Blog Archive

Monday, September 21, 2009

திருமகள் தினம் நான்காவது நாள்

பூமி பாரம் தாங்கி நம்மைக் காப்பாற்றும் அத்தனை தேவியருக்கும் நம் வணக்கங்களையும் அவர்கள் பதங்களில் பணிவதையும் செய்து துதிப்போம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே .
நவராத்திரி நாயகிகள் வாழ்க.





















tதிரு அயிந்தை நாயகி ஹேமாமபுஜதாயார் தாயார்










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, September 14, 2009

செப்டம்பர் புகைப் படப் போட்டிக்கு சில்ஹௌட்


இதுவா

இதுவா


இதுதானா



இல்லை இதுவா.:)




கருப்பு அடிக்கிறது.




எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, September 07, 2009

மங்கியதோர் நிலவினிலே......

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்''
என்ற பாட்டு இந்தப் படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது .

அப்படியே பரிசோதனைப் பதிவாகவும் போட இதைப் பயன் படுத்திக் கொண்டேன் .




















ஏ.எம்.ராஜா(?) பாடிய பாட்டு என்று நினைவு. வெகு அழகாக, ரசிக்கும்படிப் பாடி இருப்பார்.
நான் கேட்டது தேவநாராயணன் பாட்டு.
பிறகு கிடைத்தது திருமணம் படத்தில் தி எம் எஸ் சார் பாடிய பாட்டு.
பின் பாவைவிளக்கு படத்தில் சி எஸ் .ஜெயராமனும் பாடி இருக்கிறார்.







மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு Pஒன்ற ஒலி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தால் வந்து
தூங்காதே எழுந்தேன்னைப் பார் என்று சொன்னால்
அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அட டா ஒ அட டா
அழகென்னும் தெய்வம் தான் அதுவென்று அறிந்தேன் !
மங்கியதோர் நிலவினிலே ......
காலத்தில் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே விதியினுக்கொர் கருவியாம் என்ற்ஆள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
nஆலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் eன்றால்










மஹாகவி பாரதியின் பாடல்.
\எழுத்தாளர் அகிலனின் எழுத்துக்களில் பாரதியின் கவிதை வரிகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன.























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, September 06, 2009

எழுத்து கண்ணெனத்தகும்

பேராசை பெருநஷ்டம். கேள்விப்பட்டு இருக்கீங்களா.
அது என்ன எல்லாருக்கும் உள்ளததுதானே அப்படீன்னு யாரும் சொல்ல மாட்டீங்க.

பல

பதிவெல்லாம் ஸ்மூத்செயிலிங் வகை. நம்ம பதிவு அப்படியில்லையே. எங்கேயோ கோளாறு நடந்திருக்கு. என் எழுத்து எல்லாம் வெளிறிப் போச்சு.
 
எப்படி இருந்த நாச்சியார் இப்படி ஆகிட்டாங்களேன்னு எல்லாரும் உச்சுக் கொட்டறமாதிரி ஏன் இந்தக் கலக்கம் வந்தது. ஒரே ஒரு சோதனை செய்ததுனால வந்த வினை.
 
அந்த முகப்பில கஸ்டமைஸ்னு ஒரு குட்டி வார்த்தை இருக்கும். ஒஹோ. சரி நாமளும் டிசைனர் ட்ரெஸ் மாதிரி டிசைனர் ப்ளாகாச் செய்துடலாம், அப்படியாவது இன்னும் கொஞ்சம் மக்கள் எட்டிப் பார்ப்பாங்களான்னு ... ஒரு நப்பாசை.
 
இப்ப மல்லிப்பூ கடைக்கு எதுக்கு விளம்பரம் போஸ்டர் அப்படீன்னு யாரும் பழமொழி சொல்லக் கூடாது. பதிவுலகத்தில போட்டி நிறைய ஆகிட்டது. நமக்கோ பார்க்க கேட்க நிறைய செய்தி கிடைக்கிறது. அதைப் பகிர்ந்து ஒரு ஸ்டைலாக் கொடுக்கலாம்னு அந்த விபரீத எண்ணம் வந்த நேரம்,
ஊர் உலகக் கோவில்களில் இருக்கும் அத்தனை நாச்சியார்களுக்கும் கிலி பிடிச்சிருக்கு. நம்ம பேரை வச்சுக்கிட்டு, இந்த பெரிசு செய்யற கூத்தைப் பார்த்தியா. அப்படீன்னு அவங்க அவங்க தலைல லேசா நாசூக்காத் தட்டிக்கிட்டாங்களாம். அதனல் நான் இப்பச் சொல்ல வரதை மக்களே  ஒரு பாசிடிவ் ஃப்ரேம் ஆஃப் மைண்டோட ஏத்துக்கோங்க.

இன்று காலைலெருந்து, என் பதிவுக்குப் புது வேஷமெல்லம் போட்டுப் பார்த்துட்டேன். ஒண்ணும் பலிக்கலை. படிக்கிறத்துக்கு ஆள் இல்லைன்னா எழுதி என்ன பிரயோசனம்னு நினைத்ததால இப்ப ஒரு யோசனை தோணி இருக்கு. இந்தப் பதிவு எப்படி வருதுன்னு பார்த்துட்டு, மீண்டும் சந்திப்போம்:)))))))

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, September 03, 2009

துளசி மகிமை














இன்னும் ஊறுகாய் சாப்பிடறியா பாட்டி?'
இல்லை கண்ணா , வயத்துக்கு ஒத்துக்கலைம்மா.''
இது நான். முதல் வரி முதல் பேரனோடது. இன்று பிறந்தநாள் அவனுக்கு.
குழந்தை ஆரோக்கியமும் அறிவும் பெருக தீர்க்காயுசுடன் மகிழ
இறைவனை இறைஞ்சுகிறேன்.
சின்னவன் செய்த கூத்து அடுத்தது. அவனுக்கு அடிக்கடி சளித்தொல்லை வருவதால் அவன் அம்மா துளசி இலைகளைப் பறித்து கஷாயம் செய்து கொடுப்பாள்.
அதில் அவனுக்கு நிவாரணமும் கிடைக்கும். அவனுக்கு ஏதாவது தொந்தரவு என்றால் அம்மா துளசி என்று கேட்கிற அளவுக்கு அவங்க வீட்டில் துளசிக்கு மகிமை:)
அவன் ஊருக்குக் கிளம்பும் நாளில் நம் துளசியும் வந்திருந்தார்கள்.
ஒரு சின்ன கிருஷ்ணர் பொம்மையை அடையாளப் பரிசாகக் கொடுத்தார்கள்.
இது நடந்து 22 நாட்கள் ஆயாச்சு.
சிகாகோ சென்றதும் தான் கொண்டு போன கிருஷ்ணரை அவர் இருந்த கைப்பையோடு ,வேறு சில பொம்மைகளோடு அவள் வைத்திருக்கிறாள்.
இந்த்ச் சின்னவன் அதைத் தேடி இருக்கிறான்.
அம்மா, அந்தப் பொம்மை எங்க. கிஷாவோட பொம்மை என்று கேட்டு இருக்கிறான்.
பெண்ணுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லுகிறானா, இல்லை ஒரிஜினல் கிருஷ்ணனைத் தேடுகிறானா என்று தெரியவில்லை:)
எதுடா, என்று கேட்டதும்
''அதான் அந்த ஆண்ட்டி கொடுத்தாங்களே, அந்தச் செடி ஆண்ட்டி'' என்று சொல்லி இருக்கிறான்.
என்னது செடி ஆண்ட்டியா. யாரும் செடி கொண்டு வரவில்லையே. இவன் யாரைச் சொல்கிறான்.???
யாரும்மா என்று இவள் கேட்க, பாட்டியோட ஃப்ரண்ட்மா, செடி ஆண்ட்டி
கிஷாக்கு, கிஷா கொடுத்தாரே என்று சொல்லி
வற்புறுத்தவும், இவளுக்கு புரிந்தது. துளசி ஆண்ட்டியா என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு அவனுக்கு சிரிப்பு வந்து விட்டதாம்.
அப்பாவிடம் சொல்லி சொல்லி சிரிக்க, வந்தவர்களும் துளசி மகிமையை எண்ணி ,இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாற்கள்.:)))
18 ஆம்தேதி ஆரம்பிக்கப் போகும் நவராத்திரிக்கு முன்னோடியாக இந்தப் படங்கள். புதிதாக வாங்கிய கொலு பொம்மைகள். காதியில் கொட்டிக் கிடக்கிற அழகு பிம்பங்கள்.










எல்லோரும் வாழ வேண்டும் நாம் எல்லோரும் வாழ வேண்டும்.