தொலைக்காட்சியில் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.
இந்திப் படங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மருமகள் ஏதாவது சிபாரிசு செய்வார் .அப்போது கண்டு களித்துவிட்டு மீண்டும் பழைய
படி பழைய ஆங்கிலப் படங்களுக்கும், நினைவில் நிற்கும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதே பழகிவிட்டது.
அப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில், ''கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பற்றி முன்னோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கே பார்த்டலும் ஒரே கிராம மணம்னு படங்கள் எடுப்பது போல இதுவும் இன்னோரு சீரியல் என்று நினைத்தேன்.
ஆனால் அந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக அர்த்ததோடு இருந்தன.
''படி படிபடி, தங்கப் பயலே படிதாண்டினாக் கவலை இல்லே''
என்று இசையோடு நல்லத் தமிழ். அதைக் கேட்டதும் பார்த்துத்தான் செய்வோமே என்று ஆவலோடு முதல் எபிசோட் பார்த்தென்.
கப்' என்று பிடித்துக் கொண்டார்கள் காரியான் பட்டிப் பசங்கள். ஆறு பசங்களும் மூன்று பெண்களும் பத்தாவது தேறின கையோடு, தேனியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு ப்ளஸ் டூ படிப்புப் படிக்க ஆசைப் படுகிறார்கள்.
ஆனால்
இரு ஊர்களுக்குமான பகை அவர்களைப் பொசுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தேனி நபர் ஒருவரை, காரியா பட்டி நபர் தாக்கிக் கொன்றுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.
கொலையுண்டவர் மகனும் தேனிப் பள்ளியில் தான் படிக்கிறான்.
காரியா பட்டிப் பையன்களில் ஒருவனான சக்தியின் அப்பாதான் சிறையில் இருப்பது.
இது ஒரு காரணம், இன்னோரு நிகழ்ச்சியாக,
ஏதோ ஒரு வேகத்தில் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காரியாபட்டி மக்கள் தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்குத் தீ வைத்துவிடுகிறார்கள். அதையும் காரணம் காட்டி,
இரண்டு ஊருக்கும் தீராப்பகை.
இதுவரை 45 நாட்களுக்கான பாடங்களையும் பார்த்துவிட்டேன். நடுவில் இ]ரண்டு மூன்று எபிசோட் தவற விட்டிருப்பேன்.
இந்த சீரியலில் என்னை மிகவும் கவர்ந்தது, காரியாப் பட்டிப் பையன்களாக வரும் பதின்ம வயசுப் பிள்ளைங்களின் பாத்திரப் படைப்பும், மன நலன்களும்,அவர்கள் உண்மையாகவே பாடு பட்டு நடிப்பதும்தான்.
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. எல்லாமெ எளிமையாக இனிமையாக இருக்கின்றன.
''டூரிங் டாக்கீஸ் என்ற நிறுவனம் இந்தத் தொடரை எடுப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், அசட்டுத்தனமான வசனங்கள் இல்லாமல்,
மனதோடு ஒன்றிப் போகிறது.
ஒருத்தர் கூட அலட்சியமாக நடிக்கவில்லை. அத்தனை ஈடுபாட்டோடு கண்முன் நடப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இந்தக் கால இளைஞர்களுக்கு வேடிய ஒற்றுமையும்,தோழமையும் பளிச்சிடும்,அதே சமயம்,அந்தவயதிற்கான சஞ்சலங்கள் எல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
விஜய் தொலைக் காட்சியில் இரவு ஏழரை மணிக்கு வாரநாட்களில் ஒளி பரப்பாகிறது.
எல்லோரும் வாழ வேண்டும்.