![]() |
| 2007ilஇல் ஏறிய பாதை!!!!!!!!!! |
![]() |
| photo taken from Funicular car |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |





![]() |
| Add caption |


சாதாரணமாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில்,வீட்டை விட்டுக்கிளம்புவது பிரயத்தனம் தான். சின்னவனுக்கோ எங்களை அழைத்துக்கொண்டு வெளியே போக முடியவில்லை என்று யோசனை...... குட்டிப்பாப்பாவுக்கு பெரியவங்களைப் போல வண்டிலப் பிரயாணம் செய்யப்பிடிக்கும்.ஆனால் தன்னோட தள்ளுவண்டில உட்கார்ந்து வருவதுபிடிக்காது.எப்போழுதும்போல்
பார்த்த இடங்களையே பார்க்காமல்
புதிதாக இந்த ஸ்டான்சர் குன்றுகளுக்குப் போகலாம் என்று ஒரு ஞாயிறு காலை கிளம்பினோம்.
லூசர்ன் எனும் நகருக்கு முதலில் போய், பிறகு இந்த மலையேறும் வண்டியைப் பிடித்தோம். வெய்யில் செமை போடு போட்டுக் கொண்டிருந்தது.
மலைப்பாதைப்பயணக் கேபிள் காரில் ஏறி ஒரே அலாக்காகக் கொண்டு போய் விடப்பட்டோம்.
அங்கிருந்து ஒரு அரைமணிநேர ஹைகிங்க். குன்றின் மேல் ஏறி சிகரத்துக்குப் போனதும் ஏறிவந்த களைப்புப் போச்சு.
வரவழியில ஒரு இந்த ஊரு அம்மாவேறு எங்களோட சேர்ந்துவிட்டார்.
நிற்காமல் பேசியதில் காலும் காதும் கடுத்துப் போயின.
அவங்களுக்குப் பிள்ளைங்க அவ்வளவு சொஸ்தமில்லையாம்.
எங்க மகன் ரொம்ப ஆதரவா என்னைக் கைபிடிச்சு அழைத்துப் போவதைப் பார்த்து கன்னத்தில் கைவைத்து அதிசயப் பட்டார்.
அவங்க முட்டி மாற்றுச் சிகித்சை முடிந்து மலையேற வந்து இருக்கிறார்.
எங்க குடும்பம் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.அதனால் எல்லா சப்ஜெக்ட்டையும் விடாமல்,பொட்டு வைப்பதிலிருந்து ஆரம்பித்து,
டிவோர்ஸ் விகிதாசாரம் வரை அலசிவிட்டுத் தான் விட்டார்.
இந்தியாவுக்கு வந்தால் சென்னைக்குக் கண்டிப்பாக வருவதாகச் சொன்னார்.
இத்தனைக்கும் பேரு ஊரு தெரியாது எனக்கு.
மகன் கண் காட்டியதால் வீட்டு நம்பர்,விலாசம் எல்லாம் கொடுக்காமல் விட்டேன்.
இவங்க எல்லாம் பொதுவா கலர் மங்கி இருப்பவர்களிடம் பேசமாட்டார்களே
இந்த பெண்மணி மட்டும் ஏன் இவ்வளவு ஒட்டுகிறார் என்று மனம் ஓடியது.
அப்போது பிடித்த பேச்சு பழையபடி லூசர்ன் நகர எல்லையில் தான் விட்டது.
முன்ன பின்ன தெரியாத மனிதர்களிடம் பேச வைத்தது அவர்களின் தனிமை தான் என்று தோன்றியது.
இங்கேயே வயதானவர்களோடு, நடுவயததக் கடந்தவர்களுடன் குழந்தைகளைக் காண முடிகிறது. இந்த நிலைமமயயப் பார்த்து மகனிடம் விசாரித்தேன்.
இங்கேயே வயதானவர்களோடு, நடுவயததக் கடந்தவர்களுடன் குழந்தைகளைக் காண முடிகிறது. இந்த நிலைமமயயப் பார்த்து மகனிடம் விசாரித்தேன்.
அப்போதுதான் இவர்களின் வாழ்க்கைமுறை வேறுபாடுகள் விளங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழுபவர்கள் அதிகம் என்றும் ,வரிவிகிதாசாரம் அதிகமமகிவிடுவதாள் பாய்ஃப்ரண்ட்
கேர்ள்ஃப்ரண்டாகவே இருந்து விடுவதாகவும் சொன்னான்.
அந்த வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பிறகு முதுமையை நெருங்கும்போது குழந்தைகளைக் காப்பு இல்லங்களிலிருந்து தத்து எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அந்த விதத்தில் அவர்கள் வித்தியாசம் பாராமல் பல வேறு நாட்டுக் குழந்தைகளையும் அடாப்ட் செய்து கொள்கிறார்கள் .நன்றாக வளர்க்கவும் செய்கிறார்கள்.
கேர்ள்ஃப்ரண்டாகவே இருந்து விடுவதாகவும் சொன்னான்.
அந்த வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பிறகு முதுமையை நெருங்கும்போது குழந்தைகளைக் காப்பு இல்லங்களிலிருந்து தத்து எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அந்த விதத்தில் அவர்கள் வித்தியாசம் பாராமல் பல வேறு நாட்டுக் குழந்தைகளையும் அடாப்ட் செய்து கொள்கிறார்கள் .நன்றாக வளர்க்கவும் செய்கிறார்கள்.
மகிழ்ச்சியோடு இருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
நாங்க பார்த்த இந்த அம்மா தனியாகவே ஆல்ப்ஸ் மலைகள் எல்லாம் போவாங்களாம். ஜெர்மனியிலிருந்து இங்க வந்து திருமணம் செய்து கொண்டவங்க, இரண்டு மகன்கள். பக்கத்திலேயே வசித்தாலும் வந்து
பார்ப்பதில்லை. உன்மகன் இப்படிக் கையைப் பிடித்து அழைத்துப் போறானே. யூ ஆர் லக்கினு சொல்லிக்கொண்டே வந்தாள்.
வயது கேட்கவில்லை.அவள் சொன்ன வருடக் கணக்குப்படி அறுபதை, நான்குவருடங்கள் முன்னாடியே தாண்டிவிட்டாள் என்று தெரிந்தது.
இதுவும் ஒரு ஏறி இறங்கின அனுபவம்தான்.




