Blog Archive

Monday, September 06, 2021

கொறக்களி பிடித்தால்.....

வல்லிசிம்ஹன்

[8:31 AM, 9/4/2021] Jayanthi Kanna.: உடல் நலம்:

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்

Middleage, senior citizens க்கு 
பொதுவாக ஒரு problem வரும்.

Cramp...

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு.

சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும். 

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable.

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்.

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.

படுத்திருக்கும் போது வந்தாலும், 
காதை ஒட்டியவாறு கைகளை 
நீட்டுங்கள். சரியாகிவிடும்.

 நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் 
முயற்சித்து பார்க்கலாம்.

Eye Dryness:

இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.

இதற்கும் ஒரு எளிய மருத்துவம்:

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில
உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எனக்கு தெரிந்தவர்
பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup.

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.
Eye drops மிகவும் குறைத்து விட்டார். 
No more doctor Visit.

தூக்கமின்மை :

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc.

எளிய மருத்துவம் :

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும். 

நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Sleeping tablets கூட நாளடைவில்
தவிர்த்து விடலாம்.

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது:

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.
அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும். 

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்.

உடல் நலத்தில் கவனம் தேவை. 

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நலம் பெறவேண்டுகிறேன்.🙏வாழ்க வளமுடன்

தங்கை ஜெயந்தி அனுப்பிய வாட்சாப் தகவல்.
நன்றிகளுடன்.



15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவல்கள்... நன்றி...

KILLERGEE Devakottai said...

பயனுள்ள தகவல்கள் அம்மா

Geetha Sambasivam said...

இது எல்லாம் எனக்கும் வந்து செய்து பார்த்துவிட்டேன். இன்னும் சொல்லப் போனால் இரவு உறக்கத்திற்கு ஜாதிக்காய்ப் பவுடர் கூடச் சாப்பிட்டுப் பார்த்தாச்சு. ஆழ்ந்த உறக்கம் என்பதே இல்லை. அதே போல் க்ராம்ப்ஸ் வரும்போது வலியின் தீவிரத்தில் இந்தக்கைகளைத் தூக்குவது நினைவில் வருவதில்லை. :) மற்றபடி முயற்சி செய்து பார்ப்பதால் தப்பில்லை. எப்போவுமே தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணை தடவிப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி.
படித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன், கருத்துக்கு மிக நன்றி. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
வலியோ, உடல் பாதிப்போ இருக்கும் போது
தூக்கம் அல்லது ஆழ்ந்த தூக்கம்
கிடைப்பதில்லை.

இந்த அறிவுரை எல்லாம் அந்த சமயத்துக்கு மனதில் தோன்ற வேண்டுமே.
இப்போதுதான் கைகளை மேலே தூக்கி வைத்துக்
கொள்ளப் பழகி இருக்கிறேன்.
விளக்கெண்ணெய் உதவி செய்யும் என்றே
நினைக்கிறேன்.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

கோமதி அரசு said...

பயனுள்ள குறிப்புகள்.

வலி வரும் போது கொறக்களி இழுக்கும் போதும் நினைவாக செய்ய வேண்டும்.

Eye Dryness எளிய மருத்துவ குறிப்பு அருமை. நிறைய பேர் இதனால் அவதி படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல குறிப்பு.

வெங்கட் நாகராஜ் said...

பலனுள்ள குறிப்புகள் மா. நன்றி.

நெல்லைத் தமிழன் said...

1. நான் உள்ளங்காலில் நாலு விரலால் தேங்காய் எண்ணெயை சும்மா சில நொடிகள் வேகமாகத் தடவிக்கொள்வேன். (அதற்கு முன் தூங்கப் போவதற்கு ரெடியாகிவிடுவேன்). செமயாகத் தூக்கம் வரும். இரவில் ஓரிரு முறை பாத்ரூமிற்கு எழுந்தாலும் (இது என் தவறு. அதிக தண்ணீர் 6 மணிக்கு மேலும் குடிக்கிறேன்) தூக்கம் நன்றாக வரும்.

2. அப்போதே, காரணம் எதுவுமில்லாமல் தொப்புளில் தேங்காய் எண்ணெய் போடுவேன். அது மிக உபயோகம் என்று இப்போது படிக்கும்போது ஹேப்பிதான். கண் உலர்வதைச் சரி செய்யுமா? மிக நல்லது. நிறைய நேரம் நாம் ஸ்க்ரீன் பார்க்கிறோம் இல்லையா?

மாதேவி said...

பயனுள்ள தகவல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழக வளமுடன்.
இந்தக் குறிப்புகள் எல்லாமே எனக்கு உபயோகமாக இருக்கின்றன.
கண் உலர்ந்து போவதும் ,முழங்கால் வலியும்
இந்த வைத்தியத்தில் சரியாகின்றன
என்று சொல்கிறார்கள்.
30 வருடங்களாக நம்முடன் இருக்கின்ற
வலிகள் சிறிதாவது குணமானால நல்லதுதான்.
செய்து பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளிமா.
எண்ணெய் வைத்தியம் 20 வருடங்கள் முன்
தெரிந்து கொண்டேன் செய்யவில்லை.
தரையில் வழுக்கிவிட்டால் என்ன செய்வது என்று பயம்:)

இங்கே கார்ப்பெட் தானே.
கால் வைக்கும் இடத்தில் ஒரு துணியைப் போட்டுக்
கொள்ளலாம்.
வயிற்றில் தேங்காய் எண்ணெய் தடவுவது பற்றி
மகள் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு
இந்த மாற்று மருத்துவத்தில் நம்பிக்கை
அதிகம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,கருத்துக்கு மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பயனுள்ள தகவல்கள் அம்மா. தொப்புள் சுற்றி எண்ணை தடவுவது உண்டு. விளக்கெண்ணை. இப்ப விளக்கெண்ணை இல்லை எனவே தேங்காய் எண்ணை தடவ்லாம்...

தூக்கத்திற்கு உள்ளங்காலில் எண்ணை! நல்ல குறிப்பம்மா

கீதா