Showing posts with label interesting bloggers. Show all posts
Showing posts with label interesting bloggers. Show all posts

Tuesday, August 04, 2009

உங்கள் எழுத்து சுவாரஸ்யமானது



வலையில் வலம் வந்து கொண்டிருக்கும் எண்ணில்லாத விருதுகள்,
வலைத்தளம் எவ்வளவு மாறிவிட்டது என்று பறை சாற்றுகிறது.
 
முன்பு விளையாடிய,ஆறு,எட்டு,பத்து எண்கள் தொடர் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி நம்மை,
நாமே சுய சிந்தனைக்குள் மூழ்க வைத்துக் கொண்டு அலசி எடுத்த சில பார்வைகளை,
மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுத்தோம்.
இப்போது பல இளைஞர்களும்,கணினித் துறை சேர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களும்
தமிழ்மணத்தில் சூறவளி வேகத்தில் எண்ணங்களையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொடு வருகிறார்கள்,
கவிநயா எனக்கு அன்புடன் வழங்கிய இந்த சுவாரஸ்யம் மிகுந்த விருதை எனக்குத் தெரிந்த சில என்னை விட சுவாரஸ்யமாக படைப்புகளை அளித்து வரும்
சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
 
உஷா ராமச்சந்திரன்....நுனிப்புல் பதிவு
**********************************************************
நல்ல தெளிவான சிந்தனைக்கு உரியவர்.
சமுதாய நலனில்,அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
மிகவும் கவனம் வைத்து எழுதுபவர்.
***********************************************************

மதுமிதா.
******************
காற்றுவெளிக்குச் சொந்தமானவர். கவிதாயினி,சமூகப் பொறுப்பு மிக்கவர்.
பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சேவை செய்பவர்.
நல்ல எழுத்துக்கும் , பல புத்தககங்களை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர்.
****************************************************************************

ஒலிக்கும் கணங்களுக்குச் சொந்தமான நிர்மலா.

***************************************************************************
மிகத் திறமைசாலி.முற்போக்குச் சிந்தனையாளர்.
நல்ல படிப்பாளி.
பதிவுலகில் மீண்டும் அவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்பதே என் ஆவல்.

அருணா ஸ்ரீனிவாசன்
*********************************

அலைகள் தளத்துக்குச் சொந்தமானவர்.
பொருளாதாரத்தில் பெரிய அளவில் படித்தவர்.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்பவர். அடக்கம் அவரது முதல் பண்பு. அவருக்கும் இந்த விருது
மிகப் பொருந்தும்.
**************************************************************

துளசி கோபால்.

**************************
துளசிதளத்துக்குச் சொந்தக்காரர்.
இவருக்கு எல்லாம் அறிமுகம் தர நமக்கு ஞானம் போதாது.
வலையுலக வரலாற்று ஆசிரியை.
தொடாத சப்ஜெக்ட் கிடையாது.
தெரியாத விஷயம் கிடையாது.
இவரைவிடச் சுவாரஸ்யமானவர் யாரும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.

ஆறாவதாக நான் விருது கொடுக்க நினைப்பவர் நானானி.

***************************************************************************************
நைன்வெஸ்ட் தளத்துக்குச் சொந்தக்காரர்.
யாராவது இவருக்கு இதற்குள் இந்த விருதை அளித்திருப்பார்கள்.
இருந்தாலும் நானும் பகிர்ந்து கொண்டேன் என்கிற பெருமை வேண்டுமே.:)
சகலகலாவல்லியான நானானிக்கும் இந்த விருதைப்
பங்கிட்டுக் கொள்கிறேன்.
நீங்களும் உங்களுக்குச் சுவாரஸ்யமாகப் படும் ஆறு நபர்களுடன் விருதுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற'வேண்டுகோளோடு
என் நீண்ட பதிவை முடித்துக் கொள்கிறேன்:)
 





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...