Showing posts with label Paris. Show all posts
Showing posts with label Paris. Show all posts

Tuesday, June 23, 2015

நாங்கள் வாழ்கிறோம்


இந்தத் தம்பதியரை
 பாரீஸ்  நகரின் வெற்றி வளைவு+  நினைவு ஸ்தலம்
  ..அதன் உச்சியில் சந்தித்தோம்.
அன்று வெய்யிலின் அளவு அதிகமாக இருந்தது.
ஐரோப்பியர்களுக்கு அந்த வெயில் உற்சாகத்தைத்தான் கொடுத்தது.
எங்களுக்கு  தாகம் தாகம் தாகம்.

சின்னப் பயலுடன் மருமகள் கீழே தங்கி விட்டால். பேத்தியும் மகன்,சிங்கம் ,நான்   லிஃப்டில்
  ஏறி  மேலே வந்துவிட்டோம்.

எங்களுடன் வந்த இந்த வயதான (!)  தம்பதியரின் உற்சாகம்   மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்.
  பிரெஞ்ச்  பெயர்கள் இரண்டு காதில் விழுந்தன.
புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டோம்.

குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா  என்று கேட்டார்கள்.
ஆமாம் என்றதும்  நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம்.

உஷ்ணம் தாங்கவில்லை. டெல்லி,தாஜ்மகால்,ஜெய்ப்பூர்
  பார்த்துவிட்டு வந்தோம்.
உங்கள் குடும்பமும்   இங்கே பாரீசில் இருக்கிறதா என்றதற்கு,
இல்லை என்று தலையசைத்தார்கள்.
எங்கள் மகன்  கென்யாவில்    அந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்.

நாங்கள் அருகில் மூல்ஹௌஸ்  நகரில் இருக்கிறோம்.
 உடலில் வலு இருக்கும்போது   கலைகளின்
   தலைநகரமான பாரீசுக்கு வருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இரண்டு    வாரங்களாவது

 இங்கே இருப்போம். ஹோட்டல் விடுதி செலவெல்லாம் கிடையாது. சிநேகிதர்கள் வீட்டில் இருந்தபடி
 ஊர் சுற்றுவோம்.  என்றனர்.

முற்காலத்தில் நம் ஊரும் இப்படித்தானே இருந்தது.
ஒரு அத்தை, மாமா பெரியப்பா சித்தப்பா என்று யாராவது வருவார்கள், இருப்பார்கள். நாமும் அவர்கள் வீட்டில் போய்த் தங்குவோம்.

போன வருடம்  ஷான்
ஒரு  அறுவை சிகித்சை மேற்கொள்ள வேண்டி வந்தது. அதனால் வரமுடியவில்லை. அதை ஈடு கட்ட   இந்தத் தடவை மேலும் சில நாட்கள் இருப்போம் என்று அந்த அம்மா மகிழ்ச்சியோடு சொன்னார்.
எதோ இருதய சம்பந்தமான சிகித்சை என்பது  மட்டும் தெரிந்தது.

அவர் அதற்குள் குறுக்கிட்டு இதோ இவளும் மூட்டு அறுவை சிகித்சை செய்து கொண்டாள். வாக்கர்  வைத்துக் கொண்டாவது வருவேன் என்று பிடிவாதம் பிடித்து வந்துவிட்டாள்    என்று பெருமையாகச் சொன்னார்.

என் கால் வலியையும்  அதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.:(
மனம் மார்க்கம் என்று யோசனை எங்கியோ போனது!!








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...