எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து
தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு
ஆகிவிட்டது. பக்கத்து வீட்டில் தாத்தாவின் தம்பி வீடு என்பதாலும்
அவர்கள் இரண்டு நாட்கள் முன் தான் இங்கே இருந்துவிட்டு
சென்னைக்குச் சென்றதாகவும்
அவர்கள் கிளம்பு முன் இந்த வீட்டையும் சுத்தம் செய்து
சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்ததாகப்
பெரியவர்கள் பேசிக்கொண்ட நினைவு.. அப்போது தெரியுமா, அந்தக் குழுவில் இருந்த பேரனைத்தான் நான் மணம் முடிக்கப்
போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது:))))
திருக்குறுங்குடி மலை மேல் நம்பி பயணம் ஆரம்பம். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, நாங்கள் மூவர், இன்னோரு உறவினர். கற்பனை என்னுது. வடிவம் ஜெமினி ஏஐ:)
இப்பொழுதும் என் மாமா மகள் இந்த மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறாள். அவளுடைய மூட்டு வலியுடன் ஏறி இறங்கியது
நம்பியின் அருளை நம்பி மட்டும்.
மஹேந்திர கிரி மலையிலிருந்தே அனுமன் இலங்கையை நோக்கித்
தாவியதாக புராண வரலாறு.
பாட்டி அங்கே இருந்த மூன்று நாட்களும் எங்களுக்கு இரவு வேளை சாப்பாட்டைக் கையில் பிசைந்து போடுபோது, கதைகள் சொல்வார். நாம் பின் பக்கம் போய்ப்
பேசினால் பெருமாளுக்குக் கேட்கும் என்று. நானும் என் தம்பிகளும்
வீட்டுக்குள் கூட மெதுவாகப் பேசிக்கொள்வோம்:)
பிற்காலத்தில் தி ஜானகிராமன் கிராம வீட்டு வர்ணனை
எனக்குப் புதிதாகவே தெரியவில்லை.
எங்கள் திருக்குறுங்குடி வீட்டு அமைப்பாகவே தெரிந்தது. தொடரலாம்



No comments:
Post a Comment