Saturday, July 25, 2009

கொண்டாடுவோம் ஆடிப்பூரம்!



கிளியே

எங்கள் வீட்டு அக்கார வடிசில்














காத்திருந்து பார்த்தேன்.
எல்லாத்தேரும் தொலைக்காட்சியில் வலம் வருகிறதே ஆண்டாளும் வருவாளோ என்று. எனக்குக் காணக்கிடைக்கவில்லை.
 
அவள் கையில் தொற்றிக் கொள்ளும் கிளி செய்யும் முறை மட்டும் தினமலரில் வெளியிட்டிருந்தார்கள்.
1954 ஆம் வருடம் அவளைக் கடைசியாகப் பார்த்த போது இருந்த அழகே இன்னும் கண்ணில் இருக்கிறது
ஆறு வயதில் என்ன புரிந்திருக்கும்!!
பார்க்கலாம். எப்போது அழைக்கிறாள் என்று;))
ஆண்டாளைப் பதிவிட்ட ரவி கண்ணபிரான், ராகவ் இவர்களுக்கு மிகுந்த நன்றி. காணக்கிடைக்காத அற்புதக் காட்சிகளைப் படங்களாகக் காணும் பாக்கியம் தந்தார்கள்.
ராகவின் அத்தை தான் என்ன அழகு.
அவர்கள் குரலும் ஆண்டாள் கோலமும் மனதை நிறைத்தது. நன்றி.


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, July 21, 2009

ஆண்டவளும் மாமுனியும்





ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

ஸ்ரீ ராமானுஜர்







3,
3,கள்ளழகர் சுந்தரராஜன்
4,
ஸ்ரீ விஷ்ணுசித்தர்


ஆடி வந்துவிட்டது,. அதை அடுத்து
மயிலையில் உள்ள அத்தனை அம்மன் சன்னிதானங்களிலும்,
அலங்கார வளைவுகள்,பாலபிஷேகங்கள், ஞயிறு, செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை வேண்டிப் பொங்கல் இடுவதும், தீமிதி நடப்பதும்,அம்மன் அலங்காரங்கள் செய்து கொண்டு அழகான அருள் புன்னகையோடு வீதி வலம் அழகும்,
எங்கள் திண்டுக்கல்லில் நான் இளவயதில் பார்த்த ரசித்த அனுபவங்களை
நினைக்க வைக்கின்றன.
அதுவல்ல இந்தப் பதிவு. பயப்பட வேண்டாம்.;;;;;)))))

இது நம் ஆண்டாள்,கோதை,சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,அரங்கனின் அந்தரங்கத்தைக் கண்டவள், பெரியாழ்வார் பெற்றுக்கொண்ட பொக்கிஷம், பெரும்பூதூர் மாமுனி ஸ்ரீராமானுஜர்,உடையவர்,எம்பெருமானார்
இரூவரையும் பற்றிய பழைய செய்தி.
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தனம்,
கல்பவல்லி,
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்.
சாக்ஷாத் க்ஷமாம் கருணயாம் கமலாபி வான்யாம்
கோதாம் அனன்ய சரண்ய:சரணம் பிரபத்யே.//
ஸ்வாமி தேசிகன் கோதையை உணர்ந்து உருகும் பாடல்.
அவளெ கருணை.
அவளே மன்னிப்பவள்,
அவளெ ரட்சிப்பவள்.

ஹரியின் அன்பான இதயத்தில் இடம் பிடித்தவள் (கொஞ்ச பாடா பட்டாள்.:(( )
அவளைச் சரண் புகுவதில் சந்தோஷத்தத் தவிர வேறு என்ன கிடைக்கும்!!
இதெல்லாம் ஆண்டாளை நினைக்க ஆரம்பிக்கும் போதே வரும் நினைவுகள்.
இந்தப் பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் //இந்த வரி மிகவும் பிடித்தது.
ஆண்டாள் ஜீயர் என்றழைக்கப் பட்ட எம்பெருமான்,உடையவர் ஸ்ரிராமானுஜர்,

ஆண்டாள் நேர்ந்து கொண்ட நூறு தடா சர்க்கரைப் பொங்கலையும் வெண்ணெய் ஒழுக,அழகர்மலைக் கண்ணனுக்கு,கள்வனுக்குச் செய்து சம்ர்ப்பித்தார் அல்லவா.

இன்று காலைத் திடிரென்று ஒரு நினைவு.
இந்த ராமானுஜர் அந்த ராமானுஜன் தானே.
அந்த இலக்குவனின் அவதாரம் தானே.
அதே ஆதிசேஷன் அம்சம்தானே.
 
ஆண்டாளுக்காக இந்த நற்செயலை அவர் மேற்கொண்டார் என்றால், அவர்களுக்குள் பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்கிறது.
அவளோ பூமாதேவி.
ராமனின் மனைவியாகவும் இருந்தவள்.
அவனோ திருமால் தொண்டன், இலக்குவனாக வந்து ராமனான அண்ணணுக்கும் , சீதையான அண்ணன் மனைவிக்கும் தொண்டனாக இருந்த கைங்கர்யபரன்.

அதனால் ஸ்ரீராமானுஜர் தனக்கு முன் பிறந்த ஸ்ரீகோதையின் வாக்கைக் காத்ததில் அதிசயமே இல்லை. அதுவும் தாயாரிடம் கேட்ட சொல்லைத்
தயங்காமல் நிறைவேற்றித்
தந்தையிடம் கொடுத்து வேண்டுதலைப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
 
வரும் 25 ஆம் தேதி ஆடிப்பூரம் கண்டருளும் தேவிக்கும்,
அவளால் அண்ணா என்று விளிக்கப்பட்ட ஸ்ரீராமனுஜருக்கும்
அக்கார அடிசலைச் சுவீகரித்த அழகனுக்கும்,
அடியார்களுக்கும் பல்லாண்டு பாடுவோமா.
 
 
 
 
 

Sunday, July 12, 2009

அணுகமுடியாத ஆலமரம்.




ஆலமரத்துக்கு, அடையாறுக்கு ஆலாப் பறந்தாலும் பார்க்க முடியவில்லை.
நேரங்கள் மாறிவிட்டன.
பக்கத்தில் போக முடியாதபடி கயிறுகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்கள்.
20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத
அளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு
அளவில் ... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)
இருந்த விழுதுகளை மட்டும் படங்கள் எடுத்து இந்தப் பதிவில்
இட்டிருக்கிறேன்.
























































































































































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

















Posted by Picasa

Thursday, July 02, 2009

சில காட்சிகள்..தெற்கு வாழும் சித்திரம்







































































































































































































































































கிளிகள் வந்து குவிந்தது போல மழலைப் பட்டளம் ஒன்று வீட்டில் இறங்கி இருக்கிறது,.
வெய்யில் தாளவில்லை. சில பல காட்சிகளையாவது அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று,
ஒரு மாலை நேரம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் தக்ஷின் சித்ராவுக்கு அழைத்துச் சென்றோம்.
மாலை 6 மணிக்கு அந்தக் கண்காட்சி கிராமத்தை மூடி விடுவார்களாம்.
அதனால் எங்களுக்குக் காணக் கிடைத்தது, தமிழ்நாட்டு,கேரள,செட்டினாடு வீடுகளும் சுற்றுப் புறங்களும் தான்.
அதுவே மனம் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் முழுவதும் பார்க்க முடியவில்லையே என்றும் வருத்தமாக இருந்தது.
சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.
அழகு வளையல்கள், பம்பரங்கள்,மண் சட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டோம்.
 
நிழலில் மணலில் விளையாடவும் நேரம் கிடைத்தது பேரனுக்கும் பேத்திக்கும்.
அங்கு எடுத்த சில துளி இன்பங்களைப் படங்களாகக் கொடுக்கிறேன்.














































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, June 19, 2009

32 கேள்விகளும் பதில்களும்!!

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி என்னையும் அங்கீகாரம் கொடுத்து இந்த 32 கேள்விகளை அனுப்பி வைத்து இருக்கிறார்.கொஞ்சம் சீரியசாக இருக்கிறதோ என்று மீண்டும்படித்தேன். சாதாரணமாகத் தானிருக்கிறது:)பயமில்லாமல் படிக்கலாம்.

நன்றி மௌலி.



உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். ரெண்டு மூணு பேரு இருக்கு. எல்லாமே பிடிக்கும். அம்மா அப்பா வைத்தால் முதல் பெயர் பிடிக்கும்:)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தம்பி மறைந்த போது.


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

முன்பு அழகாக இருந்த போது பிடிக்கும்


4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் யோசிப்பேன்.ஆனால் நட்பு பிடிக்கும்.


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கடல் என்னை இழுத்ததால் பயம். அதனால் அருவியை ரொம்பப் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


கண்கள். நேராகப் பார்த்துப் பேசுபவரிடமே என்னால் பேச முடியும்.
 
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதற்கும் படபடப்பு அதைப் பிடிக்காது. பிடித்தது மிஞ்சி இருக்கும் நகைச்சுவை:)


9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது சுறுசுறுப்பு. பிடிக்காததுன்னு ஒண்ணும் இல்லை.
 
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பெற்றோர்கள்,தம்பி.மூவரிடம் ஏதாவது அறிவுரை கேட்டுக் கொண்டே இருப்பேன்:)


11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பிடித்த பச்சைவண்ணத்தில் புடவை ,பச்சை வண்ணத்தில் ப்ளௌசும்.


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
விஜய் சினிமா அவார்ட்ஸ்.
 
 
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
ஆரஞ்சு வண்ணம்.


14. பிடித்த மணம்?
நித்திய மல்லி,ஜாதி மல்லி உயிர்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்க நினைப்பது துளசியையும்,
 
கீதாவையும்,கொத்சையும், அபி அப்பாவையும்
 
நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள். எல்லாவற்றையும் விட அன்பானவர்கள்.
எல்லோருமே நிறைய வேலைகளில் பொதிந்து இருக்கிறார்கள்.
அழைக்கப் போகிறேன். எப்போ முடிகிறதோ அப்போது எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.


 
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவருடைய எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டதாகச் சொல்ல மாட்டேன். சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். அதில் தொனிக்கும் உயர்ந்த கருத்துகளும், ஆன்மீகச் சிந்தனைகளும்,தேடுதலும் பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு:
ரிங் டென்னிஸ்.


18. கண்ணாடி அணிபவரா?


கண்ணாடி இல்லாமல் நான் இல்லை:0)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மாயா பஜார்,மிஸ்ஸீயம்மா, கலாட்டா கல்யாணம் இந்த மாதிரி சிரிக்க வைக்கவே எடுத்தார்களே அந்தக் காலத்தச் சேர்ந்தவள்.


20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர் பக்கம் போய் வருடக்கணக்காகி விட்டது. மிஸஸ்.டவுட் ஃபையர்னு நினைக்கிறேன்.


21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம்.மார்கழி.


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீராமாயணத்தில் சுந்தரகாண்டம்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ரொம்பப் போரடித்தால் வருடத்துக்கு ஒரு முறை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது மழையின் சன்ன இசை. பிடிக்காதது இடிச் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


அமெரிக்கா, கானடா.
 
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கலாம். மற்றவர்கள்தான் சொல்லணும்


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


பொய் பேசுவது.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மதுரை.


30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இன்னும் நிறையப் படிக்க வேண்டும்,என்னை விட வயதானவர்களுக்கு உதவ வேண்டும்.


31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஒன்றுமே இல்லை.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, June 05, 2009

திருமணநாள் நல்வாழ்த்துகள்



Friday, June 05, 2009



இப்பத்தான் வாழ்த்துகள் சொன்ன மாதிரி இருந்தது . அதற்குள் இன்னோரு வருஷம் ஓடிவிட்டது.
மணநாள் என்பது எல்லோருக்கும் எப்படிப் பட்டவர்களுக்கும் இனிய நினைவுகளைக் கொடுக்கக் கூடியதே.
நேற்று சண்டையும் வாக்கு வாதமும் இருந்தாலும் இன்றாவது நல் வார்த்தை சொல்லி நல்லபடியாகச் சேர்ந்து இருப்போம் என்று ஒவ்வொரு தமபதியரும்
 
மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள்.
அந்த மாதிரிப் பலவித தடைகள், அனுபவங்கள் ,சமீபத்திய நிகழ்வு என்று எல்லாவற்றையும் தாண்டி வந்து கொண்டிருக்கும் அருமைத் தமபதிகள் திரு கோபாலும் ,நம் துளசி கோபாலும்.
இன்று தங்களுடைய
 
35ஆவது
திருமணநாளைக் காண்கிறார்கள் இன்று.
அவர்கள் என்றும் இதே போல செழிப்பாக,அன்பு கொழிக்கும் இல்லறம் சிறந்து வாழ,
ஆரோக்கியம் சூழ
இன்னும் அநேக ஆண்டுகள் இனிய ஆண்டுநிறைவுகளைக் காண இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...