வல்லிசிம்ஹன்
எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
பரமாத்மாவை விட்டு ஜீவாத்மா பிரிய மாயை ஒரு காரணம்

எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
![]() |
| மானின் மேல் ஆசை வைத்து மாயையில் சிக்கிய மாது.. |
![]() |
| ஸ்ரீராமனின் கோபப் புருவ நெரிப்பும் அழகாக இருக்கிறதே.!!!!!!! |
![]() |
| அரங்க ராமன் மணந்த சீதை எனும் கோதை |
மேலே உள்ள சித்திரங்கள் அனைத்தும் கோபுலு அய்யாவின் கைவண்ணம்.
இந்தப் படகு படலத்தில் ஒரு கதை படித்தது
நினைவுக்கு வந்தது.
கைகுவித்து நிற்பது குகன்.
இந்தப் படகு இல்லாமல் , காலில் பாதுகை இல்லாமல் ராமன் ,தன் படகில் ஏறி க் கொள்வதற்கு
அந்தப் படகோட்டி மறுத்தானாம்.
சாமி கால் பட்டு கல்லிலிருந்து ஒரு அம்மா
வந்துட்டாங்களாம்.
என் கிட்ட இருப்பது இந்த ஒரு ஓடம் தான். சாமி கால் பட்டு அதுவும் மாறிவிட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன் என்றதும்,
ராமன் ,சீதை எல்லோருமே சிரித்துவிட்டார்களாம்.
ராமர் ,சீதையின் கரத்தை ப் பற்றியபடி ஏறி க் கொண்டு,
இந்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண் ,என் வாழ்க்கையில் இல்லை என்றாராம்.
ஸ்ரீராம் ஜெயராம் சீதாராமா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏








