Showing posts with label Manam.. Show all posts
Showing posts with label Manam.. Show all posts

Tuesday, February 12, 2019

இன்னொரு உறவு ///2

வல்லிசிம்ஹன்  எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.

திருமணம்  நடந்தது 1965இல்

உஷா ஒரு சம்ஸ்க்ருத  முது நிலைப் பட்டதாரி.

மகேஷ்  இன்ஜினியரிங் படித்து அமெரிக்காவில் எம்.எஸ் செய்து வந்த பிறகே
பெற்றோர் பார்த்து நடந்த திருமணம்.
 இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசமே.

மஹேஷுக்குச் சென்னை சூழ்நிலை பிடிக்கவில்லை.
கொடைக்கானல், ஏற்காடு, உதகமண்டலம் என்று குளிர்ந்த பிரதேசங்களில் தன திறமைக்கு கேற்ற வேலையைத் தேடி, இந்த பிலிம்ஸ் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது.
எந்திரங்களை மேற்பார்வையிடும் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது.

ஆறு வருடங்களில் இரு குழந்தைகளுக்குத் தாயானால் உஷா.
அவளுக்குத் தேவையான  புத்தகங்கள், இசை அவளது பொழுது போக்கு.

குன்னூர்  மகளிர் மன்றத்தில் சேர்ந்து டென்னிஸ்,மற்றும்பலவிதமாகப்    பொழுது போனது.
குழந்தைகளை அங்கிருந்த ஆங்கிலப் பள்ளியில் கிண்டர் கார்ட்டனில் சேர்த்து அவர்களது வளர்ச்சியில்
மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

தாம்பத்ய வாழ்வின் உல்லாசத்தில் குறை இல்லை.
இன்று என்ன குறை  என்று தெரியவில்லை.

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விரைந்து சென்று திறந்தாள்.
உள்ளே வந்த மகேஷ்  , நான் சாப்பிட்டு விட்டேன் குட் நைட் என்று
படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.

உஷாவுக்கு  சினம் எழுந்தது மனதில். அவனைப் பின் தொடர்ந்தாள்.
இன்னிக்கு உங்களுக்கு என்ன மூட் இது.
என்னிடம் சொன்னால்  எனக்கும் புரியும்.

இப்படி வெளியில் சாப்பிடுவது தெரிந்தால் நான் சாப்பிட்டுப் படுக்கப் போயிருப்பேன்.

கதவு திறக்க ஒரு ஆள் வைத்துவிடலாம்.என்றபடி நேரத்தைகே காட்டினாள். நீங்கள் வெளியே சென்றது 7 மணிக்கு. இப்போது 11.  என்ன செய்தீர் கள் என்று கேட்கவில்லை.

என்னிடம் சொல்லாமல் உங்களுக்கு என்ன வருத்தம்,கோபம் என்று படபடத்தாள் .
 கால் உரையைக் கழட்டிக் கொண்டிருந்த மகேஷ், நிமிர்ந்தான். என்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை. நான் என் தோழன்  ரமேஷுடன் சினிமா ஒன்று பார்த்துவிட்டு வருகிறேன்.

என் வருத்தம் ,கோபம் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம்.
உன் புதிய  தோழன்  சந்தர் , சென்னையிலிருந்து வந்திருக்கிறானே  அவன்.
நீயும்  அவனும் சம்ஸ்கிருதத்தில்  குமாரசம்பவம் நாடகம்  அரங்கேற்றப் போவதாகக் கேள்விப்பட்டேன்.
என்னைப்  பொறுத்தவரையில் எந்த சம்பவமும் நம் வாழ்க்கைக்கு வேண்டியதில்லை.

அவன் நல்லவனாக இருக்கலாம்.. நீயும் அப்பழுக்கில்லாமல் பழகலாம்.
இந்தக் குன்னூருக்கு அது தாங்காது.

என்று வார்த்தை பாணங்களை  வீசி வீட்டுக் குளியல்  அறையில் சென்று கதவை மூடிக் கொண்டான்.

உஷா ,திகைப்பில்  சிலையானாள் .
இன்றுதான் பேசியிருக்கிறோம். நாளை சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.
இவனுக்கு என் இந்த அனாவசிய பொறாமை

என்று யோசித்தவள் மனம் குழம்பியது.
மெதுவே அகன்று குழந்தைகள் அறையில் சென்று
படுத்துவிட்டாள்.






அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...