Showing posts with label Kasi Ganges trip. Show all posts
Showing posts with label Kasi Ganges trip. Show all posts

Wednesday, June 27, 2018

1395, வாராணசி பயணம் துவங்கியது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பங்களூர் ரயில் நிலையத்தை விட்டு நகர்ந்தது,வேகம் பிடித்தது
வாரணசி  எக்ஸ்ப்ரஸ். கண்கலங்கின தங்கையை அணைத்துக் கொண்டான் அண்ணா.
இரண்டு வாரம் தானே போகிறார்கள்.

அப்பா நன்றாகப் பார்த்துக் கொள்வார். பயப்படாதே இந்த 63 வயசிலயாவது கிளம்பணும்னு தோணித்தே அப்பாவுக்கு.

அம்பாசமுத்திரம், சென்னை,விராலி மலைன்னு எத்தனை ட்ரிப்
போவார்.
இதைத்தவிர, ஸ்பெயின், ஜெர்மனி, சின்சினாட்டி,ஹ்யூஸ்டன்னு சுத்தல்

அப்பா ஆல்சோ நீட் அ ப்ரேக்.
21 வயசிலிருந்து எத்தனை பாடு பட்டிருக்கார்.
ஏன் அம்மாவும் தான் அலுக்காம எவ்வளவு வேலை செய்வார்.
தாத்தா பாட்டி இருக்கிறவரை எல்லோருக்கும் சலிக்காமல்
செய்வாள் என்றாள் ஸ்ருதி.
ஆமாம் ஸ்கூலில் இருந்து வரும்போது கூட சமையலறையில்
 ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
வருபவர்கள் போகிறவர்கள்னு நிறைய விருந்தாளிகள்.
என்றான் வேணு.
என்ன கலகலப்பா இருக்கும்.
யேன் சமையலுக்கு அப்போ ஆள் வச்சுக்கலை அம்மா.
அப்பாவுக்குத் தன் கையால செய்யணும்னு ஆசை.
என்னவோ அண்ணா, வந்தவா எல்லாம் அதை செய் ,இதை செய்யுனு சொல்லும்போது எனக்குக் கோவமா வரும் என்றாள்
ஸ்ருதி.
போனாப் போறது. அம்மாவுக்குப் பிடித்ததை அவள் செய்தாள்.
இப்பதான் எல்லா உதவியும் வந்துட்டதே என்றான் சமாதானமாக
வேணு.
சரி வா போலாம்,நம் சம்சாரம் நமக்குக் காத்திண்டு இருக்கும்.
அம்மா வந்த விட்டுச் சொல்ல எனக்கு ஒரு விஷயம் இருக்கு.
 அட. நவீனுக்குத் தங்கையா என்று பூரித்தான் வேணு.
எப்படி அண்ணா புரிஞ்சுக்கற,
கில்லாடிண்ணா நீ என்று அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
எங்க ப்ராஜெக்ட் அடுத்த வருடம் என்று சிரித்தான்.
ஓஹோ  என்று சிரித்தாள் ஸ்ருதி.
ஆனால் இந்தத் தடவை அம்மா வீட்டில் பிரசவம் இல்லை.
மாமியாரே பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார்.
ஸ்ரீதரும் நான் இல்லாட்டக் கஷ்டப் படுவார் என்ற தங்கையை வாத்சல்யத்தோடு
பார்த்தான் வேணு.
எங்க வீட்டுக்கு வரலாமே ,வசுதா ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொள்வாள்
என்றான்.
 ம்ம் இன்னும் ஏழு மாசம் இருக்கு. அம்மாக்கு என்னைப் பார்த்ததிலிருந்து சந்தேகம் தான்.
வாய்விட்டுக்கேட்கவில்லை.
இந்தா இன் பெண்ணுக்கு இதை எடுத்து வந்தேன் என்று
பெரிய ஸாலி American Doll பொம்மையைக் கொடுத்தாள்.
அத்தைன்னால் நீதான். மது குட்டி
Add caption
தலைகீழாக்  குதிக்கப் போறது என்ற வண்ணம் வண்டியில் வைத்தான்.
நீ நம் வீட்டுக்கு வந்துவிட்டு அப்புறம் போ. சேதி சொன்ன வாய்க்கு,
திருனெல்வேலி அல்வா வந்திருக்கு என்றபடி அவளையும் உள்ளெ
ஏற்றிக் கொண்டு ஜய நகர் பக்கம் வண்டியைத் திருப்பினான்.

காசித்தம்பதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Monday, June 25, 2018

கங்கையிலே குளித்தோமே ராமா ஹரே. 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  கங்கை என்ற வார்த்தை காதில் பட்டதும்  வஞ்சும்மாவுக்குத் தனி உற்சாகம்.
உடனே பெண்ணுக்கும், மகனுக்கும் எழுதிப் போட்டுவிட்டு,
ஏற்பாடுகளில் முனைந்தாள்.

செப்டம்பரில் போவதால் வெய்யிலும் ,குளிரும் சேர்ந்தே
என்று சொன்ன நண்பரின் சொல்லுக்கு ஏற்ப
உடைகளை   எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
பெண்ணும் பிள்ளையும் குடும்பத்துடன் வந்து விட்டார்கள்.
முன்பே சொல்லி இருந்தால்
நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்வோமே
என்று குறைப்பட்டுக் கொண்ட பெண்ணை
வஞ்சும்மா செல்லமாகக்  கோபித்துக் கொண்டார்.
உன் பெரிய கூட்டுக் குடும்பத்தை விட்டு
எப்படி வருவாய்.
மாமியார், பாட்டி எல்லோரும் நீ ,இல்லாவிட்டால்
சிரமப்பட மாட்டார்களா.
இன்னும் பத்து வருடம் போகட்டும், நீங்களும் போகலாம் என்றாள்.
ஆமாம் ஒவ்வொருத்தர் பொண்ணு பிள்ளை எல்லாம் அழைச்சிண்டு போவார்கள்.
நீ தான் நீதி போதிப்பதிலியே இருப்ப, என்று முகத்தைச் சுளிக்கும் மகளைக் கண்டு சிரிப்புதான்
வந்தது வஞ்சும்மாவுக்கு.

சமையல்கார மாமியுடன் சேர்ந்து, பெற்றோர்களுக்குச் சத்துமாவு,
அவல்பொரித்தது,
 ரயில் பயணத்துக்குச் சப்பாத்தி,
பயத்த லாடு என்று செய்து அழகாக  சம்புடங்களில்
போட்டுப் பெட்டியில் அடுக்கினாள்.
காசியில் அவர்கள் தங்கும் விலாசத்தை வாங்கிக் கொண்டாள். அலுவகம் வழியாக
நல்ல இடத்தையே ரிசர்வ் செய்திருந்தார் ஸ்ரீனிவாசன்.

கங்கைத் துறையின் அருகில் இருந்த விடுதி அது,.
மனைவியின் கங்கை மோகம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
 இந்தப் பயணம் அவளுக்கு நல்லதொரு
அனுபவமாக இருக்கத்தான் அவர் கவனமாக இருந்தார்.
அவர்களுடன் வருபவர்கள்
முன் பின் பழக்கமானவர்களே.

மனைவிக்காகவே, முதல் வகுப்பிலியே டிக்கெட்டுகள் பதிவு செய்திருந்தார்,
ஒரு நல்ல வியாழன் அன்று, ஆக்ரா வழியாக தில்லி செல்லும்
 விரைவு வண்டியில் இருவரும் ஏறிக்கொள்ள,
வழியனுப்ப ,மகனும் மளும் வந்தனர்.
மகன் ஜாஸ்தி பேசாதவன். அம்மாவிடம், மருந்து விசாரணை நடத்தி உறுதி செய்துகொண்டான்.
இருவருக்கும் சூடான பால் வாங்கிக் கொடுத்தான்.
அம்மாவுக்குப் பத்திரிகை வாங்கப் போனவனைப்
பார்த்து ஸ்ரீனிவாசன் சிரித்துக் கொண்டார்.
ஏண்டி அவன் பொறக்கறத்துக்கு முன்னாடிலேருந்தே
உன்னை நான் பார்த்துக் கொள்ளவில்லையொ
என்று சீண்டினார்.
அம்மா முகம் சிவப்பதைப் பார்த்து,பெண்ணுக்குச் சிரிப்பு வந்தது.
ஆஹா, எத்தனை நல்ல தம்பதி இவர்கள்
என்றவாறு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு
அம்மா கன்னத்தில் முத்தமிட்டு
இறங்கினாள்.
என்ன முகம் பூரா பூரிப்பு என்று கேட்ட அண்ணாவிடம்
அண்ணா, அம்மா அப்பா இருவரும் படு ரொமாண்டிக்
என்று புன்னகைத்தாள்.

எனக்குத் தெரியுமே,
இதுக்கு நடுவிலே நீயும் புகுந்து கொள்ளப் பார்த்தியே என்று நகைத்தான்
அண்ணன்.
சரி இதோ வண்டி கிளம்புகிறது. என்றவாறு, அம்மாவிடம்
 விகடன்,கல்கி, கலைமகள் என்று கொடுத்தான்/,.
அம்மா, அப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கோ.கங்கையில நீந்துகிறேன் என்று ஆரம்பித்துவிடுவார் என்று பத்திரப் படுத்தினான்.
போடா பயலே. நாங்கள் பத்திரமாப் போய் வரோம்
நீங்கள் பத்திரமாக இருங்கள் என்றபடி விடை பெற்றனர் பெற்றோர்.
மீண்டும் காசியில் பார்க்கலாம்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...