வழக்கமான கதை.
ஐம்பதுகளில் வெளிவந்த பல ,
குடும்பம் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்
'அன்பு எங்கே'யும் ஒன்று.
அதற்கும் ஒரு முன்னோடியாகக் கட்டாயம் ஒரு
இந்திப் படம் இருந்திருக்கலாம்.
ஒரு குடும்பம்
அண்ணன்,அண்ணி
கல்யாணம் ஆகாத தம்பி
அங்கே வேலைக்குச் சேரும் ஒரு பெண்.
குடித்து விட்டு வீட்டுக்குத் தள்ளாடியபடி வரும்
தம்பியாக
எஸ்.எஸ்.ஆரும்,
பணி புரியும் பெண்ணாகத் தேவிகாவும்
நடித்ததாக நினைவு.
இந்தச் செய்தி எல்லாம் பேசும்படம்
என்ற புத்தகத்தைப் படித்துத் தான் நாங்கள் தெரிந்து கொள்வோம்.
1958இல் வந்த படமாக இருக்க வாய்ப்பு.
ஜமுனா ராணி பாடிய ' மேலே பறக்கும் ராக்கெட்டு'
மிகவும் பிரபலம் அப்போது.
அத்துடன் கூடவே இந்தப் பாடலும்
இனிமைச் சாரலாக நினைவு வருகிறது.
அறிவு போதிக்கும் பாடல்கள் நிறைய அந்த நாட்களில் வெளிவரும்.
பட்டுக்கோட்டையார் பாடல்கள் ,
உடுமலை நாராயண கவி,
இவர்கள் எழுதி வெளிவந்த காலம்.
எப்போதுமே ரசிக்கக் கூடிய வரிகள்.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
பாடியவர் பி.சுசீலா.
இந்த அம்மாவுக்கு எத்தனை
நன்றி சொல்வது!!
எங்கள் இனிய நினைவுகளுக்கு இவரும் டி.எம்.எஸ் ஐயாவும் நிறைய உரம் கொடுத்து இருக்கிறார்கள்.
பாடல் இதொ.
எத்தனை கோடிப் பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலெ-இந்த
உலகம் புகழுது ஏட்டிலே
அர்த்த ராத்திரி பனிரண்டு மணிக்கு
ஆடிக் கொண்டே நுழைவதை....
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டாங்கள் செய்வதை...
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா..
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா
இல்லையா நீ சொல்லையா
இல்லையா நீ சொல்லைய்யா....(.எத்தனை கோடி)
அன்னம் இட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே...
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு நாளும்
முடிவு கொண்டே வாழ்ந்திருந்தாலும்
துணைபுரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
தினம் துணைபுரிவேன் நானும்...(எத்தனை கோடி)
ரசித்தீர்களா:-)
Showing posts with label திரைப் பாடல். Show all posts
Showing posts with label திரைப் பாடல். Show all posts
Saturday, April 21, 2007
Subscribe to:
Posts (Atom)
முதுமையில் வேண்டும் இனிமை
வல்லிசிம்ஹன் முதுமை சிறப்பு .3 Vallisimhan எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...