Sunday, June 28, 2026

கதம்பம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

2011  Trip in Swiss.






அம்மாவின் குடும்பத்தினர்

பயணங்களில் பதிந்த படம்.


நிலா அது வானத்தின் மேலே .அது பரப்பும் அமைதி நம்மிடம்.
தோழியும் நானும்  இரண்டு வருடங்களுக்கு முன்.


கடவுள் எனும்   முதலாளி கண்டெடுத்த    தொழிலாளி. 2011


எதிர்சேவை 2026
 2024நவராத்திரி கலகலப்பு
 அப்புறம் என்ன ஆச்சு? இது நேற்று என்னுடன் 
பேச வந்திருந்த குட்டியின் வினா. என் லாப்டாப் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஐந்து வயசு
பெண்ணழகி. என்ன கதை சொல்லப் போறே பாட்டி  என்று கேட்டது.

கதை இல்லடா. பழைய படங்களைப் புதுசா
பண்ணிக் கொண்டிருக்கேன் என்றேன். ஏஐ  ஆ? என்று கேட்டதும் எனக்கு  கொஞ்சம்  பரபரப்பு:) 
அட உனக்கும் தெரியுமா என்றேன். 
ஓ! எங்க க்ளாஸ்ல மிஸ் சொல்வாங்க என்றது.

ஹ்ம்ம்ம். சரிதான்.  எனக்குப் படம் மட்டும் போடத்தெரியும். இன்னும் கத்துக்கலைன்னு சொன்னேன்:)

என்னைத் தன் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக ப்ராமிஸ் செய்திருக்கு. பார்க்கலாம்:)))

5 comments:

ஸ்ரீராம். said...

புகைப்படங்கள் நல்ல நினைவலைகளைக் கொண்டு வருகின்றன. எத்தனை எத்தனை நிகழ்வுகள், சந்தோஷமான தருணங்கள்... இல்லை?

வல்லிசிம்ஹன் said...

காலை வணக்கம் ஶ்ரீராம். முடிந்த வரை படங்களைப் புதுப்பிக்கிறேன். சில சமயம் கடினமா இருக்கு. சில சமயம் சந்தோஷம். வாழ்க்கையின் போக்கு அப்படித்தானே:))

மாதேவி said...

இனிய நினைவுகளைத் தரும் அழகிய படங்கள்.

அத்தருணங்களை நினைவு கொள்ளல் என்றும் மகிழ்ச்சியே.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மாதேவி. நீங்கள் வந்து படித்துப் பின்னூத்தமும் இட்டது மிக மகிழ்ச்சி மா. நன்றி,

கோமதி அரசு said...

இனிய நினைவுகள் பகிர்வு அருமை. படங்கள் எல்லாம் நினைவுகளை புதுபிக்க உதவும்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...