Blog Archive

Thursday, December 16, 2021

சினிமாவில் ஊஞ்சல் பாடல்கள்.





விஜயா கார்டன்ஸில் ஒரு பிள்ளையார் கோயிலும், பக்கத்து மாந்தோப்பும் 
அதில் ஒரு குளமும் மேலே இரு ஊஞ்சலும் இருக்கும்.
பார்த்த படங்களையும் பாடல்களையும்

பதிகிறேன்.:)
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.




25 comments:

Thulasidharan V Thillaiakathu said...

மூன்று பாடல்களும் நல்ல பாடல்கள். முதல் பாடல் செம பாட்டு...

ரசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பேசுவதுகிளியா பாடலில் வரும் தோப்பும் குளமும் தான் நீங்க சொல்லிருக்கீங்க இல்லையா அம்மா?!

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஊஞ்சல் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. பழைய பாடலுக்கு கேட்கவா வேண்டும். அதுவும் கடைசி பாடல் பிரபுவின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதேப்போல் காதோரம் லோலாக்கு என்ற பிரபுவின் பாடலும் அவர் நடிப்பில் மிகவும் ரசிப்பேன்.

இன்று எ.பியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வீட்டு கல்யாண பதிவுக்கு ஜோடியாக தங்கள் தளத்தில் ஊஞ்சல் பாட்டுக்கள் பொருத்தமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

ஊஞ்சல் பாடல்கள் நல்ல கலெக்ஷன்.  இருங்கள்..  எனக்கு ஏதும் ஊஞ்சல் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா என்று பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

வார்த்தையில் ஊஞ்சல் வரும் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.  காட்சியில் என்றால் இருங்கள்..   பாஸைக் கன்ஸல்ட் செய்கிறேன்!!  தூளி ஆடும் பாடல்கள் இதில் வராதோ!

ஒரு நாள் யாரோ..  என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..

மரகதவல்லிக்கு மணக்கோலம்..

ஸ்ரீராம். said...

பச்சைமலைப் பூவு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாட்டு? நானும் காலையிலிருந்து நினைத்துப் பார்க்கிறேன்..சுந்தரி நீயும் அதுல வருமோ?

ரம்பா கூட ஊஞ்சல்ல ஆடுமே அது என்ன பாட்டு? அப்புறம் புதிய வார்ப்புகள் படத்தில் ரதி ஒரு பாட்டுல ஊஞ்சல் ஆடுவாங்களோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப் பாடல்களுமே ரசனையான பாடல்கள். ஊஞ்சல் பாடல்கள் என்ற தலைப்பிலா!

துளசிதரன்

கோமதி அரசு said...

ஊஞ்சல் பாடல்கள் பகிர்வு அருமை.
நல்ல தேர்வு அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இனிய காலை வணக்கம்.

ஜெமினி சாவித்ரி பாட்டிலும் வரும்.
என்னவோ தோன்றியதைச் செய்தேன். :)
இன்னிக்கு நிலா வந்த பிறகு., அதையும் சேர்த்திருக்கலாமோ
என்று தோன்றியது!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம்.

''கடைசி பாடல் பிரபுவின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதேப்போல் காதோரம் லோலாக்கு என்ற பிரபுவின் பாடலும் அவர் நடிப்பில் மிகவும் ரசிப்பேன்.''

எனக்கும் பிரபுவின் முகமும் நடிப்பும் பிடிக்கும்.
காதோரம் லோலாக்குப் பாடலிலும் இந்தப் பாடலிலும் வரும் முழுக்கை
ரவிக்கை அப்போது பிரபலம். மகளும் தோழிகளும்
அது போலத் தைத்துக் கொண்டார்கள்.அதுதான் இன்னும் நினைவில் இருக்கிறது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இன்று எ.பியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வீட்டு கல்யாண பதிவுக்கு ஜோடியாக தங்கள் தளத்தில் ஊஞ்சல் பாட்டுக்கள் பொருத்தமாக இருந்தது""
:)))) !!!!!!!!!. Thnak you ma.
Dear Kamala.

வல்லிசிம்ஹன் said...

Blogger ஸ்ரீராம். said...
"ஊஞ்சல் பாடல்கள் நல்ல கலெக்ஷன். இருங்கள்.. எனக்கு ஏதும் ஊஞ்சல் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா என்று பார்க்கிறேன்."

நீங்கள் சொன்ன பாடலைச் சேர்த்துவிட்டேன். எத்தனை அருமையான பாடல் அது!!!
மிக நன்றி.
தூளிக்குத் தனிப் பதிவு வைத்துக் கொள்ளலாமா. ஆனால் தூளியை ஆட்டும்போது
ரொம்ப சோகமாக நடிப்பார்களே:(


பச்சை மலைப்பூவு விட்டுட்டேனே.
எத்தனை அழகான பாட்டு.

பழைய பாடல் ஒன்றில் ஊஞ்சலில் ஆடாமல் ஊஞ்சலைப்
பாடுவார்கள். சரோஜாதேவி. செங்கோட்டை சிங்கம் படம்.
ஆஹாஹா ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல் மேலே:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் அவர்களுக்கு வணக்கம்.
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சலையும்

மறந்து விட்டேன் சார்.
நன்றி.

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராம் ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாட்டு?//

எல்லோரும்போல எனக்கும் அந்தப் பாட்டுதான் முதலில் நினைவுக்கு வந்தது.  படம் பெயரே பொன்னூஞ்சல்.  ஆனால் காட்சியில் ஊஞ்சல் வராது என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
ஆஹா. இவ்வளவு எக்ஸ்பர்ட்ஸ் இருக்கீங்களே.
பாரும்மா
இந்தப் பாட்டு ஒண்ணும் எனக்குத் தோணாமப் போச்சே!!!

ரம்பா பாட்டா. "மல்லிகையே மல்லிகையே வா?"
இல்லை ரம்பா பிரபு பாட்டா?

ஆமா ரதி கூடப் பாடி இருக்காங்க.. ஊஞ்சல் 2
பதிவு போடலாமா.:)
அச்சோ ரொம்ப நன்றிப்பா.
மிக மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா. எல்லாமே ஊஞ்சல் வரும் பாடல்களே. இதற்கு மேலே ஸ்ரீராம் கீதா
சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

ஊஞ்சல் வரும் காட்சிகள் தோன்றத் தோன்றப்
பதிந்தேன் மா.
நன்றி. உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

இதுக்கு நான் கொடுத்த கருத்து எங்கே? பின்னூட்டங்களுக்கான பதில் வருகிறது. ஆனால் என்னோட கருத்தையோ அதுக்கான ரேவதியின் பதிலோ இல்லை! :)))) காக்காவா? ரோபோவா? யார் தூக்கிச் சென்றார்கள்> :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இந்தப் பின்னூட்டம் ஒன்றுதான் வந்தது.மீண்டும்
ஜிமெயிலில் பார்க்கிறேன்.
நன்றி மா.@Geetha Sambasivam.

Geetha Sambasivam said...

வல்லி, இன்னிக்கு எ.பியில் சுமார் ஆறேழு கருத்துகள் கொடுத்திருந்தேன். இரண்டோ, மூன்றோ தான் வந்திருக்கு. மற்றவை என்னோட மெயில் பாக்சில் பத்திரமாக இருக்கின்றன. ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்.

Geetha Sambasivam said...

காதோரம் லோலாக்கு பாடல் எனக்கும் ரொம்பவே பிடித்த பாடல். எங்கானும் ஊர்களுக்குக் காரில் போகும்போது இந்தப் பாடல் வந்தால் ரசித்துக் கேட்பேன். படம் பெயரெல்லாம் தெரியாது. பிரபு என்பது இப்போது அறிந்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
அடக் கடவுளே. ஒரு வேளை நெட் பிரச்சினையா.
இதோ இந்த இரண்டு கருத்துகளும் வந்திருக்கின்றனவே.!!!

வல்லிசிம்ஹன் said...

ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்.

5:11 PM !!!!!!!

"காதோரம் லோலாக்கு பாடல் எனக்கும் ரொம்பவே பிடித்த பாடல். எங்கானும் ஊர்களுக்குக் காரில் போகும்போது இந்தப் பாடல் வந்தால் ரசித்துக் கேட்பேன்"

அது மாட்டு வண்டிப் பாடல்களோடு சேரும் .சுகன்யா பிரபு
பாடல் என்று நினைக்கிறேன்.
நல்ல வேளை இந்தப் பின்னூட்டமாவது வந்ததே கீதாமா.
நன்றி.