சி.என் டவர்ஸ், டொரண்டோ
தங்கியிருந்த விடுதியில் ஒரு ஓவியம்
விடுதி ஜன்னல் வழியே ஒரு வியூ
இரட்டை வானவில் மழையினூடே வந்து ஆ!!! போட வைத்தது:)
டெட்ராய்ட்...டொரண்டோ சாலை
மழையினில் மாக் டி தேடல்....
கனடா விசாவுக்கும், நாட்டுக்குள் நுழைவதற்கும் நின்ற இடம்.
டோல் கேட்!!
டொரண்டோ நுழைந்ததும் முதலில் பார்த்த வான்வில். பக்கத்திலியே இன்னோரு வான்வில்லும் உருவானது டபிள் கொண்டாட்டம்:0)
மழையில் நனைந்த வீதிகள் மழை நின்றபிறகு ஒரு குளித்த தோற்றம்.
அடடா,விமானம் செங்குத்தாகக் கிளம்பிவிட்டதே.
இப்படியாகத்தானே பலவித டீல்களையும் பார்த்து ஒரு வார ஆராய்ச்சியில் ஹோட்டல் விடுதிகளை இணையத்தில் தேடி,ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பயன்படுத்தி மாரியாட்(டொரண்டோ) விடுதியில் இரண்டு அம்மா அப்பா,இரண்டு குழந்தைகள் தங்க ஒரு அறை ஏற்பாடு செய்தார்கள். முதல் கட்டம் முடிந்தது.
அடுத்தது நயகரா புக்கிங். நயகரா கொட்டும் அழகைப் பார்த்தவாறு ஒரு அறை வேண்டும் என்று தேடி அதுவும் கிடைத்தது:)
14ஆம் தேதி ஒரு மணிக்கு மதியம் கிளம்ப நினைப்பு. ம்ஹூம் நாங்கள் கிளம்ப மணி நாலு ஆச்சு. டெட்ராய்ட் போய்ச் சேர 5 மணிநேரம் பிடிக்கும்.
மாப்பிள்ளையின் நண்பர் அங்கெ இருக்கிறார்.
அவர் வீட்டில் இரவு தங்கி,அடுத்தநாள் கனடியன் விசா எடுப்பதாகவும்,எடுத்த கையொடு பயணம் தொடர உத்தேசம்.
நடுவில் சூசன் அம்மாவை வேற வாங்க வேண்டி வந்தது. அவங்க கூடவே வந்து வழிகாட்டியதால் தான் எல்லா இடங்களையும் ஒழுங்காகக்
கடந்தோம்! அதான் இந்த ஜிபிஎஸ்ஸின் மகிமை.
ஆனால் ஒன்று கொஞ்சம் ரோடு மாறினாலும் அந்த அம்மா,'கீப் ரைட் 'சொல்ல ஆரம்பித்துவிடுவார்,.
அப்படியெல்லாம் மகா சௌகரியமாக ஆரம்பமான பயணம்,பாதியில் நிதானப் படவேண்டி வந்தது.
ஒரு பெரிய 'மாக்' ட்ரக் மழையில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து,
கவிழ்ந்து விட்டது.
நல்ல வேளை அந்த வண்டி ஓட்டுனருக்கு அடியில்லாமல் தப்பித்திருந்தார்.
அந்த விஷயத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த சாலைப் போலீசாரை மெச்சவேண்டும்.
ஒரு வண்டி அந்த இடத்தைக் கடப்பதற்கே 10 நிமிடம் ஆகியது.
வெகுஜாக்கிரதையாக மழையில் ஒளிபாய்ச்சியபடி நின்றவர்களைப் பார்த்து
அதிசயப் பட்டேன்.
இப்படி அப்படியாக நண்ப்ர் வீட்டுக்குப் போய்ச்சேர இரவு 1 மணி ஆகியது.
அவர்களும் கதவைத் திறந்த நொடியிலிருந்து எம்க்களுக்கு படுக்க வசதி செய்து கொடுத்து தூங்கப்போகையில் மணி இரண்டு!
இதெல்லாம் இருக்கட்டும்.
என்னுடைய மறதி மகிமை அடுத்த நாள் காப்பியுடன் வெளிவந்தது.
இரத்த அழுத்த மாத்திரை மட்டும் எடுத்துவர மறந்திருந்தேன்.
அலுப்பாக இருக்கிறதா:)
நாளை பார்க்கலாம்.
