Wednesday, April 13, 2016

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  இன்னுமொரு வருடம் பிறந்து வருகிறது.
அனைவருக்கும் துர்முகி வருடம் இனிமையையும்,நோயில்லா வாழ்வையும்,
வளங்களையும் வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
 நல் வாழ்த்துகளும் ஆசிகளும் இல்லங்களை நிறைக்கட்டும்.

Friday, April 08, 2016

யுகாதி சிந்தனைகள்.................2003

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Rameswaram
yugaathi   Balaji

  2003  மார்ச் 23   யுகாதி
++++++++++++++++++++++++++++++++
2003 ஆரம்பத்திலிருந்து  ஒரே கோவில் மயம் தான். ஜனவரி மாதம் ராமேஸ்வரம், ஸேதுக்கரை,
நவபாஷணம் என்று வேண்டுதல் பிரார்த்தனைகள். பிள்ளைகள் இருவரின் திருமணம் சீக்கிரம் வர அனைத்துக் கடவுள்களிடமும் அப்ப்ளிகேஷன்கள்.
தம்பி ரங்கன்  அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அருமையாக  அழைத்துச் சென்றான்.

இறைவன் ஒரே வருடத்தில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறானே. 
என்று என் மேலேயே கண் பட்டுக் கொண்டென்.
அடுத்து   திருச்சி,ஸ்ரீரங்கம், சமயபுரம்,கும்பகோணம் என்று மாப்பிள்ளை பெண் முதல் பேரனோடு
ஒரு சுற்றுலா. 
என் பிறந்த நாளன்று சென்னை வந்து சேர்ந்தோம். சம்பந்தி வீட்டி ல் அருமையான சாப்பாடு அள்ளிக் கொடுத்தார்கள்.
அப்பொழுதும் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
 ஏதோ வேலை விஷயமாக  வெளியே இருந்தவன், தாமதாக வாழ்த்து சொல்வதாக வருத்தப் பட்டான். எங்கள் வீட்டுக் கடைக்குட்டி என்பதால் எல்லோரும் அவன் மேல் உரிமை எடுத்துக்கொள்வோம். 

மீண்டும் யுகாதிக்கு  திருப்பதி போவதாகத் திட்டம். அனைவரும் திருப்பதி கூட்டம் பற்றி பயமுறுத்தினார்கள்.
அன்று கூட்டமே இல்லை.
   சுகமே சென்று சுகமே வந்தோம். தனியாக  நின்று கோவிந்தனிடம் இரண்டு நிமிடம் ஒன்றும் பேசாமல்
கண்ணீர்   அர்ச்சித்து.  ,உண்டியலை சேவித்து  மகிழ்வுடன்  திரும்பினோம்.

மனம் கொள்ளா மகிழ்ச்சி.

அம்மா  சொன்ன ஜாக்கிரதையெல்லாம் கேட்டுக் கொண்டேன். 
விழாமல் திரும்பவா. அன்னிக்கு உன் ஜன்ம நட்சத்திரம். என்னுடன் நீ இல்லையே ந்னு நினைக்கவில்லை. பகவானுடன் நீ இருந்தது மகிழ்ச்சி என்று தொலைபேசியில் வாழ்த்தினாள்.

வாழ்க்கையின் அன்புகளையும் ஆதரவுகளையும் நினைக்கிறேன்.
எல்லோருக்கும் இனிய உகாதி வாழ்த்துகள்.

கூழாங்கற்கள் சிறுகதைத் தொகுப்பு..என் எண்ணங்கள்...1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எனக்குத் தெரிந்து புரிந்த வற்றை இங்கே கொடுக்கிறேன்.

திருகனவுப் பிரியன் எழுதி அருமையாக வெளிவந்திருக்கிறது
கூழாங்கற்கள்  சிறுகதைகளின் தொகுப்பு.
அனுப்பி வைத்த திரு ரத்னவேல் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

பெரியவர்கள் எழுதின அணிந்துரைகளும், திரு கனவுப்பிரியன் எழுதி இருக்கும் முன்னுரையும் என்னைக் கரைய வைத்தன.சிலபகுதிகளைப் பதிவிடுகிறேன்.


 எழுத்தாளர் திரு.கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் புதினம் ,திரு .ரத்னவேல் அய்யா
மிக முக்கியமாக திரு .ரத்னவேல் அவர்களுக்குதான் என் நன்றி துளசி.
என் ஸ்ரீவில்லிபுத்தூர் பந்தம் இத்தனை வருடங்கள் கழித்து என்னை வந்தடைந்திருக்கிறது.
தேவதா கீதா அவர்கள் புத்தகவிமரிசனத்தில் எப்பொது படிக்கப் போகிறேனோ என்று புலம்பியிருந்தேன். ஐயா அவர்கள் ,எனக்கு இன்பாக்ஸில் செய்தி கொடுத்து இதோ புத்தகமும் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய முயற்சி.
அவர் அதை மிக சுலபமாகச் செய்துவிட்டார். எந்த போஸ்ட் ஆஃபீசில் அப்பா வேலை பார்த்தாரோ
அதே போஸ்டாஃபீஸிலிருந்து எனக்குப் புத்தகம். அப்பாவின் ஆதரவாகவே
பார்க்கிறேன். N.Rathna Vel avarkaLukku en NanRikaLஅனுப்பி இங்கே வந்து விட்டது. முகவுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளை இனிதான் அணுக வேண்டும் கனவுபிரியனுக்கும் திரு.ரத்னவேல் சாருக்கும் மிக மிக நன்றி,

2,கூழாங்கற்கள்+++++++++++++2
முதல் கதை படித்து முடித்தேன். அந்தமடம் இல்லாவிட்டால் சந்தைமடம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையைச் சொல்வதாக இல்லை.

கருத்து வழுக்கிக் கொண்டு செல்லும் சிமெண்ட் ரோடு போல.
ஒரு அனாவசிய வார்த்தை இல்லை. நான் இதுவரை கண்டிராத மக்கள்.
முக்கியமாக அனைத்துக் கலைகளும் கற்ற ஒரு அரிய மனிதன். அவனை முழுவதும் பயன்படுத்திக் கொண்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியில் அனுப்பப் படுகிறான். அவனுக்குக்
கவலையில்லை. ஆயிரம் தொழில் அவன் கையில்.
எங்கு வேண்டுமானாலும் பிழைக்க வழி தெரியும்.





ஆனால் இந்தக் கருவை அழகாகக் கையாண்டிருக்கும் திரு கனவுப் பிரியனின்
கைவண்ணம் தான் அதிசயிக்க வைக்கிறது.வாழ்த்துகள்  .

கூழாங்கற்கள். .....3
அழகான கூழாங்கற்களை மகளுக்காகச் சேர்க்கும் இனிய
தந்தையின் வாழ்வு திசைமாறும் அழகை
அருமையாக வடித்திருக்கிறார். அயல் நாட்டில் வாழும் மக்களிடையே 
இயல்பாக இருக்கும் போட்டி,அது மாறும் விதம் எல்லாமே
நெகிழ்வு.
கூழாங்கற்கள் 4
+++++++++++++++++++++
திறமை வாய்ந்த தந்தையை பெற்ற மக்களின் கதை.
இப்படிக்கூட ஒரு தந்தை. அவருக்கான அருமையான மகன் கள்.
மிகவும் ரசித்த கதை.இது வரை அறியாத நடை களம்.
‪#‎கனவுப்பிரியன்‬

Monday, April 04, 2016

மாங்காய் எண்ணெய் மாங்காய்

 எண்ணெய் மாங்காய்  .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++இந்த ஊறுகாய்க்கு   எந்த மாங்காயும் பொருத்தம். ஊறு காய் போட்டபிறகு
 வெய்யிலில் எடுத்து   வைத்து வைத்து எடுக்கவேண்டும்.

கொஞ்சம் இளசு  கொஞ்சம் முத்தின வகையாக இருக்கும் மாங்காய்கள் ஆறு எடுத்துக் கொள்ளணும்.

நன்றாக அலம்பித் துடைத்துக் கொண்டு பிறகு துண்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
கையளவு தான் இதுக்கு.
ஐந்து அளவு மாங்காய்த் துண்டுகளுக்கு   ஒரு அளவு உப்பு பொடித்தது.
உப்பு அளவிற்கு ஒன்றேகால் அளவு மிளகாய்ப்   பொடி
முதலில் மாங்காய்த்துண்டுகளையும் உப்பு பொடியையும் கலந்து வைத்து விடவேண்டும்.
இரண்டு நாட்களில்   ஊறித் தண்ணீர்   விட்டு விடும் .

அடுத்து  அரைக் கிலோ எண்ணெய் அடுப்பில் வைத்துக் கடுகை
வெடித்ததும்,மிளகாய்ப் பொடி , வறுத்துப் பொடி  செய்த   மெந்தியப் பொடி
பெருங்காயம் வறுத்துப் பொடி  செய்தது, மஞ்சள் பொடி  6 ஸ்பூன் எல்லாவற்றையும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
அதே சூட்டோட , மாங்காயில் இருந்த உப்பு ஜலத்தை சேர்க்கவேண்டும்.மீண்டும் அடுப்பை ஏற்றி, சிறிய  உஷ்ணத்தில் பதினைந்து நிமிஷங்கள் வைத்திருந்து    தண்ணிர்  வற்றியவுடன்
அதில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு இறக்கிவிடவேண்டும்.
ஆறினவுடன் ஜாடியில்  சேர்த்துவிடவேண்டும்.
ஜாடி குளிர்ந்தவுடன் வேடுகட்ட வேண்டியது தான்.

இதற்குப் பராமரிப்பு கவனம் வேண்டும். நல்ல வெய்யில் வந்தவுடன் ,கிணத்து மேட்டிலோ இல்லை பால்கனியிலோ வேடுகட்டின துணியோடு வைக்க வேண்டும் .
நான் கு  நாட்களில் எண்ணெய் மாங்காய் ரெடி.


















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 31, 2016

அடை மாங்காய் ஊறுகாய்



  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
 பாட்டியின் ஸ்பெஷாலிடி  இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
 அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு 
அக்கம்பக்கம்  மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
  அவரவர்  முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள்  திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.

அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.

அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.

காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.

இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள்  போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா 
என்று உறுதி  கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும்  விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள்  ஊறுகாயை ஆற வைக்கும்  பாத்திரம் தயாராகும்.
எண்ணெய்  மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
 பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள்   ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக்  கிளறப்படும்.
அப்போது  தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும்.  அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.

ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
 யாருக்கு வேணும்  அடை மாங்காய்.....






































.

Monday, March 28, 2016

கீரை வடையும் நானும். 1982

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வடைப் பிரியர்களால் நிறைந்தது இந்த உலகம்.
எலியிலிருந்து  ஏந்தி பவன் வரை
 மடைப் பள்ளியிலிருந்து  மரினா கரைவரை எங்கும் வடை மணம்.

என் மாமா எனக்கெழுதிய கடிதத்தில் மாமி செய்த கீரைவடையை வெகுவாகச் சிலாகித்து
என்னை இன்ஸ்டண்ட் கீரை வடை மோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கூடவே நீ தில்லி வந்தால் வடை கிடைக்கும் என்று சவால் வேற.

இது ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை முடிந்து ,மதுரையில்
ஃபெமினா,பொம்மை,பழைய தொடர்கதைகள், ரேடியோ சிலோன்
 என்று  நேரம் கழிந்த காலம்.

இந்தக் கீரைவடை படித்ததும்  அம்மாவிடம் சொன்னேன். மாவில் கீரையை அலசிப் போட்டு
   வறுத்தெடுத்தால் போதும்  என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அம்மாவுக்கு  என் சமையலறை  வேகம் விவேகம் இரண்டுமே தெரியும்.
  ஒரு நாள் செய்கிறேன் என்றார்.
அதற்குள்  வாழ்க்கை திருமணத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டது.
தில்லியிலிருந்து வந்திருந்த  மாமியிடம் கேட்டேன். கீரை வடை சாப்பிடலாமே போறேனுன்னு.
மாமி அழுதுவிட்டார்.
    இதை நான் எதிர்பார்க்கவில்லை. அச்சோ மன்னி அந்தவடையை நான் போகுமிடத்துகல் எப்படியாவது பழகிக் கொள்கிறேன்   என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.

          கீரைவடையை மறந்தும் போனேன்.
பிறகு  பத்துவருட தனிக்குடித்தனம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் வந்துவிட்டோம்.
கீரை வடை மட்டும் அங்கிருந்த சமையற்காரர் செய்யவில்லை.

வேறு என்னவெல்லாமோ டிபன் காஞ்சீவரம் இட்லி, அழகர் கோவில் தோசை,
சேம்பு இலை அடை  என்றெல்லாம்  வந்தாலும் எனக்கு ருசிக்கவில்லை.
கொக்குக்கு ஒண்ணே மதி..
 அப்பொழுது கிண்டி அருகே தனி  பணிமனையும், லேத் பட்டறையும்   வைத்து நடத்தி வந்தார் சிங்கம்.
மதியம் சாப்பாடு வீட்டில் தான்.
அப்போது ஒரு நாள் வாசனையாகப் பொட்டலம்  ஒன்று கொண்டுவந்தார். ஆஹா மிளகாய் பஜ்ஜி
  என்று பிரித்தேன். அங்க இருந்ததோ வண்ண மயமான  பச்சைப் பசெல் என்ற கீரைவடை.
மசாலா வடைதானேமா என்றி வரிடம் கேட்டதற்கு, கீரை சேர்த்திருக்கான் மா. அதுவும் ஸ்பினச்
என்றதும் ஆ  வென வாய் பிளந்தேன்.
கிண்டி ராஜ் பவன் அருகே ராஜ்பவன் என்றே ஹோட்டல் ஒன்று இருக்கும். அங்கு போனபோது,
குடும்பத்துக்கும் கொண்டு வந்துவிட்டது சிங்கம்.  என் வடை மோகம் பற்றி அவருக்குத் தெரியாது.ஏதோ மனல்ல அலைவரிசை இருந்ததால் அவர் வழியாக எனக்குக் கீரைவடை கிடைத்தது.
பிறகு கேட்பானேன். தினசரி வடை பஜ்ஜியோடு  சாப்பாடு.
         இதுவரை  நான் கீரைவடை செய்யவில்லை.



Saturday, March 26, 2016

இங்கு இளவேனில் ஈஸ்டர் விடுமுறை

எல்இப்போது சின்னப் பசங்க எல்லாம்
எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.







அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.

நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்,

ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்ஜி லி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.


மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.எல் லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...