இதே இடம் 1983ல் எப்படி இருந்தது என்று யோசித்தால்..
ஒரு எலுமிச்சை மரம்.
இடமோ சிறியது.
நான்கு மல்லிச் செடி, இரண்டு தென்னை,ஒரு வாழை. அவ்வளவே.
பசுமைப் புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஆரம்பிக்கவில்லை.
தனியாளாய் கடப்பாறையை எடுத்துப் பாடுபட ஆரம்பித்து இந்த 26 வருடங்களில் இத்தனை நூற்றுக்கணக்கான செடிகளாக ,வித விதமான தாவரங்கள், ஒரு மினி ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டியே வீட்டில் ஏற்படுத்தி இருக்கிறார் எங்கள் சிங்கம்.
இப்போது மேலும் மேலும் கவனம் செலுத்த முடியாத சமயத்தில் அந்தச் செடிக்குழந்தைகளை வரும் விருந்தினருக்கும் நர்சரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார்.
மிச்சம் இருக்கும் செடிகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
