Showing posts with label புயல்''ஜல்''. Show all posts
Showing posts with label புயல்''ஜல்''. Show all posts

Sunday, November 07, 2010

பொசல் வருது:)




''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.

செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,கொத்துக்கடலை அரைக்கிலொ,

பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்

எல்லாம் நிறைய

வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.



அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!



ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,

நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொனிருக்கும்போதே

மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.

வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ

வரும் சாரலை அனுபவத்தபடி, தன் ஈசிச்சேரில் சாய்ந்தபடிக் கையில் இருக்கும்

கருங்குயில் குன்ற கொலையை நான்காவது தடவையாக ரசித்துப்

படித்துக் கொண்டிருப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,நறுக்கி,

உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துப் பிரட்டித் தடவிய

பச்சை ஆப்பிள் துண்டுகளும் இருக்கும்.



பக்கத்திலியே எங்கள் பசங்களும்,அவர்கள் தோழிகள் தோழர்கள்செஸ்,காரம்போர்ட்

விளையாடிக் கொண்டும் மாடிக்கும் கீழுக்குமாக

ஓடி விளையாடிக் கொண்டும் இருப்பார்கள்.

இரண்டு நாட்கள் முழுவதும் ஒருதடவை மின்சாரம் இல்லை. 1977 என்று நினைக்கிறேன்.



மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர்

இறைத்தது நினைவில் வருகிறது.!



இந்தத் தடவை ஜல்'' சூறாவளி ஏழைகளை வாட்டாமல், யாரையும் நோகடிக்காமல்

உலகம் நலம் பெறப் பெய்துவிட்டுப் போக வேண்டும்.
Posted by Picasa

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...