Blog Archive

Saturday, January 04, 2020

மார்கழி 19 ஆம் நாள்.பாசுரம் குத்து விளக்கெரிய....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
குத்து விளக்கெரிய  பாடல் மார்கழி 19 ஆம் நாள்.

பாசுரம் 


அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாமாலை நற்பூமாலை சூடினாள்.
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே
தொல்பாமாலை பாடி அருள வல்ல பைவளையாய்.
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி
என்ற இன் நாமம் நாம் கடவா வண்ணமே நல்கு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்.
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
குவலயா பீடம் என்ற அசுர யானையை வென்று அதன் நான்கு
தந்தங்களையும் கொண்டு வந்த கண்ணன் செய்த
கோட்டுக்கால் கட்டிலில் மெத்தென்ற பஞ்ச சயனத்தில்
உறங்கும் கண்ணன் நப்பின்னையுடன் அணைத்தவாறு படுத்திருக்கையில்
கோதையின் பாசுரம் ஒலிக்க, தானே அருளவேண்டும் என்று
நப்பின்னைப் பிராட்டி எழும்ப,
இல்லை நானே செல்வேன் என்று கண்ணன்
விலக்க,
அவனை மைபூசிய கண்ணால் கட்டுப் படுத்துகிறாளாம்
பிராட்டி.
இதை அறிந்த கோதை பிணக்கம் கொள்ளாமல்
வந்து கதவைத் திறக்க வேண்டும் என்று
இறைஞ்சுகிறாள் ஆண்டாள். திறக்காமல் இருந்தால் அது தத்துவம் அன்று தகவும் அன்று
என்றும் உறுதியாகச் சொல்கிறாள்.

ஸ்ரீ கோதை திருப்பாதங்கள் சரணம் 

Related image



4 comments:

Geetha Sambasivam said...

நல்ல எளிமையான விளக்கம். படமும் காணொளியும் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

படித்தேன், ரசித்தேன்.

கோட்டுக்கால் கட்டில் செய்யப்பட விதமும் சொல்லியிருப்பது சிறப்பு.

துரை செல்வராஜூ said...

மிக அழகான திருப்பாசுரம்...

வையகம் இன்புற்று வாழட்டும்...
ஆண்டாள் திருவடிகள் போற்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பதிவும்மா....

இனிமையான பாசுரம். கேட்டு ரசித்தேன்.