Blog Archive

Thursday, February 08, 2007

சித்திர ராமன்....3







பங்குனி உத்திரம் அன்று.

எல்லாருக்கும் உகந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு,

நான்கு இளவரசர்களும்

ஜனகபுரி இளவரசிகளைக் கைப்பிடித்தனர்.


இந்தப் பங்குனி உத்திரத்தில் மட்டும்தான் நம்பெருமாள்

ஸ்ரீரங்கராஜன் தன் பத்தினி ஸ்ரீரங்க நாச்சியாரோடு

சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி கொடுப்பான்.

மற்ற நாட்கள் தாயார் வேறு சன்னிதி. ராஜா வேறு சன்னிதி.

இங்கே இன்னோரு கதை ஸ்ரீரங்கராஜனைப் பற்றிக்

கொடுக்கிறார் உபன்யாசகர்.

ஸ்ரீரங்கத்தில்தான் ஒரு தெருவுக்கு பத்து ரங்காவைப் பர்க்க முடியுமே.

அதில் முன்ன காலத்தில் ஒரு அம்மாவும் பையனும் இருந்தார்களாம்.

ஏழைக் குடும்பம்.

பையன் வேதம் படித்து வருவதற்காக ஒரு பள்ளியில் சேர்க்கப் படுகிறான்.

15 நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா கையால் எண்ணை தேய்த்துக் கொண்டு காவேரிக்குப் போய் தோழர்களுடன் கும்மாளம் போட்டு விட்டு வருவானாம்.

அப்படி ஒரு தடவை (அமாவாசையா, பௌர்ணமியானு தெரிய வில்லை.)

அம்மாவிடம் ஆசை ஆசையாகக், கீரை சமைக்கச் சொல்லிவிட்டு ஓடி விட்டது அந்தப் பையன்.

அம்மாவும் சுடு சாதம் செய்து, சட்டியில் நல்ல அரைக் கீரையைச் சுத்தம் செய்து,

வாசனையாகப் பெருங்காயம், கடுகு தாளித்து மசித்து வைத்துக் காத்திருக்கிறாள்.


குளிக்கப் போன பையனைக் காணோமே என்று கதவுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறாள்.

நீச்சலில் சூரன் பையன்.

ஆட்டம் போடாமல் ட்ஹிரும்ப மாட்டான், எல்லலம் தெரியும்.

இருந்தாலும் நேரத்தோடு சாப்பிட்டால் தேவலையே என்று ரங்கா ரங்கா என்று கூப்பிடுகிறாள்.


'கீரை செய்து இருக்கேண்டா, சீக்கிரம் வா'ன்னு வேற

அழைக்கிறாள்.

அந்தப் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ.

நம்ம பள்ளிகொண்ட பெருமாள் காதில் விழுந்துவிட்டது.

அவருக்குக் கீரை சாப்பிட ஆசையாம்.


உடனே எழுந்து இந்த ஏழைத்தாய் வீட்டு வாசலில்

அவள் மகன் போலவே வந்துவிட்டார்.

மகனைக் கண்டதும் அம்மாவுக்குக் கோபம் இருந்தாலும், 'பாவம் பிள்ளை பசியோடு இருப்பான்' என்று

வாடா உள்ளே என்று கையைப் பிடித்து அழைத்து

ஆசனம் போட்டு, சரகு இலையில் சுடச்சுட அமுது பரிமாறுகிறாள்.


வந்த பெருமாளும் கீரையும் சோறுமாக ,அத்தனை

சோற்றையும் சாப்பிட்டுவிட்டு,

அம்மா உனக்கு இல்லையே என்கிறான்.

அவளுக்கோ மகன் சாப்பிடுவதைப் பார்த்தே வயிறு

நிரம்பிவிட்டது.


'இன்னிக்கு விரதமெ'ன்று சொல்லி விடுகிறாள்.


பையனும் வெளியே ஓடிவிட, காவிரியில் ஆட்டம் போட்ட பிள்ளை வருகிறான் பசியோடு.

களைப்பாகப் பசியோடு படுத்திருக்கும் அம்மாவை எழுப்பி

'அம்மா எங்கே கீரை?' என்கிறான்.


அம்மா 'நீதானே இப்ப சாப்பிட்டுப் போனியேப்பானு'

குழம்புகிறாள்.


நேரத்தோடு வரலைமா. சினெகிதர்கள் எல்லாம்

சேர்ந்ததால் நேரம் ஆகிவிட்டது.பசிக்கிறதும்மா' என்று சொல்லும் பிள்ளையைப் புரியாமல் பார்க்கிறாள்.

அடுக்களையில் சட்டி அலம்பிக் கவிழ்த்தாச்சு,.

இது என்ன நான் சொப்பனம் கண்டேனா.


என்று மீண்டும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீரைப் பாத்தியிலிருந்து இலைகள் கிள்ளி மறுபடியும் சமைக்கும்போது, வந்தப் பையனை நினைக்கிறாள்.

எப்போதுமே அம்மாவைப் பார்த்து ' நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னு

கேட்டுதே என்று நினைக்கும் போதே அவளுக்குப்

புரிந்தது வந்தது யார் என்று.

கண்ணில் நீர் பெருக ரங்கனின் கோபுரத்தைப் பார்த்துக்

கைகூப்புகிறாள்.


அழைத்த உடனே வந்தியா ரங்க ராஜா'' என்று மனம் குழைந்து

அழுகிறாள்.

இப்படியும் ஒரு காலம் இருந்ததா என்று எனக்குத் தோன்றுகிறது.


இப்போ நம்ம ராமரும் சீதையும், தசரத,ஜனக,வசிஷ்ட,

விஸ்வாமித்திரர்களின் ஆசியோடு,


'இயம் சீதா மமசுதா' என்று ஜனகன் தன் பெண்ணை அறிமுகம் செய்து, காப்பற்ற வேண்டியது உன் பொறுப்பு என்று ஒப்படைக்கிறான்.


அவர்களைக் கொஞ்சம் தனியே விட்டுவிட்டு மீண்டும் சந்திக்கலாம்.

ஜானகி காந்தனுக்கு சுப மங்களம்.








Tuesday, February 06, 2007

சித்திர ராமன்......2











கற்பார் ராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ!
எழுத்திலோ,சொல்லிலோ பொருளிலோ பிழை இருப்பின் மன்னிக்க வேண்டும்.
சில நாட்களாக மன அமைதிக்காக
கதாகாலாட்சேபங்கள் கேட்பதை ஒரு
சட்டமாக வைத்துக் கேட்பது ,
வழக்கமாகி விட்டது.
கேட்பதும் விட்டுவிட்டால் மனம் எப்போதுதான் அமைதியாய் இருக்கும் என்பது சந்தேகம்தான்.
அவைகளில் மிகவும் மனதைக் கவர்ந்தது கம்பரமாயண சொற்பொழிவுகள்.
''வித்லோகா''வில் வாங்கிய 'சிடி'க்கள்
மிகவும் உபயோகமாக இருக்கின்றன.
கதை சொல்பவரின் நா வன்மை பிரமிக்க வைக்கிறது.
அவர் எல்லாவித நலன்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இங்கே வந்ததிற்கும் ஒரு கூடுதல் நல்ல பயன் ,
தொந்தரவு ஏதும் இல்லாமல் கதை கேட்க முடிகிறது;-)
வெளியே மைனஸில் குளிர்,பனி.
11 வருடங்களில் இந்த வருடம்தான் ரிகார்ட்
குளிருக்கும்,காற்றுக்கும்.
1996இல் ஒரு பனிப்புயலாம்.
இந்தவருடம் 2007ல்,
இதுப்போல் பெய்தது இல்லை என்று குளிர்மழை
கொட்டுகிறது.
அடுப்பு பக்கம் ஆசை ஆசையாக இருக்கலாம்.
அங்கே சூடு நிறைய உண்டே!!
அப்பப்போ ஏதாவது சுட வச்சு வயிற்றுக்கும் ஈயலாம்.
சமையல் முடிந்தால் காதுக்கு விருந்து.(?)
இப்போது கேட்கும் உபன்யாசம்.
ராமன், சீதை கதை எல்லோருக்கும் தெரியும்.
அதிலே உட்கதைகள் அனேகம்.
அவைகளை இஙகே குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில் பால காண்டம்.
தசரதன் யாகம் முடிந்து நான்கு புதல்வர்களும் பிறந்தாச்சு.
மாணிக்கம் வைரம் பதித்த நான்கு தொட்டில்கள்.
குழந்தைகள் திடீரென அழத் தொடங்கின.
ஒருவருக்கும் புரிய வில்லை.
தெய்வக் குற்றம் கூட இல்லையே என்று வசிஷ்டரை வரவழைத்தார்களாம்.
அவர் ஒரு நொடியில் தீர்த்து வைத்தாராம்
பிரச்சினையை.
''ராமனையும் லட்சுமணனையும் சேர்த்து ஒரு தொட்டிலில் போடுங்கள்.
இன்னோரு தொட்டிலில் பரதனையும் சத்ருக்கினனையும்
இடுங்கள்.''
ஏனெனில் ராமனுக்காகப் பிறந்தவன், லட்சுமணன்.
பரதனுக்குப் பணிவிடை செய்யப் பிறந்தவன்
சத்ருக்னன்.
இவர்களைப் பிரித்தால் அழுகைதான் என்கிறார்
முனிவர்.
அப்படி ஒரு இணையாக நால்வரும் வளருகிறார்கள்.
விஸ்வாமித்திரர் தாடகை,சுபாகு வதங்களுக்காக
அழைத்துப் போகும்போது அவர்களுக்குப் பன்னிரண்டு
வயது. அந்த நாள் திருமண வயது
காத்திருக்கும் சீதைக்கு ஆறு.
அகல்யா சாபம் தீர்ந்து, மிதிலைக்கு வரும் ராமலட்சுமணர்கண்டு மயங்குகிறார்கள்
மக்கள்.
வில்லைக் காண முனிவரும் சபைக்கு இருவரையும் அழைத்துப் போகிறார்.
வில்லைக் கொண்டுவரச் சொல்லி மன்னனிடம் கேட்க வருகிறது..
சிவதனுசு!
அதைக் கொண்டுவருபவர்களோ ஆயிரக்கணக்கான மல்லர்கள்.
விஸ்வாமித்திரர், 'ராமா வில்லைப் பார்த்துவிட்டு
வா' என்கிறார்.
ராமனும் தன் சிங்க நடையில் கம்பீரமாக ந்அடந்து வில்லிருக்கும் இடத்துக்கு வருகிறான்.
அனாயாசமாக வில்லைத் தொட்டுத் தூக்குகிறான்.
வில்லின் ஒரு நுனியில் தன் ஸ்ரீபாதத்தின்
கட்டைவிரலை வைத்து,
மறுமுனையைக் கையால் எட்டி,நாண் பூட்டப் போகும்போதே வில் முறிந்து வீழ்கிறது.
தன் மாளிகைச் சாளரத்தில் இருந்து பார்த்துக் களித்த
அரசகுமாரன்தான் வில்லையும் முறித்தான் என்று உறுதி செய்த பிறகே,
சீதை மகிழ்கிறாள்.
வரமாலையைக் கையில் எடுத்து சபை நோக்கி வருகிறாள்
.
'இது என் மகள் சீதை அவளை நீ திருமணம் செய் ராமா'
என்று ஜனகன் சொல்ல,
இப்போது இல்லை. தந்தை வரட்டும் பிறகே
சுப காரியம் நடக்கும் என்ற சொல்
வருகிறது ராமனிடமிருந்து.
சீதை சந்தோஷப் படுகிறாள்.
'மெய்யெழில், கையெழில்,கால் எழில் ,தோள் எழிலுடன், ராமன் குரலும் எழிலே. சிந்தனையும் எழிலே'
என்று பூரித்துப் போகிறாள்.
இவர்களின் திருமண விழா அடுத்த
சில தினங்களில் நடக்கிறது.
ஸ்ரீராமசீதாராமனுக்கு மங்களம்.

சித்திர இராமாயணம்....1














































Sunday, February 04, 2007

பூனை பூனை




நடக்கிற கதை நிஜம், அசல்.சாதாரணமான ஒரு நாளில், மழைப் பெய்ய வேண்டாத,மழை நின்னால் போதும் என்று தோணும் நேரத்தில் ,குட்டிப் பூனை அம்மாவைத் தொலைத்து விட்டது,.
அம்மா சொன்ன இடத்திலேயே இருந்து பார்தது பசி பொறுக்காமல் வெளியில் வந்துவிட்டது. அம்மாவைப் பற்றிக் கவலையில்லை, பசிதான் தாங்க முடியலையென்னு யோசிச்சு தான் இருந்த பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்தது.
பொட்டு பொட்டுனு தெரிக்கிற மழைத்துளிக்கு கொஞசம் சிலிர்த்துக் கொண்டு மேலேயும் சுத்தியும் பர்த்தது.
அந்த விளிம்புக்கு கீழே இருந்த வீட்டில் ஒரு அம்மா தன்னோட குட்டிப் பொண்ணோட ஏதோ மியாவைக் கூப்பிட்டுகிட்டு வந்தாங்க.
அவங்க வீட்டு செல்லத்தை தேடிகொண்டு இருந்தாள்.'பென்னி,பென்னி'' என்று கூவியும் பென்னி வரும் வழியாகக் காணொம்.
குட்டிப்பொண்ணொ அழுகையை சுருதி கூட்டி அழைத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பென்னி திரும்பி வருமென்று ந்ம்பிக்கையில்லை. அம்மாதான் பென்னிக்கு சிப்ஸ் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களெ, அதாலே பென்னி நிறய லே"ஸ் சிப்ஸ்கிடைக்கிற வீட்டைத்தேடிப் போயிருக்கும்.''என்றபடி மேலே பார்த்த பொம்மிக்குப் ,
பூனைக்குட்டி கண்ணில் பட்டது.ஆச்சர்யத்தில் வாயை மூட மறந்து அம்ம கையைப் பிடித்து இழுத்தது பொம்மி. 'அம்மம அங்கே பாரு பூனை ''என்று குதிக்க ஆரம்பிதது.
சூ சூ என்று விரட்டப் போனாள் அம்மா.அவள் விரட்டின வேகத்தில் பயந்த ந்ம்ம குட்டி அவங்க வீட்டு வராந்தாவிலேயெ விழுந்து விட்டது.ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி அடுத்த நிமிடம் எழுந்துவிட்டது.குட்டிகளுக்கே உண்டான சினேகத்தொடு பொம்மி பக்கத்திலே நின்று கொண்டு மீஈஈஇயாவ்வ் என்று இழுத்தது.
இந்தச் சோகப்பாடலைக் கேட்ட பொம்மிக்கு தன்னுடைய'பென்னி' மறந்து விட்டது.
அடுத்து வந்த அரை மணி நேரத்தில் பால், படுக்கை பாஸ்கெட் என்று கொடுக்கப்பட்டு,பூனைக்குட்டி,வெள்ளையாக இருந்ததாலும்,பொம்மியோட அம்மா தமிழ் பேசும் வித்தை அறிந்தவளாக இருந்ததாலும் ,வெள்ளி என்கிற பெயர் சூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு பூனைகுட்டி..
கன கம்பீரமாக நிமிர்ந்த கழுத்து ,சிவப்பு பட்டை ரிப்பன் சகிதம் உலா வர ஆரம்பித்தது. பூனையாகவும் ஆகிவிட்டது.அதான் மழை வந்துபோய் 6 மாதம் ஆகிவிட்டதே !!
வெள்ளியும் பெண் பார்ப்பதாகக் கேள்வி.// posted by manu @ 10:20 AM Comments:அட! இந்த போஸ்ட் எப்பப் போட்டீங்க? ஏன் தமிழ்மணத்துலே 'அளி'க்கறதே இல்லை?அளிச்சாத்தானே ஆட்கள் பார்க்க முடியும்? ஓசைப்படாமப் பூனைமாதிரிஇருந்தா என்ன அர்த்தம்?# posted by துளசி கோபால் : 8:43 AM அடப் போஙகப்பா.அளி அளின்னு அளிச்சாச்சு.பூனைனா அப்படித்தான் இருக்கும்.GK சார் எப்படி இருக்காங்க.சரித்திரம் நாளை உண்டா? இப்போ இன்னொருதரம் டிரை செய்யறேன்.# posted by manu : 11:49 AM GK நலம். நாளைக்கு சரித்திரவகுப்பு இருக்கு.# posted by துளசி கோபால் : 12:56 PM Post a Comment Links to this post:See links to this post%20


Friday, February 02, 2007

புது ப்ளாக்கருக்கு மாறினதால்

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portalபரிசோதனை.
இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன,?

அம்மா பாட்டியானாள்

ஒரு அம்மா பாட்டியாகும் கதை. இதற்கு முந்திய பதிவில் நான் அமெரிக்கா புண்ணியதலத்தில் இறங்கிய மஹாத்மியம் சொல்லி இருந்தேன்.
ஸ்ரீமந்தம் நடந்து ,வரலட்சுமி நோன்பு வந்து போயி, எனக்கு மருந்து ஸ்டாக் குறைந்து, மருந்து எடுக்காத காரணத்தால், ஆகஸ்ட் குளிர் தாங்காமல் ஒரு ராத்திரி முழுதும் மகளையும்,மருமகனையும் படுத்தி எடுத்து,

40 நாட்கள் கழித்தபிறகு, அந்த நாளும் வந்தது. எங்கள் பேரன் எங்கள் கைக்கு வந்து சேரப்போகும் நாள். வேப்பிலை இல்லியே, பேசாமல் நம்ம அம்மாவை அழைத்து வந்து இருக்கலாமோ/

எனக்கு இந்த மாதிரி பிரசவம் நெருங்கும் நேரம் என் அம்மா,அப்பா எப்படி நடந்துகொண்டார்கள்? பயந்தார்களா? எல்லா நேரத்திலேயும் அவர்கள் அமைதியாக இருந்த மாதிரி தான் எனக்கு நினைவு.

இங்கே மருமகனும், பெண்ணும் அதெ அமைதியோடு செயல் பட்டார்கள்.அவர்களூக்கு மருத்துவர்கள் சொல்லித் தந்த முறைப்படிநிதானமாக, வேண்டும் பொருட்களையெல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கி வைத்தார்கள். நான் மூணாம் பேஸ்து(இதுவும் ஒரு வார்த்தை குமரனைத்தான் கேட்க வேண்டும்.)
அடித்த மாதிரி எப்போதும் வாயில் ஆபத்துக் காலஙளில் (எனக்கு ஆபத்து என்று தோன்றும்) முணுமுணுக்கும் ஆபதாம் அபகர்த்தாரம், கந்தசஷ்டி கவசம்,எதுவும் நினைவுக்கு வராமல் அவர்களையெ வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தேன்.

மருமகனுக்குத் தோன்றி இருக்க வேண்டும், ஒருவேளை 10 நாட்கள் முன்னால்வந்த மாதிரி பி.பி. எகிறிவிட்டதோ?படபடப்போ? அம்மா, பொண்ணு இரண்டு பேருக்கும் வைத்யம், காவல் இருக்க வேண்டுமோ என்று நினைத்தாரோஎன்னவோ,

என்னிடம் வந்து மெல்ல" 'அம்மா இது ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஹாஸ்பிடல்,டாக்டர்எல்லோரும் ரெடியாக இருப்பார்கள். கவலையெ இல்லை, நீங்கள் வேணுமானால்,கெடொரேட் (ரஸ்னா மாதிரி) சாப்பிடலாமெ/ தெம்பாக இருக்கும்'' என்று சமாதானப் படுத்துவதாக எண்ணிஆரம்பித்தார்.அதற்குள் பெண்ணிற்கு அவசரம் .

ஆகவே காரில் போய்க்கொண்டே பேசலாமெ, அம்மா வரியா, என்று கேட்க எப்போதும் சொல்வது போல் நீங்க போய்விட்டு குழந்தை பிறந்ததும் எனக்கு சொல்லவும்என்று பதில் கொடுக்க ஆசை தான். என்ன செய்வது, அன்னையருக்கு என்று கடமை இருக்கிறதே,
அதனால் வரவழைத்துக்கொண்ட அசட்டு தைரியத்துடன் முருகனைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டுமருத்துவ மனையை நோக்கி பயணித்தோம். எப்போதும் கேட்கும் 'பால் வடியும் முகம்"திரு மஹாராஜபுரம் சந்தானத்தின் பாடல் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. எண்ணீ 20 நிமிடப் பயணத்தில் St Mary மருத்துவ மனையும் வந்துவிட்டது.

இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் எப்படித்தான் இரவு நேரம்தெரியுமோ. எல்லா அம்மாக்களுக்கும் வலி என்பது அப்போதுதான் ஆரம்பிக்கும்,அதே போல் மருத்துவமனை செவிலிகளுக்கும் அது பழக்கமாகி விட்டது. அப்படியெ தாயாகப் போகும் அவஸ்தையில் இருக்கும் பெண்ணையும்அவளுடன் வந்த எங்களையும் நிலைப்படுத்தி சிகித்சையை ஆரம்பித்தார்கள்.

நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறைக்குப் போனோம்.முதலில் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னது யாரைத் தெரியுமா? என்னைத்தான்.

அதற்குப் பிறகு பேரன் பிறந்தது, அது முதல் என் தூக்கம் என்னைத் தொந்தரவு செய்யாதது எல்லாமெ தனிக்கதை. அவன் முகம் என் எல்லா சோர்வையும் விரட்டி விட்டது. புது சுருசுருப்பு,சக்தி எல்லாம்வந்து நான் முழுமையாக இயங்க ஆரம்பித்தது அப்புறம்தான். பாட்டி இல்லயா?

இப்போதும் எங்களுக்கு அரு மருந்து குழந்தைகள்தான். அது எப்படி ஒரு உலகையே வெற்றி கொள்ளும்,பள்ளி, ,கல்லூரி சீட் வாங்கும் அம்மா,ஒரு தைரிய புலி,சிங்கம் தன் மகளின் வலிக்கு முன்னால் பூனையாகி விடுகிறாள்? ஏன்?

// posted by manu @ 6:02 PM Comments:
அதுதான் தாய் உள்ளம். உண்மையாவே இந்தப் பதிவு சூப்பர். அருமையா வந்துருக்கு. வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க. # posted by துளசி கோபால் : 6:05 AM

ரொம்ப நல்லா இருந்தது, தொடர்ந்து எழுதுங்க! # posted by ஜீவா(Jeeva) : 6:32 AM மிகவும் நன்றி துளசி. ஜீவா.

மீண்டும் என் பேரன் பிறக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது உங்கள் பின்னூட்டம் பார்க்கும் போது. வணக்கம் நண்பர்களே. இதை விட யார் உத்சாகப் படுத்த முடியும்?இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.மனு,வல்லி # posted by valli : 7:07 AM

Very well written # posted by BLOGESWARI : 8:28 AM Thank you blogeswari.manu # posted by manu : 12:23 PM அதான் டீச்சர் சொல்லிட்டாங்கள்ள வெறென்ன சொல்ல:)

# posted by சிங். செயகுமார். : 4:48 AM வணக்கம் சிங்.செயக்குமார்.ஆமாம் ,துளசி டீச்சர் தான் பிள்ளயார் சுழி.நீங்க எழுதும் முறை எனக்கும் படியக் கொஞ்ச நாளாகும். அது வரை என் தமிழ் எழுத்தில் பிழை வரும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும். நன்றி.செயக்குமார். #

posted by manu : 6:09 AM வாழ்த்துகள் அம்மா. மகிழ்ச்சியான செய்தி சொல்லியிருக்கீங்க. பாட்டி ஆனதால் இனிமேல் உங்க பேரக்குழந்தையை கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும். என் மகள் பிறந்த போது என்னை விட என் தாயார் தான் அதிக மகிழ்ச்சி அடைந்தார். முதல் ஆறு மாதங்கள் எங்க கூடவே இருந்து இரவும் பகலும் என் மகளை பூப் போல பார்த்து கொண்டார். # posted by பரஞ்சோதி : 12:05 PM .

மனு, இரண்டு ப்ளாக் வச்சுச் சமாளிக்கிறதே கஷ்டம், இதிலே பேரனும் வந்தாச்சு. ரொம்ப பிசினு நினைக்கிறேன். # posted by Geetha Sambasivam : 2:49 PM மனு, கணினி தகராறு. வேறே ஒருத்தருக்குக் கொடுத்த பின்னூட்டம் உங்களுக்கு வந்திருக்குனு நினைக்கிறேன். # posted by Geetha Sambasivam : 2:51 PM

பரஞ்ஜோதி, எங்கள் பேரன் பிறந்து 7 வருடங்கள் ஓடி விட்டன. மற்ற பேத்திகளுக்காகக் காத்திருக்கிறேன். வந்ததும் முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டும். நன்றி.நானும் அங்கெ அவர்களொட இருந்து விட்டுத்தான் வந்தேன்.அருமையான காலம் அது. #

posted by manu : 2:52 PM கீதா. நன்றி. பேரன் பிறந்த போது நடந்ததைத் தான் எழுதினேன்.7வருடக் கதை. #

Thursday, February 01, 2007

ஆக்கபூர்வமான எழுத்து.,பேரன் தந்த பாடம்



எழுதும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
படிக்கும் எல்லோரையும் கட்டிப் போடும் கதைகள்,சரித்திரம் சொல்லும் நாவல்கள்,
பயணக் கட்டுரைகள் ,அறிவை மேம்படுத்தும்

எண்ணங்கள், நகைச்சுவை என்று எத்தனையோ களங்களில் ஆயிரக்கணக்கன புத்தகங்கள்
வெளிவரும்
இந்தக் கால கட்டத்தில்
நம் எண்ணங்களையும் பதிக்க ஆசைப் படுகிறோம்.
ஆசைப் படாதவர்கள் உள்ளே நுழையத்
தயக்கம் காண்பிப்பதற்கு
ஒரே ஒரு காரணம் நாம் எழுதுவதை யாராவது படிப்பார்களா என்ற பயம் தான்.

என்னைப் பொறுத்தவரை எழுதுவதை
ஆரம்பித்துவிட்டால் நம்பிக்கை கூடவே வரும்.
தளராமல் எழுதப் பொறுமையும்
விடாமுயற்சியும் தான் வேண்டும்.

எழுத்தைப் பற்றி இவ்வளவு நான் நினைப்பதற்குக்

காரணமாக அமைந்தது எங்கள் பேரனின்
கிரியேடிவ் ரைட்டிங் வகுப்புகள் தான்.
அவனிடமிருந்து கற்றுக் கொண்ட முறைப்பாடுகளை இங்கே எழுதுகிறேன்.

ஏதாவது தெரிந்து கொள்ளணும்னால்
குரு தட்சிணை கொடுக்கணுமே.
அவனுடைய நாலு வகுப்புக்கு நாலு கதைகள்

நகைச்சுவை,வில்லத்தனம், பயங்கர
ரத்தக் களறியாக, மசாலாவுடன் நான்
சொல்லுவதாக ஏற்பாடு.
ஒப்பந்தம்(!) கையெழுத்துப் போட்டவுடன்,அழகான
பெரிய நோட்புக் கொண்டுவந்தான்.
ஹ்ம்ம்! இங்கெ எல்லாப் பேப்பரும் என்ன ஒரு வழவழப்பாக இருக்கிறது!

ஒரு பேனா எடுத்துக் கொண்டு,
எனக்கு எதிரில் உட்கார்ந்து
''பாட்டி, ''there are five points you have to notedown''

சீரியசாக என்னை நோக்கும் அந்தக் கண்ணாடி போட்டச் சின்ன முகத்தைப் பார்த்ததும்,
எனக்குக் கொஞ்சம் பிரமிப்பு,கொஞ்சம் கண்ணில தண்ணீர் என்று வந்துவிட்டது.

எட்டு வயசுக்கு இது தீர்க்கமாத் தான் யோசிக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
என் எட்டுவயசில் தாத்தா முன்னால்
வாய்ப்பாடு சொல்லக் கைகட்டி நிற்பேன்.
பாட்டி புடவையில் தொங்கி முறுக்குக் கேட்டு இருப்பேன்.
அவ்வளவுதான்.

காலம் நிறையத் தான் மாறிவிட்டது.!

இதோ குழந்தை சொன்ன குறிப்புகள்.


எழுதுவதற்கு ஒரு நிலைக் களன்......

1 நேரம், இடம்.
2, கதையில் வரும் நபர்களின் பட்டியல்
3,

ஒரு சம்பவம்,ஒரு கஷ்டம் அதாவது
ப்ராப்ளம்.
4, முக்கிய சம்பவங்கள்.

5,எப்படி அந்தக் கதாநாயகன்
பிரச்சினையை எதிர்கொள்கிறான்.

6.முடிவு.கண்டிப்பாகக் கதையின் நாயகன்

வெற்றி பெறுவான்.:-00)

ஆச்சு, இவனும் கதைவிட ஆரம்பிச்சுட்டான்.

உங்களுக்கும் இது உதவி இருந்தால்
எனக்கு எழுதுங்கள். :-)
.

Sunday, January 28, 2007

வானமுட்டிப் பெருமாள்,கோழிக்குத்தி ஊர்





படத்தில் பார்க்கும்போதே இந்த உயரம் தெரிகிறாரே!?
இன்னும் நேரே பார்த்தால் எப்படி இருப்பாரோ?
காவிரிக்கரைக்கு என்ன அப்படி ஒரு புண்ணியம்!

எங்கும் இல்லாத உயரத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள்
எப்படி இங்கே வந்தார். என்றெல்லாம் எனக்குத் தோன்றிய கேள்விகள்,

திரு.ஏ.எம்.ராஜகோபாலன் ,எழுதிவந்த காலச்சக்கரம்
வெள்ளிமணி (தினமணி பத்திரிகை)

இதழ்களைப் படிக்கும்போது மனதில் உதித்தன.
இந்த விஸ்வரூபப் பெருமாளைப் பற்றிக்
குமுதம் ஜோதிட இதழில் மிக்க வருத்ததுடன் குறிப்பிட்டு இருந்தார்.

காண்பதற்கு அரிய கலை நுட்பத்துடன் கட்டப் பட்ட இந்தக் கோவில் தல புராணமும்
நேரே போய்விட்டு வந்த தன் அனுபவத்துடன் எழுதி இருந்தார்,
அந்தப் பெரியவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையும்
அவரின் உழைப்பைப் பார்த்து வியப்பும் தோன்றியது.
நம் தென்னாட்டில்
சிதில மடைந்த கோவில்கள் ஏராளம்.

அவற்றை மீட்டுக் கொடுக்கும் பணியைச் செவ்வனவே
செய்துவருகிறார் இந்த மூத்த (83 வயது என்று நினைக்கிறேன்) பண்பாளர்.
அவர் விவரம் தந்த கோவில்களில் என்னை மிகவும் பிரமிக்க வைத்த கோவில் இந்த வானமுட்டிப் பெருமாளின் திருக்கோயில்.
நாங்கள் இன்னும் இந்தக் கோவிலுக்குப்
போகவில்லை.:(
கூகிளில் தேடிய போது கிடைத்த படங்களைக்
கீழே கொடுத்து இருக்கிறேன்.
இவரின் இருபதடி விஸ்வரூபக் காட்சியும் அப்போது
பத்திரிகையில் வந்திருந்தது.
அழகோ அழகு.
என்ன ஒரு கருணை முகத்தில்.!
அவர்...இந்தப் பெருமாள் ,பிபால என்ற முனிவரின் கனவில் தோன்றித் தானிருக்குமிடத்தைக் காட்ட
போகும் வழியில் இருந்த சிவபெருமானின் உதவியோடு,இந்த ஆஜானுபாகுவைத் தரிசனம்
செய்தாராம்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால்
கட்டப் பட்ட கோவிலாம்.
அதைப் புதுப்பிக்க ஒரு சோழ மன்னன் வரவேண்டி இருந்தது.

தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று படித்தேன்.
திரு.ராஜகோபாலன் எழுதினபோது மிகச் சிதிலமான நிலைமையில் இருக்கும் கோவிலைப் பற்றி எடுத்து எழுதியிருந்தார்.
மூலவருக்கு இருபது முழங்கள் கொண்ட வேட்டிதான் உடுத்த முடியுமாம்.
மாற்று உடைகளுக்கு வழியில்லை என்று குறிப்பிட்டு
வருத்தப் பட்டிருந்தார்.
இப்போது ஊர்மக்கள், இந்தப் பத்திரிகைச் செய்தியைப்
படித்தவர்கள்
எல்லோரும் கோவில் புனருத்தாரணத்தில் ஈடுபட்டு இருப்பதையும் படங்கள் மூலம் சொல்லி இருந்தார்.

இந்த முதியவர் வார்த்தைகளுக்கு சிறப்பு
ஏராளம்.
ஏழைமக்களுக்கும் நிறைய உதவிகள்
செய்வதிலும் சளைத்தவர் அல்லர்.

மாயவரம் -கும்பகோணம் சாலையில் காவிரியின் கரையில் இந்த கிராமம் இருக்கிறது.
நமது வலை நண்பர்கள் யாராவது இந்தத் திருமகள் கேள்வனைப் பார்த்து இருப்பார்களொ?
தெரிந்தால் சொல்லுங்கள்.

Sunday, January 21, 2007

ரங்கா ரங்கா



ஸ்ரீரங்கநாதனை அடைய,
ஜய விஜயரிடம் வணங்கி அனுமதி கேட்டு,
தாயாரிடம்'அம்மா உன் நாயகனைத் தரிசித்துப்
பரிசு வாங்க வேண்டும்.
பக்திப் பரிசு. அடியார் படுதுயர் அகற்றும் பரிசு. நீ, இந்த சப்தப்பிரகாரங்களை நாங்கள் சுற்றும் நேரம்,
அவரிடம் சொல்லி வை. எங்களை , நெடுமால் அங்கண் இரண்டும் கொண்டு பார்த்து அருள் செய்யட்டும்''
என்று வேண்டிக்கொள்ளவேண்டும்,
என்பது பெரியோர் வாக்கு.
பிறகு அரங்கனை அந்த வாயில்களின் அருகே நின்று பார்த்து ,
அழகனின் அருகாமையை அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டும் இருக்கிறேன்.

ஒரு நான்கு வருடங்கள்(2003) முன்னால் அவனைத்
தரிசிக்கப் போன போதும் வெளியே வரும்வரை அரங்கன் அமுதமே மனதில் நிறைந்து இருந்தது.

பிறகுதான் அவன் செய்த வேலை பிடிக்கவில்லை.
தன் பெயர் கொண்ட என் தம்பியையும் தன்னிடம் அழைத்துக் கொண்டான் ஒரே இரவுத் தூக்கத்தில்.

அப்போதிலிருந்தே நான் அரங்கனை நினைக்கும் போதெல்லாம் இவனையும் கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாய் இருக்கிறது.

நாமும் அங்கேதானே போகப் போகிறோம்,
கேட்டு விடலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ரங்கா உன்னை மறக்கலையப்பா.