Blog Archive

Showing posts with label மங்கையர் நலம் பெற்று வாழ... Show all posts
Showing posts with label மங்கையர் நலம் பெற்று வாழ... Show all posts

Thursday, March 08, 2007

மகளிர்தின வாழ்த்துகள்.




மாதவம் செய்து மங்கையராகப் பிறந்தோம் என்பது சொல்வழக்கு.
மா தவமே வாழ்க்கையாக இல்லாமல் சாதாரண ,போராட்டம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலே
போதும் என்ற நிலைமை நம்மில் சிலருக்கு.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் சந்தோஷமாக இல்லாவிட்டால் மற்றவர்கள் வாழ்க்கையும் சிரமப்படும்.
ஆரம்பத்தில் தெரியாவிட்டால் கூட,
நாள் ஆக ஆக மாற்றங்கள் தெரியும்.
தந்தை தாய் இருவரும் இன்பமாகக்
குடும்பம் நடத்தாவிடில்
குழந்தைகள் பாதிக்கப்படும்.
அந்தக் குழந்தைகள் வளர்ந்து தனியாகக் குடும்ப்ம அமைக்கும்போது
தாங்கள் சிரு பருவத்தில் சந்தித்த ஏமாற்றங்கள்
எதிர்ப்புகள் அவர்கள் பெறும் சிறார்களையும்
அவதிக்குள்ளாக்கும்.
இவைகள் நடந்தேறாமல் முதல் பெண்மணியான தாயை
மதித்து தந்தை மற்றும் அனைத்து நபர்களும் நடக்கும்போது,
பெண்மை சமமாகக் கருதப்படும் போது,
நாம் மகிழ்வோம்.
மகளிர் நலம் பெருக
மங்கையர் தின வாழ்த்துக்கள்.