சில பல கானங்கள்
வல்லிசிம்ஹன்
நமக்கு ஒரு சில பாடல்கள் மட்டும்
மனதின் முன்னணியில் நின்று காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன
என்று சில நேரம் யோசிப்பதுண்டு.
நல்ல எழுத்துகள் அகத்தில் பதிவது போல
எப்பொழுதோ கேட்ட இசை
திடீரென்று சிந்தையில் நடமாடும்.
இது வரை அதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வதில்லை.
இதற்கெல்லாம் ஆதி காரணங்களை
ஆராயப் பலர் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நெடு நாளைய தோழி
சொன்னதைப் போல ''இன்றைய நன்மைகளை
அனுபவியேன் ரேவதி. !! யேன், எப்படி என்று கேள்வி கேட்டு
இந்தக் கணத்தை விட்டு விடாதே.''
எப்பொழுது பார்த்தாலும் விசாரம், விசாரணை,
தேடல் என்றில்லாமல் அந்தந்த நொடியைக்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.:)
Comments
ஆமாம் மா. திருமணம் ஆகிறவரை நம் விருப்பங்கள் நம்
கையில். பிறகு குடும்பத்தின் பொறுப்புகள்
நம்மை வேறு யோசனை இல்லாமல்
செய்துவிடும்.
இப்பொழுது நான் இந்த நொடியை அனுபவிக்கணும்
என்று நினைப்பது,
பல்வேறு விசாரங்கள் மனதை சிந்திக்க வைப்பதால்.
தோழியிடம் பேசிய போது
அவளுக்கும் எத்தனையோ கவலைகள்
இருந்தாலும் , தனக்கென்று நேரம் ஒதுக்கி
தன் சிந்தனைகளை ஒழுங்கு செய்து கொள்கிறாள்.
என் பொழுது இசையில் தான் செல்கிறது.
உங்களுக்கும் இசை மிகப் பிடித்தது.
கடைசிப் பாட்டு வணங்காமுடி படத்தில் வருவது.
நல்ல பாடல்கள் நிறைய இருக்கின்றன.
நன்றி மா.
அது வணங்காமுடி படம். . நீங்கள் எல்லாம் பிறப்பதறகு 20 வருடங்கள் முன் வந்தது மா.
பாடல்களைக் கேட்டதறகு மிக நன்றி. நலமுடன் இருங்கள்.
அம்பிகாபதியிலும் ராஜசுலோசனா உண்டு. வசந்தமுல்லை பாடல் வருமே.
இது வணங்காமுடி படம் மா.
இந்தக் கணத்தை விட்டு விடாதே// நல்ல அறிவுரை.
பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன் மா.
நல்ல பாடல்கள்.