Blog Archive

Thursday, March 09, 2023

மறு பக்கம்.

வல்லிசிம்ஹன்






 ஒரு புலிவால்

நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று. 

ஆனால் Ground reality வேறு. 

நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன்.  அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mob போடுவாள். வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். அமெரிக்கா சொல்லி தரும். 

Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும். உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு. இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.
படிப்பு மிகவும் கடினம். நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். Tension.
படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். Tension.
வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.இல்லாவிட்டால் திரும்பி போக
வேண்டும். Tension. 
 
இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும். இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.
இங்கே location, career முக்யம்.
North carolina, south carolina - 
Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம். வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை. ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.
Minasotta, Detroit, Chicago - snow area- 
Social drinking- NO
பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். 
இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.
Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.
அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும். இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 
பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 

வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும். Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 
Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும் அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.
Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 
Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.

நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது. சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இப்போது இந்தியாவிலும் இப்படித்தான். Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 

Coronaவா? ஊருக்கு போக முடியாது Stamping வாங்கலையா. இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நடுவில் அப்பா போனாலோ அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. Society pressure.

சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.

இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன் கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 
எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள். 

இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.
Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.

இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.

மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான். விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.

அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா.  மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள். இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம். சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்”””

17 comments:

Geetha Sambasivam said...

நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை வல்லி. உடம்பு இப்போப் பரவாயில்லையா? ஏன் ஒருத்தரோட பதிவுக்கும் வருவதில்லை? நீங்கள் வராமல் ஒரு மாதிரி வெறுமையாய் இருக்கு. ஆனால் நானும் எப்போவானும் தான் இணையத்துக்கு வரேன். ஆச்சு, அடுத்த கண்ணும் அறுவை சிகிச்சை ஆனால் மறுபடி கொஞ்ச நாட்கள் அஞ்ஞாதவாசம் தான்.

ஸ்ரீராம். said...

நல்லதொரு பதிவு அம்மா.  அமெரிக்க படங்களால் தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த கதைகள் ஏராளம்.  கொரோனா பற்றியெல்லாம் எழுதி இருப்பதால் இது மீள்பதிவு இல்லை என்று நினைக்கிறேன்.  புதுப்பதிவுதானே?

ஸ்ரீராம். said...

//ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். அமெரிக்கா சொல்லி தரும். //

சூப்பராய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.  அதை இங்கேயே கற்றுக்கொள்பவர்களும் உண்டுதான்.  இதெல்லாம் கூட்டுக்குடும்பம் இருந்த நாட்களில் இங்கேயே வழக்கமாக இருந்தது.

ஸ்ரீராம். said...

//அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம்//

ஐம்பது சதவிகிதம் உண்மை!  ஆனால் அப்புறம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றாகி விடுகிறது!

ஸ்ரீராம். said...

//இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.//

நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும் காட்சி.  சமயங்களில் எனக்கு ஒன்று தோன்றும்.  இந்த பூமிக்கு ஆபத்து என்று சில மக்களை வேறு கிரகத்தில் குடியேறச் செய்வதாய் செய்திகளில், கதைகளில் படித்திருக்கிறேன்.  திரும்பி வரமுடியா பயணம்.  அவர்கள் எல்லாம் எப்படி Feel செய்வார்கள்!

ஸ்ரீராம். said...

//இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.//

ரொம்ப கஷ்டமான பார்ட்.  இப்படி என்றால் அவர்களுக்கு ஜீரணித்துக் கொள்ள முடியாது.  அப்படி என்றால் இவர்களுக்கு கஷ்டம்.  நீங்கள் சொல்லி இருப்பது போல புலிவால் பிடித்த கதைதான்.

ஸ்ரீராம். said...

உறவினர்களை ஊர் சுற்றிக் காட்டும் செலவும் வைத்திய செலவும் கேள்விப்பட்டிருக்கிறேன்,  சேமித்த பணத்தை செலவு செய்துகொண்டு இந்திய வரும் சிரமமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அப்பா மாமாவையும் பார்க்க வேண்டுமே..  பணத்தைப் பார்க்க முடியுமா?  அப்பா தன் சேமிப்பை வழித்துத்தானே படிக்க அனுப்புகிறார்?!

ஸ்ரீராம். said...

ஆனால் இதையெல்லாம் படிக்கும்போது "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்றுதான் பாடத்தோன்றுகிறது!

ஸ்ரீராம். said...

ஆனால் இதையெல்லாம் படிக்கும்போது "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்றுதான் பாடத்தோன்றுகிறது!

நெல்லைத் தமிழன் said...

நல்லா எழுதியிருக்கீங்க. இன்று என் கருத்தை எழுதறேன்

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள். நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல அவர்கள் பக்கம் கஷ்டம் தான். ஊருக்கு சொந்தங்களுக்கு பரிசு பொருள் வாங்கி வந்தால் அவர்கள் கேட்கும் கேள்வி அங்கு ரொம்ப மலிவுதானே!

இங்கு எல்லா வேலைகளும் அவர்கள்தான் செய்ய வேண்டி இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

முழுவதும் டிட்டோ. அதுவும் கடைசி வரி.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் நல்லாருக்கு அம்மா. பனி சூழ் படம்...

கீதா

நெல்லைத் தமிழன் said...

நீங்கள் எழுதியிருப்பது சரிதான். புலிவாலைப் பிடித்த கதைதான். அங்க போயாச்சுன்னா அது ஒற்றை வழிப்பாதைதான். திரும்புவதற்கு வழி இல்லை (அபூர்வ நிகழ்வுகளை நான் குறிப்பிடவில்லை).

அதனால்தான் அங்கு இருக்கும் திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள், அந்த அந்த ஏரியாவில் இருக்கும் பெண் அல்லது அங்கு வந்து படிக்க/வேலை பார்க்கும் வாய்ப்புள்ளவர்களைத்தான் தேடுகிறார்கள். பலர், அமெரிக்க குடிமகள் அல்லது அங்கு இருக்கும் விசா உள்ள பெண்களைத் தேடுகிறார்கள். இந்தியாவில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு வருடத்துக்கு மேல் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றவர்களும் உண்டு. அல்லது, அங்கு எம்.எஸ் படிக்க, பெண்ணின் பெற்றோர் ஸ்பான்ஸர் செய்யணும் என்று சொல்பவர்களும் உண்டு (இந்தியாவில் சிம்பிள் மேரியேஜ் என்பது இவர்களது வியாக்யானம்)

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு அங்குள்ள லைஃப் வித்தியாசமாகவும், சௌகரியங்கள் பிரமிப்பாகவும், கணவனும் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் நடத்தையைப் பார்த்து சந்தோஷமாகவும் இருக்கும். தங்கள் பெற்றோர், தங்கள் குழந்தைக்குப் பாதுகாவலர்களாக அவர்களை வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அழைத்துக்கொள்கின்றனர்.

தைரியமாக அமெரிக்க வரனைப் பார்த்து, பெண்ணை எம்.எஸ் படிக்க அனுப்பிடு என்று அட்வைஸ் பண்ணுபவர்கள் பலர், அவர் பையன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதால் இதனை சஜஸ்ட் செய்கிறார்கள்.

கனடாவில் இருப்பவர்களுக்கு அங்குள்ள காலநிலையும், குறைவான வாய்ப்புகளும் கஷ்டமாக இருக்கிறது.

Personally I took a decision not to move to USA in 97. பசங்களும் அங்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்புள்ளம் அனைவருக்கும் என் நன்றி.

மீண்டும் மீண்டும் இந்தக் கை வலியும், முதுகு வலியும் உட்கார்ந்து வேலை செய்யத் தடை செய்கிறது.
நின்று சமையல் செய்வது போல , எழுதவும் முடிந்தால்
நன்றாக இருக்கும்.
அன்பு கீதா சாம்பசிவம், ரொம்ப நெகிழ்ச்சியா
இருக்கிறது நீங்கள் எழுதியதைப் படித்த
போது.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த வலியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
செய்த கர்மா கழியட்டும்.

அனைவருக்கும் இனிய காரடையான் நோம்பு நல் வாழ்த்துகள்.
சகல சௌபாக்கியங்களும் நிரம்பி எல்லோரும் மங்களமாக
வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம், அன்பு நெல்லைத் தமிழன் முரளி மா, அன்பின் கீதா ரங்கன்
எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

மாதேவி said...

நல்ல பகிர்வு.விரிவாக தந்துள்ளீர்கள்.