Blog Archive

Saturday, November 17, 2018

இருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.

Vallisimhan
மீண்டும் தாழ்ந்த மன நிலைக்குப் போக மாட்டேன். அடுத்த
அடி என்ன என்று தீர்க்கமாக் யோசிப்பேன். வீடு என்பது எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.

அது ஊழ்வினையால் ஆட்கொள்ளப் படும் என்றால் இறைவன்
பார்த்துக் கொள்வான்.

மகன் களின் மனம் சோகப்படாமல்
அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியது என் கடமை.

மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து,அந்த வீடு
இன்னும் பெருமையுறும் என்ற நம்பிக்கையை
விதை த்துக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் எந்த சிரமமும் வரக்கூடாது.
 கஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களின் உள்ளம் என்ன பாடுபடுகிறதோ.
அவர்களுக்கு இறைவனும் அரசாங்கமும் நல்வழி காட்டட்டும்.
எப்பொழுதும் அவன் செயலே பரிமளிக்கும்.
வாழ்க இறைவன் நாமம்..அவனே காப்பான்.

No comments: