Showing posts with label 4. Show all posts
Showing posts with label 4. Show all posts

Thursday, April 21, 2022

நயாகரா பயணம் 4


வல்லிசிம்ஹன்

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.




ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . 



அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.

சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.



'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) 

மேலே இருக்கும்
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!

View from CN Tower


சைவ உணவுதான்:)  வயிற்று கெடுதல் செய்யவில்லை.


சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.




கீழே வந்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.

மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க சிங்கம்

 பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து வன் மழலையோடு பேசுவதைக் கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


   என் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டங்கள் 
வருவது கிடையாது.
முன் கை நீண்டால் தானே முழங்கையும் நீளும்:)












எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Thursday, August 05, 2021

முன்னம் ஒரு காலத்திலே 4

வல்லிசிம்ஹன்

கிருஸ்துமஸ் நாள் நல்ல மூடுபனியுடன், 
குளிர் சூழ லேசான சூரிய வெளிச்சத்துடன் மலர்ந்தது.
குழந்தைகளுக்கு மகா உத்சாகம். ஜன்னல்களைத் தொட்டுச்
சில்ல்ல் என்று சப்தம் எழுப்பினார்கள்.

அவரவர்களுக்கான பால், காப்பி கொடுத்ததும்
கொண்டு வந்திருந்த நல்ல் உடைகளையும் காலுறைகளையும்
மாட்டி ஷூ போட்டுக் கொண்டு 
சமர்த்துக் குடங்களாக வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

நாங்கள் வில்லியம்ஸ் அவர்களின் வீட்டு வாசலில் இறங்கி சுற்றியுள்ள
பெரிய தோட்டத்தைப் பார்த்தோம்.
மலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் படிப் படியாக
அமைந்த நிலத்தில்
ரோஜாச் செடிகள்,பலவகை பெயர் தெரியாத ஃபெர்ன்ஸ்,
குரோட்டன்ஸ், மாதுளை மரங்கள், ஆரஞ்சு மரங்கள்
என்று வண்ணமயமாக   இருந்தது அந்த எஸ்டேட்.

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்கள்,
என்று விதவிதமான அமைப்புகள் தம்பதிகளின் ரசனையைக் காட்டியது.சுற்றி வரும்போது பெரிய பெரிய  kennels 
கண்ணில் தென்பட்டது.
நாங்கள் அருகே வந்த போது அத்தனை 11 நாய்ச்செல்லங்களும்
குரைக்க ஆரம்பித்தன:)

தாங்க முடியாமல் விரைந்து வீட்டு முகப்புக்கு வந்து விட்டோம்!!!
இத்தனை ஜீவராசிகளுக்கும் சாப்பாடு?
கூட வந்த  சுந்தரம், ''அவைகளுக்கு சமைக்கத்
தனி ஆள் இருக்கிறான். அவன் வர நேரம் தான்.
ஐய்யா நீங்கள் உள்ளே போய் உட்காருங்கள்''

''கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள்.  இவைகளை அவிழ்த்துவிட்டால்
இஷ்டத்துக்கு ஓடும்'' என்றார்.



இந்தப்படம்..............................,  அன்று மதியம்  சாப்பாட்டுக்குப் பின் பார்த்து ரசித்தோம்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்கள் வீட்டில் அசைவம்
கிடையாது.
அவர்கள் பழக்க வழக்கங்கள் என்னை ,என் சிந்தனைப் போக்கை மாற்றியது.

பிடிக்காதது ஒன்றே ஒன்று. ஆனால் மலை வாசஸ்தலத்தில் இருப்பவர்கள் 
எல்லோருக்கும்  அந்தப் பழக்கம்  இருந்தது தெரியும்.

மாலை கிளம்ப இருந்த எங்களை கோபாலன் தம்பதியினர்
வற்புறுத்தி இருக்க வைத்தார்கள்.

கூனூர், சுற்றிப் பார்த்துவிட்டு உதகமண்டலமும் போய் வந்த
போது மாலை 8 மணி ஆகியிருந்தது.
எங்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்கள் இருவரும்
உள்ளே இருந்த சின்ன சாப்பாட்டு அறையில் 
தோசை சாப்பிடச் சென்றார்கள்.

முதல் நாள் மாதிரியே ஷெர்ரி என்ற  வைன் மற்றும் சற்று அதிக
ஆல்கஹால் உடைய விஸ்கி  கலந்து
பேசின வண்ணம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்களைத் தவிர இன்னும்  சில சினேகிதர்கள்

கோவையிலிருந்து வந்திருந்தார்கள்.
 நிதானமாக ஆரம்பித்தது, எடுத்ததற்கெல்லாம்
சிரிப்பு என்று சென்று கொண்டிருந்தது.

சமையல் பேச்சு வரும்போது திரு வில்லியம்ஸ்
சாரதாவின் சைவ சமையலை வெகுவாகப் பாராட்டினார்.

அவர் ஒரு உணவுப் பிரியர் என்பது இரண்டு நாட்களாக 
நான் பார்த்ததில் தெரிந்தது.
அவர்கள் வீட்டில் எலிசபெத் அவர்களைத் தவிர இரண்டு
 சமையல்காரர்களும் இருந்தார்கள்.
எல்லோருமே சமையல் செய்வதில் தேர்ந்தவர்கள்.

இந்தப் பேச்சில் எலிசபெத் குறுக்கிட்டு,
''நம் வீட்டு சமையலை விட அவர்கள் வீட்டு உணவு 
உங்களுக்குப் பிடித்துவிட்டது'' என்று புன்னகைத்தபடி சொன்னாலும்
அதில் ஒரு கசப்பு இருந்தது தெரிந்தது.

வந்திருந்த இன்னோரு டாக்டர் தோழி,
''சாரதாவுக்குப் பிள்ளையா குட்டியா
சமைப்பதைத் தவிர  வேறு பொழுது போக்கு இல்லை.
கொடுத்துவைத்தவள்'' என்று குறிப்பிட
சாரதாவின் முகம் சிவந்தது.

எனக்கே கலக்கமாக இருந்தது.இந்த  கூட்டத்தில் கலந்து பேச
எனக்கு விஷயம் இல்லை.

சட்டென்று  எழுந்து போக இருந்த சாரதாவை , கோபாலன் 
தடுத்து நிறுத்தினார்.

எல்லோருக்கும் தோசையும் ,தயிர் சாதமும் ஏற்பாடு செய்ய
எலிசபெத்  சமையலறைய நோக்கி நடக்க
நானும் பின் தொடர்ந்தேன்.
'' நீங்கள் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடா ? "
என்று அவள் கேட்டதும் தலை அசைத்தேன்.
''இரண்டு வருடங்களாகத் தெரியும் ''என்றேன்.
உடனே அவள்
''எங்க வீட்டுக்காரர் வெள்ளிக்கிழமை தோறும்
அங்கே தான் சாப்பிடுகிறார். நன்றாகப் பிடித்திருக்கிறது
போல...''

''எங்கள் வீட்டுக்காரரும் அவர்கள் வீட்டுக்குப் போவார்.
நல்ல நண்பர்கள் எல்லோரும்.'' என்று பொதுவாகச் சொன்னேன்.

''நீயும் கொஞ்சம் ஷெர்ரி எடுத்துக் கொள்கிறாயா. குளிருக்கும் இதம்"
  என்றாள். 

வழக்கம் இல்லை. 

குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் வந்து விட்டது
என்று சொன்னேன்.
 சமையலறையில் தயாராக இருந்த பணியாட்களிடம்
இரண்டு மூன்று தோசைக் கல்லைப் போட்டு சீராகத் 
தோசை வார்த்துக் கொண்டு வருமாறு
பணித்துவிட்டுப்
பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 
குழந்தைகளிடம்  சீக்கிரம் அவரவர் அறைக்குப்
போகச் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறோம்
என்று சொன்ன பெண்களிடம் , அடுத்த நாளும் கோயிலுக்குச் 
செல்ல வேண்டும் என்பதை  ஞாபகப் படுத்தி
அனுப்ப, அவர்களும் பக்கத்தில் வந்து கன்னத்தில் முத்தமிட்டு,

செல்லும் போதே என்னையும் குழந்தைகளையும் அணைத்து
பை பை என்று சொல்லிச் சென்றனர்.

பொருந்தாத சூழ்னிலையில் மாட்டிக் கொண்ட
கலவரம் என்ன்னைச் சூழ்ந்தது.
சிங்கத்தைத் தேடினேன். 
அவர் இன்னோரு சினேகிதருடன் மும்முரமாகப்
புதிதாக வந்த வண்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

தோசைகள் வருவதும் எல்லோரும் சாப்பிடுவதுமாக நேரம்
கடந்தது.
நானும் உள்ளே சென்று குழந்தைகளை, இன்னோரு படுக்கை அறையில்
படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
ஹாலில்
பேச்சு சத்தம் கொஞ்சம் அதிகமானது. சிரிப்பும்
உற்சாகமும் அதிகரித்தன.
எலிசபெத்  எல்லோரையும் உபசரித்த வண்ணம்
இருந்தாள். புன்னகை மாறாமல், அடக்கம் கலையாமல்
பழகுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சாரதாவின் முகம் மட்டும் இறுகி ,அழுவதற்குத் தயாராவதை
யூகிக்க முடிந்தது. கோபாலனும் , திரு வில்லியம்ஸும்
அவளை அடிக்கடி நோக்கிய வண்ணம் இருந்தனர்.

முன்னம் கிண்டல் செய்த அதே டாக்டரும், 
இன்னோரு மில் சொந்தக்காரரின் மனைவியும்
ஏதோ தகாத வார்த்தை சொல்ல
ஒரு பூகம்பம் வரப் போவது போல எனக்கு அச்சம்
தோன்றியது. ...................................

மீண்டும் பார்க்கலாம்










கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...