Showing posts with label பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.. Show all posts
Showing posts with label பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.. Show all posts

Saturday, August 31, 2019

பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.

சியாட்டில்  துறைமுகம்  ,போர்ட் என்று அழைக்கப் படுகிறது.
பெல் ஹார்பர்  மெரீனா  Pier 66 Seattle.

Add caption

Add caption
வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
பயணத்தின்  மூன்றாம் நாள்    Space Needle Seattle.


 பயணத்தின் மூன்றாம் நாள், சியாட்டில் நகரம் சுற்றி வரலாம்
என்று  திட்டம்.
காலை உணவுக்கு நானும் சின்னப் பேரனும் முதலில் வந்து விட்டோம்.
எனக்குத் தேவையான ஓட்ஸ் கஞ்சி, பழங்கள் நிறைய இருந்தன.
சியாட்டில் காஃபிக்கு பெயர் பெற்றது.. தெர்மாஸ் எடுத்துப் போய்
இரண்டு மூன்று கப் எடுத்துக் கொண்டேன்.
பேரன் வாஃபிள்+ மேபிள் சிரப் , என்று அவனுக்குப் பிடித்த
மற்ற வகை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான்.

நமக்கு அதெல்லாம் ஒத்துக் கொள்ளாதே.. என்று சுற்றிப் பார்த்தால், சுடச்சுட
சாதம் கொண்டு வந்து வைத்தார்கள். கூடவே நிறைய வேகவைத்த
காய்கறிகள்.
இண்டியன் ஃபூட் மாம் என்று சிரித்தாள்
அந்த உணவுக்கூடப் பெண்.
நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே ,இந்த ஊர்க்காரர்கள்
நிறைய டப்பாக்களில் எடுத்துச் சென்றனர் .
காலை உணவு ஃப்ரி என்பதால் சீக்கிரமே காலியாகிவிட்டது..
நானும் எங்கள் அறைக்கு இரண்டு டப்பாக்கள் நிறைய எடுத்து
வந்தேன்.



 எல்லோரும்  கிளம்ப 11 மணி ஆகிவிட்டது.
முதலில்  சியாட்டில் ஹார்பருக்குச் சென்று  சுற்றி பார்த்தோம். விதவிதமான படகுகள் , Luxurious  yachts.
எல்லாவற்றையும் சுற்றிப்  பார்த்துவிட்டு,  ஜெயண்ட்  வீல் இருக்கும்
இடத்துக்கு வந்தோம்.

கொண்டு வந்திருந்த கலந்த சாப்பாட்டை முடித்துக் கொண்டு 
அந்த ரங்கராட்டினத்தில் சுற்றி வந்தோம். நம் ஊர் என்றால்

 ஒரு மாதிரி பயமாக இருக்கும். இங்கே கதவுகள் போட்ட கேபிள் கார் போல இருந்ததால் 
பயமில்லாமல் அரைமணி நேரம் நிதானமாகச் சுற்றி 
கீழே இறங்கினோம்.

Related image
சியாட்டில் ஸ்பேஸ் நீடில் .
மேலே இருப்பது சுற்றும் டவர். அங்கேயே  கண்ணடித்தளத்தில் படுத்து கீழே  பார்க்கலாம்.

கீழே வந்து   வரிசையில் நின்று  virtual Reality glasses 
அணிந்து கொண்டு  கோபுரத்திலிருந்து  கீழே  பார்ப்பது மிக 
த்ரில்லிங் .
நான் எடுத்த படங்கள் சரியாக இல்லாததால் 
கூகிள் அம்மா கிட்ட கேட்டு  எடுத்துப்  போட்டு இருக்கிறேன்.



அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...