Friday, May 17, 2024
Thursday, May 02, 2024
அஞ்சலி ....உமா ரமணன்.....
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
இனிமையான குரல் வளத்தால் தமிழ் மக்களைமகிழ்வித்து வந்த திருமதி உமா ரமணன்
இறைவனை மகிழ்விக்க சென்று விட்டார்.
இணையைப் பிரிந்த திரு ரமணன் அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.
சென்னையில் இருக்கும் போது மியூசியானோ முழுவின் பல நிகழ்வுகளுக்குச்
சென்று ரசித்துக் கேட்டிருக்கிறேன்.
ஓ மானே மானே பாடல் கேட்கும் போது
நம்மையே மறக்கும் அளவுக்கு அவர்களின் குழு இசை
மெய் சிலிர்க்க வைக்கும். 1980 லிருந்து பல வருடங்கள்
இவர்களின் இசையை அனுபவித்திருக்கிறேன்.
திருமதி உமா ரமணனின் குரல் ஒரு அபூர்வ மென்மை
கொண்டது.
அவரௌக்கு இசைப் பயிற்சியுடன் நடனமும் தெரியும்
என்று பிற்பாடே தெரியும்.
திரு ரமணன் மேடை முழுவதும் பாட்டுக்கு ஏற்ப
அசைவார்.
உமாவோ ஆடாமல் அசையாமல் ஒரு அமைதிச் சிலையாக
உதடுகள் அசைவது கூடத் தெரியாமல்
பாடல்களை வழங்குவார்.
69 வயது இந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதே.
இசைத்தட்டுகளில் ,யூடியூபில் அவரைக் கேட்போம்.
அமைதி அடையட்டும் அவர் ஆன்மா.
Subscribe to:
Posts (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...