Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, August 21, 2014

இன்னுமொரு கொசு வர்த்தி



நாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப் படும்.
எப்போதும் எதையாவது தேடாவிட்டால் எனக்கு அன்றையப் பொழுது சரியாகப் போகவில்லை என்று அர்த்தம்:)

எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்,.
அதுவும் போன மாதம் தேடின பொருளாக இருக்கும். அப்படி ஒரு அவஸ்தைப் பட்டோமே இங்க இருக்கே என்னும் முணுமுணுப்போடு அதை மீண்டும் பத்திரமான(மறுபடியும் தேடும் விதமாக) இடத்தில் வைத்துவிடுவேன்:)

போன வாரத்தில் தேடிய விஷயம் என் மருத்துவர் எழுதிக் கொடுத்த என்னைப் பற்றியும் என் உடல் நலம் பற்றியுமான
குறிப்புகள் கொண்ட புத்தகம்.

அதை நான்கு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். இணையம் வர நேரமில்லை, தொலைபேசியில் யார் பேசினாலும் அவர்களிடம் புலம்பல்கள்,
இரண்டு நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் கூப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.:))
கோவில் பைகள், துணிக்கடைப் பைகள், அங்காடிப் பைகள் ....எல்லாம் வித விதமான பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அப்படி ஒரு பையில் வைத்ததுதான் பழைய கடிதங்கள்.

ஒரே ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த தோழிகளின் கடிதங்கள் வர்ணம் மாறி, எண்ணம் மாறாமல் 17 வயதுப் பெண்கள் அப்போது கடந்து கொண்டிருந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு
கிடைத்தது.

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டோம் என்பதை உணர்த்திய கடிதம் ஒன்றை வாசித்தேன்.
இதோ அந்த 1965 அக்டோபர் மாதம் எழுதப் பட்ட கடிதம்.
நாற்பத்து நாலு வருடங்களுக்குப் பிறகு கூட என்னை வசீகரித்த வரிகள்.
எழுதியவர் மல்லிகா என்கிற மாலு,.
*******************************************************************************

அன்பு ரேவா,
எனக்குத்தான் இத்தனை நாட்களாகக் கடிதம் எழுத நேரம் இல்லை. உனக்குமா.

இல்லையாகில் நான் , கடிதம் எழுதினால் ,பதில் கடிதம் போட்டால் போதும் என்கிற எண்ணமா.அவ்வளவுதான் நம் நட்பா.
கடந்த ஒரு மாதத்தில் கடந்த ஒரு வருடத்தை எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
(just for reply sake if you want to write to me ., pl give up that idea.)
பொழுது போவதற்காகக் கடிதம் எழுதுபவள் நானில்லை.
எனக்கென்று ஏற்பட்ட வாழ்க்கையில் உண்டான கஷ்ட நஷ்டங்களை அறிவாய்.
உன் கடிதம் வந்து பத்து நாட்கள் ஆகின்றன. நீ பசுமலைக்குப் போய்விட்டாய் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எவ்வளவு விஷயங்கள் நடந்தது உனக்குத் தெரியுமா.
தம்பி கண்ணனுக்கு பொன்னுக்கு வீங்கி,
தங்கை ஜானி(ஜானகி)க்கு ஹார்ட் வீக்காம். தினம் என்ஜெக்ஷன் (ஊசி) போட்டுக் கொள்கிறாள் .
என் தலையோ வலிப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நன் படிப்பேனா, ஆஸ்பத்திரிக்குப் போவேனா
,சமைப்பேனா நீயே சொல். உனக்குக் கடிதம் எழுத எனக்கு ஏது நேரம்!!
இதற்கிடையில் எனக்கொரு மகன் பிறந்தான்.
முழிக்காதே.
என் அக்காவிற்குப் பிறந்தால் என் மகன் தானே!!
பட்டுவிற்குப் பிறந்த மகன் அழகுச் செல்வம். அவனையும் அவன் அம்மாவையும் அவள் புக்ககத்தில் விட்டு வந்தோம்.

நீ கல்லூரியில் இல்லாதது எனக்குத் தான் நஷ்டம். நம் குரூப் சிதறிவிட்டது. ராஜேஸ்வரி ஒரு பக்கம் ,நான் வேறு கிளையில் படிக்கிறேன். கிரிஜா இன்னோரு கிளை.

ஒரே கல்லூரியில் இருந்தும் , நாங்கள் எப்பவாவது பார்த்துக் கொள்வது ஆர்ட்ஸ் காலேஜ் பஸ் நிறுத்தத்தில்தான்.
ஹை!! பை!! சீ யூ என்று போய்விடுகிறது.

எது நம் நட்பைப் பிரித்தது என்று கூடத் தெரியவில்லை.
போகட்டும் நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்.

நிறையப் படி. கல்லூரிக்குப் போகவில்லையே என்று வருத்தப் படாதே.

இப்போது பி.யூ.சி யில் சேர்ந்திருக்கும் பெண்கள் நம்மைப் போல இல்லை.
ஒரே வண்ணமய நாகரீகப் பட்டாம்பூச்சிகள் போல இருக்கிறார்கள்.
எனக்கு வயதாகி விட்டதோ:))

உன் விவரங்களை எழுது. அம்மா அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.
தம்பி மதுரையில் பி.யு.சி சேர்ந்துவிட்டானா.
சின்னத்தம்பி என்ன படிக்கிறான்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உன் அன்புத்தோழி, மாலு.
11/10/65
சென்னை.
பி.கு.
எப்படி என் தமிழ்க் கடிதம். அசத்திவிட்டேனா????
உனக்காகத் தமிழில் எழுதினேன்.(இங்கே கொஞ்சம் சிரித்துக் கொள்) .
*****************************************************************************
என் குறிப்பு.
இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, June 02, 2012

உறவுகள் தொடரும் வழி

அக்கா தங்கை    ஆநந்தம் எப்பொழுதும் தொடரும்.



வெகுநாட்களுக்குப் பிறகு என்    பெரியப்பா மகளைச் சந்தித்தேன்.அவள்  எனக்கு அக்காதானே.
ஒரே ஆநந்தம்,ஆரவாரம்  வம்பு, விசாரிப்பு எல்லாம் தொடர்ந்தது.

வீட்டுப் பெரியவர் ஒருவரின் சதாபிஷேகத்துக்காக்  கூடியிருந்தோம்.

அவர் ஒர்  சிறந்த ஆன்மீகச்  சிந்தனையாளர். தனக்கு இந்த
வைபவமெல்லாம்  செய்வதில் அவ்வளவு     இஷ்டமில்லை.
இருந்தும் அவர்களது குழந்தைகளின் விருப்பத்தை மீற முடியாமல்
ஒரே  ஒரு  நண்பர்கள்  குழாம்   சந்திப்புக்கு மட்டும் சரியென்று சொன்னார். நாங்கள் அனைவரும்  புடவை வேட்டி மாலைகள் சகிதம் அவர்தௌ பெரிய வீட்டில்   கூடினோம்.

அமிர்தமான சாப்பாடு.
அமிர்தத்திலும் சர்க்கரை இருந்ததால் கொஞ்சமே எடுத்து:)

சாப்பாடை முடித்துக் கொண்டேன்.
அப்புறம்   ஆரம்பித்தது அரட்டை.

ஒவ்வொருவராக   தம்பதிகளுடனும் மற்றவர்களுடனும் படங்கள்  எடுத்துக் கொண்டோம்.வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)
  யார் யார் என்ன புடவை,என்ன  பரிசு  என்ற   ஆராய்ச்சி தொடர்ந்தது.

எல்லாவற்றிலும் நடு நாயகமாகப் பெரியவர் உட்கார்ந்து கொண்டார்.
புடவைகள் ஒரு புறம்   வேஷ்டிகள் ஒரு புறம்/.


தொண்டையைக் கனைத்துக் கொண்டு என்ன நான் இனிமேல் பேசலாமா

என்றார்.
ம்ம்ம்.  பேசுங்கோ என்று ஒரே கூச்சல்.
ராதா நீயும் வா  என்று ஊஞ்சலில் மனைவியையும்
உட்காரவைத்தார்
கண்கொள்ளாக்காட்சிக்கு   நாங்கள் ராதாகல்யாண வைபோகமே. மாதுமாமா
கல்யாண வைபோகமே பாடினோம்.

பத்துமுழம்ஜரிகை  வேஷ்டி வாங்கினது யார் என்று முதல் கேள்வி.
அவரது தம்பி வந்தார். ஏண்டா என் உடம்பைப் பார்த்தியா. நான் தாங்குவேனா
இந்த வேஷ்டியை?  அதைக் கையிலெடுத்தார்,
இன்னோரு தம்பியை அழைத்து ''டேய் உன் சதாபிஷேகத்துக்கு இதை வைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டார்.
அந்தத் தம்பி ஆறடி உயரமும் ,கொஞ்சம் பருத்த  உடலும் கொண்ட அந்தத் தம்பி வெட்கத்தோடு வாங்கிக் கொண்டார்.

தனக்கு வந்திருந்த எட்டு முழ  பட்டு வேஷ்டியை
இரண்டாவது தம்பிக்குக் கொடுத்தார்.
 சேலம் பருத்தி வேஷ்டியைத் தான் எடுத்துக் கொண்டார்.

பரிசுப் பொருட்களைப் பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார்,.
நான்  அந்த ராதாமாமிக்கு நல்ல பச்சையில் சிகப்பு ஜரிகைபோட்ட
பட்டு பருத்திப் புடவையை வைத்திருந்தேன்.

அதன் கதி என்ன ஆகப் போகிறதோ என்று பார்த்த போது மாமி அதை எடுத்துத் தன் பின்னால் வைத்துக் கொண்டுவிட்டார்.

''தலை நரைச்சது ஆசை நரைக்கலியே என் ராது' என்று மாமா  பாட்டு வேறு பாடினார்.
ஆமாம் நீங்கள் பாதி சந்யாசி. எனக்கு இன்னும் நிறைய கல்யாணம் எல்லாம் போய்வரணும். இதை நான் கொடுக்க மாட்டேன் என்று சிரித்தார் மாமி.

என் கைக்கு நல்ல ரோஜா நிற    காட்டன் புடவை வந்தது. அது  கனம் ஜாஸ்தி என்பதால்   எனது கனமான் உடலுக்குப் பொருத்தம் என்று மாமி கொடுத்துவிட்டார்.
இப்படியே தொடர்ந்தது.

அருமையான காப்பி,டிபனுடன் அந்தப் புதுமைத் தம்பதியரிடமிருந்து விடை பெற்று நானும் அக்காவும் வீடு வந்தோம் அந்தவம்பை இன்னுமொரு நாள் பார்க்கலாம்:)










 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்










Saturday, March 17, 2012

டிஸ்கி பதிவு (சென்ற பதிவுக்கான பின்னுரை)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நெல்லைக் குசும்பு  என்பதெல்லாம் ஒரு தனித்துவமான குணம் இல்லை.
எல்லா ஊர் மக்களிடமும் இருப்பதுதான்.

ஒருத்தரை ஒருத்தர் விமர்சிக்க, சிலசமயம் புண்படுத்தப்  பலசமயம் கேலிகாட்ட
இந்தக் குசும்பு என்னும் சிறு   கருவி பயன்படும்.

இதில் எல்லா ஊர்களிலும் காணப்படும் குணம்தான். தஞ்சைக் குசும்பு பற்றிக் கேட்டால்  நம் கீதாசாம்பசிவம் சொல்வார்கள்.
கோவையில் நான் கண்டதெல்லாம் நட்புதான்.நல்ல மரியாதை.

மற்ற ஊர்க்காரர்களுலும் மிகுதியாக நல்லவர்களையே தான் கண்டு பழகி வந்திருக்கிறோம்
சில மனிதர்கள் இந்த ஊரென்றெல்லாம் சொல்ல முடியாது.
ஊரென்ன  செய்யும். அவர்கள்
பேச்சில் அடக்கிவாசிக்கப்பட்டாலும் பீறிட்டு வரும்  அடர்த்தியான வார்த்தைகள். கூராயிருக்கும்
பென்சில் முனை போல.
எனக்குத் தெரிந்த  வட்டத்தை  மட்டும் சொல்கிறேன்:)

நாம் ஒதுங்கிப் போனாலும் மேல பாய்ந்துலேசாகக் கீறும்:)

இந்த மாதிரி ஒரு சம்பவத்தைத் தான் வேடிக்கையாக எழுத இந்தத்
திருமணத்தில் நடந்த மைக்கூத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒன்றுமில்லாத  சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனக்கசப்பை
சம்பந்தமில்லாதவர்களே  கிளப்பிவிடுவார்கள்.
அதையும் மீறிச்  சுமுகமாக நிறைவேறும் சம்பவங்கள் அழகு.
யாராவது என்ன ஊரைச் சேர்ந்தவர்கள்  என்று கேட்டால் ,
பூர்வீகம்  திருநெல்வேலி என்று சொன்னாலும் தொடர்பு விட்டு நிறைய நாளாச்சே.
எனக்குத் தெரிந்து  எங்க அப்பாவின்  நமட்டுச் சிரிப்புதான் நல்ல குசும்பு.:0)
அதவும் அம்மாவைக் கேலி செய்து அம்மா முகம் சிவக்கவைத்துவிடுவார்.:)

அதனால்  ஒரு நல்லவார்த்தையைத் தப்பாகப் புரிந்தவரைப் பற்றி எழுதப் போய் நேற்றைய பதிவு வந்துவிட்டது.
எங்க ஊர்


மதுரைன்னு சொல்லலாம் என்றால் பெரியவர்கள் இருந்தவரை அது  சொந்தம்.

எல்லாம் விட்டுச் சென்னைக்கு வந்தே37  வருடங்கள் ஆச்சு.
இதில் நமக்கு யாரோட குசும்பும் ஒட்ட வாய்ப்பே இல்லை.

யாரோ திருநெல்வேலிக்காரர்,  ஏதோ ஒரு சமயத்தில் ஒரு குடும்பத்தில்
தகறாரு  செய்துவிட்டால்  நெல்லை முழுவதும் விஷமக்காரகள் என்று
சொன்னார்  பாதிக்கப் பட்டவர்.
அந்த வார்த்தை என்னைக்  குடைந்து கொண்டே இருந்தது.
சொன்னவருக்கு நானும் அங்கிருந்துதான் வருகிறேன் என்று
தெரியும்.
தெரிந்தே  சொல்கிறார் என்றால்.. கொஞ்ச நேரத்துக்கு  வருத்தமாக இருந்தது.

யாரோ செய்த  தவறுக்கு நம்மைச்   சுட்டுகிறாரே என்று நினைத்தேன்.
எதுவுமே  பலிக்கும் இடத்தில்  ஸ்வாதீனம்(அதாவது இவர்களைச் சொன்னாலும் ரியாக்ட் செய்ய மாட்டர்கள் என்ற   தீர்மானம்!!)  நிறைய  இருக்கும்
அதனால்  பரவாயில்லை. மனசால மன்னித்துவிடலாம் என்று பெருந்தன்மையாக
நினைத்துக் கொண்டேன்:)
பதிவு போட்டால் தப்பில்லை இல்லையா!!!!!  ஒரு டைஜீன் சாப்பிட்டப் பலன் ஒரு பதிவு கொடுத்துவிடும்:0))))))))))))))))))))))))))))))

Tuesday, September 20, 2011

அன்பாலே வளரும் உறவுகள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1966இல் ஒரு  ஆண்டு நிறைவு.
ஐப்பசி மழை  விடாமல்  கொட்டுகிறது.
இன்னும் 4  நாட்களில்  எங்கள் முதல் மகனுக்கு   முதலாம் ஆண்டு   நிறைவு
  வருகிறது.
சேலத்திலிருந்து சென்னைக்கு வரச் சொல்லி மாமியார் சொல்லிவிட்டார்.

குடும்பத்துக்கு முதல் பேரன் .அவனுக்கு ஆண்டுவிழா சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டும். ஆடம்பரம் வேண்டாம்.

அந்தப் பெரிய வீடுகொள்ளும் அளவுக்கு மனிதர்கள் வந்தால் போதும்.
மறையுணர்ந்த முதியோர் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்லி மந்திரங்கள்
உரைத்தால் போதும் என்றதும்
,  சேதி தாங்கி வந்த கடிதத்திற்கு ''சரி''  சொல்லிப் பதிலும் எழுதிவிட்டேன்.

எப்பொழுதும் பெரியவன் பிறந்தநாளுக்கு முதல் நாள் தீபாவளி வரும்.
அதனால்
தீபாவளிக்கு வாங்கின  துணிமணிகள். அப்பொழுது பிரபலமாக இருந்த
ரயான் மிக்ஸ் (சின்னாளப்பட்டு இல்லை) புடவை  30 ரூபாய்க்கு வாங்கியாச்சு.
குழந்தைக்கும் குட்டி குட்டி சட்டைகளும் காலை இறுக்கப் பிடிக்கும் ட்ரௌசரும் வாங்கியாச்சு.
சிங்கத்துக்குக் கால்சராயும் வெள்ளை வர்ண டெரிகாட்டன்  சட்டை(அலுவலகத்துக்கு அதுதான் தோதுப்படும்.)

சேலம் ரயில் நிலையத்திலிருந்து வெகு பக்கத்தில் இருந்த
ஒரு இடத்தில் தான் அப்போது குடியிருந்தோம்.

எப்பவும் போல ரயில் கிளம்ப ஒரு மணி நேரம் இருக்கும் போது
வந்தவர், தான் குளித்து எங்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு
போய் நிற்கவும் சென்னை செல்லும்  இரவு ரயில் வரவும்  சரியாக இருந்தது.

நீலகிரி எக்ஸ்ப்ரஸ் என்று நினைக்கிறேன்.
ஒரே பெட்டி  மூன்று பேரின் துணிமணிகள் அடங்கியாச்சு.

ஒரு பிரம்புக்கூடை. வெந்நீர்  கொட்டி வைத்த  ஃப்ளாஸ்க்.
அமுல்ஸ்ப்ரெ  டப்பா.
எதுக்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஃபீடிங் பாட்டில்கள்.

எப்பப் பார்த்தாலும் அப்பா தோளில் தான் சவாரி பையனுக்கு.
அம்மாவிடம் சாப்பிட மட்டும்தான்   வருவார்.

சென்னை வந்து இறங்கினதிலிருந்து மழைதான். டாக்ஸி பிடித்து மைலாப்பூர்
வந்துசேர்ந்தோம்.
வாயில் கேட்டிலிருந்து வீட்டுக்குள் போவதற்கே ஐந்து நிமிடம் பிடிக்கும்.
குடையை எடுத்துக் கொண்டுவந்த மாமனார், என்னடா உன் பிள்ளை இத்தனை ச்சோனியா இருக்கான்!

சரியாக் கவனிப்பது இல்லையா.
அடுத்தாப்பில தாத்தா, (மாமனாரின் தந்தை)குழந்தையை ஒண்ணும் சொல்லாதடா. பாவம் பாலாரிஷ்டமா இருக்கும்.
வெங்கட்ரமண வைத்திய சாலையில் எண்ணெய் வாங்கித் தேய்த்துக் குளிப்பாட்டினால்  நிகு நிகுனு  ஆகிடுவான்.

ஆஜிப்பாட்டி வந்தார். குழந்தைக்கு பால் போறாது. நம் வீட்டுப் பால் சாப்பிட்டால் ஒருமாதத்தில் தேறிவிடுவான்.
மாமியார் கமலம்மா வந்தார், என்னைத் தனியாக அழைத்தார்,'முதல்ல போய் மாடியில்
பெட்டியை வைத்துவிட்டுக் குளித்துவிட்டு வா, பிறகு குழந்தையைப் பற்றிப்
பேசலாம்'' என்று எங்களை மாடிக்கு அனுப்பினார்.

இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டே ,பையன்  வாயில் விரலை வைத்துக் கொண்டு  சிரித்தான்.

எனக்குத் தெரியும். அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று.
நீங்க சொல்றதெல்லாம் சொல்லுங்க. நான் சாப்பிட மாட்டேன்''  என்பதுதான்:)

இப்ப  இந்த சம்பவம்  நினைவுக்கு  வருவதற்குக் காரணம்

66இல் பிறந்த  பெரியப்பாவின்  தம்பி பையனுக்குக் கடவுள் கிருபையில்
ஆண்டு நிறைவு இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது.
இப்பொழுதும் அதே மழை.

இந்தக் குழந்தையின் பிறந்த நாளுக்கு உங்கள் எல்லோரிடமும் ஆசி வேண்டி
நிற்கும்

பாட்டியும் தாத்தாவும்.
Posted by Picasa

Monday, July 25, 2011

ஹோல் புட் சூப்பர் மார்க்கெட்

பிஸ்கட்ஸ்
பிரெஞ்ச்
ப்ரெட் ரோல்

பார்க்க உள்ளம் கொள்ளை போனது. நாவுக்கு ஏற்றது,வயிற்றுக்கு வேண்டாம்:)
நலம் வாழ நாம் தேடும் காய்கறிகள்.
தானிய வகையறாக்கள் சுத்தம் படு சுத்தம்.
ஒரு விதமான  ரொட்டி வறுத்தது.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முழுமையான உலகம்  சாப்பாட்டுக்கு  மட்டும்... என்றால் இந்தக் கடைதான்.
ஹோல் புட்   மார்க்கெட்  என்ற இடம்.
நம்மூர்  மருந்து அதாவது இயற்கை மருந்துகள்.
சந்தன சோப்புக்கட்டி,தைலம்
,எல்லாம் இயற்கையிலிருந்து எடுக்கப் பட்ட அழகு சாதனங்கள். விலை இருபத்தியேழு டாலரிலிருந்து ஆரம்பம்:)
அங்கு உணவருந்தவும் ஒரு நாள் சென்றோம்.

என்னைப் போல தாவிர பட்சினிகளுக்கு ஏற்ற  பலவித  சாலட் வகையறா.
கொண்டைக்கடலை ,கீரை,காய்கறிகள் கலந்த    சூப்  வகைகள்


.,  பேரன்களுக்கும் தாத்தாவுக்கும் வித விதமான
ஐஸ்க்ரீம்

வயிற்றுக்கு இதமான உணவு.
நல்ல
  உணவு. நல்ல உணர்வு.



Posted by Picasa

Monday, March 28, 2011

1954 லிருந்து 1960 வரை தொடர்கிறது வாழ்க்கை.திருமங்கலம்

செம்பருத்தி  அப்பாவின் கைவளம்
நித்யமல்லி  அம்மாவுக்கு
நந்தியாவட்டைப் பூ  கோவிலுக்கு


6:17 AM 3/28/2011
வரலாறு  1954 லிருந்து 1960 வரை திருமங்கலம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்  இந்தக்கதையை எழுதலாம் என்ற யோசனையை
எனக்கு  உணர்த்திய,
வல்லமை இதழ் ஆசிரியர்

திரு அண்ணா கண்ணனுக்கு என் நன்றிகள் பல.
************************************************************
1954இல்  திருமங்கலம் இப்பொழுது போலப் பெருமைகள் எல்லாம் (!!)
இல்லாமல் ஒரு சாதாரணமான டவுன் மாதிரியும் இல்லாமல் கிராமம்
ஆகவும் இல்லாமல்  ஒரு தாலுகா ஆஃபீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரே ஒரு தபால் அலுவலகம், ஒரு பி.டபிள்.யு.டி
ஆபீஸ்,
நகரத்துக்குப் பிரதானமாக ஒரு சொக்கநாதர் மீனாட்சி கோவில்,
ஆனந்தா தியேட்டர், ஒரு கஸ்தூரிபாகாந்தி ஆதாரப் பள்ளி, ஒரு பெண்களுக்கான
ஹைஸ்கூல்,
ஆண்களுக்கான  பி.கே.என் பள்ளி.
ஒரு தரமான ஆனந்தபவன் ஹோட்டல், கோவிலை ஒட்டி ஒரு சத்திரம்,
அதைத் தாண்டிப் போனால் ஒரு ஆறு.
 அப்போது அது பழையாறு என்று சொல்வார்கள்.
வைகை ஆற்றின் கிளை என்று நினைக்கிறேன். அதில் நாங்கள்
 நடந்தே கடப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் தான்:)
ஒரு அரசு மேற்பார்வையில் இயங்கும் நல்ல ஆஸ்பத்திரி.
 என்னுடைய பல காயங்களுக்கு  மருந்து போட்டுக் குணப்படுத்திய
 மருத்துவர் அம்மாவும்,கம்பவுண்டரும் அங்கே இருந்தார்கள்.

ஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து அப்பாவுக்குத் திருமங்கலத்துக்கு மாற்றியது,
அம்மாவுக்குத்தான் மிகவும் சந்தோஷம்.
நீண்ட நெடும் பயணமாகச் சென்னைக்கு எங்களை அழைத்துப் போவது அவருக்குக் கொஞ்சம் சிரமம்
என்பதற்காக இல்லை.
சென்னைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் வந்துவிட்டோம் என்று சொல்வார்.

எங்களை உற்சாகப் படுத்தவோ ,நோயுற்ற நாட்களில்,கூடவே உட்கார்ந்து நேரங்களில்
தலைவலியோ,உடம்பு வலியோ அம்மாவின் வார்த்தைகளில் ஓடிவிடும்.
இதோ முழுப்பரீட்சை வந்துடும். அப்புறம் என்ன பண்ணனும்???
என்று ஒரு கேள்வி வைப்பார்.
மெட்ராஸ் போணும்'' என்று ஒரே கோரஸாக நாங்கள் பதில் சொல்ல.

ஓ!! அப்படின்னால் இந்த மருந்தெல்லாம் சீக்கிரம் சாப்பிட்டு மூணுநாளில்
சரியாகப் போகணும் சரியா' என்றபடி கசப்பு மிக்ஸரையும்
 விழுங்கவைத்துவிடுவார்,

திருமங்கலம் வீடு அமைந்தது ஒரு அதிர்ஷ்டம். வெகு அழகான வீடு.
 ''அங்குவிலாஸ்'' என்று எழுதப் பட்டிருக்கும் கட்டிடம் இன்னும் அங்கேதான் இருக்கிறது.
 அந்தப் புகையிலைக் கம்பெனியின் கோடவுன் அங்கே இயங்கி வந்தது.

எங்களுக்குப் பிடித்தது அந்த வீட்டின் பெரிய முற்றம் தான். வாயில் கதவுக்கும்
 வீட்டின் கதவுக்கும் நடுவில் நீண்ட பாதையாக சிமெண்ட் தளத்தில்
போடப்பட்டிருந்த அந்த முற்றமும் அதில் நிழலுக்கு  அப்பா போடச்சொன்ன பந்தலும்
மதுரையிலிருந்து வரும் தாத்தா பாட்டிக்கு
மிகவும் பிடிக்கும். ஒரு ஈஸிச்சேரில் தாத்தா படுத்துக் கொள்வார்.
பாட்டி அந்தப் பந்தலின் குளிர்ச்சியில் இரவு வெக்கையைத் தாக்குப் பிடிக்க
 ஒரு பனைவிசிறியைக் கையில் பிடித்துப் பாயில் படுத்துக் கொள்வார்,.
மாமியார் மாமனாருக்கு வேண்டும் உபசாரங்களைச் செய்துவிட்டு அம்மா
சமையல் அறையைச் சுத்தம் செய்வார்.

இரவு எட்டுமணிக்கெல்லாம் பெரியதம்பி படுத்துக் கொள்வான் தூங்கியும் விடுவான்.
 சின்னவனுக்கு அப்பாவிடம்
 கதை கேட்காமல் தூங்க முடியாது.
அப்பாவின் பனியனை ஒரு கையில்  பிடித்துக் கொண்டு, ஒரு விரலைச் சூப்பியபடி
ராமாயண மஹாபாரதைக் கதைகளையும்,
பவான்ஸ் ஜர்னல் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் வழி தான்
அறிந்து கொள்ளும் முற்றும் புதிதான கதைகளை அப்பா சுவை படச் சொல்லுவார்.
தாத்தவும் நாராயணா குழந்தைகளுக்கு எப்பவும் நல்ல சத்துள்ள
ஆகாரம் இந்த மாதிரி நீதிக் கதைகள் தான்.
வளர்ந்த பிறகு தப்பு செய்யக் கூடத் தோன்றாது'' என்று சொல்வார்.
முற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக
நிலா தெரிந்து கொண்டே இருக்கும்.

நிலாவின் இதமும் அப்பாவின் குரலும் தூக்காத்துக்குத் தாலாட்டு.
அதற்குப் பிறகு அப்பா அம்மாஅவுக்கு உதவியாச் சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு
ஒன்பது மணி ஆங்கிலச் செய்தியில் மெல்வின் டிமெல்லொ அன்றைய நிலவரத்தைச் சொல்ல
அத்துடன் அன்றையப் பொழுது முடியும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது அம்மாவையே நடுங்க வைத்த
இரு நிகழ்ச்சிகள்.
ஒரு கட்டுவிரியன் பாம்பின் வருகையும்,
திருடன் கிணற்றங்கரையில் வைத்திருந்த வெண்கல  பெரிய
 அரிக்கன் சட்டியையும், வெந்நீர்ப்பானையையும்
எடுத்துச் சென்றதுதான்.
எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு எல்லைச் சாமிகள் கோவில் இருந்தது. அதில் சாதாரணமாக
மாலை நான்கு மணியிலிருந்து உறுமி மேளச் சத்தமும் ,உடுக்கைச் சத்தமும்
 மெதுவாக ஆரம்பித்து இரவு பன்னிரண்டு மணிஅளவில் உச்ச கட்டத்தை அடையும்.
இது வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடப்பது வழக்கம்.

அந்தக் கோவில் சுவரிலிறுந்து எட்டிப்பார்க்கும் கொடுக்காப்புளிப் பழம் நன்றாக
இருக்கும்.
ஒரு மதிய வேளையில் பக்கத்துவீட்டுக்குப் போககொல்லைப் புறக் கதவின்
அருகே வந்த போது ஏதோ வித்தியாசமான டிசைனில் அச்சுப்
 பதித்தாற்போல் பதிந்திருந்த  பழுப்பும் கறுப்பான அந்த
 ஜந்துவைப் பார்த்ததும் பயத்தில் கலவரப் பட்டவர்,
உடனே சுதாரித்துக் கொண்டு மாடிப் படிகள் வழியாக மொட்டை மாடியில் ஏறி
 அடுத்த வீட்டைப் பார்த்து அழைத்திருக்கிறார்,.
கூடவே அங்கு விலாஸ்  லாரிப் பணியாளர்களையும் அழைக்க
அவர்கள் அந்தப் பாம்பை அடித்திருக்கிறார்கள்.
நாங்கள் வரும் வரை அம்மா சின்னத்தம்பியை வைத்துக் கொண்டு
 வீட்டிற்கு உள்ளயே இருந்தார்கள்.
எங்களையும் வெளியெ விடவில்லை.
அப்பா வந்ததும் முதல் வேலையாக  வீட்டின் சமையலறைக் கிணற்றுக்கு மேலே
 நெருக்கமான வலை போடச் சொன்னதுதான்.
ஒரே கிணற்றுக்கு இரண்டு பக்கம் இறைக்கும் வசதி இருந்தது.
கிணற்றின் ஒரு பக்கம் சமையல் அறையும் ,பாத்திரம் தேய்க்கும் முற்றமும்.
மறுபக்கம் தோய்க்கும் கல்,  தண்ணீர்த்தொட்டி,அதனருகே  வெளியே
 தோட்டத்துக்கான பாத்திகள் கட்டின வழித்தடங்கள்.
அப்போதெல்லாம் ட்ரை லெட்ரின் தான். அதற்குத் தனியாக ஒரு அம்மா  வருவார்.
 அவரிடம் அம்மா அரிசி கழுவிய நீரையும் கொஞ்சம் வடித்த சாதத்தையும் போட்டு
 அவருடைய பானையில்  கொடுப்பார். அடுத்த நாள் பசும் சாணம்
வாசலில் ரெடியாக உட்கார்ந்திருக்கும் .பண்ட மாற்று.

நாகம்மா என்பவர் வந்து எல்லா உதவியும் செய்துவிட்டுப் போவார்.
உமி வேண்டுமா இதோ என்று ஒரு ஓட்டம்.
வெந்நீர்  அடுப்புக்கு  வரட்டி வேண்டுமா அதற்கும் ஓட்டம்.
அவர் ஓடினால் கூடவே நானும் ஓடுவேன்.

அம்மா  உமியைக் குமித்துக் கற்பூரம் ஏற்றி உள்ளே வைத்து
அது உமிக்கரி ஆகும் வரை நானும் கூட இருந்து பார்த்துக் கொள்வேன்.
ஒவ்வொரு மாதத்துக்கும் அதுதான் பல்பொடி. அம்மா அதில் உப்பும் சேர்ப்பார்.
மணக்க மணக்க  வாயில் போட்டுப் பற்களைத் தேய்த்தால் அந்த சுகானுபவமே தனி.


இன்னும் வரும்:0)












எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 24, 2011

பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)



அன்பு  சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)
நன்றி  மா

அம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.

தாயார் வீடு  சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு  புதிதாகப் பிறந்த பேத்தியின்
மீது  மிகுந்த  பாசம்.
புண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.
நெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்
 சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள்.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்தார்.
புரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற
ஏற்பாடு செய்து  வீடு களை கட்டியது.
அம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.
அம்மாவின் அத்தை,மாமாக்களும் அங்கே.
சேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.

முத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.
''ஆமாம் முதல்  குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்
கவனிக்கணும்.
 இதுவும்  சின்னக் குழந்தையத்தான் இருக்கு.
பரவாயில்லை  தேத்தி விட்டுடலாம். ''
தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு
 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.
ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.
இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல
ஒரு சின்னக் குழந்தை.

பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.
 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்
அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""
என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு
தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.
அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!
அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்
ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.

மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்
வெளிவந்தது.

அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.
ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.
வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ
தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.

கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற
ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு
மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்
 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.
எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு
என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)
ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.
பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்
தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.
அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.
தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்
அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.
பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்
வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.
அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.

''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.

இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''
 இருக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.
திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.
ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான
கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!

பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு
முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.
பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)

மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த
நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்
நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))

என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))

இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை
அழைக்கிறேன்.
ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.

அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''
அன்பு  துளசிகோபால்
அன்பு  கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, March 11, 2011

அம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்

அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்
ஒன்று , மருத்துவ மனையில் அப்பா  சரியாகக் கவனிக்கப் படாதது.

அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.
அப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து
நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.
அவரவர் வேலைகளில் மூழ்கி
36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத  உயிரை இழந்தோம்.

ஒரே  ஒரு  பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.

அம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.
ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்
 போல நெற்றியில் திருமண்காப்பு,
''என்னம்மா  சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''
என்ற புன்சிரிப்புடனான கேள்வி.

அம்மா சொன்னது போல்  கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.
அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.
எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.

மதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்
உச்சக் கட்டத்தை  அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து
வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று
சொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.

அப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

என்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.
வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.
அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.
 கண்கள் திறந்திருக்க,பார்வை இல்லை.
அம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே
கைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.
வந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான்.
வேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம்  என்ன ஆச்சு என்று கேட்டதற்கு
''வயசாச்சு இல்லம்மா'',  என்று தன் தொலைபேசியில்  சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
அன்று எங்களுக்கு மிகவும் உறுதியாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.
இன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.

கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு
ஏற்கனவே   வல்லமை மின்னிதழில்  பிரசுரம்  ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு  மிகவும் நன்றி.

பலவருடங்களாக  மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி    சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.
தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.

அவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி 
நடைபாதையில்  உட்கார்ந்துவிட்டார். அதுவும்   சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.
கிட்டத்தட்ட   நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர்  அவர்கையிலிருந்த  டயபெடிஸ் ஐடி   அட்டையைப் பார்த்து அவரை
மருத்துவமனையில்  சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.
50 வயதே   ஆகும் அவரைக் காப்பாற்றிய   நல்ல மருத்துவரும் இருக்கிறார்.
இதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.


மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்'
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.

Sunday, January 09, 2011

முகங்கள்

மஹாபலிபுரம்   கடற்கரையில்...
செட்டிபுண்யம் கோவிலில்  பெருமாளை அழைக்கும் கிளி.
இவங்கதான்  போட்டிக்குப் போகிறாங்க. ஜனவரியின்  பிட் போட்டிக்கு.:)
இவர் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த முகத்துக்குரியவர். மிஸ்டர் கடோத்கஜன்:)
அழகு  பாலன். முருகன் ,கணத்தில் வந்து  காப்பாற்றும் கந்தனின்  நாமம்.
பெண்ணும் அவளது நண்பிகளும்.(எனக்கும் தான்)
பெண்ணும்   அவளது குடும்பமும்  ஊருக்குக் கிளம்பியாச்சு. புது வருடம் பிறந்து  இரண்டுமூன்று  நாட்களுக்குப் பிறகு  ஒரு நாள் சுற்றுலாவாக மஹாபலிபுரம் கிளம்பினோம்.  செட்டி  புண்ணியம் கோவிலில் முதல்   நிறுத்தம்.  மார்கழிப் பொங்கலை எதிர்பார்த்து  மனம்   குதித்தது.  அங்கிருந்தவரோ ஆறுமணியோடு பொங்கல்  தீர்ந்தது என்றார்.:(




  மறுபடிக் கிளம்பி  மஹாபலிபுரம் வந்து  சேர்ந்தோம். அங்க வந்ததும்  சக்தி இழந்துவிட்டேன்  என்றது எனது காமிரா.
என்ன செய்யலாம். பேரனது  காமிராவைக் கடன் வாங்கினேன்:)
அவன் எடுத்த படங்களை  எல்லாம்   என் கணினியில் ஏற்றும் போது, ஏதோ நினைவில்

டெலிட் செய்து விட்டது குழந்தை .  தாங்க முடியாத சோகத்தோடு   இருந்தான்.

அடுத்த நிமிடம், பரவாயில்லை பாட்டி, இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கு.
இன்னும் நிறைய  படங்கள் எடுப்பேன் என்று  தானே சமாதானமாகிவிட்டான்.

20  நாட்களுக்கு  வசந்தம்  வீசிய நாட்களைப் பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது யாரிடமாவது சொல்லி அறுவையும் போடலாம்.:)
கேட்பவர்கள் மனநிலையைப் பொறுத்திருக்கிறது:).

சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் நட்புகளுக்கும் வரும் தைப் பொங்கல்

நல்ல தருணங்களை அள்ளித்தரட்டும் என்று இறையை வேண்டுகிறேன்.













எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, November 20, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும் பயிரும்..2


நிலவும் வானும் நிலமும் பயிரும்


++++++++++++++++++++++++++++++++++++++++

10:42 AM 11/20/2010

இந்தக் கதை-சம்பவத்துக்கு அடிநாதம் ஒரு குடிப் பழக்கம் கொண்டிருந்த தந்தை.



அவர் பெயரெல்லாம் அவசியமில்லை. பாதிக்கப் பட்டவன் பரத். அவனுக்கு இப்போது தந்தையும்


அன்னையுமாக இருப்பவர்கள் அவனது மாமாவும் மாமியும் தான்.

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.



தூத்துக்குடியில் குடும்பம் நடத்திவந்த பரத்தின்

பெற்றோர்கள்,நல்லதொரு கம்பெனியின் ஆதரவில் ஆநந்த

வாழ்க்கை நடத்திவரும் போது நடுவில் வந்த வழக்கம்

இந்த மது அருந்துவது.

தூத்துக்குடியில் ஒரு செல்வந்தர் பரத்தின்

அப்பா அலுவலகத்தின் வாடிக்கையாளர்.



எப்பவும் எந்த விசேஷமாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலிருந்து வண்டி வந்து

இவர்களை அழைத்துப் போகும்.

வேற்று மதத்தினராக இருந்தாலும் வித்தியாசமெல்லாம் கிடையாது.

அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தன.



இன்னும் இரண்டு மூன்று தோழர்கள் சேர்ந்து கொண்டால் நேரம் போவது தெரியாது.

சீட்டுக்கட்டும்,மதுவும், மற்ற சகலகொறிக்கும் பண்ட்ங்களும் சேர்ந்து கொண்டு

முதலில் சந்தோஷமாகத் தான் கழிந்தது.



பரத்தின் அம்மா சைவம் என்பதால் அவளுக்குத் தோசையும்,ஊறுகாயும்

தயிர்சாதமும் அழகாக அலங்கரிக்கப் பட்ட தட்டில் வந்துவிடும்.

அந்த வாடிக்கையாளர்...க்ரிஸ்டோஃபர், வந்து பரத்தின் அம்மா சரியாகச் சாப்பிடுகிறாளா


என்று பார்த்துவிட்டுத் தான் போவார்,.

நல்ல மனம்.அவரது மனைவி குணவதி அம்மாளும் அப்படியே. அவளும் வயதில் பெரியவள் தான்.

ஆனால் அசராமல் கணவரின் விருந்தினர்களை முகம் சுளிக்காமல்

கவனிப்பாள்.

ஒரு இரு வருடம் இதுபோல் ஓடியது.

பரத்தின் தந்தைக்குத் திருநெல்வேலிக்கு மாற்றல்.



இதற்குள் க்ரிஸ்டோபருடனான நட்பு மிகவும் வலுத்துவிட்டது. உண்மையிலியே

மிக்க அன்பு பூண்ட நண்பர்கள் ஆனார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்.

பரத்தின் தந்தைக்கு மது இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியவில்லை.



சம்பளப் பணத்தில் அழகாக ஓடிக் கொண்டிருந்த

குடும்பம் கடன் தொல்லைக்குள் மாட்டியது.

திடீரென முன்பின் சொல்லாமல் வந்த க்ரிஸ்டோஃபர் நண்பனின்

நிலை பார்த்து அதிர்ந்து போனார்.

என்னம்மா மகளே, எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா.

நான் அந்நியமாகிவிட்டேனா.'என்று வருத்தப் பட்டவர்

பரத்தின் அப்பாவைக் கையோடு

தன் ஊருக்கு அழைத்துப் போனார்.

அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்க வைத்து,

அவரைத் தெளிய வைத்து

மீண்டும் திநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார்.



அங்கிருந்தே பரத்தின்(அப்பாவின் பெற்றொர்) தாத்தா பாட்டிக்குத்

திருச்சிக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி

உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தார்.

அவர்களோ இது போன்ற விஷயங்களில் தெளிவில்லாதவர்கள்.

தானாகச் சரியாகிவிடும். தங்கள் மகன்

அப்படிப்பட்டவன் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்கள்.



அந்த நிலைமையில் தான் பரத்தின் அப்பாவுக்கு

அளவுக்கு மீறின போதையில் கார் ஓட்டும்போது,

ஒரு மரத்தில் மோதின விபத்து நிகழ்ந்தது.



குழந்தை பரத்திற்குப் பன்னிரண்டு வயது.

நல்லவேளையாக அடியேதும் இல்லாமல் அவன் தந்தை தப்பித்தாலும்

அவரைச் சரிசெய்து வீட்டுக்கு அழைத்து வர

இப்போது இருக்கும் மாமா ரகுநாதன் தான் உதவினார்.

போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டு



அதற்கு மேற்பட்ட உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு

பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூருக்குத் திரும்பினார்.

அவர் வேலை,சொந்த வீடு,மனைவி மகள்,மகன்

எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.



திருப்புகழ்,முருகன்,கோவில் இதுதான் அவருக்கு எல்லாம்.

தங்கை கஷ்டப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை.

எங்களோடு வந்துடுமா,நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.



பரத்தோட அம்மாவுக்குத் தன் கணவனின் மேலிருந்த அன்போ

கரிசனமோ குறைந்ததே இல்லை.



அந்த நிலைமையில் தான் சிவசங்கரி அம்மா எழுதின

ஒரு மனிதனின் கதை'' படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.






  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, September 26, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.



*******************************************************

இப்ப சாண்ட்ராவின் பக்கம் வரலாம், என்னிடம்

சொல்லிவிட்டுச் சென்றவள் இரண்டு மூன்று நாட்கள்

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வரவில்லை.


மருமகளைக் கேட்டால் வீக் எண்டிற்கு எங்கியாவது போயிருப்பார்கள் மா
என்றாள். வீட்டுக் கதவைத் திறந்தால் நீளமான குளிர்ச்சியூட்டப்பட்ட
வராந்தா இருக்கும்.

வராந்தாவின் முடிவில் லிஃப்ட் இருக்கும்.

இது போல நான்கு ப்ளாக்கிற்கும் போய் வர
ஏதுவாக சௌகர்யம் உண்டு.

ஒரு சாயந்திர வேளை பேத்தி  வற்புத்தியதால் இன்னொரு
லிஃப்டில் கீழே இறங்கினோம்.
அது கடைகள் இருக்கும் தெருவின் நடைபாதையில்
முடியும்.

''பாப்பா இங்க கார் எல்லாம் ரொம்ப வேகமா வரும் ,நாம்
மாடிக்கே போயிடலாம்பா'' என்றாலும் அவள் கேட்கவில்லை.

'அண்ணா பாரு'' என்று கைகாண்பித்தாள்.அங்கே கெவின்!.
ஹலோ கெவின்,எப்படி இருக்கமா' என்றபடி
அவன் பக்கம் சென்றேன்.

எப்பவும் என்னிடம் மரியாதையாகவே பேசுவான். அவன்
அப்பாவின் சாயல் அப்படியே அந்தப் பிஞ்சு முகத்தில் தெரியும்.
உட்காருங்கள் க்ராண்ட்மா' என்றபடி எழுந்திருந்தான்.
''நீயும் இருப்பா. எனக்கு மீண்டும் எந்த லிஃப்டில் எங்கள்
அபார்ட்மெண்டிற்குப் போக வேண்டும் என்று தெரியவில்லை''
உதவி செய்கிறாயா'' என்று அவன் முகத்தைப் பார்த்தேன்.
முதல் முறையாக அவன் முகத்தில் புன்னகை.

அச்சொ எவ்வளவு அழகா இருக்கு இந்த பையன் சிரித்தால்!
சொல்லவும் செய்தேன். உன் புன்னகை அழகா இருக்கு கெவின், நீ நிறைய
சிரிக்கணுமென்று அவனைக் கொஞ்சம் நல்ல மூட்' உக்கு
கொண்டுவரலாம் என்று நினைத்தேன்.

ஓ தட்ஸ் ஓகே க்ராண்டமா' ஐ டூ லாஃப் அண்ட் ப்ளே.
டூ நாட் டேக் மை மாம்'ஸ் வேர்ட்ஸ் லிடரல்லி'' என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கு அந்தப் பிள்ளை சிரிப்பதே சந்தோஷமாக இருந்தது.


பின்னாலயே இவர் வரும் சத்தமும் கேட்டது.

''ஹலோ, க்ரான்பா' என்றபடி அவரிடம் நெருங்கி

உட்கார்ந்து கொண்டான் கெவின்.

நீ எங்கயாவது தெரியாமல் தொலைந்து விடப் போகிறாய் என்று

வந்தேன் ''என்று என்னைப் பார்த்துச் சொன்னவர்,

கெவினை நோக்கி நோக்கி,'' யூ நோ கெவின்,ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி

டென் மினட்ஸ்'' என்று பெரிய ஜோக் ஒன்றை உதிர்த்தார்.

(இங்க என் பல் கடிக்கிற சத்தம் போட்டுக் கொள்ளவும்)



ரியல்லி!! க்ரான்மா டூ யூ டூ தட்?'' என்றவனைப் பார்த்து ஒரு

அசட்டுச் சிரிப்பைச் சிரித்துவைத்தேன். எல்லாம்,

அந்த நல்ல நேரத்தைக் கெடுக்கவேண்டாமே என்ற

நல்ல எண்ணம்தான்:)

இவருக்கு கெவின் பற்றின விஷயம் ஒன்றும் தெரியாது.

தெரிந்தாலும் 'ஓ பாய்ஸ் வில் பி பாய்ஸ்'' என்ற

உலகமறியாத தத்துவம் சொல்லிவிடுவார்.!!

நான் இப்படி ஒரு வாக் போயிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.

நீ வருகிறாயா ''என்று என்னைப் பார்த்தார்.

நான் பாப்பாவுக்கு சாப்பாட்டு நேரம் வந்துவிடும்''என்று தயங்கினேன்.

ஓ,க்ரான்பா கேன் ஐ கம் வித் யூ'

என்றதும் இவர் உன் அம்மா அப்பா கிட்டச் சொல்லிவிட்டு வா.

நாம் போகலாம்'' என்றார்.

உடனே அவன் முகம் மாறிவிட்டது. அவர்கள் டெஸ்ஸர்ட் சஃபாரி

போயிருக்கிறார்கள், நாளை சாயந்திரம் தான்

வருவார்கள்''என்றான்.

வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றதும், ஃபிலோமியும், (உதவி செய்யும் ஆயா)

ஈவாவும் தான் இருக்கிறார்கள்.

அதனால் நான் யாரையும் கேட்கவேண்டாம். உங்களுடன் வருகிறேன்,
என்று அவன் அவரைப் பார்த்ததும், ஓகே,லெட்ஸ் கோ' என்றவர்

என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்தபடி
நடக்கலானார்.''இல்லை ,என்று ஆரம்பித்த என்னை,நான் பாத்துக்கறேன் மா'
என்று   கையசைத்துவிட்டுக் கிளம்பினார்கள். எனக்குதான் ஏதூ கவலையாக இருந்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, September 25, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்----2

முதலில் சாண்ட்ராவின் குடும்பத்தைப் பார்க்கலாம்.


சாண்ட்ராவுக்கு வட அமெரிக்காவின் டென்னசியில் அம்மா

இருக்கிறாள். வயது 70 அப்பா ஃப்லாரிடாவில் முதியவர்களுக்கான

விடுதியில் இன்னோரு மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

சாண்ட்ராவின் அம்மா அப்பா அவளுடைய 15 ஆவது வயதில்

விவாகரத்து செய்துவிட்டு சாண்ட்ராவின் அண்ணனை

அப்பாவும்,சாண்ட்ராவை அம்மாவும் பிரித்துக் கொண்டார்கள்.

அவ்வப்போது குடும்பமாக ஒன்று சேர்ந்தாலும் சாண்ட்ரா தன் அம்மாவை மன்னிக்கவே இல்லை.
கல்லூரியை முடித்ததும் தன்னுடன் படித்த கோல் விட்மன்.
என்ற தோழனைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டாள்.


இருவருக்கும் பயணம் செய்வதில் ஆசை இருந்ததால்
விமான பைலட்டுக்கான பயிற்சியையும் கோல் எடுத்துக் கொண்டான்,.

திருமணமாகிய நான்கு ஆண்டுகளில்
துபாய் வந்துசேர்ந்தார்கள். கோல் வேலை பார்த்த கம்பெனி அவனிடம்
மிகுந்த நம்பிக்கை வந்திருந்தது,
அதனால் அவன் வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது.

சாண்ட்ராவும் வானொலி நிலையம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள்.
கெவின் பிறந்தான்,. வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றது.

கெவின் அவர்களின் அருமைச் செல்லமாக இருந்தாலும்,


அவர்கள் இருந்த இடத்தில் அவனுடைய சிநேகிதர்கள்

பெரும்பாலும் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நட்பு கொஞ்சம்

தடுமாற்றத்தைத் தான் சந்தித்தது. அளவுக்கு மீறிய பணப்புழக்கம்,சாப்பாடு,

சப்தமாகப் பேசுவது என்று கெவினும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்.

இந்த நிலையில் ஈவாவும் பிறந்தாள்.

இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வீட்டோட இருக்கும்படி ஒரு

ஃபிலிப்பினோ பெண்ணையும் உதவிக்கு வைத்துக் கொண்டாள் சாண்ட்ரா.
அந்தப் பெண்ணும் கண்ணும் கருத்துமாக ஈவாவைப் பார்த்துக் கொண்டாள்.
வாழ்க்கை முறை எல்லாம் மாறியது. குடும்பமாக ஒன்றாக
இருப்பதே குறைந்தது.
கெவின் தனியாக உணர்ந்தான்.
சகவாசம் மாறியது. பார்ப்பத்ற்கும் பெரியவனாக இருந்ததால்
வெளியே போய் வர, மால்களில் பொழுது போக்கப்
பழகிக் கொண்டான்.
துன்புறுத்துவது என்பது உடல் பலத்தோடு வளர்ந்தது.

அது வாய்ச் சொல்லாகவோ,பலப் பரிட்சையாகவோ வெளிப்பட்டது.
அதற்கு முதல் குறி சாண்ட்ராதான்.
சாண்ட்ராவும் அவனை அடக்குவதில் காட்டிய தீவிரம் அவனிடம் பேசிப்
பார்ப்பதில் காட்டவில்லை.
இணையதளம்தான் ஒன்று இருக்கிறதே. அதில் தேடி, மகனுக்கு
மனநல மருத்துவர் தேவை என்று அவளே தீர்மானித்தாள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, September 21, 2010

டிரங்குப் பெட்டியின் பயணம்

சந்தனப் பேலா,கல்கண்டு கிண்ணம்

                                பெட்டி  அதனுடைய பயணத்தைத் தொடங்கிய இடம்:)    
கூகிளில் கிடைத்த குடம்

இப்படியாகத்தானே பசுமலைக்கும்  மதுரை டவுனுக்கும்  இரண்டு மூணு
 ட்ரிப் போயி 
வந்தார்கள். புதிதாக வென்னிர்த்தவலை அதற்கு மூடி வந்தது. அப்போ  எங்க ஊரில காஸ் கனெக்ஷன் எல்லாம் வரவில்லை. அதனால ஒரு இரும்புக் கரிஅடுப்பு .
சில பொருட்கள் சாக்குகளில் அடைக்கலம் புகுந்தன.
நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் இந்த   தரங்கில் இடம் பிடித்தன.
பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் அம்மாவின்      இன்னொரு பெட்டியில் புகுந்து கொண்டன.


புக்கக ஸ்டாண்டர்ட் படி இது சின்னப் பெட்டிதான்.:)

இதுவும் நாகப்பட்டினத்தில் சொல்லிச் செய்து வந்த பெட்டி.

மறதியாக பெயர் பொறிக்கும் போது என்.ரேவதி என்றே பொறித்து அனுப்பி இருந்தார்கள்.என்னப்பா,என்'' போட்டு இருக்கு என்று நான் கேட்டால்,

மாப்பிள்ளை நரசிம்மன் தானே மா,

அதனால் உன் முதலெழுத்து மாறவே இல்லை. நாராயணனுக்குப் பதில்
நரசிம்ஹன் என்று அப்பா சிரித்தார்.

இப்பொழுது(அதாவது  2010il   புதுப்பிக்கும்போது பெயிண்ட் அடிக்கிறவர் கிட்ட சொன்னதை நெளிவுசுளிவோடு எழுதிக் கொண்டுவந்து வைத்து விட்டார்.

தினசரி கட்டிக் கொள்ள கடாவ் வாயிலில் (19 ரூபாய் ஒரு புடவை)
ஒரு நாலு புடவை,
சின்னாளப் பட்டில்(7 ரூபாய்) நாலு புடவை. இவைதான்
என் ஜவுளி.

வைரத்தோடு மாமியாரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்று
சொன்னதால்
சென்னை வந்தப் பிறகு அந்த வேலை நடந்தது.

நானும், அம்மா,அப்பா ,சின்னத்தம்பி நால்வரும் ஜனவரி 27 ஆம்தேதி
அப்போதைய திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்ஸில்
ஏறினோம்.
அம்மாவும் அப்பாவும் ரயிலில் தூங்கவே இல்லை.
நான் எப்போதும்போல அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் புகுந்த வீட்டுக்கு பிரச்சண்ட் சார் சொல்ல அப்பா
என்னை அழைத்து வந்தார் மைலாப்பூருக்கு.

கட்டத் தெரியாத புடவையை தசபுசா என்று கட்டிக் கொண்டு
''அன்னத்தைவிட படு ஸ்லோவாக ' நடந்துவிட்டு அந்தப் பெரிய பங்களாவுக்குள் நுழைந்தோம்.

பிறகு எல்லாம் வேகமாக நடந்தன.புடவைகள்   மணிசங்கர் கடையில் (பாரீஸ் கார்னரில்  ஒரு கடை)  என்  விருப்பப்படி வாங்கிக் கொண்டேன்.

நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டேன்.

திருமணம் முடிந்து புதுக்கோட்டைக்கு வந்தோம். எங்களுக்கு முன்னால்

பெட்டிகள் வந்துவிட்டன, சதர்ன் ரோட்வேஸில்.

பாத்திரப் பெட்டியைத் திறக்கலாம் என்றால் சாவி அதனோடு வரவில்லை.

அதான் நம் வீட்டு ஹாண்டிமான் இருக்காரே, ஒரு நெம்பு நெம்பி
க்ரோபாரினால்
மேல் மூடியைத் திறந்துவிட்டார்.

இப்படியாக இனிதே திறப்பு விழா நடந்து முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டேனே. மாமியார் வீட்டிலும் ஒரு பழைய ட்ரங்குப் பெட்டி கிடைத்தது.அதைத்தான் சிங்கம் உடைத்து எடுத்தார்:))

இரண்டு நாட்கள் கழித்து என் அம்மாவும் அப்பாவும்

புதுக் குடித்தனம் செட் அப் செய்ய வந்துவிட்டு,

எல்லாவற்றையும் முறையாக அடுக்கி வைத்துவிட்டு அந்த மதியமே

மதுரைக்குக் கிளம்பி போனார்கள்.

சுபம்.






இது சின்னக் குடம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...