Blog Archive

Thursday, March 31, 2022

சில செய்திகள் அங்கும் இங்கும்

இன்று பங்குனி அமாவாசை. இந்த
 நன்னாளில் தொடங்கப்படும் அனைத்துக்
காரியங்களும் வெற்றி பெற இறைவனின் அருள் 
கிடைக்கப் பிரார்த்தனைகள்.

உகாதி பண்டிகைக்கான வாழ்த்துகள்.
பாட்டி விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை.

பெற்றோர்களுடன் இருந்தபோது உகாதி 
கொண்டாடிய வழக்கம் இல்லை.
சென்னையில் இருப்பவர்கள் மிக உத்சாகத்துடன் 
கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.
திருப்பதியும் ஆந்திரப் பிரதேசமும்
சென்னையுடன் இருந்ததால் இந்த வழக்கமும் 
வந்திருக்கவேண்டும்.

அதிக மகிழ்ச்சி அதிக நேர் எண்ணங்கள் இப்படித்தான்
இந்த விழாவை நான் பார்க்கிறேன்.
சென்னைத் தோழிகளை அன்புடன் வாழ்த்துகிறேன்.
அவர்கள் வீட்டிலிருந்து வரும் போளிகளையும்
மனதில் எண்ணி சுவைக்கிறேன்:)

சுலபமாகப் போளி செய்யும் முறையைத்
தினமும் மணமும்  யூடீயூப் இணைப்பில்  
பார்த்தேன். 
கடலை மாவு, வெல்லம், கொஞ்சம் மைதாமாவு,தேங்காய்ப் பொடி,ஏலக்காய் தூள்
சேர்த்துக் கரைத்து,(ஆமாம் கரைத்து)ப்
போளியைத் தோசைக்கல்லில் ஊற்றி செய்தார்கள்.
பார்க்க
நன்றாகத் தான் இருந்தது . அதுவும் நெய் ஊற்றி
இரண்டு பக்கத்தையும் பொன்னிறமாக
எடுத்தார்கள்.
இங்கும் அதை செய்து பார்க்க வேண்டும்.





பழைய படப் பாடல்கள் மனதுக்கு மிக இனிமை. அண்மையில்
நடிகர் ரஞ்சன்(பழைய நடிகர்)  அவர்களின் 
வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப்
படித்தேன்.
என் மாமியாரின் பிறந்து வீட்டுக்குப்
பக்கத்தில் அவர் இருந்ததாகவும், மாடவீதிகளில்  அவர்
குதிரையில் சவாரி(மெதுவாகத்தான்) செய்த
விவரங்களையும் ஆனந்தமாகச் சொல்வார்,.
திரை உலகின் நெளிவு சுளிவுகளை அறியாத
திறமைசாலி சில படங்களில்
மட்டும் நடித்திருக்கிறார். 
பிறகு மும்பை சென்று விட்டாராம். சிறுவயதில்
மனத்தில் படிந்த நல்ல பாடல்களில் ஒன்றை
மேலே பதிந்தேன். வீர சாகசமும்,நேர்மையும்
எப்பொழுதுமே மனதை ஆட்கொள்ளும் இல்லையா!!!

வல்லிசிம்ஹன்

   அன்பின் அனைவருக்கும் 
 யுகாதித் திரு நாள்  வாழ்த்துகள். இறைவன் அருள் என்றும் கூடி நம்முடன் நிற்கவேண்டும்.

சென்னை மற்றும் தமிழகத்தின் எல்லா இடங்களிலும்
வெய்யிலின் தாக்கம் அதிகமாக
இருப்பதாகப் படிக்கிறேன்.
இந்த வட அமெரிக்காவிலேயே ஒரு பக்கம் வெய்யில்,ஒரு பக்கம் மழை காற்று சேதம், இந்த ஊரில் குளிர்.
எல்லாவற்றையும் கடப்போம்.
இறைவன் அருளால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வெப்பம் தணிய வேண்டும்.


நம் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணம்
எப்போதும் உண்டு.
சந்தர்ப்பம் கூடி வரவேண்டும்.
தொற்று பற்றி பயம் இல்லாமல் தான் இப்போது அனைவரும் நடமாடுகிறார்கள்
என்று தோன்றுகிறது.

நேரம் கூடி வந்து அனைத்து நட்புகளையும்
காண ஆவல். 
லஸ் வினாயகரே என் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும். 

ஜூன் மாதத்திலிருந்து நிலத்தடி மெட்ரோவுக்கான
வேலைகள் தொடங்கப் போவதாகச் சொன்னார்கள்.
நம் வீட்டுக் காம்பவுண்டிருந்து இருபதடி தூரத்திலிருந்து 
வேலைகள் ஆரம்பிக்கும். அந்தப் பக்கம் இருக்கும் கட்டிடங்கள்
பாதிக்கப் படும்.

வீடுகள் கட்டிக் குடி வந்தவர்கள் கதி என்ன என்று 
யோசிக்க மாட்டார்களா.
பக்கத்துவீடு ,அதற்கப்புறம் இருக்கும் அடுக்கு மாடிக் 
குடி இருப்பு எல்லாமே பாதிக்கப் படும்.
அத்தனை குடும்பங்களுக்கும் என்ன வழி செய்யப் 
போகிறார்களோ .

இறைவன் காக்க வேண்டும்.

Wednesday, March 30, 2022

சூழ வரும் பிள்ளையார்..

எல்லோரும்  நலமாக வாழ வேண்டும்.

வினாயகர் படிப்புக்குத் துணையாக  அறிமுகம் ஆனவர். பயத்தைப் 
போக்க உதவினவர்.
முன்பே சொன்னது போல நம் பெற்றோர் 
அறிவு சொன்னது போல நடந்தகாலம்.
திருமணம் ஆன பின்னும் மாறவில்லை.

சிங்கத்தின் துணை கொண்டு ராமரும் சீதையும்
பட்டாபிஷேகக் கோலத்தில் எங்களுடன் சேர்ந்தனர்.

திருமங்கலத்தில்  வீட்டிலிருந்து 100 கஜ தூரத்தில் ஒரு அரசமரம்.

அந்தப் பிள்ளையாரிடன் தோப்புக்கரணம் போட்டுவிட்டே
பள்ளிக்குச் செல்வோம்.
தோழிகளைப் பிரிந்தது போல
அந்த அழகுப் பிள்ளையாரைப் பிரிவதும் சிரமமாயிருந்தது.

திண்டுக்கல்லில் அந்த இடத்தை வெள்ளைப் பிள்ளையார்
பிடித்துக் கொண்டார்.
பள்ளி இறுதிவரை  ஆறுமாதத்துக்கு ஒரு முறை
சின்னக் கடைத்தெருவில் தேங்காய் வாங்கி 
18 தேங்காய்கள் உடைப்பது வழக்கமாக இருந்தது.

அவர் கருணையில் கல்லூரியையும் எட்டினேன்.
தம்பிகளுக்கும் அவரிடம் ஈடுபாடு.

அவர்கள் முன்னேற்றத்துக்கும் அவரே காரணம்.

எப்பொழுதுமே ஆதாரமாக இருந்தது ,
புரசைவாக்கம் வினாயகர்.

நான் படித்த போது அவர் சின்னக் கோயிலில் இருந்தார்.
இப்பொழுது முற்றும் மாறி கிழக்கு பார்த்து, தெருவெங்கும் பிரகாசமாகத் தெரிய அருள்மிகு

வினாயகர் ஆகிவிட்டார்.
முன்பு நாங்கள் உட்கார்ந்து கதை பேசிய அவர் திண்ணை
சுவர் எழுப்பி , பிரகாரம் ஆகிவிட்டது.
கோவிலுக்குக் கதவும் போட்டு விட்டார்கள்.
நினைத்த போது எட்டிப் பார்த்து ஹலோ
சொல்ல முடியாது:(
திருமணம் ஆனதிலிருந்து இப்போது வரை
லஸ் வினாயகர் தான் எல்லாக் குறைகளையும்
தீர்த்து வைப்பவர்.
வழிகாட்டுபவர். மதுரை முக்குறுணிப் பிள்ளையார்,
பசுமலையில் பக்கத்து வீட்டுக் காம்பவுண்டு
பிள்ளையார்,
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் 
பிள்ளையார், கோவை மருதமலைக் கோவில்
பிள்ளையார் ,திருச்சி மலைக் கோட்டைப்
பிள்ளையார் எல்லோருமே ஒளிவடிவில்(டியுப் லைட்)
எனக்குத் தினம் ஆதரவு தந்தவர்கள்.
சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து,
திருமணங்களைக் கூட்டி வைத்து,
தம்பதியரை ஆசீர்வதித்து அவரே அருள்வார்.
அதில் ஒரு சந்தேகமும் கிடையாது.
கஜமுகனே ஐங்கரனே நவசக்தி கணபதியே சரணம்.




பிள்ளையார் சுழி போட்டுப்
போடும் பல திட்டங்கள்  அவரே நினைத்து முடி போட்டு வைப்பார்.
அல்லாததைத் தள்ளுவார்.
நமக்கு வேண்டும் நன்மையைத் தருவார்.
அவை கிடைக்காவிடில் அதுவும் நம் நன்மைக்கே.

Monday, March 28, 2022

வினை தீர்க்கும் வினாயகர்.


வல்லிசிம்ஹன்


 எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

 சென்ற பதிவில் நம் பிள்ளையார் படங்களை
மட்டும்  பதிவிட்டு எழுதாமல் விட்டு விட்டேன்.

வினாயகர் உருவம் முதலில் மனதில் பதிந்த 
நாளை நினைக்கிறேன்.

அப்பா அம்மாவுடன் அவ்வையார் படம் பார்த்த அன்றுதான்
அந்த அன்புக் கடவுளின்  வருகை வீடெங்கும் நிறைய ஆரம்பித்தது.

அப்பா ஒரு தீர்ந்த பிள்ளையார் பக்தர்.
எப்பொழுதும் வீட்டில் பிள்ளையார் கோவில்
விபூதி இருக்கும்.
இரவு படுத்துக் கொள்ளுமுன் நெற்றியில்
இட்டு விடுவார். என்னுடைய பல பயங்களை
அந்த விபூதி போக்கி இருக்கிறது.     அதே போல எங்கள் மூவரையும் பரீட்சை எழுத
ஆரம்பிக்கும் முன் பிள்ளையாரை நினைத்து
சுழி போட்ட பிறகே எழுத வேண்டும் என்றும்
சொல்வார்.


அரச மரத்தடி பிள்ளையாரே
ஆத்தங்கரை ஓரப் பிள்ளையாரே
ஆதாரம் வாழ்வில் நீயே பிள்ளையாரே
அருளுடனே எம்மை ஆளும் பிள்ளையாரே...

அங்கும் இங்கும் என்றும் தேடும்பிள்ளையாரே
ஆதரவு தந்திடுவாய் பிள்ளையாரே
என்றும் உன்னை மறவாமல் பிள்ளையாரே
என் மனதில் நிலை பெறுவாய் பிள்ளையாரே.

சஞ்சலங்கள் போக்கிடுவாய் பிள்ளையாரே
சங்கடங்கள் நீக்கிடுவாய் பிள்ளையாரே.
தேங்காமல் ஓடும் ஆற்று நீரைப் போலே 
தேர்ந்து எம்மைக் காத்திடுவாய் பிள்ளையாரே.

அஞ்சி அஞ்சி வாழ வேண்டாம் பிள்ளையாரே. உம்
அஞ்சேல் உரை கேட்டால் பிள்ளையாரே.

கெஞ்சாமலே அன்புப் பிள்ளையாரே
நெஞ்சிலிருந்து காத்திடுவாய் பிள்ளையாரே.

பிள்ளையார் திருவடிகளே சரணம்.
சட்டென்று மனதில் தோன்றிய வரிகளை
எழுதினேன். 



தொடரலாம்?


Sunday, March 27, 2022

மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்


 லஸ் வினாயகர்.




   வெள்ளாளத் தெரு கற்பக வினாயகர்.

திண்டுக்கல் வெள்ளை வினாயகர்
  திருமங்கலம் சொக்க நாதர் மீனாக்ஷி கோவில்

. தயிர் சாதம். 2600. 26/3/2022

   எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
முன்பு ஒரு பதிவில் , எங்கள் வீட்டில் பாட்டி செய்யும் முறையாகத்
தயிர் சாதம் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.
   பால் ,வெண்ணெய், தயிர் எல்லாம்
சேர்த்து ஒரு நரசிம்ம ஜயந்திக்கு  சூடான
தயிர் சாதம் பிசைந்த  ஞாபகம்.
இவர்கள் பாலிலேயே  தயிர் உறை குத்தி செய்திருக்கிறார்கள்.

பாட்டிக்குச் சுடச் சுட தயிர் சாதம் சாப்பிட வேண்டும்.
ரஜச குணம் . ஆற வைத்து சாப்பிடுபவர்கள்
அசத்தாக இருப்பார்கள்
என்று வேறு.
மாறாக என் மாமியார் எல்லாமே ஆறி தான் சாப்பிடுவார்.
பாட்டியும் மாமியாரும் வட துருவம் ,தென் துருவம்.

இருவரும் எப்படித் தான் ஒன்றாக இருந்தார்களோ.:)))

அனைவரும் வாழ்க வளமுடன்.

Saturday, March 26, 2022

மீண்டும் டி எம் எஸ் 100

வல்லிசிம்ஹன்


அனைவரும் என்றும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

உற்சாகத்துக்கு



ஆனந்தத்துக்கு


  கணவன் மனைவிக்கு


காதலர்க்கு





ஸ்வர வரிசை பாடி அசத்தியிருக்கும் 
நீயே எனக்கு என்ற பலே பாண்டியா படப்பாடல்,
எனக்கு  ஸ்ரீராம் எபியில் பதிந்திருக்கும் கற்பகவல்லி
பாடலை நினைவுக்குக் கொண்டுவரும். 
ராக தாளங்கள் அவ்வளவாகத் தெரியாது.
இருந்தாலும் ரசிப்பதில் தடை இல்லை.:)

Thursday, March 24, 2022

சீர்காழிக்கும் சௌந்தரராஜனுக்கும் வந்தனங்கள்.

வல்லிசிம்ஹன்

#GomathyArasu.

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

என்றும் எல்லோரும் நலமுடன்
வாழ  இறைவன் அருள்.

இன்று முக நூலில் ஒரு சகோதரியின் பதிவில்
வானொலி, சினிமா இவைகள் நம் வாழ்வை
இனிமையாக்கின தருணங்களைப்
பற்றி எண்ணங்கள் பரிமாறிக் 
கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

வாழ்வின் அரிய பொக்கிஷமான நாட்கள் நம்
இளமைக் காலம்.

அங்கிருந்து வெளியே வந்தால் நம் அன்பு#கோமதி அரசின்
பாடல் பதிவு.
திரு சீர்காழி கோவிந்தராஜன் இறையடி இணைந்த நாள்.
திரு டி எம் சௌந்தரராஜன் பிறந்த நாள்.
மனம் நிறை இசையை நமக்கு வழங்கியவர்கள்.

இருவரும் இணைந்து முழங்கிய தமிழ்ப்
பாடல்கள் முருகனோடு நம்மை இணைத்தவை.
சீர்காழியின் பிள்ளையார் பாடல் கணபதியே 
பாடல் தினமும் என்னை மகிழ்வித்த வருடங்களை
நன்றியுடன் நினைக்கிறேன்.
அதே போல உள்ளம் உருகுதையாவைப் 
பாடி உருக வைத்த டி எம் எஸ் அவர்களுக்கும் 
மனம் நிறை நன்றி.

அன்பின் திருமதி பக்கங்கள் கோமதிக்கு என்றும் நன்றி.

   என் பெற்றோர் சென்னை பக்கத்தில் கல்பாக்கத்தில் இருக்கும்
போது அங்கிருக்கும் அன்னை காமாட்சி கோவிலில் தினமும் ஒலிபரப்பாகும்
பாடல்களைக் கேட்கும் நிறை பாக்கியம்
கிடைத்தது.
அம்மா குழந்தைகளை அருகில் வைத்துக் 
கொண்டு பாடச் சொல்வார்.
அவற்றில் சில பாடல்களைப் பதிகிறேன்.

சீர்காழியின் அபிராமி

டி எம் எஸ் சின் முருகா
இருவரும் இணைந்து கண்ணனை அழைத்த பாடல்.
பாடிய பெருந்தகைகளுக்கும், கேட்க செவிகளைக் 
கொடுத்த இறைவனுக்கும் மிக மிக நன்றியும்
நமஸ்காரங்களும்.
முக நூல் தோழி Jayanthi SJsrinivasan க்கும் நன்றி.

Wednesday, March 23, 2022

1969 பயணம் கர்னாடகா. பாகம் 3.

வல்லிசிம்ஹன்



     அனைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன்
இருக்க வேண்டும்.

சேலத்திலிருந்து கோவை வரும் வழியில்

நல்ல விலை கொடுத்து வாங்கிய ஹாமர்மாஸ்டர் 
டபிள் ஃப்ளாஸ்க்   உடைந்தது.இரண்டு வாக்வம் ஃப்ளாஸ்க் கொண்ட

நல்ல சாதனம். ஒன்றில் வென்னீர், மற்றொன்றில் 
சில்லென்ற பால்.
எப்படி உடைந்தது என்று கேட்கக் கூடாது:)

கோவை வந்து பார்க்கும் போது ஃப்ளாஸ்க் இருக்கவேண்டிய இடத்தில் தூள்கள்
இருந்தன.

சிங்கத்தின் நல்ல குணம் எப்போதும் உதவியாக இருக்கும்.
யார்கையிலும் குத்தவில்லை. காயம் இல்லை
அதைத் தூக்கிப் போடும்மா என்று
அடுத்த இரண்டு  குடுவைகள் வாங்கியாகிவிட்டார்.

அடுத்த நாள் காலை உணவுக்கு அப்புறம் உதகை மண்டலம்
வந்தோம். டிசம்பர் மாதக் குளிரும் 
மழையும் வரவேற்றன.
இரண்டு குழந்தைகளுக்கும் ஸ்வெட்டர் மாட்டி விட்டு

டிராவலர்ஸ் பங்களோவில் முன்பதிவு செய்திருந்த 
அறைக்கு சென்றோம்.
அப்போது தமிழ் நாடு கெஸ்ட் ஹௌஸ் என்று சொல்வோம்.

அங்கிருந்த உணவுக் கூடம் அப்போது 
நல்ல புகழ் பெற்றது.
அதில் தலைமை  பொறுப்பில் இருந்தவரும் சிங்கத்துக்குப்
பழக்க மானவர். அவர்களின் வண்டிகள் 
சேலத்துக்குத் தான் வரும். உரிய உபசாரம் செய்து 
நல்ல வாகனங்களாகத் திரும்பிச் செல்லும்.

தம்பியும் இவரும் , குழந்தைகளுக்குச் சூடான பருப்பு சாதம்
தயார் செய்து கொண்டுவந்தார்கள்.

எங்களுக்குக் காப்பியும்,மாலை வேளைக்கான
மசால் தோசையும் வந்தன.
இந்தப் பயணத்தில் நடந்த ஒரு செய்தியை முன்பே
ஒரு கதையில் சொல்லி இருந்தேன்.
ஒரு குடகு நாட்டுப் புதுமணமக்களின் கதை:)

எங்கள் வாழ்வில் சாகசங்களுக்கும் 
சுவாரஸ்யங்களுக்கும் குறையே இல்லை:)

As requested by Nellai Thamizhan  .@ Mural Seshan

here are the   links.

https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_5.html

https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_4.html

Tuesday, March 22, 2022

மனைவியே மனிதனின் மாணிக்கம்:)

வல்லிசிம்ஹன்

   எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


TODAY  From Friend P.S.Chandra long time Thozhi.
Forwarded
Sub: Manaivi manasu. 
Just in jest vera enna?
 
👏👏மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா". 

🙃🙃மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்". 

👍👍👍யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

😇தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

👋🏿"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் 

👩‍❤️‍👩#திருமணம்👩‍❤️‍👩

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

👺👺மாப்பிள்ளை வீட்டில், "மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்,

😝😝பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு" என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

👍👍ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.👍👍

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

👏👍உங்கள் கணவரை நேசியுங்கள்!👏👍
.
😇* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்

😝உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
😇* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
😝என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
😇* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

😝அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
😇* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
😝உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
😇* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
.
😝உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
👍👍* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.👍👍
.
ஏனென்றால்.........,
.
👏👏👍👍"கணவனை கொல்வது, சட்டப்படி குற்றம்"..!!👏👏👍👍😝😝

😐😐😐😐😐😐😐😐😐😐😐
 
😇😇மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

🎓🎓1. நிறைய "அதிகாரம்" இருப்பதால்.

😇😇2. நிறைய இடங்களில் "புரிந்தும், புரியாமலும்" இருப்பதால்.

👊👊3. இரண்டு "அடி"யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

👍😂😝மன நிம்மதியோடு படித்து விட்டு .பிறருக்கும் அனுப்பி பாருங்கள். "வாழ்த்துவார்கள்...                        வாழ்க வளமுடன். . நன்றி. நன்றி நன்றி".👍😂

Friday, March 18, 2022

வட்டத்துக்குள் வட்டம்........




வல்லிசிம்ஹன்

அனைரும் நலமுடன் இருக்க வேண்டும்.

தோழியின் திருமண நாள் மார்ச் 18. 
50  ஆண்டுகள் ஆகின்றன.  

சுதா  மற்றும் அவளின் இனிய கணவர்  மஹாதேவனுக்கும்
எங்களின் வாழ்த்துகள்.
வரும் நல் எதிர்காலத்தில் அவர்கள் மேலும் 
நல் ஆரோக்கியமும்,மகிழ்ச்சியும், ஆரோக்கியமும்
பெற்று  நிறை வாழ்வு வாழ வேண்டும்.







   அவளும் நானும் திருச்சியில் பார்த்த படங்கள் சில.

ஆங்கிலப் படம் இரண்டு, இந்திப் படம் இரண்டு.
பாலக்காட்டைச் சேர்ந்த தம்பதியர் இருவரும்.

ஏன் பிரிந்தோம் , பிறகு ஏன் சந்திக்க முடியவில்லை
என்பதும் தெரியவில்லை,.

ஆனால் ஒவ்வொரு மார்ச் பதினெட்டும் 
அவள் நினைவு வராமல் இருப்பதில்லை.:)
பார்த்த படங்களை விட, வானொலியில் சேர்ந்து கேட்ட 
பாடல்களே அதிகம்.
அவற்றில் சில இங்கே .

   அன்பின் சுதாவுக்கும் அவள் கணவருக்கும் மீண்டும் 
வாழ்த்துகள் சொல்கிறேன்.

Wednesday, March 16, 2022

Azhagar Koil Dosai | Thirumaaliruncholai

ஸ்ரீரங்க மங்கல நிதி!

வல்லிசிம்ஹன்

    அனைவரும் வளமோடு வாழ வேண்டும்.

[2:04 AM, 3/16/2022] Jayanthi Kanna.: பழையமுதும்...மாவடுவும்!!!
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திருமால், அவன் ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பெயரனின் வடிவம் தாங்கி வந்த திருவிளையாடலைத் தான் பார்க்க இருக்கிறோம்.

ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.

மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?

காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். ஆம், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது இல்லையா?
இன்றும் ஸ்ரீரங்கத்தில்... பழையமுதும் மாவடும் பிரபலம்!!!

Tuesday, March 15, 2022

1954 இல் ஒரு நோன்பு மீள் பதிவு.

வல்லிசிம்ஹன்






Monday, March 12, 2012

காரடையும் நானும்

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 1954 மார்ச் 14
மற்றுமொரு காரடையான் நோம்புக்குத் தயாரானது சென்னை வீடு.
3 மணிக்கே எழுத்துவிட்ட ருக்மணிம்மா
ஆசாரமாகக் குளித்துவிட்டுப் பெருமாள் விளக்கு ஏற்றிவிட்டு இரு
விறகடுப்புகளையும் ஏற்றி,
இட்லிப்பானையில் தண்ணீரைக் கொட்டி, அரிந்த வைத்திருந்த காராமணிப் பயறுகளைச் சேர்த்தாள்.
மற்றவர்கள் எழுந்திருப்பதற்கு முன்னால்  சத்தம் போடாமல் வந்து நிற்கும் பேத்தியைப் பார்த்து நீ தூங்குமா. இன்னும் நேரமாகும்.
பசிக்கிறது பாட்டி என்னும் ஆறு வயசுக் குழந்தைக்கு ஹார்லிக்ஸ்  கரைத்துக் கொடுத்துவிட்டு, தன் ஆசாரத்தைக் கொஞ்சம் மீறினாள்.

இன்னிக்கு நோம்பு மா. பாட்டி வெந்நீர் போட்டு வைக்கிறேன். அம்மா எழுந்ததும்
உனக்குப் புதுப் பாவாடை எல்லாம்  கொடுப்பா. நீ சமத்தாக் குளித்துவிட்டு
அதுக்கப்புறம் பசிக்கிறதுன்னு சொல்லாம இருக்கணும்  சரியா என்றதும்.
சரி உன்னைத் தொடக் கூடாதா என்று பக்கத்தில வர பெண்ணைப் பின்னாலிருந்து இழுத்தாள்
ஜயாம்மா.
பாட்டி குளித்தாச்சு. நீ என்னோட வா.
என்று அழைத்துப் போய் பின்புற விளக்கைப் போட்டு''சமத்தாக் குளிச்சுட்டு வா.

வெந்நீர்ல கையை விட்டுடாதே.பத்ரம் என்றவாறு வெளியேறினாள்.
வெந்நீர்ல கைவைக்காட்டா எப்படிக் குளிக்கிறது என்று முணுமுணுத்தபடி
இன்னோரு பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குளித்தகையோடு வெள்ளைத் துண்டையும்
இடுப்பில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் வந்தாச்சு.
அம்மா நான் ரெடி.
பாவாடை கொடு. ஒரு புட்டுக் கூடையில் இருந்த புதுப்பாவாடையைத்  துணி உலர்த்தும்  கொம்பால்
எடுத்து அவள் மேல் வைத்துவிட்டு அம்மா குளிக்க நகர்ந்தாள்.
பாடிப்பாவாடை, அதன் மேல்  சிவப்பு வெல்வெட் சட்டை. இரண்டு கைப்புறங்களிலும் மாங்காய் வேலைப்பாடு. ஸ்ரீராம் டெய்லர் அளவெடுத்து அழகாகத் தைத்தது.

வீட்டிற்கு வந்திருந்த  அனைத்துப் பெண்டிரும் குளித்து முடிக்கவும் காரடைகளும் வெண்ணேயும் தயாரகவும் சரியாக இருந்தது. தம்பிகள் எட்டிப் பார்த்து,அக்காவைச் சற்றே கோபத்தோடு கண்டுகொண்டார்கள். பாட்டி எங்களுக்கும் கட்டிவிடு என்பது அவர்கள் வேண்டுகோள்:)

கோலங்கள் இட்டு இலைகளைப் போட்டு, இலை ஒரங்களில் வெற்றிலை பாக்கு,சரடு,பூச்சரம் எல்லம் துரிதமாக வந்து சேர்ந்தன. மாசி முடிவதற்குள் நோம்பு முடிக்க பாட்டிக்கு ஆசை.
அம்மா ஆரம்பித்து,தலையில் பூ வைத்துக் கொண்டு,இலையில் இருந்த வெல்ல அடையில் பாதியைக் கணவனுக்காக எடுத்துவைத்துவிட்டு, ''உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான்நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாதிருக்கணும்னு சொல்லிவிட்டு மஞ்சள்
சரடை அணிந்து கொண்டாள் அதன் நடுவே கோர்க்கப் பட்டிருந்த மல்லிச்சரம் அழகாக அவள் தொண்டைப் பகுதியில் அமர்ந்தது.
திரும்பி பெண்ணைப் பார்த்தால், அவள் கண்கள் வெண்ணேய் மேலயேஇருந்தது. சொல்லுமா உருக்காத.. என்றதும் பசி காதை அடைக்க உட்கார்ந்திருந்த பெண், எனக்குத்தான் கல்யாணமே ஆகலியே என்னை ஏன் இதெல்லாம் சொல்லச் சொல்ற'என்று முணுமுணுக்க,
சமாதானப் படுத்தித் தானே கட்டிவிட்டாள் அந்தப் பொறுமையின் பூஷணம்.

பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தப் பலகாரங்கள்.
 வெற்றிலை பாக்கு சிறிதே சுண்ணாம்பு தடவின தாம்பூலத்தை உண்ண ஆண்டாளுக்குக் கொஞ்சமாகத் தலை சுற்றுவது கூட ஆநந்தமாக இருந்தது. அத்தோடூ புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு.

இதோ இன்னோரு நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

Sunday, March 13, 2022

செய்திகள். நடப்பு விவரம்.

வல்லிசிம்ஹன்
அனைவரும் நலமுடன் இருக்க இறைவன்  அருள வேண்டும்.

ஒரு நல்ல அமைதியான ஆத்மா
பகவான் திருவடிகளை அடைந்தது.

ஸ்ரீமதி பிரேமா ஸ்ரீனிவாசன், 
என் மாமா திரு ஸ்ரீனிவாசனின்  அருமை மனைவியும்,

ஸ்ரீப்ரியா ஸ்ரீனிவாசனனி அருமை அம்மாவும்,
ஒரு வாரம் நோயில் இருந்து இன்று ஞாயிறு காலை 
 இறைவனடி சேர்ந்தார்,.

என் பாட்டியின் மருமகள்கள் அத்தனை பேரும் சிறந்த குணவதிகள்.
பொறுமையின் பூஷணங்கள்.

ஓர்ப்படிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக் குடும்பத்தை
ஒற்றுமையாகக் கட்டுக் கோப்பாக  வைத்துக் 
கொண்டிருந்தார்கள்.

அண்ணா தம்பிகளுக்குள் எத்தனை ஒற்றுமையோ
அதே போல அவர்கள் மனைவிகளும்
எந்த சமயத்தில் உதவி தேவையோ
அந்த சமயத்தில் ஒன்று சேர்ந்து உறவுகளைக்
காத்து வந்தனர்.
இது எங்கள் தலைமுறையின் அதிர்ஷ்டம்.

பழி பாவத்துக்கு அஞ்சிய தலைமுறை.

என் வயதே ஆன பிரேமாவும் ,பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்.

என் பாட்டி மிகவும் கட்டு திட்டங்களுடன், ஆசாரம் பேணி
வாழ்க்கை நடத்துவார்,.
அவருடன் கூட இருப்பது சில நேரங்களில் சிரமம் தான்.
பிரேமா தன் உயர்ந்த குணத்தால்
மாமா, பாட்டி, மச்சினர்கள், ஓர்ப்படிகள்
அனைவருக்கும் ஒத்த மருமகளாக எப்போதும் நடந்தார்.

வேலைக்கு அஞ்ச மாட்டார். எப்பொழுதும் சுறு சுறுப்பாக,
வீட்டைப் பளிங்கு போல் வைத்துக் கொண்டு,
அரிய விருந்தோம்பலால் அனைவரையும் கவர்ந்து

49 வருட தாம்பத்திய வாழ்வைச் சிறக்க வைத்தார்.
மகளிடம் பேரன்பு.
அவள் திருமணம் சிறப்பாக நடந்ததும்
நல்ல மாப்பிள்ளையுடன் தன் வீட்டுக்கு அருகிலேயே பக்கத்தில்
 அவர்கள் இருக்க ,
நிம்மதியுடன் காலம் கழித்தவருக்கு இந்த திடீர்
என்று வந்த
நோய் , வாழ்வை முற்றுப் பெற வந்தது.
இனி அவர்கள் எப்படி மீள்வார்களோ ..அது இறைவன் கையில்.

என் மாமாவுக்கும்,
அவரது மகள்,மருமகனுக்கும் நல வாழ்வும் ஆறுதலும் இறைவனே
அருள வேண்டும்.
என் அருமை பிரேமாவின் ஆன்மா சாந்தியுடன்
அமைய வேண்டும்.

Saturday, March 12, 2022

1969 ஆம் வருடப் பயணம் மைசூரு. பகுதி இரண்டு



வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Belur Halebed



MYSURU  ZOO.:)

Giraffes, lions, white peacock.




  சேலத்தை விட்டுக் கிளம்பியது ஒரு சனிக்கிழமை 
பிற்பகல்.
நேரம் ,நாள் பார்க்கும் வழக்கம் கிடையாது.
என்னிக்கு வேலை குறைவாக இருக்கிறதோ 
அப்போது கிளம்பி விடவேண்டியதுதான்.:)

எந்தவித எதிர்பார்ப்பும் கூடாது. சிங்கம் வந்த நேரம் 
நாங்கள் தயாராக இருந்தால் ,அவர் குளித்து விட்டு
ஆறு  பாண்ட்  ஆறு ஷர்ட் எடுத்து நம் பெட்டியில் போட்டு
விடுவார்.
அது எப்படி .தயாராக இருக்கும் என்று
கேட்கக் கூடாது.:)
12 செட் வெள்ளை  வண்ணத்தில் எப்பொழுதுமே 
இருக்கும்.
அதான் வீட்டு அம்மாவுக்கு வேலை.இந்தக் குழந்தைகள்
எல்லாம் குளித்துவிட்டு வெளியே போகும்.
மண்ணில் விளையாடி உலக அழுக்குகளைப்
பூசிக் கொண்டு  வீட்டுக்கு வரும்.
இவரும் வெள்ளையும் சள்ளையுமாகப்
போவார். வீட்டுக்கு வரும்போது அத்தனை க்ரீஸ்
கறையோடு உடைகள் திரும்பும்.

சனி ஞாயிறு அத்தனையையும் தோய்த்துக்
கொடிகளில் காயும். ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு செட் , அயர்ன் செய்து கொடுப்பேன்.
முதலில் எல்லாமே பருத்தி உடைதான்.
பிறகு டெரி காட்டன் வந்து என் வேலை 
சுலபமானது:)
அதற்கு நான் பட்ட சந்தோஷத்தை நினைத்தால்
எனக்கே சிரிப்பு வருகிறது.
கோவையில் வீட்டுக்கு வந்து துணி துவைத்துக் 
கொடுப்பவர்கள் கிடைத்தார்கள் .அது தனிக் கதை.!!!

    இந்தப் பயணத்துக்கு மட்டும் மனமுவந்து ஒரு கறுப்பு , ஒரு ஆலிவ்
வண்ணம் என்று இரண்டு எக்ஸ்டிரா..
அப்பொழுதும் அதே வெள்ளை முழுக்கை சட்டை:)
மடித்து விட்டுக் கொள்வார்.
என்ன  இருந்தாலும்  நம் கார் ஓட்டிக்குன்னு
ஒரு பக்கம் ஒதுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான்
மேற்படி சமாசாரங்கள்.

 ஒரு வழியாக அம்பாசடரும், சிங்கமும் வந்து ,
காரின் டிரங்க்கில் எங்கள் பெட்டிகள் ஏறின.

அப்போது பிரபலமாக இருந்த ஈகிள் ஃப்ளாஸ்க்குகளில்
வென்னீரும் பாலும்,

குழந்தைகளுக்கான சீரியல்கள். ஆமாம். அதே மோஹன் கார்ன்ஃப்ளேக்ஸ்
தான்.
மூன்று வயது, ஒன்றரை வயது குழந்தைகளுக்கு,
இட்லி காலை வேளை, மதியம் பருப்பு சாதம்,
இரவில்( கார்ன்ஃப்ளேக்ஸ்.  நடு நடுவில் மொனாகோ பிஸ்கட், எக்ளேர்
சாக்கலேட்.)
இவை எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.





Thursday, March 10, 2022

1969 டிசம்பரில் ஒரு பயணம். Part 1

வல்லிசிம்ஹன்

அனைவரும் நிறைவான  வாழ்வு வாழ வேண்டும்.



  1969 டிசம்பரில் ஒரு பயணம்.
குடும்பத்தில் ஐந்தாவது நபர் இன்னும் பிறக்கவில்லை:)
மூன்று வயது மகனும், ஒன்றரை வயது மகளும்,
பெரிய தம்பி முரளியோடு (நல்லதொரு துணைவன் 19 வயதான
அன்பு முரளி) சிங்கம் சாரதியாக,
 மார்கழி முதல் நாளில்
வெள்ளை அம்பாசடர்  டாக்சியில்  தொடங்கியது:)
அப்போது  சேலத்தில் இருந்தோம்.
ஒரு நாளைக்கு 150 மைல்கள் பயணித்து,கோயம்பத்தூர்,
ஊட்டி, மைசூரு, பேலூர், தலைக்காவேரி
 சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி,
ஸ்ரீரங்கப்பட்டணம், ரங்கண்ணா திட்டு பறவைகள் சரணாலயம்,
கிருஷ்ண ராஜ சாகர், பிருந்தாவன் கார்டன்ஸ்,

1000 மைல்கற்கள், நடுவில் சிறுத்தை பயம், உடைந்த
ஃப்ளாஸ்க், வளைந்து செல்லும் பாதையில்
குழந்தைகள் வாந்தி,
என்றும் தளராத உற்சாகத்துடன் சிங்கம்,
அலுக்காமல் ஆக்ஃபா காமிராவில் படம் 
எடுத்த தம்பி என்ற பயணத்தை நினைவில் கொண்டு வந்தது,

தி.ஜானகிராமன் ஸாரின் ''நடந்தாய் வாழி காவேரி"
அவர் கொடுக்கும் விவரங்களில் 
நானும் இணைந்தேன். நன்றி தி.ஜா சார்.
  Salem to  Coimbatore 100 miles
Coimbatore to  Ooty,  AND Mysore 160 miles  approx?
Mysuru to  Thala kaveri  140 miles
Thala kaveri to   Chikmagaluru 200 miles 
Chikmagaluru to Shimoga
Shimoga to Jog Falls100 miles
Shimoga to Bangaluru  200 miles
Bangaluru to Salem   100 miles.
Hotel Alankar CBE.


Ooty Dodda betta peak.

 தலைக்காவேரி

எப்பொழுதும் வேலை மும்முரத்திலேயே
இருக்கும் சிங்கத்துக்கு லீவு எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அந்த வருட காலண்டரில் இருந்த 
ஹலிபேட் சிற்பங்கள்  ...அவற்றை எல்லாம்
காண வேண்டும் என்ற உற்சாகத்தைத்
தூண்ட, சட்டென்று 

''பயணம் செய்ய வேண்டும்''
என்ற முடிவை எடுத்தார். 
அந்த சமயத்தில் பெரிய தம்பி எங்களைக் கண்டு
போக(!)   சேலத்துக்கு ஐ ஐ டியிலிருந்து வந்திருந்தான்.
அவனிடமும் என் பெற்றோரிடமும் சம்மதம்
வாங்கிக் கொண்டு  பயணத் திட்டம் போட்டார்.

   அஜந்தா புக் செண்டர்
 புத்தகக் கடையில் 
கர்னாடகா  map   வாங்கி வந்தார்கள்.    தொடருவோம்.






Wednesday, March 09, 2022

பகவத் கீதை....


வல்லிசிம்ஹன்

[12:08 AM, 3/5/2022] Subha.: இந்துக்களின் புனித நூலான "பகவத்கீதை" கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

👇👇👇👇👇👇👇👇👇
**********
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
**********
2. தேவைக்கு செலவிடு.
*********
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
************
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
*********
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
**********
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
**********
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
*********
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
**********
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
**********
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
*********
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
*********
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
*********
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
**********
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
*********
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
*********
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
*********
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
**********
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
*********
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
*********
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
*********
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
*********
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.
**********
23. எனவே, கொடுக்க  நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
**********
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
*********
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
*********
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
*********
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
**********
28. நண்பர்களிடம் அளவளாவு.
**********
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
*********
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
*********
31. வாழ்வை கண்டு களி!
*********
32. ரசனையோடு வாழ்!
*********
33. வாழ்க்கை வாழ்வதற்கே!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

34. நான்கு நபர்களை புறக்கணி!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மடையன்
🌹சுயநலக்காரன்
🌹முட்டாள்
🌹ஓய்வாக இருப்பவன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹பொய்யன்
🌹துரோகி
🌹பொறாமைக்கைரன்
🌹மமதை பிடித்தவன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹அனாதை
🌹ஏழை
🌹முதியவர்
🌹நோயாளி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மனைவி
🌹பிள்ளைகள்
🌹குடும்பம்
🌹சேவகன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸!

🌹பொறுமை
🌹சாந்த குணம்
🌹அறிவு
🌹அன்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹தந்தை
🌹தாய்
🌹சகோதரன்
🌹சகோதரி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

40. நான்கு விசயங்களை குறை!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹உணவு
🌹தூக்கம்
🌹சோம்பல்
🌹பேச்சு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹துக்கம்
🌹கவலை
🌹இயலாமை
🌹கஞ்சத்தனம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மனத்தூய்மை உள்ளவன்
🌹வாக்கை நிறைவேற்றுபவன்
🌹கண்ணியமானவன்
🌹உண்மையாளன்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
43. நான்கு விசயங்கள் செய்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹 தியானம், யோகா   🌹நூல் வாசிப்பு
🌹உடற்பயிற்சி
🌹சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 
எந்நாளும்  நலமாக வாழ,,வாழ்க்கை வளம் பெற "பகவத் கீதை"யை கடை பிடியுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

🚩🚩ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳 பாரத் மாதாகி ஜெய்🇮🇳வந்தேமாதரம்🇮🇳🚩🚩

என்றும் தேசப்பணியில்,

அன்பின் தங்கை திருமதி சுபா அனுப்பிய செய்தி.




Tuesday, March 08, 2022

இனிய மகளிர் தின வாழ்த்துகள் 8/03/2022

பாடலைக் கேட்க முடியாவிட்டால் நேரே யூடியூபுக்குத் தான் போக வேண்டும்:)


வல்லிசிம்ஹன்
அனைவரும் நலமுடன் இருப்போம்.

முன்னேறிக் கொண்டிருக்கும் பெண் உலகத்தில் 
இன்னும்  சுய நம்பிக்கை,
எச்சரிக்கை, தற்காப்பு என்று நம் மட்டும்
என்ற அளவில் நிற்காமல்
சுற்றி இருக்கும் மகளிரையும் கவனித்து
வெற்றியை நோக்கி நடைபோடுவோம்.

வாழ்க மங்கையர் நலம்.

Monday, March 07, 2022

இப்போது டவுனில் இருக்கிறோம். 5/3/2022

   கிளம்பும்போது எடுத்த படம். இரவினில் 
கலகலத்த வீதி ஞாயிறு காலை தூங்கிக் கொண்டிருந்தது:)

















இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே சென்று
   வந்தோம்.
பேரன்  இந்த ஊரின்   down town Chicago அலுவலகத்தில்
வேலை செய்வதால் அங்கேயே 
   100 yaards தூரத்தில் வீடெடுத்து இருக்கிறான்.
வார இறுதிகளில்
 வீட்டுக்குவந்து விடுவான்.
இந்த வாரம் சிறிய பேரனுக்கும் இரண்டு நாட்கள்
 அதிக லீவு கிடைத்ததும் கிளம்பி விட்டோம்.

சொல்வது சுலபம்.
ஏற்பாடு செய்ததெல்லாம் மகள் தான்.

ஒரு   air mattress ஆறடிக்கு ஆறு  அகலத்தில்வாங்கியதிலிருந்து,
இரண்டு நாட்கள் அங்கே ,
எல்லா வேளை சாப்பட்டுக்கும் வழிசெய்து,
சின்னப் பேரன் உதவியோடு 
பெரிய பெரிய பைகளில் போர்வை, தலையணைகள்
என்று அடைத்து
வண்டியில் ஏத்தும் வரை அவளுக்குத் தான் வேலை.


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும். உயர உயரமாகக் கட்டிடங்கள். 100 தளங்கள் அதற்கும் மேலே
என்று இருந்தன.
பேரன் இருக்கும் இடம் 40 மாடிக் கட்டிடம். 
அதில் 38 ஆவது மாடிக்கு 38 நொடிகளில் 
சென்று விட்டோம்.

சகல வசதிகளும் அந்தச் சின்ன அபார்ட்மெண்ட்டில் இருந்தது.
சமைக்க,துவைக்க,பொருட்களை, துணிகளைப்
பத்திரப் படுத்த அடுக்கி வைக்க என்று நிறைய
இடங்களும் அலமாரிகளும்.

அறையின் ஒரு சுவர் கண்ணாடியால் ஆனது.
அதருகே உட்கார்ந்து விட்டால் பொழுது போவதே 
தெரியவில்லை.
ஒரு வேளைக்கு பீட்சாவும்,
மற்ற வேளைகளுக்குத் தோசை மாவு, சப்பாத்தி, குழம்பு,
கொத்தவரங்காய்க் கறி என்று கொண்டு போயிருந்ததால்
வேலைத் தொந்தரவு இல்லை.:)

இணையம் கொஞ்சம் கிடைக்கவில்லை.
அத்தனை பேருக்கும் கணினியில் வேலை
இருந்தது.
நான் வெறும் வாட்ஸாப்புடன் நிறுத்திக் 
கொண்டேன். இனிதான் வலைப்பக்கம் வரவேண்டும்.

இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தது.
எப்போதும் ஒலிக்கும் சைரன்,
ஆம்புலன்ஸ்கள் , தீ அணைப்பு வண்டி, காவல் துறை
என்று இரவு முழுக்க ஒலிகள் தான். நாம்
ஒரு நவீன நகரத்தில் இருக்கிறோம்
என்று நினைவூட்டின.


Thursday, March 03, 2022

தமிழுக்காகச் சில பாடல்கள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
தமிழைக் கடித்துக் குதறும் சில பேச்சாளர்களைக் கேட்க நேர்ந்தது.
நாம் என்ன சீத்தலைச் சாத்தனாரா:(
பதிவில் புலம்பத் தான் முடிகிறது.

தமிழ் தமிழ் என்று வாய்ச்சொல் சொல்லியே
மொழியைச் சிதறடிப்பவர்களை
அந்தத் தமிழன்னை தான் கவனிக்க வேண்டும்.
   
  இங்கே பாடி இருப்பவர்கள் கே ஆர் ராமசாமி.
நடிப்பிசைப் புலவர் என்று பெயர் பெற்றவர் மற்றும் தெலுங்கைத் தாய் மொழியாகக் 
கொண்ட பானுமதி.

தமிழ் நாடக மேடைகளில்  தமிழ் பேசிப்   பின் திரை உலகுக்கு வந்தவர்.
இசை கொடுத்தவரும் உயர்ந்த மனிதர்.

இனிமையையே கேட்டு வளர்ந்ததால் 
வேறு தமிழ் நல்ல வேளையாகக் காதில் விழவில்லை.


தமிழ்ப் பாடகர்கள் சொல்லைச்

சிதைக்காமல்
பாடியதால்     உள்ளங்கள் இன்பம் அடைந்தன.
அப்படிச்  சில பாடல்களைப் பதிகிறேன்.
பழமை விரும்புவதால் தவறேதும் இல்லை:)

சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர் மஹாலிங்கம்,
எஸ் வரலக்ஷ்மி, ஜிக்கி, ராஜா, சுசீலா அம்மா, டி எம் சௌந்தர ராஜன்,
திருச்சி லோகனாதன், சி.எஸ் ஜெயராமன்,ஜானகி அம்மா,பி.லீலா,
பாடும் நிலா பாலு என்று நம் எஸ் பி பி
எல்லோருமே தமிழை இசையை வளர்த்தார்கள்.

  மதுரை மீனாக்ஷியும் சொக்கனும் நம் தமிழைக் காக்கட்டும்.









Wednesday, March 02, 2022

நினைவெல்லாம்....மகிழ மட்டுமே.


         1966  ஏப்ரல்  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    ஏப்ரில்  மாதம்  வந்தது.  சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்தது.   சேலம்   இதுவரை போகாத ஊர்.    எப்படி இருக்குமோ தெரியாது. அதற்குள்   சென்னையிலிருந்து மாமனாருக்கு  உடல் நலம் சரியில்லை  என்றும்  இருவரையும் உடனே புறப்படச் சொல்லித் தொலைபேசி அழைப்பு வந்தது.                                                                                                                                                                                                                                                                           ரயில்   டிக்கட்கள்  வாங்கி  வந்துவிட்டோம். மாமனாருக்குக் கழுத்தில்  ஏதோ கட்டி வந்து  அறுவை சிகித்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.           அது  வேறுவிதமாகத் திரும்பலாம் என்ற ஐயத்தில்  இவரை அழைத்திருக்கிறார்கள்.                                                                                                                                                                                                                                                            நாங்கள் சென்ற அடுத்த நாள்  ஆபரேஷன்.    மாமியார் மாமனாரோடு    அடையார் கான்சர் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். கூடவே  இவரும்.   அவ்வளவு பெரிய வீட்டில்    நானும் பாட்டியும் தாத்தாவும் தான்.  மாடிப்படி வளைவில்  ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அதன் உட்புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு   வெளியே  தொலைவில் தெரியும் சாலையைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.                                                          நான்கு மணி நேரம் கழித்து  அழைப்பு வந்தது.   ஒரு பெரிய கிரிக்கெட்  பந்து அளவில் கட்டி எடுக்கப் பட்டதாகவும்                ஆனால் அது கான்சர் கட்டி இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆஜிப் பாட்டி பகவான் சந்நிதியில் விளக்கேற்றி    வணங்கினார். எதற்குமே அஞ்சாத  பெண்மணி. கலங்கியதை அப்போதுதான் பார்த்தேன்.                                                                                                                                                               ஆள்கட்டு,வண்டி என்று எதற்கும் குறைவில்லாத நாட்கள். வாழ்வில் ஏதாவது தவறு நடந்துவிடப்போகிறதே என்று பயந்த தாயாக இருந்தார்.           அடுத்த இரண்டு நாளில் இவர்     புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.    பாட்டி அவள் இங்கே இருக்கட்டும். நல்ல சாப்பாடே   சாப்பிடுவது இல்லை போலிருக்கே.என்னடா பாத்துக்கறே அவளை  என்று செல்லமாக அதட்டினார்.    அவள் சாப்பிடுவதே இல்லை ஆஜி. நான் எப்ப வேலையை முடிந்து வருகிறேனோ அதுவரை  பட்டினிதான்      என்று சிரித்தவண்ணம் சொன்னவரை.,எல்லாம் தெரியும்டா  இப்போதைக்கு ஐந்து மாதத்துக்கு உண்டான    பூச்சூட்டல்,புடவை வாங்கிச் செய்யவேண்டியதைச் செய்து அவள் பாட்டியோட அனுப்புகிறேன் என்றார்,. அடுத்த வாரம் வரட்டுமா. நானே கார் கொண்டுவந்து கூட்டிப் போகிறேன்     என்ற பதில் வந்தது.   ம்ஹூம் சொன்ன பேச்சைக் கேளு. கிளம்பற வழியைப் பாரு. அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்க அப்பா வீட்டுக்கு  வந்துடட்டும்.  அப்புறம் பார்க்கலாம் என்றதும்  இவர்  முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும்.                          மாடியில் அறையில் அவரது பெட்டியை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இறங்குபவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.   என்னம்மா நான் இல்லாமல் இங்க தைரியமா இருப்பியா என்று கேட்டார்.     ம்ம்ம் இருப்பேன். நீங்க பத்திரம் என்றவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். என்ன  அம்மா பாடு ஜாலி போல இருக்கே.   சமைக்க    வேண்டாம். ஊஞ்சலாடலாம். பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு நினைப்பா......சரி சரி இரு.  நாந்தான் வருவேன். யாரோடயும் நீ கிளம்பவேண்டாம் என்று புறப்பட்டார்.  டாக்சி வந்து ஏறிச் செல்பவரைப் பார்த்து   எனக்கே கஷ்டமாக இருந்தது,. அதற்குள் தாத்தா வாசலுக்கு வந்து    புருஷா ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது  என்று அதட்டும் குரல் கேட்டது. அவசரமாக     நகர்ந்து ஊஞ்சல்  கூடத்துக்கு வந்துவிட்டேன்.                                                                                                                                                                                                                                       ஒரு வாரத்தில் மாமாவும் வீட்டுக்கு வந்துவிட்டார்.  பாரிஜாதத்துக்கு என்று தனியாகத் தறி போடுபவர் முத்துச் செட்டியார். அவரிடம் சொல்லி   கறுப்புக் கலந்த நீலப்  புடவை   அழகான நட்சத்திரங்கள்   பதித்த  புடவை சொல்லி  அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.  ஒரு நல்ல நாள் பார்த்து  புரசவாக்கத்துக்குத் தொலைபேசிப் பாட்டியிடம் செய்தி  சொன்னார்  மாமியார்.                                                                                                                                                                             பாட்டியும் நல்ல திரட்டுப் பால்  கிளறி மாமாவிடம் அனுப்பினார். சுலபமாக     அந்த வீட்டுப் பெண்கள் பத்துப் பேரை அழைத்து   ஒரு நாள் சாயந்திரம்      அந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு    கோவிலும் போய் வந்தாச்சு,.   அதற்குள் புதுக்கோட்டையிலிருந்து நான்கு தடவை ஃபோன் வந்தாச்சு.     இன்னும் கிளம்பவில்லையா. சிநேகிதனோட திருமணம்  இந்த மாதக் கடைசியில் வருகிறது. நான் வரப் போகிறேன். என்னோட திரும்பி வந்துவிடு என்றார்.     நாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நான் ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல , பின்னால் ம்க்கூம் என்ற மாமாவின் கனைப்புக் குரலில் நான் விழித்துக் கொண்டேன்.                                        தேவ் சாப்  பேசி முடிச்சுட்டாரா. இல்ல நீ ஃபோன்   வழியாகவே ஊருக்குப் போகிறாயா  என்றார்.    ஒரே  கூச்சமாகி விட்டது.  ஒரு வழியாகத் தோழனின்  திருமண நாளுக்கு முதல் நாள் வந்தார்.   நாளை சாயந்திரம்   ரயில் டிக்கட் வாங்கி வந்தாச்சு.    உனக்குப் பட்டுப் புடவை கூடக் கொண்டுவந்திருக்கிறேன். என்று எங்கள் திருமணப் புடவையை எடுத்துக் காட்டினார்.                                                    எத்தனை முன்னேற்பாடு என்று சிரிப்பே வந்தது.                         அப்புறம் அடுத்த நாள் கிளம்பி  புதுக்கோட்டை வந்து  இரண்டு வாரங்களில் சேலத்துக்குக்  கிளம்பினோம்.:)


மைசூர் பாக்கும் மற்றவர்களுக்கு.
பக்கம் வராதே பற்றிக் கொள்வேன் என்னும் சர்க்கரை:))))


  '' நீ இல்லாத உலகத்திலே  நிம்மதி இல்லை. உன் நினைவில்லாதஇதயத்திலே சிந்தனை இல்லை.''
  


 நீ வேண்டும் என்று நினைத்தபிறகுவாழ்வில் வேறெது வேண்டும்..