Showing posts with label வணக்கங்கள்.. Show all posts
Showing posts with label வணக்கங்கள்.. Show all posts

Saturday, December 26, 2009

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...

மார்கழித் திங்கள் பிறந்து நாட்களும் ஓடி விட்டன . இதோ இன்று வைகுண்ட பெருமாளின் ஏகாதசியும் சேர்ந்தது.

ஆண்டாள் இரண்டாவது பாசுரத்திலே கூறி விட்டாள் .நெய்,பால் சாப்பிட மாட்டோம் என்று. அதிர்ஷ்டவசமாக குடும்ப வைத்தியரும் உப்பைக் குறைக்கக் சொல்லிவிட்டார். :))
அதனால் நெய்யில்லாமல், உப்புக் குறைவா போட்டு மிளகு சீரகம்,இஞ்சி மட்டும் சானோலால வறுத்துப் போட்டு ,
தினம் அவருக்குக் கை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.
பெரிய சிங்கம் சாப்பிட மறுக்கவில்லை.
ஆனால் எங்க வீட்டுக்கு உரிய சிங்கம் இதெல்லாம் பொங்கலா... என்று விச்வாமித்திரர் போலக் கை காண்பித்துவிட்டார் .:(( முந்திரிப்பருப்பு வேற இல்லையே :)




ஸ்ரீ ஆண்டாள்


ஸ்ரீ தாயார்

சரி,மையிட்டு எழுதோம்னு சொன்னாளேன்னு அதையும் செய்யறதில்ல. எப்பவுமே:)
செய்யாதன செய்யோம் ,தீக்குறளைச் சென்றோதோம்னும் சொன்னாங்க.
அவங்களுக்கு அது ஒண்ணும் சிரமமில்லை. எல்லோரும் ஊர் முச்சூடும் தோழிகள். நமக்கு அப்படியா.

இருந்தாலும் புறம் கூறாமல் இந்தப் பதிவை முடித்து விடுகிறேன்.
இன்று பொதிகையிலும் ,ராஜ் டிவியிலும்,ஜயா டிவியிலும் பரமபத வாசல் திறப்பதைக் கண்டு
நல்ல தரிசனமும் செய்தாச்சு.
அதிசயமாகத் தூக்கம் கண் விழித்தேனே என்று என்னையெ மெச்சிக் கொள்கிறேன்.
ஏதோ பெருமாளா திரு
உள்ளம்
வைத்து வானொலி அலார்ம் அடித்தது. அது என்னிக்கோ வைத்த அலார்ம்.
இன்னிக்குத் திருப்பாவை சொல்லி எழுப்பிய ஆண்டாளாக
செயல் பட்ட என் பழைய ரேடியோவுக்கு வணக்கங்கள்.
காலையிலெ எழுந்து பார்க்க முடியாதவர்கள் நாள் பூராவும் ஓடும் செய்திச் சானல்களில் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடலாம்.
இன்று முழுவதுமாவது
கண்ணன் தியானம் மனதில் இருக்க அவனையே பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

எல்லொருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நலமாக வளமாக வாழ்வோம்.













பலராம ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்ரீ முரளிதரன் .

பின் குறிப்பு.
இன்று நம் தோழி,சகவலைப் பதிவர்
திருமதி ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள். அவர்கள் சுற்றத்தோடும்,நட்போடும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஹாப்பி பர்த்டே ராமலக்ஷ்மி !


















எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...