Blog Archive

Sunday, January 28, 2007

வானமுட்டிப் பெருமாள்,கோழிக்குத்தி ஊர்





படத்தில் பார்க்கும்போதே இந்த உயரம் தெரிகிறாரே!?
இன்னும் நேரே பார்த்தால் எப்படி இருப்பாரோ?
காவிரிக்கரைக்கு என்ன அப்படி ஒரு புண்ணியம்!

எங்கும் இல்லாத உயரத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள்
எப்படி இங்கே வந்தார். என்றெல்லாம் எனக்குத் தோன்றிய கேள்விகள்,

திரு.ஏ.எம்.ராஜகோபாலன் ,எழுதிவந்த காலச்சக்கரம்
வெள்ளிமணி (தினமணி பத்திரிகை)

இதழ்களைப் படிக்கும்போது மனதில் உதித்தன.
இந்த விஸ்வரூபப் பெருமாளைப் பற்றிக்
குமுதம் ஜோதிட இதழில் மிக்க வருத்ததுடன் குறிப்பிட்டு இருந்தார்.

காண்பதற்கு அரிய கலை நுட்பத்துடன் கட்டப் பட்ட இந்தக் கோவில் தல புராணமும்
நேரே போய்விட்டு வந்த தன் அனுபவத்துடன் எழுதி இருந்தார்,
அந்தப் பெரியவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையும்
அவரின் உழைப்பைப் பார்த்து வியப்பும் தோன்றியது.
நம் தென்னாட்டில்
சிதில மடைந்த கோவில்கள் ஏராளம்.

அவற்றை மீட்டுக் கொடுக்கும் பணியைச் செவ்வனவே
செய்துவருகிறார் இந்த மூத்த (83 வயது என்று நினைக்கிறேன்) பண்பாளர்.
அவர் விவரம் தந்த கோவில்களில் என்னை மிகவும் பிரமிக்க வைத்த கோவில் இந்த வானமுட்டிப் பெருமாளின் திருக்கோயில்.
நாங்கள் இன்னும் இந்தக் கோவிலுக்குப்
போகவில்லை.:(
கூகிளில் தேடிய போது கிடைத்த படங்களைக்
கீழே கொடுத்து இருக்கிறேன்.
இவரின் இருபதடி விஸ்வரூபக் காட்சியும் அப்போது
பத்திரிகையில் வந்திருந்தது.
அழகோ அழகு.
என்ன ஒரு கருணை முகத்தில்.!
அவர்...இந்தப் பெருமாள் ,பிபால என்ற முனிவரின் கனவில் தோன்றித் தானிருக்குமிடத்தைக் காட்ட
போகும் வழியில் இருந்த சிவபெருமானின் உதவியோடு,இந்த ஆஜானுபாகுவைத் தரிசனம்
செய்தாராம்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால்
கட்டப் பட்ட கோவிலாம்.
அதைப் புதுப்பிக்க ஒரு சோழ மன்னன் வரவேண்டி இருந்தது.

தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று படித்தேன்.
திரு.ராஜகோபாலன் எழுதினபோது மிகச் சிதிலமான நிலைமையில் இருக்கும் கோவிலைப் பற்றி எடுத்து எழுதியிருந்தார்.
மூலவருக்கு இருபது முழங்கள் கொண்ட வேட்டிதான் உடுத்த முடியுமாம்.
மாற்று உடைகளுக்கு வழியில்லை என்று குறிப்பிட்டு
வருத்தப் பட்டிருந்தார்.
இப்போது ஊர்மக்கள், இந்தப் பத்திரிகைச் செய்தியைப்
படித்தவர்கள்
எல்லோரும் கோவில் புனருத்தாரணத்தில் ஈடுபட்டு இருப்பதையும் படங்கள் மூலம் சொல்லி இருந்தார்.

இந்த முதியவர் வார்த்தைகளுக்கு சிறப்பு
ஏராளம்.
ஏழைமக்களுக்கும் நிறைய உதவிகள்
செய்வதிலும் சளைத்தவர் அல்லர்.

மாயவரம் -கும்பகோணம் சாலையில் காவிரியின் கரையில் இந்த கிராமம் இருக்கிறது.
நமது வலை நண்பர்கள் யாராவது இந்தத் திருமகள் கேள்வனைப் பார்த்து இருப்பார்களொ?
தெரிந்தால் சொல்லுங்கள்.

8 comments:

வல்லிசிம்ஹன் said...

டெஸ்ட், பரிசோதனைப் பின்னூட்டம்

இலவசக்கொத்தனார் said...

நான் எனக்குத் தெரிந்து அந்த ஏரியாவில் இருக்கும் நண்பர்களை கேட்டுப் பார்க்கிறேன் வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கொத்ஸ்.
கட்டாயம் தெரிந்து இருக்கும்.
பெரிய படம் ஏதும் கிடைக்கவில்லை.
அரிய பொக்கிஷங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

துளசி கோபால் said...

ஹைய்யோ.... என்ன ஒரு விஸ்வரூபம்!

இன்னிக்கு என்னமோ பொழுது விடிஞ்சதில் இருந்தே எம்பெருமா(ள்)ன் மனசுலே மட்டுமில்லாம
தமிழ்மணத்துலேயும் காட்சிக் கொடுத்துக்கிட்டு இருக்கார். ( நம்ம நா. கண்ணன் பதிவைத்தான் சொல்றேன்)

திருப்பதி தேவஸ்த்தானம் கோயில்லே (தி.நகர்) புதுசா ஒரு கீதா உபதேசம் வச்சிருக்காங்க.
அர்ஜுனன் மண்டியிட்டு இருக்க, பக்கத்துலே மகாவிஷ்ணுவின் விஸ்வரூபம். அருமையா இருக்கு.
ஆனா உயரம் ஒரு ஏழெட்டு அடி தான் இருக்கும்.

இருபது முழம் வேட்டியா? அம்மாடியோவ்........தகவலுக்கு நன்றி வல்லி.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
குமுதம் ஜோதிடத்தில் வந்த படம்
இன்னும் அழகா இருந்தது.

அவர் எழுதினதுக்குப் பிறகு நல்ல முன்னேற்றாமாம்.
ஆமாம் தில்லகேணியில் தானே கீதோபதேசம் செய்தாங்க.
வெங்கட நாரயணா ரோடுக்கும் வந்துட்டாரா? நீங்க வரப் போவதைத் தெரிஞ்சு புதுசா அடிஷனோ?:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒற்றைவிடையனும்நான்முகனும்

உன்னையறியாப்பெருமையோனே.
முற்றஉலகெல்லாம்நீயேயாகி

மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி

அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்

அரங்கத்தரவணைப்பள்ளியானே

Geetha Sambasivam said...

போனதில்லை ரேவதி. எங்கே இருக்குனு கண்டு பிடிச்சுப் போயிட்டு வரணும்.

இராய செல்லப்பா said...

தமிழ் நாட்டில் ஒரு கெட்ட பழக்கம், தங்கள் இஷ்டம் போல் உயரமான விக்கிரகங்களை நிறுவுவது. இவை ஆகம சாஸ்திரம் சொல்லும் விதிகளை மீறியவை. அதன் பயன்தான், அந்த ஆலயங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து விடுவது. அது மட்டும் அன்றி, சம்பந்தப்பட்ட ஊர்களும் வறுமை அடைவது மற்றும் போக்குவரத்து விபத்துகள் அதிகரிப்பது. இனியாவது. நமது சமயத் தலைவர்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.