| இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள் என்று இருந்தது. மாமனார் பண்ணை நடத்திவந்தார். தீவன வியாபாரமும் செய்து வந்தார். சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது. புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை வலம் வந்து அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி , அதை இடித்துத் திட்டு வாங்கி எல்லாக் கலகங்களும் நடந்த நேரம். தாத்தா கண்டிப்புக்குப் பயந்து தினமும் வீட்டுக்கு வரும் நேரம் மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி. மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம். இப்படி ஒரு காலை கன்றுக்குட்டி ஒன்று அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி தோட்டத்துக்கான 10 அடி விட்டக் கிணறு குறுக்கிட்டது. இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப் பார்த்துக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. உடனே வீட்டில் உள்ள அனைவரும் அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார் தன்னால் முடியாது என்று கைவிரிக்க கன்றுக்குட்டி தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு. எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார். மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில் இறங்கிவிட்டார். கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும் நிறைய. நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து. இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு கிணற்றின் சுவற்றில் இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம். பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம். |
Friday, March 13, 2026
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன்
Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
No comments:
Post a Comment