![]() |
| சுந்தரத் தோளழகன் |
![]() |
| பக்தர் வெள்ளம் |
குதிரை அழகும் குடை அழகும்
வண்ணப் பட்டழகும்
சீறிப்பாயும் கண்ணழகும்
அத்தனை அழகும் சேர்ந்தும் ஆண்டாள் அவனிடம் வரம் தானே கேட்டாள்.
இணைத்துவை என்னை அரங்கனொடு என்று.
அரங்கனும் அழகர் வடிவில் வந்து அவளை ஆட்கொண்டதாகவும் செய்தி சொன்னார்,,.
ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார், இறைவனை நினைத்து அரங்கனை நினைத்து ,மாலிருஞ்சோலைக்கு வந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்,'அவரது நினைவிடம்(திருவரசு) இங்குதான் இருக்கிறது,.
அதைத் தரிசிக்கத்தான் எங்களுக்கு முடியவில்லை.
சுந்தர பாஹு(அழகிய தோள்கள்) என்று அவனுக்குப் பெயர். ராமனுடைய வடிவத்தில்
அவன் இருந்தால் வில்லெடுத்து அம்பு விடும் தோள்கள் அழகில் சிறந்து
பருத்து நீண்டுதானெ இருக்கும்.
சுந்தரராஜன் என்றும் இன்னோரு பெயர்.
மூலஸ்தான பெருமாளுக்கு 'பரமஸ்வாமி' எனும் நாமம்.
நாங்கள் 2003இல் மதுரைப் பயணம் மேற்கொண்ட போது கேட்டுக் கொண்ட விவரங்கள் இவை.
கொஞ்சம் மலையில் ஏறி நூபுர கங்கையையும் தரிசித்தோம்.
கள்ளர்கள் கூட்டமாக வந்து வழிபட்ட இடம் அவனும்கள்ளழகனானான்..
அவனுக்கும் காவல் பதினெட்டாம்படிக் கருப்பண்ணன் சாமி.பெரிய பெரிய ஈட்டிகளும் அருவாள்களும் அந்தப் பெரிய கதவை ஒட்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
நீதி நியாயம் கேட்டு வருபவர்களுக்கு அங்கே கிடைக்கும் என்றும்
பொய் வழக்குப் போட்டவர்களுக்கு அதற்குத் தண்டனை கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
நாளை எந்தத் தொலைக்காட்சியிலாவது ஒளிபரப்ப மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.






