Friday, June 30, 2006

ஸ்ரி துர்கா தேவி




SRI DURGA MAATHA.
இந்தத் தாயைப் பார்க்கும்போதெல்லாம்
மனசில் சாந்தம் மகிழ்ச்சி ஆறுதல் எல்லாம் கிடைக்கும்.
எங்கள் மகன் வெளியூரில் வடக்குப் பக்கம் வேலை செய்யும்போது அவனிடம் போய் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு சமயம் நம் பிள்ளையார்(!) சதுர்த்தி வந்தது. இங்கே இருந்தால் காலையில் எழுந்து பிள்ளயார் வாஙி வந்து தோரணம் கட்டிக் குடை வைத்து எருக்கமாலை போட்டு,விளாம்பழம், நாவல் பழம்,அருகம்புல் மூஞ்சூரு எல்லாம் அமர்க்களப்படும்.
அங்கே தேடியும் களிமண் பிள்ளயார் அகப்படவில்லை.
ஆதி ஹூம், ஜாதி ஹூம், நாம்,தும்,ஆப் கஹான், வஹான் இதெல்லாம் நம்ம பள்ளீக்கூடப் பாட இந்தியை ஒரு அம்மா புரிந்து கொண்டு " மாதா பூஜா கரொ" என்று இந்த துர்கா அம்மா படத்தைக் கொடுத்து விட்டாள்
கணேஷ் ! கணேஷ்! என்று நான் கேட்க உஸ்கி மாதா என்று அவள் சொல்ல ,சரிஎன்று பணம் கொடுத்துவிட்டு, மஞ்சள் ,சிவப்பு கலர் பூக்களை (பேர் தெரியாது)யும் வாங்கிக் கொண்டு,
என்னடாப்பா பிள்ளயாரைத் தேடி அம்மாவைக் கொண்டு வந்தாச்சே என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் பிள்ளயாரை வழிபடப் படத்தை வைத்து மலர்கள் சூட்டி, பால்,தேன்,அவல், அதிரசம்,சுண்டல் என்று நைவேத்யம் செய்யும் நேரம் எங்களுக்கு உதவி செய்யும் சீதாம்மா வந்தாள்.
ரொம்ப கவனமாகப் பார்த்தவள் துர்காம்மா படத்தைப் பார்ததும், அப்படியே கீழெ விழுந்து மாதா தீ !ஜேய் மாதா 1 என்று கன்னத்தில் போட்டூக் கொண்டாள்.
அவள் பேசினதிலிருந்து நாங்கள்
வாங்கி வந்த படம் ச்ரி வைஷ்னோ தேவியின் படம் என்று தெரிந்தது.
அவளிடம் விவரம் கேட்டதில் வைஷ்ணோ தேவியின் இருப்பிடம் போய் வந்துவிட்டால் வாழ்வில் குறையே கிடையாது என்று சொன்னாள். உனக்கு எப்படி இந்தப் படம் கிடைத்தது/? என்று என்னை வேறு விசாரித்தாள்.
என் பதிலைக்கேட்டுக் கொண்டு நீ இந்த மாதாவை மறக்கக் கூடாது. யே க்ஷேராவாலி தும்கோ ஞான் தேகி'' என்று வேறு ஆசீர்வாதம் செய்தாள்.(இந்தி தெரிந்தவர்கள் என் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

புலி மீது இருக்கும் அம்மாவை நானும் விடுவதாக இல்லை.இவள் புலி ,சிங்கம் என்று இரண்டு வாகனம். வேறு பெயர் இருக்கலாம். இவளை நான் துர்காம்மா என்று தான் நினைப்பேன்.
அத்தோடு விட்டாங்களா இந்த அம்மா.
அடுத்த நவராத்திரிக்கு காதி கிராமாத்யோக பவனம் போகும்போது,
அங்கு நின்று கொண்டு இருக்காங்க!!
முகம் அழகி, நகை அழகி, கை அழகி என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் எல்லாம் நிறைந்த பரிபூரணமான
அன்னை.
எதன் மேல் நின்றாள் தெரியுமா? மகிஷத்தின் மேல்!!
இதென்னடா இந்த அம்மா இப்படி வெற வேஎற மாதிரி வராங்களே என்று அங்கிருந்த பெண்களைக்கேட்டபோது
ஓ, அந்த அம்மா பட்டிச்வரம் துர்க்கை என்றார்கள்.
இதிலே விஷ்ணு துர்க்கை வேறாம்.
இவங்க ஒரு மூணூ அடி உய்ரம். தங்க நிறம். பேபர் மஷெ.யாலே ஆன பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை.
அவங்க நின்ன கோலம் என்னைக் கூப்பிட்டு அழைத்தது.
வாங்கலாமா வேண்டாமா? கொலுவின் போது எல்லாரையும் கவர்ந்து இழுக்கும், உண்மைதான்.
பூஜை செய்யலாம். மாலை போடலாம்.போட்டொ எடுக்கலாம்..
எல்லாம் சரிதான்.
அதற்குப் பிற்ு? எப்படி வருடக் கணக்கில்; பாதுகாப்பது.?
அவங்களைப் பொட்டியில் வைக்க முடியுமா// இல்லை மனசு தான் வருமா?
மனசு வரத்தான் இல்லை.
ஆட்டொவில் குழந்தை மாதிரி கொண்டு வந்த நாளில் இருந்து இந்த அம்மா கொலு வீற்றிருக்க ஆரம்பித்தஆள்.
எனக்கு இருந்த பாசத்தில் இவங்களை ஹாலில் வைக்க(கொலுவுக்குப்
பிறகு) ம்னம் வரவில்லை.
சாமி ரூமுக்கு வந்துட்டாங்க. அங்கெ நடக்கும் பாராயணம்
,விளக்கு பூஜை, சும்மா
ஒண்ணுமே செய்யாத நாட்கள், ஒவராகப் பக்தி செலுத்தும் நாட்கள் எல்லவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு கார்னரில் தான் இருந்தார்கள். அங்கே இருக்கக் காரணம், யாரவது அசப்பிலே தட்டி விடக்கூடதே என்பதற்காகத் தான்.
அதுவும் அழகாகத் தான் இருந்தது.
எட்டு கைகள். ஒட்டியாணம், கிரீடம், புன்னகை,விரிந்த காதளவோடு ஓடிய கண்கள். அதில் வழிந்த கருணை, செவியும், அதில் சூட்டப்பட்ட குழையும் நேரில் பார்த்தால் தான் தெரியும் அவள் அழகு.
இந்த அழகான அம்மாவை வீட்டில் விட்டு விட்டு,
வெளி நாடு போக வேண்டிய வாய்ப்பு வந்தது.
மாரிக்காலம். ஒரு மாதமே பொனாலும் மனசு கொஞ்சம்
சிரமப்பட்டது.
அந்த வருடம் அவ்வளவு மழை கூட இல்லை.
வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லி ஒருவரை
நியமித்து விட்டு ஒரு 30 நாட்கள் போய் வந்தோம்.
மிக அருமையான பயணம், மிகுந்த ம்ன நிறைவோடு
இந்தியா , சென்னை வந்தோம்.
வீட்டு வரும்போது மழை பெய்து கொண்டு இருந்தது.
இடி மின்னல் மழை.
மோஹினி தான் வரவில்லை.
வாசல் கதவைத் திறந்ததும் நேரே அப்பா கடவுளே என்று போனேன்.
கைகால் கழுவி சாமி அறைக் கதவைத் திறந்தால்
அன் துர்காம்மா கீழெ முகம் ப்டிய இருக்கிறாள்.
எனக்கு ந்றும் புரியவில்லை. என்ன்அ ஆச்சு? எப்படி ஸ்டூலில் இருந்து வந்தாள் கீழே?
சரி நிமிர்த்தி வைக்கலாம் என்று தொட்டால் .,.,.,.,
சரி அதை சொல்லவில்லை.
பிறகு அவளை குறைபாடோடு வைக்க மனமில்லாமல்
பிள்ளயாரை வருடா வருடம் சேர்க்கும் எங்க வீட்டுக் கிணற்றிலேயே , திருப்பி வரும்படி சொல்லித் தண்ணீருடன் கலக்க விட்டேன்.
அதற்குப்பிறகு இதே நினைப்பாக கொலுபொம்மை வாங்கப் போகும்போதெல்லாம் தேடுவேன். அவள் மீண்டும் வரவில்லை.
இந்த வருஷம் வருவாளோ?
படங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் எனக்கு அவங்களைத் திருப்பிப் பார்த்துவிடுவேன் என்று திட்டம்.
இந்த அம்மாவுக்குத்தான் திருப்பி வர மனம் வர வேண்டும்.


Sunday, June 18, 2006

ஜானகி,சீதா,மைதிலி



Posted by Picasaசீதா அம்மாவைப் பற்றி சொல்லாமல் ராமாயணம் ஏது?

நேபாலில் இருக்கும் ஜனகபுரியில் இருக்கிறது ராமனுக்கு வாய்த்த சீதனம் ஆன சீதையின் பிறப்பிடம்.

பொறுமைக்கு பூமாதேவி. அவளுக்கு சீதை மகள்.

சில சமயங்களில் குழந்தைகள் கேட்கும் சீதை ஏன் பொறுமையாக இருந்தாள்? எத்தனையொ கேட்டிருக்கலாமே ராமனிடம் ஏன் இப்படி எனக்கு மத்திரம் தீராத சோதனை? ஏன் ஒரு சக்கிரவர்த்தியின் மகள்,இன்னொருவரின் மருமகள்,உன் மனைவி எனக்கே இவ்வளவு சோதனை என்றால் , சாதாரணப் பெண்களின்

கதி என்ன என்று யோசிப்பதாக வால்மீகி ராமாயணத்தில் காட்சி வரும்.அதற்கு என்ன விடை கிடைத்தது என்பதைப் பற்றி இப்போது ஆலோசனை இல்லை.

ஏனென்றால் இது இப்போதும் தொடரும் கேள்வி.மனைவியோ கணவனோ அமைவது இறைவன் கொடுத்த வரம் தான்.

ஒரு மண்டோதரியோ,சீதையோ இருக்கும்போது ஒரு இராவணனும் ஒரு இராமனும் இருக்கிறார்கள். ஒரு சூர்ப்பனகை இருக்கிறாள்.தாரையும் உண்டு. கௌசல்யா,கைகேயி,சுமித்திரையும் உண்டு. எல்லாமே கதை என்று ஒதுக்கி விட முடியாது.

புராணமோ ,நடந்ததோ எதுவாக இருந்தாலும்,

நீதி வழுவாத அரசு வாழும். நேர்மையாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சுகம் அடைவார்கள். சுகம் என்பது என்ன என்பதற்குத் தனிப் பதிவு தான் போட வேண்டும்.

சீதை வந்தாள்,சிரமப்பட்டாள் என்று பூர்த்தி செய்ய மனமில்லை.அவள் தான் அம்மாவின் வீட்டிற்குப் போகிறாளே. இனி அடுத்த அவதாரத்திலே சத்யபாமாவாக வந்து வீர தீரமாகப் பரிமளிப்பாள். கிருஷ்ணனின் செல்ல மனைவியாக.

Friday, June 16, 2006

யா தேவி சர்வ பூதேஷு.......

Posted by Picasa எந்த ஒரு தேவி எல்லா ஆத்மாக்களிலும் நிறைந்து இருக்கிறாளோ,
அவளுக்கு என் வணக்கம்.
அவள் அம்மாவாக இருப்பதால் தான் ச்ரீ ஆதி சங்கரருக்கும் சௌந்தர்ய லஹரியாக ஆர்பவித்தாள்.
பூ மாதா,நீலா தேவி,மஹா லக்ஷ்மி, சக்தி,துர்கா, இன்னும் எத்தனையோ வடிவில் அவளை நாம் பார்த்தாலும்
ஒரு அம்மாவாகவே அவளை நினைப்பதில் ஆனந்தம் தான்.
"தாயாரை முதலில் சேவித்துவிட்டு பெருமாளைப் பார்க்கா போகலாம்" இதுதான் வழக்கமாக நமக்கு சொல்லப் படுவது.
ச்ரிமத் வேதாந்த தேசிகர் அருளித்தந்த ச்ரிஸ்துதி, கோதாஸ்துதி மற்றும் பூஸ்துதி எல்லவற்றிலும் தாயின் கருணையைத்தான் முன் வைக்கிறார்.

அதில் இந்த மாதிரி ஒரு சம்பவம் வரும். ஒரு பக்தன் தன் வருத்தம் போக்க பகவானைத் தேடி வருகிறான்.
அவனைப் பார்தத்தும் பெருமாளுக்கு அவன் போன நாட்களில் செய்த பாவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து கோபம் வருமாம்.
அப்போது லக்ஷ்மி அம்மா அவனை நோக்கிக் கையமர்த்தி, பெருமாளிடம் இவனுக்காக சிபாரிசு செய்வாளாம். இனிமேல் இவன் தப்பு செய்ய மாட்டான், இப்போது அவன் கஷ்ட நிலையில் இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக அவனுக்கு அனுக்கிரஹம் பண்ணனும் என்று நிர்ப்பந்தம் செய்வாளாம்.
அதுக்கு மாறாக மாலவன் முகத்தை இடது பக்கம் திருப்பிக்கொண்டால் அங்கிருந்து கோதை அவன் முகத்தைப் பிடித்துக் கொண்டு தன் புருவம் நெரியக் கோபிப்பது போல் பாவனை காட்டுவாளாம்.
வேறு வழியில்லாமல் பெருமாள் பிழைத்துப்போ
உன் பிரச்சினை தீர்ந்தது இன்றோடு., என்று அபயம் கொடுப்பாராம்.
கோபிக்கக் கூட வழி கிடையாது அவனுக்கு, இவர்கள் பக்கம் இருந்தால் !!
இதே போல் ச்ரி ஆளவந்தார் தன் சதுஸ்லோகியில்
காந்தஸ்தே புருஷோத்தமஹ
ஃபணிபதி சய்யாசனம் வாஹனம்
வேதாத்மா விககேச்வரோ யவனிகா
மாயா ஜகன்மோஹினி
பிரும்மேசாதி சுரவ்ரஜஹ சதயிதக
த்வத் தாஸ தாசீ கணஹ.,
ச்ரிரித்யேவச நாமதே பகவதீ ப்ருஹ்மஹ கதம் த்வாம்
வயம்??
என்று கேள்வி கேட்கிறார்/
அம்மா, யௌவனமும் அழகும் பொருந்திய உனக்கு
கணவனோ புருஷர்களில் உத்தமன்
அனந்தசயனமாகப் பள்ளி கொள்ள ஆதிசேஷன்
வாஹனமாக மாபெரும் கருடன்
பிரம்மனின் மனைவி சரஸ்வதியும்,
ஈசனின் மனைவி பார்வதியும் உனக்குத் தோழிகள்
மற்ற எல்லா தேவ தேவியர் உனக்குப் பணிவிடை செய்ய
காத்து இருக்கின்றனர்.
உனக்கு என்ன குறை இருக்க முடியும் என்று மகிழ்ச்சியாகக் கேட்கிறார்.

கல்யாணானாம் அவிகலனிதிஹி
காபி காருண்ய சீமா.
நித்யாமோதா நிகமவசஸா
மௌளி மந்தார மாலா. //
இவ்வளவு கல்யாண குணங்கள்
உனக்கு அணிகலன் களாக இருக்கின்றன.
நித்யமாக திருமால் மார்பினில் வாசம் செய்கிறாய்.
அவனுக்குத்தான் என்ன அழகு (அளவில்லாத) உன்னால்!!
உங்களை அடைந்தால் அப்புறம் எங்களுக்கு ஏது
சோகம்/? என்று முடிக்கிறார்.
மஹாலக்ஷ்மியும், கோதையும் மாலுடன் மகிழ்ந்து இருந்து
நம்மையும் காப்பார்கள். காக்க வேண்டும்.

Wednesday, June 14, 2006

இலக்குமி லக்ஷ்மி லட்சுமி





"லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் ச்ரீரங்க தாமேச்வரீம்"

லோகைக தீபாங்குராம்"

//த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம்//

சரசிஜாம் வந்தே முகுந்தப் ப்ரியாம்//

கமலவாசினீம் விச்வமாதா

நமதாம் சரண்யே//

யாருடைய கண்களின் பார்வை அருளோடு

பாய்கிறதொ,

யார் மாலுடைய இதயத்தில் உரிமையோடு ஏறி அமர்ந்து கொண்டாளோ,

எந்தப் பார்வை உலகத்தைக் காத்து ரட்சிக்கிறதொ

அந்த கருணைக் கடைக்கண்ணாளை

வணங்குகிறேன்.

இரண்டுபக்கமும் வலிமை நிறைந்த யானைகள் பூ மழை பொழிய,

செந்தாமரையில் வந்து அமர்ந்தவளை,

தேவர்கூட்டங்கள் துதிக்க,

திருமாலை நோக்கிப் புன்னகை புரியும்

மஹாலக்ஷ்மியைத் தேடி அடைந்தேன்.

இனி எனக்கு என்ன குறை இருக்க முடியும்?

அங்கங்கே கிடைத்த அருள் வாக்கியங்களின் திரட்டு இந்தப் பதிவு.

Saturday, June 10, 2006

sri raamadhootha hanumaan

Posted by Picasaஅஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே  ஒன்று ஆறாக  ஆரியர்க்காக  ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

Friday, June 09, 2006

திருவே விளக்கே

Posted by Picasa விளக்கே திருவே
வேதனுடைய நற்பிறப்பே,
ஜோதி விளக்கே ச்ரி தேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்காரப் பெண்மணியே
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே
பசும்பொன் விளக்கு வைத்து
பஞ்சுத்திரி போட்டு
குளம்போல நெய்யைவிட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டும் இட்டேன கும்குமத்தால்
பூமாலை சூட்டிவிட்டேன்

ஏற்றினேன் நெய் விளக்கு
எந்தன் குடி விளஙக
வைத்தேன் திரு விளக்கு
மாளிகையும் தான் விளங்க.

மாளிகையில் குடி இருக்கும் மாதாவைக் கண்டு
கொண்டேன்.
மங்கலியப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பொட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா.
கொட்டில் நிறைய பசுமாடு தாரும் அம்மா

புகழ் உடம்பு தாரும் அம்மா
பெருமையைத் தந்து என் மனத்தினிலே வாழும் அம்மா.
மனத்தெளிவைத் தாரும் அம்மா.
அகத்தெளிவை தந்து என் அகத்தினிலே வாழும் அம்மா.
சேவித்து எழுந்து நின்றேன்,
தேவி வடிவு கண்டேன்,
வஜ்ரக்கிரீடம் கண்டென்
வைடூரிய மேனி கண்டேன்,
முத்துக் கொண்டை கண்டேன்,
முழுப்பச்சை மாலை கண்டேன்
சௌரி முடி கண்டேன்
தாழ மடல் ஆடக் கண்டென்.
பின்னல் அழகு கண்டேன்,
பிறைபோல நெற்றி கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
சாந்து இடும் நெற்றி கண்டேன்
தாயார் வடிவம் கண்டேன்,
குறுக்கிடும் நெற்றி கண்டேன்,
கோவைகனி வாயும் கண்டேன்.

செந்தாழம்பூ மலர் போல
செவி இரண்டும் கண்டுகொண்டேன்.
செண்பகப்பூ போல திரு மூக்கும் கண்டு உகந்தென்.

காலில் சிலம்பு கண்டேன்
காலாழி பீலி கண்டேன்
பட்டாடை தானுடுத்த பிடி இடையைக் கண்டுகந்தேன்.
மங்கள நாயகியே உன்னை மனம் குளிரக் கண்டு கொண்டேன்.
அன்பே அருந்துணையெ உனை அடைந்த எந்தனுக்கு வந்த வினை அகற்றி மஹா பாக்கியம் தந்து அருள்வாய்.
தந்தை தாயும் நீயெ, தற்காக்கும் ரட்சகி நீ.
அந்தத்திற்கு உதவி நீயே.
ஆதாரமும் நீயெ.
உன்னை உறவாக எண்ணி உற்றாரைக் கைவிட்டேன் தாயெ.
சந்தானம் சௌபாக்கியம் அளித்து சத்துக்கள் சேவை எனக்கு அளிப்பாய்.
பக்தி உள்ள மனதளித்து ஸ்ரீ தேவி அருள் புரிவாய். "
இந்தத் திருவிளக்குப் பாடல் வெகு காலமாய் இருந்து வருகிறது.
நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கும்,
நம்முடைய பாசிடிவ் எனெர்ஜி மேலும் அதிகரிக்கவும் இந்தப் பாடல் எனக்கு உதவி செய்ததால் என் நண்பர்களான உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன்.
நிறைய சக பதிவாளர்களுக்கும் தெரிந்துதான் இருக்கும்.
மீண்டும் இதைப் படிப்பதால், சொல்லுவதால் நன்மை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
மோடிவேஷன் என்று கூட சொல்லலாம்.
சட்டென தமிழ் வார்த்தை அகப்படவில்லை. எல்லோருக்கும்
எல்லா வளமும் ஸ்ரீ இலக்குமி அருளட்டும்


களியோ களி.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும்  ################################...