முன் போல் இல்லை .உலகம் மாறி வருகிறது என்று
நான் நினைக்கும் நேரம் இதைப் போல
செய்தி கிடைக்கிறது.
பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்
ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது
அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.
வீட்டுக்குச் சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.
அவருக்கு இரண்டு மகள்கள்.
பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.
அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.
பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.
மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்
அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.
பெண்ணுக்கு மாமனார் இல்லை.
மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ
ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.
இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை
அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு
சென்னைக்கு வந்துவிட்டது.
அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.
அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு
நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.
முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.
திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்
வந்தார்கள்.
'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா
என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை
'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு
சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை
மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.
''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,
நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,
நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.
அவளை வெளில போகச் சொல்லிட்டு,
நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.
அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா
நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்
விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்
பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்
பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.
உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு
சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா
நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்
கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.
படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்
நடந்ததைச் சொல்லிவிட்டாள்.
அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்
சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.
என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே
விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,
அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.
முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.
இப்ப பேத்திக்கு முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா
அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.
பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்
நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்
என்று என் மனம் தத்தளித்தது.
இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.
'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்
சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது
தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''
என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா
அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு
முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.
அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த
மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.
திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி
காதும் குத்திவிட்டுத் திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.
கோயிலில் முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன்
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு
வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!
கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''
என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்
உறுதி கொடுத்திருக்கிறான்.
சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே
இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.
மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து'' வேலைதான் செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு
என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது
கொடுத்து உதவணும் அம்மாதான்""
என்றாளே பார்க்கணும்!!
இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.
எதற்கு வம்பு!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
நான் நினைக்கும் நேரம் இதைப் போல
செய்தி கிடைக்கிறது.
பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்
ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது
அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.
வீட்டுக்குச் சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.
அவருக்கு இரண்டு மகள்கள்.
பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.
அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.
பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.
மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்
அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.
பெண்ணுக்கு மாமனார் இல்லை.
மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ
ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.
இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை
அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு
சென்னைக்கு வந்துவிட்டது.
அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.
அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு
நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.
முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.
திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்
வந்தார்கள்.
'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா
என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை
'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு
சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை
மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.
''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,
நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,
நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.
அவளை வெளில போகச் சொல்லிட்டு,
நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.
அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா
நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்
விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்
பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்
பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.
உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு
சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா
நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்
கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.
படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்
நடந்ததைச் சொல்லிவிட்டாள்.
அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்
சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.
என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே
விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,
அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.
முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.
இப்ப பேத்திக்கு முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா
அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.
பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்
நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்
என்று என் மனம் தத்தளித்தது.
இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.
'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்
சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது
தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''
என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா
அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு
முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.
அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த
மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.
திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி
காதும் குத்திவிட்டுத் திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.
கோயிலில் முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன்
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு
வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!
கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''
என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்
உறுதி கொடுத்திருக்கிறான்.
சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே
இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.
மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து'' வேலைதான் செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு
என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது
கொடுத்து உதவணும் அம்மாதான்""
என்றாளே பார்க்கணும்!!
இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.
எதற்கு வம்பு!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.









