கலோகி மாமியாரின் மாமியாரைக் கேட்டால்,
''அது சமைக்கத் தெரிந்த அளவுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ளத் தெரி:யாது. எப்பப் பார்த்தாலும் லைப்ரரின்னு ஓடிக் கொண்டு இருக்கும்'' அப்படின்னு :)

இப்ப நாம மாமியார் தகுதி அடைந்த பிறகு என் மருமகள்கிடமே ஒரு சர்வே நடத்தினேன்.
என்னைப் பார்த்து உங்களுக்குப் பயமா இல்லையே. என்னை ஒரு தோழி மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். உங்க விஷயங்கள்ள தொந்தரவு செய்ய மாட்டேன்.
நீங்க எப்ப வேணும்னாலும் வெளில போலாம். தூங்கலாம்.
நோ அப்ஜெக்ஷன் என்று தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன். இது 2004 லில் நடந்தது.
அப்போது அவர்கள் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியம்.
'அம்மா,ரிலாக்ஸ். நாங்கள் எப்பவுமே ஃப்ரீதான்.
யாரையும் ...(எங்கள் கணவரைக்கூட ) போவது வருவது சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம். அதனால் நீங்கள் எங்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்.
அதனால் உங்கள் மூலம் எந்தத் தொந்தரவும் எங்களுக்கு வர வாய்ப்பே இல்லைன்னுட்டுப் போய்விட்டார்கள்.
அடடா, ஒரு அருமை முதலமைச்சர் பதவியை இழந்துட்டோமேன்னு ஒரு நிமிட வருத்தம் தோன்றியது.
அடுத்த நிமிடமே பொறுப்பு இல்லைன்னால் பிரச்சினையும் வராதுன்னும் புரிந்து விட்டது.
இப்போ எல்லோரும் அவரவர் வழி.
இங்க இருக்கிற குட்டிப் பேத்தி கூட,, கையைத் தூக்கி வாவா காட்டினால் தான் நான் வாக்கிங்கே போறேன்:)





Friday, October 21, 2011

வைத்தியருடன் ஒரு சந்திப்பு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சீக்கிரமாக  இன்று பதிவு போட முடியவில்லை.

எலும்பு வைத்தியரிடம் போகவேண்டிய கட்டாயம்.. ஆழ்வார்ப்பேட்டையிலியே இருந்திருக்கிறார்.
இதை இன்னோரு நண்பர் சொல்லித் தெரிந்து கொண்டு  நேரமும்  குறித்துக் கொண்டு
போனோம்.

ஒன்றுமே சேய்யவில்லை. முழங்காலையும், குதிகாலையும் முன்னும் பின்னும் ஒரு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்.
அலற இருந்த   வாயைக் கட்டினேன்.
பிறகை முதுகில் எலும்பில் கைவைத்து அழுத்தி,''வலிக்கிறதாம்மா''
என்று கேட்டார். அதிசயம்!!  ஆனல் உண்மை. வலிக்கவே இல்லை.

உங்கள் வலிக்கு எல்லாம் காரணம் நீங்கள் 2000இல்  உங்கள்  முதுகு தரையில் பட விழுந்ததுதான்''என்றாரே பார்க்கணும். அதிலிருந்தே உங்கள்   தசைகள் இறுக்கமாகி விட்டன.
வலது பக்கமாக நீங்கள் விழுந்ததால் வலது முழங்காலும் ,பாதமும்
பலவீனமாகிவிட்டன'' நீங்கள் அடிக்கடி விழுவதற்கும்  அதுவே காரணம்.

தசை  நார்கள்   பலப்பட  ஃபிசியோதெரபி   எடுத்துங்கள்.  30 நாட்களீல்  பயமில்லாமல் நடைப் பயிற்சிக்குப் போகலாம் என்று சொன்னதுதான்  ஹைலைட்.
11 வருட முழங்கல் வலிக்குப் பின்னால் இத்தனை பலமான  காரணம்
இருக்கிறதா என்று அதிசயமாக இருந்தது.

காலவல்த்தாலும் நடந்தால்தான் கொழுப்புச் சத்து குறையும்.குறையாவிட்டல் நான் பொறுப்பில்லை என்ற   சர்க்கரைக்கான வைத்தியர் கிளப்பின பயமே என்னைக் காலுக்கான் டாக்டரிடம் துரத்தியது.
காரணம் தெரிந்துவிட்டது. இனி பீடு நடை போட்டு ப் பழக வேண்டியதுதான்..
ஏற்கனவே நானானி சொன்னது போல நடைப் பதிவாளர் சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அப்போது தினமுமே பதிவர்கள் மீட்டிங் நடக்கும். நடப்பதால் பதிவுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்.:)

ஆமாம், மேலே போட்ட படத்திலிருப்பவருக்கும் ,பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  அவர்தானே எங்க வீட்டுக் காரரும், வாகன ஓட்டியுமா அவதாரம் எடுப்பவர்:)


Thursday, October 20, 2011

தேடித் தொலைந்து கிடைத்த இரவு!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்1:44 PM 10/20/2011




படங்கள் கூகிளாண்டவர் துணை.

டிஸ்கிப்பா.

துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் காலப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.

இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.

துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.

மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.

தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.

ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.

ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.

மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.

பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.

விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்

அப்பனையும் பிள்ளையையும் காணொம்.

சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.

இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.

அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்

தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)

நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.

ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!

அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,

என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)

இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.

சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.

அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்

நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.

இங்கதான்பா தப்பாப் போச்சு.

நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.

அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.

ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.

மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.

அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.

என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.

தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.

அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.

இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.

அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.

''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''

என்று கேலி செய்கிறார் இவர்.

காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.

காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.

பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.

கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு

கீழே இறங்கினேன்.:)