Blog Archive

Monday, April 29, 2013

பரிசோதனைப் பதிவு


நான்நேற்று
பப்ளிஷ் செய்த   பதிவு என்னுடைய ரீடர்ஸ் லிஸ்ட்லயே அப்டேட்

ஆகலை.அதனால்

இந்த வரிகள் வருகின்றான.
இன்று ஏப்ரில் 29 ஆம் தேதி.
காலை வேளுக்குடி விஜய் டிவியில் பேசிக்கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து   ஜோஸ்யம் சொல்லும் நிகழ்ச்சி.

அநேகமாக மீனராசிக்கு வயிற்றுக் கோளாறு இருக்கும் என்று சொல்வார்.
அதுவரை சரியாக இருந்த உடம்பும் எனக்கு

ஏதோ சரியா இல்லை போலிருக்கேன்னு  முணுமுணுக்கும்:)
பத்துமணிக்கு  மின் வெட்டு. பனிரண்டு மணிக்கு வரலாம். வராமயும் இருக்கலாம்.
ஏதோ  சீராக்கும் வேலை நடக்கிறது.

நடுவில் வரும் தொலைபேசி அழைப்புகள் உங்களுக்கு எம்ஜிஆர் பாட்டு  இலவசமாக வேணுமான்னு கேக்கும்.

சரி !இந்தப் பரிசோதனை வெற்றி பெறுகிறது என்றே வைத்துக் கொள்ளலாம்.

எல்லோரும் உடல் நலனோடு சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, April 28, 2013

2009 இல் இட்ட பதிவு.இப்பவும் இதே.




































































எதற்கு இவ்வளவு குழப்பம்??

எல்லாம் ஒரு பெயரால் வந்ததுதான்.


சிறு வயதிலிருந்து முகங்களை நான் மறப்பதில்லை. ஆனால் பெயர்கள்??
அது பெரிய விஷயம்.:)

சரி, பத்து வயதில் நாலைந்து தோழிகள். நினைவில் நிற்கும் நபர்கள். பேய்க்கதைகளிலிருந்து, கல்லா மண்ணாக் காலங்கள் வரை
ஒன்றாகக் கழிந்த காலங்கள். யாரையும் மறக்கவில்லை.
அதற்கப்புறம் 18 வயது சினெகிதிகளையும் மறக்கவில்லை. இன்னும் சில நண்பிகளோடு கடித அளவிலாவது நட்பு தொடர்கிறது.

மறதி, ஒருத்தருக்குப் பதிலாக இன்னொருத்தரைச் சொல்வது ,
எங்கள் குழந்தைகள் வளர்ந்து அவர்களுடைய தோழர்கள், தோழிகள்
வர ஆரம்பித்ததும்தான் குழப்பம் ஆரம்பித்தது.

அது என்னவோ சொல்லி வைத்த மாதிரி 'சாந்தி'ல மூணு, 'சரவணன்'ல ரெண்டு, செந்தில் நாலு, கார்த்திக் ரெண்டு ,சம்பத் ரெண்டு என்று
போய்க் கொண்டிருந்தது.

பெண்ணின் தோழிகள் பற்றிக் கூட கவலை இல்லை. கூட்டமா வரும் ஒருத்தருக்கொருத்தர் அழைத்துப் பேசிக் கொள்வதிலிருந்தும் கேட்டுச் சமாளித்து விடுவேன்.

பத்துவருடங்கள் கழிந்து மயிலை மாட வீதிகளில் ஹலோ அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்னும் போது இது முத்து லட்சுமியா, பாமதியா,சௌம்யாவா என்று திணறிவிடுவேன்.

நல்ல வேளையாகக் கைகளில் குழந்தைகள் வைத்திருப்பார்கள்.
'அடச் செல்லமே எத்தனை வயசாகிறது. எல்லோரும் சுகமா'' என்று விசாரித்து விட்டு,பெண்ணின் குடும்ப விஷயங்களை நலங்களைச் சொல்லிவிட்டு 'வரேண்டா' அப்புறம் பார்க்கலாம்.'' என்று
சந்தோஷமாக நகர்ந்து விடுவேன்.

மாட்டிக் கொள்வது பெண் இந்தச் சந்திப்பை இமெயிலில் அந்தப் பெண்ணுடன் சம்பாஷித்த பிறகு,
''ஏம்மா வசுமதியைப் பார்த்தியாமே, என்னிடம் சொல்லவே இல்லையே''
என்பாள்.
ஓ, அது வசுமதியா. மறந்துவிட்டது, அவளுக்குத் தானே அக்கா கல்யாணத்தின் போது சூறைக்காற்று அடித்து இலையெல்லாம் பறந்ததே''
என்று சொன்னால் பெண் தலையில் கைவைத்துக்கொள்ளுவாள்.

''கடவுளே!! அவளிடம் அதைக் கேட்டியா. அது ஸ்ரீவித்யா மா''
என்பாள்.
என்னை அவ்வளவு இங்கிதம் தெரியாதவளா இந்தப் பொண்ணு சொல்கிறதே என்று யோசித்துவிட்டு, ''இல்லையம்மா , அவ அம்மா நியுசிலாந்திலிருந்து வந்து விட்டாளான்னு கேட்டேன்.'' என்பேன்.

அது வெறும் வித்யா. ..'ஒண்ணு பண்ணும்மா.நீ குடும்பமெல்லாம் விசாரிக்காதே. என் விஷயம் பற்றிக் கேட்டாச் சொல்லிவிட்டு ஃப்ரியா விடும்மா'' என்பாள்:)))

பெண் விஷயம் எப்படியாவது சமளித்து விடுவேன்.
இந்தப் பசங்க விஷயம் தான் என்னைப் பல இடர்களில் மாட்டி விட்டிருக்கிறது.

இரண்டு பேருக்கும் முருகனுடைய எல்லா நாமங்களிலும் தோழர்கள் உண்டு. இவனுக்கு ஒரு செந்தில் விஸ்காம் படித்தவன்.
அவனுக்கு ஒரு செந்தில் விவேகா தோழன்., இன்னோருத்தர் பாரதிதாசனில் எம் பிஏ சிநேகிதன்..அதைத்தவிர ஆத்மார்த்தமா வசந்தராஜ்னு ஒரு தோழன் .அவனும் விஸ்காம் லயோலாவில் படித்துவிட்டு மும்பைக்குப் போனவன். கார்த்திக்,சரவணன்,ஷண்முகசுந்தரம்,சிங்காரவேலன்.......
சாமி.. கடவுளே..

இந்தப் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் காலங்களிலும்,அதற்குப் பிறகு சென்னையில் வேலைக்குப் போகும்போதும்,
தொலைபேசியில் அழைப்பு வரும்போது தவித்துப் போய் விடுவேன்.
''அம்மா நான் செந்தில்மா. தலைவர்.........இருக்காரா..... மா''
இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கேட்டால் என்ன சொல்வது:)
''
விருதுநகர்ல இருந்து எப்ப வந்தப்பா. அம்மா அப்பா சௌக்கியமா''ன்னு கேட்பேன்.
அவன் நல்ல பிள்ளை. நீங்க சொல்றது செந்தில் குமார்மா. நான் சென்னைதான் .என்பான்.
அப்போ நீ பெரியவனைக் கேக்கறியான்னு துப்பறிவேன்..
ஆமாம்மா, கூப்பிடுங்க என்று சிரிக்கும் அந்தப் பையன்.

இதெல்லாம் பெரிய விஷயமில்லை. கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், பெண் பெற்றவர்கள், ஆண் குழந்தை பெற்றவர்கள் என்று இரண்டு வருடங்கள் தள்ளி வந்த பிரச்சினைகள் என்னைப் பயங்கரக் குழப்பத்தில் தள்ளிவிட்டன. அந்தக் கதை அப்புறம்:)



இதைத்தவிர ........
**************************8

இதன் தொடர்ச்சி இந்தப் பதிவு....
***********************************88


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள் நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில ரேஸ் எல்லாம் ஓடுவியே.கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...
இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.
''
''
அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், ஆஹா இவந்தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும். '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று, வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள் இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாம்னார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''
''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''
எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)

















எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழவேண்டும்




































































































































































































































































































































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.




























































Saturday, April 27, 2013

பொங்கிவரும் பெரு நிலவு சித்திரை

அம்மா  பார்த்த நிலாவும் நீதானெ! நீயும் அம்மாதான்.!
வட்ட வட்ட நிலாவே  வழிகாட்ட வந்தாயோ
எத்தனை எத்தனை வர்ணங்கள் உன்னைச் சுற்றி
எட்டி எட்டிப் பார்க்கும் மனம் இன்பம் கொண்டாடுதே
மீதி எப்போது வெளீயே வருவாய் அம்மா
வந்தாச்சு!!
பால்நிலவோ ஒளிவெள்ளமோ  கிரஹணம் விலகிய சந்தோஷமோ
சந்திரனோ சூரியனோ நீ அழகுதான்

 சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும்   பொழிலிலே
என்று    ஒரு   பழைய பாடல்.

நிலவில்  பங்கிட்ட   கனிவுக் கணங்களே அதிகம்.

குழந்தைகளுக்குக் கொடுத்த பால் சோறு.
கொஞ்சம் வளர்ந்த பிறகு குழம்பு சாதம்
தயிரும் பாலும் கலந்து
கதையோடு  குழந்தைகள்   மனத்தை அன்பால் நிறைத்த கணங்களும்

எவ்வளவோ.
இப்போதோ  கையில் காமிராவும் வானில் வெண்ணிலாவும்  மீதி.

முதல்  நாள்   சீக்கிரம் வர மறுத்தாள்.
அடுத்த நாள்  இரவு 9ம்  ஆகிவிட்டது.

சிங்கமோ இருட்டில் வெளியே போகாதே
லைட் போட்டுக்கோ என்றால்
யார்கேட்பது.
கொக்குக்கு ஒன்றே மதி.
வாயில் விளக்கைப் போட்டால் நிலாவின் வெளிச்சம் சரியாகக்
காமிராவில் விழாது.
சுற்றிவர  தெரு விளக்குகள். துணிக்கடைகளின் விளக்குக்கள்.
. நிலவுக்குப்
போட்டியாக செயற்கை வெளிச்சத்தை வாரி இறைக்கின்றன.
எப்படியோ நிலவன்னையைக் கண்டுவிட்டேன்.

என்ன   ஒரு அழகு.பூரண வெளிச்சம்.
வரும் கதிர்களிலிருந்து   வழிந்தோடிய  பால்
நேரே   மனத்தில்  வழிந்தது.

இயற்கைக்கு நன்றி.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, April 25, 2013

உறவுகளும் நட்புகளும்...அழகர் வைகையில் இறங்கி எதிர்சேவை அளித்தார்

அழகா  மீண்டும் வா.காத்திருக்கிறோம்
அத்தை சித்தப்பா மகன்கள்  மகள்
அவர்களின் பேத்திகள்

 கூடியிருந்து குளிர்ந்தது சிலகாலம்.

பிணங்கிப் பிரிந்தது சிலகாலம்.
எப்படி இருந்தாலும்  எல்லோரும் ஒருவரை ஒருவர்
கடிதம் போட்டோ தொலைபேசியோ மகிழ்வது சித்ரா
பௌர்ணமியான இன்று.

பாட்டி வகுத்த  வகையாக  வாழ்த்துகள் சொல்லிக் கொள்வோம்.
எதிர்சேவைக்கு மதுரைக்குப் போகிறேன் என்பாள் ஒருத்தி.
நான் ஜயா தொலைக்காட்சியில்

அலுங்காமல் நலுங்காமல் பார்த்தேன்  என்பாள் ஒருத்தி.
வைகையா  மக்களா!!
கள்ளழகா
வைகையில் இறங்குகிறார்
சுந்தரத் தோளா,
பூக் குடை
ஆண்டாள் மாலைக்காக மதுரை வந்தாயோ
என் மேல்  ஆடி வருகிறான் அழகன்
வரகின்ற வழியெல்லாம் அருள் மழை வாரி இறைத்தாயோ.
வைகையில் தண்ணீரும் மக்களும்

பக்தர்களைப் பார்க்க விரைகிறார்
இதோ  சில படங்கள்
வந்தாரே  மன்னர்




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, April 24, 2013

நேயர்விருப்பம்--தொடர்கிறது,நடந்தது என்ன!!!!!!!!

தங்கியிருந்த  விடுதி
Add caption
க்ரிண்டெல்வால்ட்    கிராமம்
க்ரெண்டெல்வால்ட்  ரயில் நிலையம்
கிராமத்தின் ஓரத்தில்  ஒரு நதிக்கரை
ரயில் காணும் காட்சிகள்

 திரும்பிப் பார்த்தால் மகனின்  சிநேகிதன் செந்தில்.

எப்ப வந்தீங்க. .இவ்வளவு பேரும் எங்க கிளம்பிட்டீங்க
என்று சிரித்தபடி கேட்டான்.
க்ரெண்டல்வால்ட் போறோம்பா. 3 நாட்கள் அங்க  ஹாப்பிடேஸ் விடுதியில்
தங்கல்.
யுங்fஃப்ரௌ   சிகரம்  பார்க்கப் போறோம்.
பேசியபடியே திரும்பினால்  எந்த எஸ்கலேட்டரில் இறங்குவது என்று தெரியவில்லை.


(ஆமாம் கீதா....ப்லாட்ஃபார்முக்கு  இறங்கவும்  எஸ்கலேட்டர்தான்:(  )
8 ஆம் நம்பரா , 9 ஆம் நம்பரா.
எல்லாரும் எங்க போனாங்க.

செந்தில் நான் இறங்கவேண்டிய ப்ளாட்ஃபார்ம் எதுன்னு தெரியலையே என்றதும்,
அம்மாஆஆஆஆஆஆ
என்று கன்றின் குரல் கேட்டது.
ஆரம்பமே ரம்பம்னு சின்னவன் நினைத்திருப்பான்.

டேய் செந்தில் அம்மாவைக் கீழே 6ஆம் நம்பரில் இறக்கிவிடுடா, ரயில் கிளம்பப் போகிறது என்று சத்தம் போட்டான்.
சாரி ஆண்ட்டி,வாங்கன்னு என் கையைப் பிடித்துப் பத்திரமாக
இறங்கவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.


ஐய்யோ. என்னடா இது என்று மகன் முகத்தைப் பார்த்தேன்.
அந்த ட்ரெயின் இல்லம்மா
இந்தப் பக்கம் பாரு. மெள்ள நடந்து  இந்த ரயிலில் ஏறு
என்று மறுபக்கத்தைக் காண்பித்தான். பாட்டி வா என்று பேத்தி
கை காண்பித்தது.

ஒரு பக்கம் இறங்கினால் இரண்டு  பக்கமும்  ரயில்பாதை இருக்கும்.
 ஒன்று தெற்கே போனால் மற்றொன்று வடக்கே போகும்.
அழகா மேலே ரயில் புறப்படும் நேரம்,போகும் இடம்,அடுத்த ஸ்டேஷன் எல்லாம் எலெக்ட்ரானிக் போர்ட்  இருக்கும்.
எந்த அசடும் மிஸ் பண்ண முடியாது.!!!!!
நாந்தான்  மிஸ் பண்ணினேன்

அந்த ஊர்க்குளிரிலும் வியர்த்தது எனக்கு.
''உன்னை விட்டுட்டு நாங்க போகமாட்டொம்மா'என்று என் தலையைத் தட்டினான்  சின்னவன்.

மாமிக்குக் கால் சரியில்லை  இல்லாவிட்டால் முதலிலேயே வந்திருப்பார் என்று சம்பந்தி சமாதானம் சொன்னார்.

பக்கத்துல தூண் ஏதாவது இருந்தால் முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது. :(
முதல்ல  அந்த   sak bag  (என் கைப்பையைத்தான் சிங்கம் வர்ணிக்கிறார்.)
கீழ வை. ஒய் டோண்ட்  யூ ட்ராவல் லைட்?
நான் பணம் வைத்திருக்கிறேன். ஹரி வைத்திருக்கிறான். அதையும் மீறி உனக்கு இவ்வளவு பெரிய ஹாண்ட்பாக் எதுக்கு.
அதுவே உன்னைக் கீழே தள்ளிவிடும்.


அப்பா. அம்மாவோட மெடிசின் பூரா  அதிலதான் வைத்திருக்கிறார். நான்கு
நாட்களுக்கு வேணும் இல்லையா....இது  மகன்.

அம்மா  காலை நீட்டிவைத்துக் கொள்ளுங்கள் கால் வீங்குகிறது
இது மருமகள்!

பாட்டி ஷூவை அவுத்துடு.கால்வலிக்காது இது பேத்தி.

இதெல்லாம் மென்மையாகப் பார்த்தபடி மருமகளின் அம்மா.

என்னம்மா  சொன்னான் செந்தில்?நிலைமையை  சமாதான லெவலுக்குக் கொண்டுவர மகன் முயற்சி.

அவன் குழந்தைகளையும் மகனையும்  எப்போ அழைத்துவரப் போகிறான்னு கேட்டேன். அதற்குள் நீ கூப்பிட்டு விட்டாய்.

மகன் அப்பாவைப் பார்த்தான். ஹாட்ஸ்  ஆஃப்  அப்பா.

பெயரைச் சரியாகச் சொன்ன அம்மாவுக்கு

அவன் பிரம்மச்சாரி.
திருமணமானவன் இங்க இல்லை.இந்த விவரம் நினைவில் இல்லை.

எப்படிப்பா அம்மாவை ஹாண்டில் பண்றே.

என் ஃப்ரண்ட்ஸ்   வரும்போது அம்மா காஃபி மத்திரம் கொடுப்பாள். உள்ளவேலையிருக்குன்னு போய் விடுவாள் என்று பெரிய ஜோக் சொன்னது போல சொல்லவும்
எல்லோரும் சிரிக்க நானும் சிரித்தேன்.

http://naachiyaar.blogspot.in/2009/04/blog-post_25.html
**********************************************

இதைப் படித்தால் நிறைய சிரிக்கலாம்:)










 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, April 23, 2013

நேயர் விருப்பம் ....கதையுடன்(நிஜ சம்பவந்தான்)

Add caption
தாத்தாவை  மிஞ்சி ஓடும்  பாப்பா
Add caption
Add caption
Add caption
Add caption

Add caption
Add caption

 இந்தப் பதிவுடன் சம்பந்தப்   பட்ட    கதை ஒன்று அவசியமாகிவிட்டது:0)

ஏதோ நம்மையே நாம் ரொம்பத் தாழ்த்திக் கொள்ளுகிறோமே
என்று பார்த்தேன். போனால் போகிறது.
சொல்லிவிடுகிறேன்.

ஸ்ரீராம்   ......படித்துப்  பயனடையுங்கள்:)
***************************************

அந்தத் தம்பதிகள்  சம்பவம் இரண்டு நாட்களுக்கு கலகலத்தது..

மேலே  இருக்கும்  ஜெர்மானிய ரயில் நிலையத்துக்கு ஒரு நாள் போய்வந்து எங்கள்   விடுமுறை வாசஸ்தலத்துக்குக் கிளம்பினோம்.

பாசல் நகர ரயில்வேஸ்டேஷன்பெரியதாக இருந்தாலும் அழகாக இருக்கும். சுத்தம்,நேரம்  எல்லாம் ஒழுங்காக் கடைப் பிடிக்கப் படும்.
பிரயாணம் இரண்டு ரயில் ஏறிப் போகவேண்டும்.
எனக்கோ ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அங்கே இருந்தால் தான் பாட்டில் போடு]ம்.
ஆறு பெரியவர்கள் குளித்து, சாத மூட்டைகள், குழந்தைக்கான உணவு, ஸ்னாக்ஸ்,தண்ணீர் பாட்டில்கள்  ,மூன்று நாட்களுக்கான் துணிமணிகள்,ஸ்வெட்டர் ,கோட்  எல்லாம் எடுத்துக் கிளம்பும்போது மணி 10.
10.20க்கு  ரயில் புறப்பட்டு விடும்.
எல்லோரும் அவசரமாக ட்ராம் ஸ்டேஷனை அடைந்து அங்கு வண்டியைப் பித்துப் பின் ரயில் நிலையத்தை அடைந்தோம்..
எஸ்கலேட்டர் ஏறி  மேலே போய் அங்கிருந்து சரியான ப்ளாட்ஃபார்முக்கு வரவேண்டும்.

குழந்தையும் ,மருமகளும் அவளது பெற்றோரும் முதலில்  சென்றுவிட்டார்கள். சிங்கத்துக்கு நான்  வேற ப்ளாட்ஃபார்முக்குப் போய்விடப் போகிறேன் என்று பயம்.
வாம்மா.சீக்கிரம்.  என்று மிரட்டினார்.
நானோ ஊருக்குப் போவதற்கு(சென்னையில்)  விழுந்து  கால்சுளுக்கியிருந்தேன்.:)
அஸ் யூஷுவல்!!!

தோவரேன் தோவரேன்  என்று சென்றவளை,
யாரோ ஹை ஆண்ட்டி  என்று கூப்பிட்டும் குரல் கேட்டது.
மீதி அடுத்த பதிவில். ஓகேயா ஸ்ரீராம்?   



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, April 22, 2013

சிரிப்புதான் வருகுதையா சிலமனிதரைக் கண்டால் 2008 ஸ்விஸ் பயணத்தில் ஒருநாள்

வெள்ளமே   எங்களை மகிழ்விக்க வாராயோ
கோடைக்கு ஏற்ற விளையாட்டுத் திடல்
ஒற்றுமையாக இருக்கத்தான் இந்தக் கொடி
ஒரு பண்ணைவீடு
அம்மம்ம்மா   குளிர்






Friday, July 25, 2008

சுவிட்சர்லாந்து வந்தோம்தோம்.

பசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,.
 அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான

வரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.

மகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன்.
அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.

என்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம்.
 முடிந்த வரை

செய்வோம்னு சிரித்தேன்.

எனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.

மகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான்.
அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே.
சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)

நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும்
பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)

நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.

வழக்கம்போல்(சதங்காவைச் சொல்லலைப்பா)

பாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும்
 ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.

மழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன்.
 ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும்.
தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.

நம்ம கவலை நமக்கு:))

. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா.
 இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.

அவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள்.
எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு
 வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு

இடம் ரிசர்வ் செய்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு.
அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு
 சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.

மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)

அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!

கொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு ,
ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம்.
சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு,
பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம்.
 வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.

இருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்

பிடித்து உட்காரப் போன போது:)

டிராம் ப்ரேக் போட்டது.

ஒரே ஒரு குலுக்கல் அடுத்த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது
 யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.

ஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி
என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.

அப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

ம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.

இதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால்
அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்!!

அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு

மார்ச் செய்து இறங்கி விட்டார்கள்.

அவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,

என்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன்
எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.

என் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.

ஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.

தே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.

அதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி

அவர் தலையை வேற தட்டறே.

மோசம்பா இந்த அம்மா.

பெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு

சிரிக்கிறான்.

தீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு
 நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும்
 இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து
 சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று
என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))

இன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி.
''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்