அந்தரங்கமும் அந்த ரங்கனும்
வல்லிசிம்ஹன்
ஆண்டாளை இந்த ரங்கன் ஆண்டுகொண்டு
ஆண்டாளை இந்த ரங்கன் ஆண்டுகொண்டு
அவளும் ஆண்டாள்.
நமக்குக் கிடைத்தது அவர்களின் வாத்சல்ய அருள்.
அந்தக் கருணையை என்றும் அனுபவிக்கும்
மனம்.வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேகர்
ஸாந்த்ர வாத்சல்ய சிந்து என்றே அழைக்கிறார்.
அவளே விஷ்ணு சித்தரின் மனக் கடலில் விளைந்த
புதல்வி. அவர் ஒரு மாபெருங்ககடல் என்றால்,
அவர் மகள் ஆலிலைக் கண்ணன் அரங்கனுடன் இணையும் முன்னேயே
கருணைக் கடல் ஆகிறாள்.
கோதா தேவி காத்தருள்.
புரட்டாசித் திரு மாதம் திருவோண நாளில்
பிறந்தது.
தவ நாட்கள் ஆரம்பம். அத்தனை அருள்தெய்வங்களையும்
நித்தம் சிந்திப்போம் அவனே கருணை செய்வான்.

Comments
காண வேண்டும். நன்றி.
காவிரி சூழ் அருமையான பாடல். எங்கள் ஊர் கோயிலில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிக்கும் அதுவும் விழா நாட்க்ளில் நிறைய
அந்தரங்கம் நானறிவேன் முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் அம்மா அழகான ராகம்...பாகேஸ்வரி
உங்கள் கருத்தில் அந்தரங்கம் அந்த ரங்கனே அறிவான் புரிந்து கொண்டேன்!!!!!!
நாராயணா பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன் ஊரில்.
கீதா
நினைக்கிறோம்,.
அவன் ஒருவனே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
முதல் சனிக்கிழமை உறுதியாக அவன் தாள் பிடித்துக் கொள்வோம்.
நன்றி மா. இந்த மூன்று பாடல்களுமே எனக்கு மிகப் பிடித்தவை.
கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் கீதாமா,
எல்லாவற்றையும் புண்ணியத்தையும் சேர்த்து
மானசீகமாக இணையத்தில் காண வேண்டி வருகிறது.
நன்றி மா.